Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Engiruntho Vanthal!
Engiruntho Vanthal!
Engiruntho Vanthal!
Ebook166 pages2 hours

Engiruntho Vanthal!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருந்த வெள்ளைக்காரச் சிறுமியொருத்தி தன் கூட்டத்தினரிடமிருந்து பிரிந்து, தமிழகத்தின் பின் தங்கிய கிராமம் ஒன்றில் வந்து சேருகிறாள். ஊர் மக்கள் அவளை அழைத்துக் கொண்டு போய் ஊர் பண்ணையாரிடம் விட, முறைப்படி காவல்துறைக்கு புகார் தந்து விட்டு எல்லோரும் காத்திருக்கின்றனர். நீண்ட நாட்களாகியும் அந்தச் சிறுமியைத் தேடி வாரும் வராததால், பண்ணையார் தானே ஊர்ப் பஞ்சாயத்தைல் வைத்து அச்சிறுமியைத் தத்தெடுத்து வளர்க்கிறார்.

தன் பண்ணையில் பாடுபடும் வெள்ளையனின் அதீத விசுவாசக் குணம் காரணமாய் அவனை பண்ணையாருக்கு மிகவும் பிடிக்கும். ஒரு முறை அவன் தன் ரத்தத்தைக் கொடுத்து பண்ணையாரின் உயிரைக் காப்பாற்ற, அவனுக்கே அந்த வெள்ளைக்காரப் பெண்ணைத் திருமணம் செய்து வைக்கிறார்.

கிராமத்தில், ஒரு வெளி நாட்டுக்காரப் பெண் சட்டப்படியான எந்தவொரு ஆவணமும் இல்லாமல் வாழ்வதை ஒரு பத்திரிக்கைக்காரன் தன் பத்திரிக்கையில் எழுதி விட, அது பெரிய பூதாகர பிரச்சினையாகின்றது. கலெக்டர் கிராமத்திற்கு வருகிறார்... அடுத்து நடந்தது என்ன?...

நாவலுக்குள் உண்டு விடை. வாசியுங்கள்...

Languageதமிழ்
Release dateJun 1, 2021
ISBN6580130007095
Engiruntho Vanthal!

Read more from Mukil Dinakaran

Related to Engiruntho Vanthal!

Related ebooks

Reviews for Engiruntho Vanthal!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Engiruntho Vanthal! - Mukil Dinakaran

    https://www.pustaka.co.in

    எங்கிருந்தோ வந்தாள்!

    Engiruntho Vanthal!

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் - 18

    அத்தியாயம் - 19

    அத்தியாயம் - 20

    அத்தியாயம் - 21

    அத்தியாயம் - 22

    அத்தியாயம் - 23

    அத்தியாயம் - 1

    கடா... முடாவென்று குண்டு குழிகளில் ஏறி இறங்கி, செம்மண் பாதையில் சாய்ந்தபடி பயணித்து, தனக்குப் பின்னால் ஒரு பெரும் தூசி மண்டலத்தையே உருவாக்கியபடி, அந்த நசியனூர் கிராமத்தினுள் நுழைந்து, ஆலமரத்தடி பஸ் ஸ்டாப்பில், ஒரு வழியாய் நின்றது மினி பஸ்.

    மனிதர்கள் இறங்குவதற்கு முன் அதனுள்ளிருந்து நாலைந்து ஆட்டுக் குட்டிகளும், ஐந்தாறு கோழிகளும் வெளியே வந்தன.

    அந்த இடம்தான் டெர்மினஸ் என்பதால் பஸ்ஸிற்குள்ளிருந்த அனைவருமே கீழிறங்கி விட பஸ்ஸே காலியானது.

    தனது இருக்கையிலிருந்து குதித்திறங்கிய டிரைவர், கண்டக்டரைப் பார்த்து, யோவ் சுப்பு... வாய்யா சீக்கிரம் ஒரு டீயை குடிச்சிட்டுக் கிளம்புவோம்!... ஏற்கனவே நாம முக்கால் மணி நேரம் லேட்டு! என்றார்.

    அட இருக்கட்டும்ண்ணே!... இண்டர்நேஷனல் ஃபிளைட்டுகளே லேட்டாத்தான் போகுதுக... லேட்டாத்தான் வருதுக... நம்மோடது என்ன? சாதாரண மினி பஸ்தானே?..தாராளமா லேட்டாப் போகலாம்! சொல்லியவாறே டிரைவருடன் சேர்ந்து கொண்டார் கண்டக்டர்.

    இருவரும் பேசிக் கொண்டே ஆலமரத்தடி டீக்கடையை நோக்கி நடந்தனர்.

    பஸ்ஸிலிருந்து கடைசி ஆளாய் இறங்கிய சிவஞானம், இறங்கியதிலிருந்து தொடர்ந்து இருபது தும்மல்களுக்கும் மேல் தும்மி விட்டு, தனது சோடா புட்டிக் கண்ணாடியை கழற்றி அதில் ஒட்டியிருந்த புழுதியை ஊதி விட்டு மீண்டும் அணிந்தார். ச்சை!... ஒரு மினி பஸ் வந்து நின்னது..ஒரு சூறாவளியே அடிச்சு ஓய்ஞ்ச மாதிரியல்ல இருக்கு!... அப்பப்பா... எத்தனை புழுதி... எத்தனை தூசி!

    கண்களை இடுக்கிக் கொண்டு, சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, அவரும் அந்த ஆலமரத்தடி டீக்கடையை நோக்கி நடந்தார்.

    சென்றவர், அங்கிருந்த பெஞ்சில் கண்டக்டர் மற்றும் டிரைவருக்கு அருகில் மெல்ல அமர்ந்தார்.

    ஹூம்!... இந்த மாதிரி கிராமத்தை பாரதிராஜா படத்துலதான் பார்த்திருக்கேன்..இப்பத்தான் முதல் முறையா நேரில் பார்க்கறேன்! சிட்டியிலே பிறந்து சிட்டியிலேயே வளர்ந்த சிவஞானத்திற்கு அந்த டிரிப்பே ஒரு வித்தியாசமான அனுபவமாயிருந்தது.

    கச... கச வென்று ஒழுங்காய் வாராத தலை, கண்களில் பெரிய கெட்டிக் கண்ணாடி, ஜிப்பா, அழுக்குத் தோல் பை, முகத்தில் ஒரு வார தாடி, என்று சற்று வித்தியாசமான தோற்றத்திலிருந்த சிவஞானத்தை ஊடுருவிப் பார்த்த டீக்கடைக்காரன், சாருக்கு டீயா? கேட்டான்.

    ஆமாம்! என்றார் சிவஞானம்.

    டிரைவரும், கண்டக்டரும் ஆளுக்கொரு மசால் வடையை எடுத்துக் கொறித்துக் கொண்டே, சிவஞானத்தை மேலிருந்து கீழ் வரை ஆராய்ந்து கொண்டிருந்தனர்.

    அவர்களிருவரும் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட சிவஞானம், ஒரு சிநேகிதப் புன்னகையை வீச,

    சாரு... பத்திரிக்கைக்காரரா? மசால் வடையைத் திருப்பிக் கடித்தபடியே கேட்டான் டிரைவர்.

    மெலிதாய்ச் சிரித்த சிவஞானம், ஆமாம்!... எப்படி கரெக்டா கண்டுபிடிச்சீங்க?

    பார்த்தா ஒரு மார்க்கமா இருக்கும் போதே நெனச்சேன்... ஒண்ணு பத்திரிக்கைக்காரரா இருக்கணும்!... இல்லேன்னா... சினிமாக்காரரா இருக்கணும்!னு... சினிமாக்காரரா இருந்தா காரிலல்ல வந்திருப்பீங்க?... நீங்க பஸ்ல வந்ததினால நிச்சயமா பதிரிக்கைக்காரர்தான்!னு முடிவு பண்ணினேன்!... தன் கண்டுபிடிப்பை தானே மெச்சிக் கொண்டு, கண்டக்டரைப் பார்த்து, எப்படி? என்று கேட்கும் விதமாய்ப் புருவத்தை உயர்த்தி விட்டுச் சிரித்தான் டிரைவர். அவன் சிரிக்கும் போது மசால் வடைத் துகள்கள் தெறித்ததை அவன் கண்டு கொள்ளவேயில்லை.

    சரி..பத்திரிக்கைக்காரருக்கு இந்த ஊர்ல என்ன ஜோலி? டீக்கடைக்காரன் அங்கிருந்தே கேட்டான். பெரிய அளவுல விழாவோ... அல்லது கட்சிக் கூட்டமோ... தன் ஊரில் நடந்தால் பெரிய அளவுல கூட்டம் கூடும், வியாபாரமும் பிச்சுக்கிட்டு போகும், என்கிற நப்பாசையில்தான் அவன் அப்படி அவசரமாய்க் கேட்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட சிவஞானம்,

    ஒண்ணுமில்லை... தமிழ்நாட்டுல இருக்கற சின்னச் சின்ன கிராமங்களுக்குப் போய்... அங்கிருக்கற வித்தியாசமான விஷயங்களை... .வினோதமான பழக்க வழக்கங்களை... தேடிப் பிடிச்சு, அதைப் பத்தி விரிவா எங்க பத்திரிக்கைல போடறதுக்காகத்தான் வந்திருக்கேன்!

    ஹி... ஹி... ஹி... என்று நக்கலாய்ச் சிரித்த டீக்கடைக்காரன், இந்த ஊர்ல வித்தியாசமா என்ன இருக்கு?... கோவணம் கட்டிக்கிட்டு புல்லட்ல போற ஆளுங்களும், கோயில் திண்ணைல உட்கார்ந்துக்கிட்டு ஆடு புலி ஆட்டம் வெளையாடுற ஆளுங்களும், பண்ணை வேலைக்குப் போற பொம்பளைங்களும், படிக்கற வயசுல ஆட்டாம் புழுக்கை பொறுக்கற பசங்களும்தான் இருக்காங்க!... இதுக்கு மேலே வித்தியாசம இங்க எதுவும் இருக்கறதா எனக்குத் தெரியலை!

    டீக்கடைக்காரரே!... நான் என்ன சொன்னேன்?... வித்தியாசமான விஷயங்களைத் தேடிக் கண்டுபிடிக்கணும்!னுதானே சொன்னேன்?... அதெல்லாம் வெளிப்படையாத் தெரியாது... நாமதான் தேடிக் கண்டுபிடிக்கணும்!

    அது செரி!... என்னத்தைத் தேடி... என்னத்தைக் கண்டுபிடிக்கப் போறீங்களோ தெரியல!

    டிரைவரும், கண்டக்டரும் காசு சொடுத்து விட்டு நகர, சிவஞானம் அந்த இடத்தைப் பார்வையால் அளந்தபடி, நிதானமாக டீ அருந்திக் கொண்டிருந்தார்.

    அப்போது...

    சர்ர்ர்ர்ரென்று வந்து நின்றது ஒரு டி,வி.எஸ்-50. அதை ஒட்டிக் கொண்டு வந்தவன் வண்டியிலிருந்து இறங்காமலே, என்ன டீக்கடைக்காரரே... நாலு நாளா கடை பூட்டியே கிடந்தது... எங்க?... ஊருக்குப் போயிட்டீரோ? காலை ஊன்றி நின்றபடி கேட்டான்.

    அதற்கு டீக்கடைக்காரர் ஏதோ பதில் சொல்ல,

    சிவஞானத்தின் காதுகளில் அந்தக் கேள்வியோ, பதிலோ எதுவும் விழவேயில்லை. அவர் கவனம் முழுவதும் டி.வி.எஸ்-50யில் அந்தக் கருத்த மனிதனுக்குப் பின்னால் அமர்ந்திருந்த அந்தப் பெண்மணியின் மீதே படிந்திருந்தது. அவரால் தன் பார்வையை அந்தப் பெண் மீதிருந்து விலக்கவே முடியவில்லை.

    காரணம்?

    அந்தக் கருநிற மனிதனின் பின்புறம் உட்கார்ந்திருந்தவள் ஒரு வெளிநாட்டுப் பெண்மணி.

    வெள்ளை வெளேரென்ற மேனி வண்ணத்தில், தங்க நிறத்தையொத்த கேசம் மற்றும் நீல நிறக் கண்களுமாய் அமர்ந்திருந்த அப்பெண், சேலையும் ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள். தலையில் மல்லிகைப் பூவும் சூடியிருந்தாள்.

    சிவஞானத்தால் தன் கண்களையே நம்ப முடியவில்லை.

    இதென்ன அதிசயமாயிருக்கு?... இந்தப் பெண்ணோட தோல் நிறத்தையும், தலை முடியையும், கண்களையும் பார்க்கும் போது... என்னுடைய அனுமானத்தில் இவள் அநேகமாய் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவளாய்த்தான் இருக்க வேண்டும்!... ஆனால்..இவள் எப்படி இங்கே?... இந்தக் கிராமத்துல?.அதுவும் ஒரு காட்டானோட? குழம்பித் தவித்தார்.

    அவரது குழப்பத்தை மேலும் அதிகமாக்கும் விதமாய், அப்பெண் டீக்கடைக்காரரைப் பார்த்து, டீக்கடைக்காரண்ணே!... இந்தத் தடவை நிச்சயம் உங்களுக்கு ஆம்பளைப் பையந்தான் பொறப்பான்... .கவலையே படாதீங்க! என்று கிராமத்துத் தமிழில் அழகாய்ச் சொல்ல,

    டி.வி.எஸ்-50 வேகமெடுத்துப் பறந்தது.

    சிவஞானத்திற்கு மயக்கமே வந்து விடும் போலானது.

    ஆஹா!... என்னவொரு வித்தியாசமான காட்சி இது!... பட்டிக்காட்டில் ஒரு ஃபாரீன் நங்கை... என்று தனக்குள் சொல்லிக் கொண்டு, டீக்கடைக்காரனைப் பார்த்து, அய்யா... ஒரு சந்தேகம்!... இப்ப டி.வி.எஸ்-50லே போறாங்களே?... அவங்க யாரு?

    அவங்களா?... இந்த ஊரு பண்ணையாரோட பேத்தியும்... அவ புருஷனும்!

    என்ன?... அந்தப் பொண்ணு இந்த ஊரு பண்ணையாரோட பேத்தியா?... அரண்டு போனார் சிவஞானம், என்னங்க சொல்லுறீங்க?... அந்தப் பொண்ணைப் பார்த்தா நம்ம நாட்டுப் பொண்ணு மாதிரியே இல்லை!... ஏதோ அயல் நாட்டுப் பொண்ணு மாதிரித் தெரியுது!... அது எப்படிங்க பண்ணையாருக்குப் பேத்தியாகும்? சிவஞானம் விடாது கேட்டார்.

    ஆமாம்... சொன்னாலும் சொல்லாட்டியும் அந்தப் பொண்ணு வெளிநாட்டுப் பொண்ணுதான்!... என்றான் சிவஞானத்தில் அருகில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்த வேறொருத்தன்.

    அப்புறமெப்படி... .?

    அது இந்த ஊர்ப் பன்ணையாருக்குப் பேத்திச்யாச்சு?ன்னு தானே கேட்க வர்றீங்க?..தம்பி அது ஒரு பெரிய கதை!... நீங்க வெளியூர் ஆளு... அதான் அந்தக் கதை தெரியாமக் கேட்கறீங்க!

    அப்போது இடையில் புகுந்த டீக்கடைக்காரன், பத்திரிக்கைக்காரரே!..இந்தக் கிராமத்துல இருக்கற வித்தியாசமான விஷயத்தைக் கேட்டீங்கல்ல?... இதுவே ஒரு வித்தியாசமான விஷயம்தான்!... இதையே நீங்க போடலாம் உங்க பத்திரிக்கைல! என்றான் டீயை மேலிருந்து கீழ் வரை ஆற்றியவாறே.

    தாராளமாய்ப் போடலாம்!... யாராவது எனக்கு ஆரம்பத்திலிருந்து எல்லா விவரங்களையும் சொன்னீங்கன்னா அது எனக்கு ரொம்ப உதவியா இருக்கும்! சொல்லி விட்டு அங்கிருந்தோர் முகத்தையெல்லாம் மாறி மாறிப்

    Enjoying the preview?
    Page 1 of 1