Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Vazhvile Deepam Yetru...!
En Vazhvile Deepam Yetru...!
En Vazhvile Deepam Yetru...!
Ebook130 pages49 minutes

En Vazhvile Deepam Yetru...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வினோத்தின் மாமன் மகள் நர்மதா. அவர்களது பள்ளிக்காலத்தில் இரு குடும்பமும் கோவையில் இருந்ததால் இருவரும் ஒன்றாக சந்தோஷமாக இருந்தனர். வினோத்தின் தந்தைக்கு மும்பைக்கு மாற்றலாகி விட இருவரும் பிரிகின்றனர். பிரியும் ஒரு ஒப்பந்தம் செய்கின்றனர், “எந்தக் காரணத்தைக் கொண்டும், நாம் போனில் பேசவோ...வாட்ஸ் அப்பில் போட்டோ அனுப்பிக் கொள்ளவோ வேண்டாம்...! உன் உருவம் எனக்குள் சஸ்பென்ஸாகவே இருக்கட்டும்...கல்யாணத்தின் போது பார்த்துக் கொள்வோம்...! அப்பத்தான் திரில்லாய் இருக்கும்” என்று.

அதன்படியே வாழ்கின்றனர். பல வருடங்களுக்குப் பிறகு அண்ணன் மகள் நர்மதாவை வினோத்திற்கு பெண் கேட்க வந்த வினோத்தின் தாய் அதிர்கிறாள். நர்மதா வினோத்தை விட முக்கால் அடி உயரமாயிருக்க, கல்யாணம் நடக்காது என முடிவு செய்கிறாள். ஆனால் வினோத்தும் நர்மதாவும் உயரம் பெரிய விஷயமில்லை, என்று உறுதியாயிருந்து திருமணம் செய்கின்றனர்.

தாம்பத்ய வாழ்க்கையில் பல நேரங்களில் அந்த உயரம் காரணமாய் சந்தேகங்களும், சண்டை சச்சரவுகளும் வர, அதை எப்படி சந்திக்கின்றனர்...? வாழ்க்கையை எப்படி எதிர் கொள்கின்றனர்...? என்பதைக் கதையாக்கியிருக்கும் நாவலாசிரியர், இறுதியில் மாபெரும் அதிர்ச்சியான ஒரு விஷயத்தைக் கொண்டு வந்து வாசகர்களின் மனத்தைக் சோகமாக்கி விடுகின்றார்.

Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580130004810
En Vazhvile Deepam Yetru...!

Read more from Mukil Dinakaran

Related to En Vazhvile Deepam Yetru...!

Related ebooks

Reviews for En Vazhvile Deepam Yetru...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Vazhvile Deepam Yetru...! - Mukil Dinakaran

    http://www.pustaka.co.in

    என் வாழ்விலே தீபம் ஏற்று...!

    En Vazhvile Deepam Yetru…!

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் – 1

    அத்தியாயம் – 2

    அத்தியாயம் – 3

    அத்தியாயம் – 4

    அத்தியாயம் – 5

    அத்தியாயம் – 6

    அத்தியாயம் – 7

    அத்தியாயம் – 8

    அத்தியாயம் – 9

    அத்தியாயம் – 10

    அத்தியாயம் – 11

    அத்தியாயம் – 12

    அத்தியாயம் – 13

    அத்தியாயம் – 14

    அத்தியாயம் – 15

    அத்தியாயம் – 16

    அத்தியாயம் – 17

    அத்தியாயம் – 18

    அத்தியாயம் – 19

    அத்தியாயம் – 20

    அத்தியாயம் – 1

    மும்பைக்கு மாற்றலாகிப் போய் பத்து வருடங்களுக்குப் பிறகு, இப்போதுதான் கோவையிலிருக்கும் அண்ணன் பரசுராம் வீட்டிற்கு வர முடிந்தது பாமாவால்.

    இத்தனை வருஷத்துக்குப் பிறகு வந்திருக்கே...! வந்ததுதான் வந்தே... கூடவே மாப்பிள்ளையையும்... வினோத்தையும் கூட்டிட்டு வந்திருக்கலாம் அல்ல? பரசுராம் தன் ஆதங்கத்தைச் சொல்ல,

    க்கும்... உங்க மாப்பிள்ளையா...? அவரு வீட்டிற்கே ராத்திரி பத்து மணிக்கு மேல்தான் வர்றாரு...! மறுநாள் காலைல ஒன்பது மணிக்கு டாண்னு புறப்பட்டுப் போயிடறாரு...! அட... ஞாயிற்றுக்கிழமை... லீவு நாள்... அன்னிக்காவது வீடு தங்கறாரா...? ம்ஹூம்... அதுவுமில்லை...!அந்த மீட்டிங்... இந்த மீட்டிங்...னு சொல்லிக்கிட்டு அன்னிக்கும் முழுநாள் வெளியிலேயே இருந்திடுவார் பாமா சலிப்போடு சொன்னாள்.

    அது செரி... அவரைச் சொல்லியும் தப்பில்லை...! பெரிய டிரான்ஸ்போர்ட் கம்பெனில ஜோனல் மேனேஜரா இருக்கறவருக்கு பொறுப்புக்களும் அதிகம் இருக்கும்...! வேலைகளும் அதிகம் இருக்கும்...! அதுக்காக சொந்த பந்தங்களை மறந்திட்டு வேலையே கதி!ன்னு இருந்தா எப்படி? பரசுராம் செல்லமாய்க் கோபித்தார்.

    இடையில் புகுந்த பரசுராமின் மனைவி சுலோச்சனா, சரி... வினோத்தையாவது இழுத்திட்டு வந்திருக்கலாம் நீ...! பத்து வருஷத்துக்கு முன்னாடி அவன் இங்கிருக்கும் போது பார்த்தது... இப்ப நல்ல வளர்ந்திருப்பான் என்றாள்.

    அவன் அவங்கப்பாவை மிஞ்சுவான்...! இவராவது நின்னு பேசிட்டுப் போவார்... அவனா போகிற போக்கிலேயே பதில் சொல்லிட்டு ஓடிடுவான்...! எப்பக் கேட்டாலும், ப்ராஜெக்ட் கழுத்தை நெரிக்குது... டிலே பண்ணினா பெனால்டி கிளாஸ் வந்திடும்...! அப்புறம் கம்பெனிக்கு பெரிய லாஸ் வந்திடும்...! கடைசில அந்த லாஸ் டீம்ல இருக்கற எல்லோர் தலையிலும் விழுந்திடும்னு புலம்புவான்...! நான் கெஞ்சிக் கூடப் பார்த்திட்டேன்...! ம்ஹ்ஹூம் மசியவே மாட்டேங்கறான்...!அம்மா... வெளியிலிருந்து பார்க்கிறவங்களுக்கு ஐ.டி.கம்பெனி வேலை என்னவோ ரோஜாப்பூ மேலே படுத்திட்டிருக்கற மாதிரித்தான் தெரியும்...! உண்மையில் அது ஒரு முள் படுக்கைங்கறது... அதுல சிக்கிட்டு சின்னாபின்னப் படறவங்களுக்குத்தான் தெரியும்ங்கறான்" சொல்லி விட்டு முன் நெற்றியில் மெல்லமாய் அடித்துக் கொண்டாள் பாமா.

    என்னவோம்மா... நீயாவது எங்களையெல்லாம் பார்க்கணும்னு வந்தியே... அதுவே பெரிய சந்தோஷம் என்றான் பரசுராம்.

    சரி... நர்மதா எங்கே...? வந்ததிலிருந்து பார்க்கறேன் ஆளே கண்ணுக்குச் சிக்க மாட்டேங்கறா? பார்வையைச் சுழற்றியபடி கேட்டாள் பாமா.

    இங்கேயும் அதே கதைதான்...படிச்சு முடிச்சிட்டு வீட்டுல சும்மாத்தானே இருக்கேன்... ஜஸ்ட் ஒரு சேஞ்சுக்காக நானும் வேலைக்குப் போறேன்ப்பான்னு ஒரு நாள் கேட்டா... எனக்கும் அது சரின்னு பட்டுச்சு...ஓ.கேன்னுட்டேன்

    அடடே... அந்தச் சிறிய மனுஷி வேலைக்குப் போற அளவுக்கு பெரிய மனுஷியாயிட்டாளா...? பரவாயில்லையே? என்ற பாமா, ஆமாம்... ரொம்ப தூரமா...? இல்லை பக்கமா? கேட்டாள்.

    பக்கம்தான்... இங்கிருந்து ஒரு மூணு கிலோ மிட்டர் தூரம்தான் அவள் கம்பெனி... அதுவும் ஒரு ஸாப்ட்வேர் கம்பெனிதான்...! ஆனா வினோத் சொல்ற அளவுக்கு அவ்வளவு கெடுபிடி இங்க இல்லை...! காலை ஒன்பது மணிக்கு கிளம்பிப் போனான்னா... சாயந்திரம் ஆறு மணிக்கு டாண்ணு வந்திடுவா என்றார் பரசுராம்.

    ஓ.கே....! இனி முக்கியமான விஷயத்துக்கு வருவோம்...! அண்ணா... நானும் நீயும் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி பேசித் தீர்மானிச்சபடி வினோத்துக்கும் நர்மதாவுக்கும் சீக்கிரமே கல்யாணத்தைப் பண்ணிடுவோம்...! என்ன சொல்றே? பாமா திடீரென்று சீரியஸானாள்.

    நாங்க என்ன வேண்டாம்ன்னா சொல்லப் போறோம்...? எப்படா நீங்க இந்தப் பேச்சை ஆரம்பிப்பீங்க?ன்னு காத்திட்டிருக்கோம்! சிரித்தபடியே சொன்னாள் சுலோச்சனா.

    அதைக் கேட்டு வாய் விட்டுச் சிரித்த பாமா, நீங்க மட்டுமில்லை... எங்க பையன் வினோத்தும் அதுக்காகத்தான் ஆர்வத்தோட காத்திட்டிருக்கான்...! ஏன்னா ரெண்டு மூணு தடவை அவனே வாய் விட்டுக் கேட்டுட்டான்...!ஏம்மா... நர்மதா இன்னேரம் படிப்பெல்லாம் முடிச்சிருப்பாள்!தானே?ன்னு சூசகமாய்க் கேட்கிறான்... எனக்கா புரியாது அவன் எதுக்கு இத்தனை அக்கறையா கேட்கிறான்?னு" என்றாள்.

    தங்கச்சி... நீ வாய் விட்டுச் சொல்லிட்டே...! நாங்க சொல்லலை... அவ்வளவுதான்! பரசுராமும் கமுக்கமாய்ச் சிரித்தார்.

    ஓ... அப்ப நர்மதாவும் அவனை மாதிரித்தானா? பாமா தலையைச் சாய்த்துக் கொண்டு கேட்டாள்.

    பின்னே...? நீங்க இந்த ஊர்ல இருந்த காலகட்டத்திலே ரெண்டு ஒண்ணாத்தானே திரிஞ்சுதுக...? அப்பவே அதுக ரெண்டும் தீர்மானம் பண்ணிடுச்சுக...!உனக்கு நாந்தான்...! எனக்கு நீதான்னு சுலோச்சனா சந்தோஷமாய்ச் சொன்னாள்.

    எப்படியோ தங்கச்சி... பெத்தவங்க நாமும் அது ரெண்டையும் இணை சேர்க்கணும்!னு தீர்மானிச்சோம்...! அதே மாதிரி அதுகளும் தீர்மானிச்சிருக்குதுக...! இதை விட வேற என்ன வேணும்?

    அப்ப சீக்கிரம் நாள் பார்த்திடலாம்!னு சொல்றீங்க...? அப்படித்தானே? சுலோச்சனா உசுப்பினாள்.

    ஆமாம்... நாம லேட் பண்ணினா அப்புறம் அதுகளே நாள் பார்க்க ஆரம்பிச்சிடும்க...! அதனால கௌரவமா நாம முந்திக்கலாம்! என்றாள் பாமா.

    மகன் வினோத்திற்கு தன் அண்ணன் மகள் நர்மதாவை திருமணம் முடித்து விட்டு, விரைவில் ரிடையர்ட் ஆகப் போகும் தன் கணவருடன் காசி... ராமேஸ்வரம்... என புண்ணியத்தலங்களுக்குச் சென்று எஞ்சிய வாழ்க்கையைக் கழிக்கலாம்...! என்று திட்டம் தீட்டியிருந்த பாமாவைக் கூர்ந்து நோக்கிய விதி, விட்டேனா பார்? என்று அறை கூவல் விடுத்துக் கொண்டிருப்பது, பாவம் அவளுக்கு எப்படித் தெரியும்?.

    *****

    அத்தியாயம் – 2

    மாலை ஆறே கால் மணி வாக்கில் வாசலில் ஸ்கூட்டி சத்தம் கேட்க, நர்மதா வந்துட்டா என்றாள் சுலோச்சனா.

    ஏறக்குறைய ஏழெட்டு வருஷங்களுக்குப் பிறகு, நர்மதாவைக் காண ஆவலோடு காத்திருந்தாள் பாமா. இது நாள் வரையில் அவளை அண்ணன் மகளாக மட்டுமே பார்த்த கண்கள் இன்று அவளைத் தன் மருமகளாக... தன் மகனின் ஆசை மனைவியாகக் காணத் துடித்தாள்.

    வாசற் படியேறி உள்ளே வந்த நர்மதா, ஹை... அத்தை...! எப்ப வந்தீங்க? வரும் போதே முகமெங்கும் சந்தோஷப் பிரவாகம் பொங்கக் கேட்டுக் கொண்டே வந்தாள்.

    ஆனால், அந்த விநாடிதான் பாமாவின் மொத்தச் சந்தோஷமும் காற்றில் கரைந்த கற்பூரமாய்... மழையில் வரைந்த

    Enjoying the preview?
    Page 1 of 1