Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manasu Valikkuthu Mathumitha!
Manasu Valikkuthu Mathumitha!
Manasu Valikkuthu Mathumitha!
Ebook183 pages54 minutes

Manasu Valikkuthu Mathumitha!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வித்யா ஒரு ஓவியப் பைத்தியம். மற்ற பெண்கள் சினிமா, ஷாப்பிங் மால் என்று சுற்றும் போது, இவள் மட்டும் நகரில் எங்காவது நடைபெறும் ஓவியக் கண்காட்சிக்கு செல்வாள். ஒரு ஓவியக் கண்காட்சியில் தன்னை மெய் மறக்கச் செய்த ஓவியங்களை வரைந்த ஓவியர் சேகரை நேரில் பாராட்டச் செல்கிறாள். அப்போது அவர் அழகில் மயங்கி காதலில் விழுகிறாள். எதிர்ப்பே இல்லாத அவர்களது காதல் எளிதாய்த் திருமணத்தில் முடிந்தது.

ஆனால், அதற்குப் பிறகுதான் பிரச்சினைகள் தோன்றின. ஓவியம் வரையும் சேகரால் குறைந்த அளவே வருமானம் ஈட்ட முடிந்ததால், பொருளாதாரச் சிக்கல் தோன்றுகின்றது. “அந்த மாதிரி”யான படங்கள் வரைய, அதிக தொகைக்கு வாய்ப்பு வர, திட்டித் திருப்பியனுப்புகிறான் சேகர்.

ஆனால், வித்யாவோ, அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினையில்லை நமக்கு காசு பணம்தான் முக்கியம், என்று சொல்லி கணவனை ஒப்புக் கொள்ள வைக்கிறாள்.

அரை மனதுடன் சென்ற சேகர், அங்கே ஆபாச ஓவியத்திற்கு மாடலாக வந்திருந்த தன் பழைய காதலியைக் கண்டு நொந்து போகிறான்.

அதன் பிறகு அவர்களுக்கிடையே நிகழும் நிகழ்வுகளை ஒரு கவிதை நயத்தோடு படைத்துள்ள எழுத்தாளர் நிச்சயம் வாசகர்களின் மனத்தைக் கொள்ளை கொண்டு விடுவார்.

Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580130004831
Manasu Valikkuthu Mathumitha!

Read more from Mukil Dinakaran

Related to Manasu Valikkuthu Mathumitha!

Related ebooks

Reviews for Manasu Valikkuthu Mathumitha!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manasu Valikkuthu Mathumitha! - Mukil Dinakaran

    http://www.pustaka.co.in

    மனசு வலிக்குது மதுமிதா!

    Manasu Valikkuthu Mathumitha!

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் – 1

    அத்தியாயம் – 2

    அத்தியாயம் – 3

    அத்தியாயம் – 4

    அத்தியாயம் – 5

    அத்தியாயம் – 6

    அத்தியாயம் – 7

    அத்தியாயம் – 8

    அத்தியாயம் – 9

    அத்தியாயம் – 10

    அத்தியாயம் – 11

    அத்தியாயம் – 12

    அத்தியாயம் – 13

    அத்தியாயம் – 14

    அத்தியாயம் – 15

    அத்தியாயம் – 16

    அத்தியாயம் – 17

    அத்தியாயம் – 18

    அத்தியாயம் – 19

    அத்தியாயம் – 20

    அத்தியாயம் – 21

    அத்தியாயம் – 22

    அத்தியாயம் – 23

    அத்தியாயம் – 24

    அத்தியாயம் – 25

    அத்தியாயம் – 26

    அத்தியாயம் – 27

    அத்தியாயம் – 28

    அத்தியாயம் – 1

    அது ஒரு மஞ்சள் வெயில் மாலை.

    தார் சாலை மீதும், கட்டிடங்களின் மீதும், மரங்களின் மீதும், படர்ந்திருந்த அந்த தங்க நிற வெயில், சூழ்நிலையை ரம்மியமாக்கிக் கொண்டிருக்க, அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாய், அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸின் விஸ்தாரமான படிக்கட்டுகளில் கல... கலவெனச் சிரித்தபடி இறங்கிக் கொண்டிருந்தது அந்த வஞ்சியர் கூட்டம்.

    இருபது... இருபத்தியொன்று... அல்லது... இருபத்திரெண்டு... வயதுடைய அவர்களிடமிருந்து வீசிய பல தரப்பட்ட பர்ஃப்யூம்களின் கலவையான வாசனையை, மொத்தமாய் களவாடிக் கொண்ட காற்று, அந்த சுகந்தத்தை அந்த ஏரியாவில் உலவும் அனைவருக்கும் இலவசமாய் வினியோகித்து இனிமை கூட்டிக் கொண்டிருந்தது.

    சுடிதார், ஜீன்ஸ், லெக்கின்ஸ்... என நவீனத்தின் பிரதிநிதிகளாய் நடைபயின்ற அந்த ஐந்து பட்டாம்பூச்சிகளையும் சில ஸ்டைல் தாடி இளைஞர்கள் வென வாயைத் திறந்து கொண்டு பார்க்க, ஒன்றிரண்டு நடுத்தர வயதுக்காரர்களும், உடன் வந்திருக்கும் மனைவிகளுக்குத் தெரியாதபடி சத்தமில்லாமல் சைட் அடித்தனர். பொழுது போகாமல் பேத்திகளுடன் ஷாப்பிங் மால் பார்க்க வந்திருந்த சில தாத்தாக்கள், அந்தப் பட்டாம்பூச்சிகளைப் பார்த்து விட்டு நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்...! சரோஜா தேவியையும், கண் மை ஏந்தும் விழியாட, மலர் ஏந்தும் குழலாட... சாவித்திரியையும் நினைவு கூர்ந்தவாறே நகர்ந்தனர்.

    ஏய்... ஸ்வப்னா... நம்மோட அடுத்த புரோக்ராம் என்ன...? மூவியா? அந்தப் பட்டாம்பூச்சிக் கூட்டத்திற்கு தலைவி போலிருந்த வித்யா கேட்டாள். ஸ்ருதிஹாஸனில் கொஞ்சம், நயன்தாராவில் கொஞ்சம், சமந்தாவில் கொஞ்சம், அனுஷ்காவில் கொஞ்சம், என எடுத்து ஒரு மெஷினில் போட்டுக் கலக்கி ஒரு பெண்ணுருவம் செய்தால் எப்படி இருக்கும், என்று கற்பனை செய்பவர்களுக்கு ஒரு டிப்ஸ்... நீங்கள் உடனே சென்று வித்யாவைப் பாருங்கள்...! அது போதும்!

    ஸாரி வித்யா... இன்னிக்கு நாம எந்த மூவிக்கும் போக முடியாது! என்றாள் தலை முடிக்கு சிவப்புச் சாயம் அடித்திருந்த ஸ்வப்னா.

    ஏண்டி செங்குருவி... தியேட்டர்காரங்களெல்லாம் ஸ்டிரைக் பண்ணிட்டாங்களா? வித்யா கேட்டாள்.

    அதில்லைடி... சிட்டில ஓடற எல்லாப் படங்களையும் நாம பார்த்தாச்சு... இனி நாம படம் பார்க்கணும்னா புதுப்படம் ஏதாச்சும் ரிலீஸ் ஆனால்தான்

    ஓ... காட்! என்றபடி நெற்றியில் கை வைத்துக் கொண்ட வித்யா, அப்ப ஒண்ணு செய்வோம்... தமிழ்நாடு ஹோட்டல் பக்கத்துல ஒரு ஓவியக் கண்காட்சி போட்டிருக்கான்... அங்க போய்ப் பார்ப்போம் என்றாள்.

    அய்ய... இவ ஒரு ஓவியப் பைத்தியம்டி... எப்பப் பாரு ஓவியம்... ஓவியக் கண்காட்சின்னு அலையறா...! அப்படி என்னடி இருக்கு ஓவியத்துல? ஸ்வப்னா கேட்டாள்.

    ச்சூ... ஓவியக் கலை பற்றி உனக்கு ஒண்ணும் தெரியாது... கலைகளில் சிறந்தது ஓவியக் கலை...! ஒரு மனிதன் ஓவியம் வரையறான்!ன்னா அது ஆண்டவன் அவனுக்குக் குடுத்தனுப்பியிருக்கற ஸ்பெஷல் கிப்ட் வித்யா சொல்ல,

    அப்படின்னா நீயும் ஓவியம் கத்துக்கிட்டு வரைய வேண்டியதுதானே? வெடுக்கென்று சொன்னாள் ஸ்வப்னா.

    ம்... அதையும் முயற்சி பண்ணிப் பார்த்திட்டேன்...! ஒரு டிராயிங் ஸ்கூல்ல சேர்ந்து ஓவியம் வரையப் பழகினேன்...! பட்... அது எனக்கு வரலை...! பூச்செடி வரைஞ்சா... அது பூசணிக்காய் மாதிரி இருக்குது...! பூசணிக்காய் வரைஞ்சா அது பூதம் மாதிரி இருக்குது...! சரி... இது நமக்கு ஆகாத வேலை விட்டுடுவோம்!ன்னு வந்திட்டேன்...! ஆனா... ஓவியங்களை ரசிக்கற குணம் மட்டும் போகலை...! வித்யா சீரியஸாய்ச் சொன்னாள்.

    எப்படித்தான் உன்னால் ஓவியங்களை ரசிக்க முடியுதோ தெரியலை...! அன்னிக்கு அப்படித்தான் ஒரு புத்தகத்தில் இருந்த ஓவியத்தைக் காட்டி... ஆஹா... ஓஹோன்னு புகழ்ந்தே... அப்படி என்னதான் அதுல இருக்குது?ன்னு நானும் வாங்கிப் பார்த்தேன்... கசா... முசான்னு எவனோ பைத்தியக்காரன்... கிறுக்கி வெச்ச மாதிரி இருந்திச்சு...! கேட்டா... மாடர்ன் ஆர்ட்... உனக்குப் புரியாது!ன்னு என்னையே திருப்பியடிக்கறே! ஸ்வப்னா கடுப்பாகிச் சொல்ல,

    அடி செம்பட்டைச் சிறுக்கி... மாடர்ன் ஆர்ட்டையெல்லாம் எல்லோரும் ரசிக்க முடியாதுடி...! அதை ரசிப்பதற்கு ஒரு தனி ரசனை வேணும்டி...! முதல் பார்வையில் ஒரு அர்த்தம் புலப்படும்...! கூர்ந்து பார்த்தா... இன்னொரு அர்த்தம் தெரிய வரும்...! ஒரு சின்ன இடைவெளி விட்டு பார்த்தா... புதுசா வேறொரு அர்த்தம் வரும்...! இதுல ஆச்சரியம் என்ன?ன்னா அந்த ஓவியன் அதை வரையும் போது அவன் நினைத்து வரைந்த அர்த்தத்திற்கும்... நாம நினைச்ச அர்த்தத்திற்கும் துளியும் சம்மந்தமேயிருக்காது! வித்யா விளக்கிக் கொண்டே போனாள்.

    அய்யய்யோ... போதும்... போதும் உன் விளக்கம்...! உனக்கென்ன இப்ப நாம் அந்த ஓவியக் கண்காட்சிக்குப் போகணும்... அதானே...? புறப்படு போகலாம்! என்றாள் ஸ்வப்னா.

    ஐவரும் மெயின் ரோட்டுக்கு வந்ததும் ஒரு கால் டாக்ஸிக்காரன் அவனாகவே வந்து, டாக்ஸியா மேடம்? கேட்டான்.

    ஆமாம்ப்பா...! ஹோட்டல் தமிழ்நாடு போகணும்...! என்றாள் வித்யா.

    ஓவியக் கண்காட்சிக்கா மேடம்? டாக்ஸி டிரைவர் கேட்க,

    ஆமாம்... அதெப்படி கரெக்டா கண்டுபிடிச்சே? வித்யா ஆச்சரியமாய்க் கேட்டாள்.

    காலையிலிருந்து பத்து சவாரி அங்க கூட்டிட்டுப் போயிட்டேன்... எல்லோருமே உங்களை மாதிரிப் பொண்ணுங்கதான் என்று அந்த டாக்ஸி டிரைவர் சொல்ல, ஸ்வப்னாவைப் பார்த்து, எப்படி? என்று புருவத்தை உயர்த்திக் கேட்டாள் வித்யா.

    அவளோ வாயைக் கோணித்து அழகு காட்டினாள்.

    எல்லோரும் ஏறி அமர்ந்ததும், வழக்கத்தை விட அதிக வேகமாகவும், அசத்தல் ஸ்டைலுடனும் டாக்ஸியை ஓட்டினான் அந்த இளம் டிரைவர். பின்னே...? ஐந்து அழகான தேவதைகள் முன் தான் ஹீரோ ஆக வேண்டாமா?

    ஓவியர் சேகரின் தூரிகை வெளிச்சங்கள் என்கிற பேனர் அந்த ஓவியக் கண்காட்சியின் முகப்பில் வைக்கப்பட்டிருக்க,

    டாக்ஸியிலிருந்து இறங்கிய ஐந்து பெண்களும், டாக்ஸிக்காரனுக்கு பணத்தையும் கூடவே இலவச இணைப்பாய் ஒரு அழகான புன்னகையையும் தந்து விட்டு அந்தக் கண்காட்சி அரங்கை நோக்கி நடந்தனர். அவன் பணத்தை விட அந்தப் புன்னகைகளுக்குத்தான் அதிகம் வழிந்தான்.

    இந்த ஓவியன் பேரு சேகர் போலிருக்கு! என்றாள் வித்யா.

    உனக்கு இவரை தெரியுமா? ஸ்வப்னா கேட்டாள்.

    பெயர் கேள்விப்பட்டிருக்கேன்... ஆனா... ஆளையும் பார்த்ததில்லை... அவரோட ஓவியங்களையும் பார்த்ததில்லை!

    அரங்கினுள் நுழைந்த நிமிடத்திலேயே வித்யா ஓவிய ரசனைக்குள் மூழ்கிப் போனாள்.

    முதல் ஓவியத்திலிருந்து ஒவ்வொரு ஓவியத்தையும்... நின்று... நிதானித்து... ஆழ்ந்து பார்த்தவாறே மெல்ல மெல்ல நடந்தாள் வித்யா.

    வண்ணத் தீற்றல்கள் அந்த வஞ்சியின் உள்ளத்தை வசப்படுத்திக் கொண்டன.

    கோடுகளால் மட்டுமே தீட்டப்பட்ட கறுப்பு வெள்ளை ஓவியங்கள் அந்தக் கோல மயிலின் இதயத்தைக் கொள்ளை கொண்டன.

    சில ஓவியங்களைப் பார்த்து விழிகளை விரித்து, பிரமிப்பு காட்டினாள் வித்யா.

    சில ஓவியங்களைப் பார்த்து விழிகளைச் சுருக்கி, வாய் விட்டுப் புகழ்ந்தாள்.

    சக தோழிகள் அவளது ரீஆக்‌ஷனைப் பார்த்து ரகசியமாய்ச் சிரித்து, அவள் முதுகிற்குப் பின்னால் கிண்டலடித்தனர்.

    மாடர்ன் ஓவியங்கள் என்று போடப்பட்டிருந்த பிரிவிற்குள் வந்ததும் வித்யா தன்னையே மறந்தாள். ஒவ்வொரு ஓவியத்தின் எதிரிலும் குறைந்த பட்சம் இருபது முதல் முப்பது நிமிடங்கள் வரை செலவழித்தாள்.

    மெல்ல அவள் தோளருகே சென்ற ஒரு தோழி, அம்மாடி ரொம்ப லேட்டாயிடுச்சு... கிளம்பலாமா? என்றதும்,

    ச்சூ... டோண்ட் டிஸ்டர்ப் மீ...! நான் இந்த ஆர்ட்டை ஸ்டடி பண்ணிட்டிருக்கேன்!

    அடக் கடவுளே...! ஸ்டடி பண்றதுக்கு இதென்ன காலேஜ் பாடப் புத்தகமாடி? அந்த தோழி தலையிலடித்துக் கொள்ள,

    ஏய்... ஞான சூன்யம்... உங்களுக்கெல்லாம் மாடர்ன் ஆர்ட் புரியாது!ன்னு அப்பவே சொல்லிட்டேனல்ல...? அப்புறம் எதுக்கு இங்க வந்து நின்னுட்டிருக்கே...? போ... அந்தப் பக்கமாப் போய் நின்னு மொபைலை நோண்டி எவனச்சும் இளிச்சவாயனை வாட்ஸ் அப்ல பிடிச்சு கடலை போடு! என்று திட்டி விட்டு தன் ரசனையைத் தொடர்ந்தாள் வித்யா.

    சற்றுத் தள்ளி நின்று, வாட்சையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்த ஸ்வப்னா, ஒரு கட்டத்தில் கடும் கோபத்திற்கு ஆளாகி, வேக வேகமாய் வித்யாவிடம் வந்து, ஏய்... வித்யா நீ வரப் போறியா...? இல்லை நாங்க கிளம்பட்டுமா? என்று கத்தலாய்க் கேட்க,

    அரங்கிலிருந்த பலர் விருட்டென்று திரும்பி அவளைப் பார்த்தனர்.

    தர்ம சங்கடமான வித்யா, ஓ.கே!.ஓ.கே...! கிளம்பலாம்! என்றபடி பலவந்தமாய்தன் பார்வையை அந்த ஓவியத்தின் மீதிருந்து விலக்கிக் கொண்டு நடந்தாள். போகும் போது சன்னக் குரலில் ஸ்வப்னாவிடம் கேட்டாள், ஏய்... ஸ்வப்னா... ஒரே ஒரு சின்ன ரெக்வெஸ்ட்

    என்ன...? ஏதாவதொரு ஓவியத்தை விலை குடுத்து வாங்கலாம்கறியா?

    அதில்லைடி... வந்து... வந்து... எனக்கு இந்த ஓவியங்களை வரைந்த ஓவியர் சேகரைப் பார்க்கணும் போலிருக்கு தயங்கித் தயங்கிச் சொன்னாள்.

    க்ளுக்கென்று சிரித்து விட்ட ஸ்வப்னா, "ஏய் வித்யா ஒண்ணு சொல்லட்டா...? எனக்கென்னமோ இந்த ஓவியங்களையெல்லாம்

    Enjoying the preview?
    Page 1 of 1