Oru Panthu... Aaru Run... Oru Aavi
()
About this ebook
அந்தப் பள்ளியின் நட்சத்திர கிரிக்கெட் வீரன் அர்ஜுன். ஏராளமான ரசிகர்..ரசிகைகள் உண்டு. அதே பள்ளியில் புதிதாய் வந்து சேரும் கௌதமும் ஒரு கிரிக்கெட் வீரன். ஆனால், இந்தப் பள்ளியில் அர்ஜுனை மீறி அவனால் ஜொலிக்க முடியவில்லை. இந்த நிலையில் அர்ஜுனின் தாய் லீலாவதிக்கும் கௌதமின் தாய்க்கும் இடையில் ஒரு சவால் எழுகின்றது. ஆண்டு விழா போட்டியில், இருவரும் தங்கள் மகன்தான் சாதிக்கப் போகிறான் என்று வாக்குவாதம் செய்கின்றனர். அந்த சவாலில் ஜெயிப்பதற்காக, கௌதமின் தாய் சந்திரா புகழ் பெற்ற கோச்சர் ஒருவரை நியமித்து தன் மகனுக்கு பயிற்சியளிக்கின்றாள். ஆனாலும் கௌதமால் சாதிக்க முடியவில்லை. அர்ஜுனே முன்னிலையின் நிற்கின்றான். கடைசியில் சந்திரா, ஒரு மந்திரவாதி மூலமாய் தன் மகன் கௌதமின் உடம்பிற்குள் இறந்து போன ஒரு வெளிநாட்டு கிரிக்கெட் வீரனின் ஆவியை நுழைக்கிறாள்.
அதன் விளைவாய் கௌதம் சாதிக்கிறான். சவாலின் ஜெயித்த பின் தன் மகன் உடம்பிலிருந்து ஆவியைப் பிரித்தெடுக்க சந்திரா மந்திரவாதியை நாடிப் போகும் போது, அவர் இறந்து போன விஷயம் தெரிய வர, நொந்து போகிறாள். ஆவி கௌதமின் உடம்பிற்குள் இருந்து கொண்டு பல விபரீதங்களைப் புரிகின்றது.
அவள் தன் மகன் உடம்பிலிருந்து ஆவியை பிரித்தெடுத்தாளா?....
Read more from Mukil Dinakaran
Siragai Viri!!... Sigaram Thodu!! Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Varam! Rating: 0 out of 5 stars0 ratingsSoftware Kuttrangal! Rating: 0 out of 5 stars0 ratingsUruthi Konda Nenjinaai... Vaa Rating: 0 out of 5 stars0 ratingsPaaraikkul Panneer Pushpam Rating: 0 out of 5 stars0 ratingsThanga Thamarai Malare! Rating: 5 out of 5 stars5/5Vinnai Thodalam Unthan Siragu Rating: 0 out of 5 stars0 ratingsUyiraal Inainthirupean Rating: 0 out of 5 stars0 ratingsEnnil Neeyadi!... Unnil Naanadi! Rating: 0 out of 5 stars0 ratingsVidiyalukku Illai Thooram Rating: 0 out of 5 stars0 ratingsIndrum Theriyavillai Natchathirangal! Rating: 0 out of 5 stars0 ratingsMul Naduve Malar Valarthu! Rating: 0 out of 5 stars0 ratingsPaathai Marantha Payanangal Rating: 0 out of 5 stars0 ratingsKaatrin Viralgal! Rating: 0 out of 5 stars0 ratingsUnakkena Thudikkum Idhayam Rating: 0 out of 5 stars0 ratingsOruvan Manathu Onbathada! Rating: 0 out of 5 stars0 ratingsUyirgalidathu Anbu Vendum! Rating: 0 out of 5 stars0 ratingsAnbai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsTherodi Ointha Theru Rating: 0 out of 5 stars0 ratingsSaathan Sollai Thattu Rating: 0 out of 5 stars0 ratingsPookalin Mozhi Puriyalaye? Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Sumanthu Pogirean Rating: 0 out of 5 stars0 ratingsAnbu Enum Thean Kalanthu! Rating: 0 out of 5 stars0 ratingsMangai Enthan Nenjukkul! Rating: 0 out of 5 stars0 ratingsIndha Mannil Anandham Rating: 0 out of 5 stars0 ratingsPagalil Thondrum Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsMr And Mrs Pei Rating: 0 out of 5 stars0 ratingsDubai Kizhavi! Rating: 0 out of 5 stars0 ratingsAval Oru Azhagana Thee Rating: 0 out of 5 stars0 ratingsBhuvana Oru Puthumai Penn Rating: 0 out of 5 stars0 ratings
Related to Oru Panthu... Aaru Run... Oru Aavi
Related ebooks
Inba Naalum Indru Thaane! Rating: 0 out of 5 stars0 ratingsKaathirukka Neramillai Rating: 5 out of 5 stars5/5Thendral Vanthu Ennai Sudum! Rating: 0 out of 5 stars0 ratingsPuthi Munai Kutram Rating: 0 out of 5 stars0 ratingsEzhavathu Jenmam Rating: 4 out of 5 stars4/5Mangai Enthan Nenjukkul! Rating: 0 out of 5 stars0 ratingsKanne Kolai Maane Rating: 0 out of 5 stars0 ratingsIthuvum Tajmahal Than Rating: 0 out of 5 stars0 ratingsKaanal Neer Kanavugal Rating: 5 out of 5 stars5/5Mella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Pattu Kudai Rating: 0 out of 5 stars0 ratingsEn Kaadhal Sathurangam Rating: 0 out of 5 stars0 ratingsVanavil Vibareetham Rating: 0 out of 5 stars0 ratingsMayakkam Enna... Undhan Mounam Enna... Rating: 0 out of 5 stars0 ratingsகோவையில் ஒரு குற்றம் Rating: 0 out of 5 stars0 ratingsKovaiyil Oru Kutram Rating: 5 out of 5 stars5/5Adithya Ondram Vaguppu Rating: 0 out of 5 stars0 ratingsUnakke Vechurikean Moochu! Rating: 0 out of 5 stars0 ratingsHema! Hema! Hema! Rating: 0 out of 5 stars0 ratingsUyiraal Inainthirupean Rating: 0 out of 5 stars0 ratingsKaathirunthen... Kaatriniley... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Neram Rating: 5 out of 5 stars5/5Pagalil Thondrum Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsAthe Athe... Saba Pathe... Rating: 0 out of 5 stars0 ratingsVidiyum Varai Madiyil Iru..! Rating: 0 out of 5 stars0 ratingsMaayam Seithayo Mayava Rating: 0 out of 5 stars0 ratingsUyir Kaadhalil Or Kavithai! Rating: 4 out of 5 stars4/5Attaikathi Rajakkal Rating: 0 out of 5 stars0 ratingsKangal Mayangiya Pothu... Rating: 0 out of 5 stars0 ratingsBrahmanin Panithuli Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Oru Panthu... Aaru Run... Oru Aavi
0 ratings0 reviews
Book preview
Oru Panthu... Aaru Run... Oru Aavi - Mukil Dinakaran
https://www.pustaka.co.in
ஒரு பந்து... ஆறு ரன்... ஒரு ஆவி
Oru Panthu... Aaru Run... Oru Aavi
Author:
முகில் தினகரன்
Mukil Dinakaran
For more books
https://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் – 1
அத்தியாயம் – 2
அத்தியாயம் – 3
அத்தியாயம் – 4
அத்தியாயம் – 5
அத்தியாயம் – 6
அத்தியாயம் – 7
அத்தியாயம் – 8
அத்தியாயம் – 9
அத்தியாயம் – 10
அத்தியாயம் – 11
அத்தியாயம் – 12
அத்தியாயம் – 13
அத்தியாயம் – 14
அத்தியாயம் – 15
அத்தியாயம் – 16
அத்தியாயம் – 17
அத்தியாயம் – 18
அத்தியாயம் – 19
அத்தியாயம் – 20
அத்தியாயம் – 21
அத்தியாயம் – 22
அத்தியாயம் – 23
அத்தியாயம் – 1
நேரம் மாலை நான்கு மணி.
அந்தப் பிரதான சாலையில் அமைந்திருந்த கே.பி.எஸ்.மெட்ரிகுலேஷன் பள்ளி
விடப்பட்டதும், அங்கு கூட்ட நெரிசல் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரிக்கத் துவங்கியது.
புற்றிலிருந்து புறப்பட்டு வரும் ஈசல்கள் போல, பள்ளிக் கட்டிடத்திற்குள்ளிருந்து மாணவ, மாணவியர்கள் திமு..திமு
வென்று வெளியே வந்த வண்ணமிருந்தனர்.
சிலர் வெளியே காத்திருந்த தங்கள் பெற்றோர்களின் இரு சக்கர, மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஏறிச் சென்று விட, பேருந்தில் செல்பவர்கள் அங்கிருந்த பேருந்து நிறுத்தத்தில் ஒரு மாபெரும் ஜன சமுத்திரத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர்.
கே.பி.எஸ்.பள்ளி நிர்வாகம், மாணவ...மாணவியர்கள் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு வருவதை தடை செய்திருந்ததால், சைக்கிளில் வருபவர்கள் எண்ணிக்கை அதிகமிருந்தது. அதன் காரணமாகவே, சைக்கிள்வாசிகளுக்கென தனி வழியைப் பள்ளி நிர்வாகம் நிர்மாணித்திருந்தது. அவ்வழியே வெளியேறும் சைக்கிள்கள் அந்தப் பிரதான சாலையைத் தொடாமல், வேறு வழியே செல்வதால், கூட்டம் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் இருந்தது.
அந்த நேரத்தில் மட்டும் அங்கு வந்து நின்று நெரிசலைக் கட்டுப்படுத்தும் டிராபிக் கான்ஸ்டபிள்களுக்கு பிளட் பிரஷ்ஷர்...சுகர்...இன்னபிற நோய்கள் எல்லாமுமே நிச்சயம் இருந்தாக வேண்டும். ஒருவேளை வரும் போது இல்லாதிருந்தாலும் கூட அங்கு வந்த பின் கண்டிப்பாய் வந்தே விடும்.
அப்போது பள்ளியின் மெயின் கேட்டிலிருந்து வெளி வந்த கௌதம், இரு புறமும் திரும்பித் திரும்பிப் பார்த்து விட்டு, தன் தாயைக் காணாததால் நெற்றி சுருக்கினான்.
என்ன கௌதம்...இன்னும் உங்க மம்மியைக் காணோம்!
உடனிருந்த சக மாணவன் சுரேஷ் கேட்டான்.
சில நிமிடங்கள் யோசித்த கௌதம், அட...இப்பத்தான் ஞாபகம் வருது....காலையிலேயே மம்மி சொல்லியிருந்தாங்க....
ஈவினிங் நான் வர்றதுக்குக் கொஞ்சம் லேட்டாகும்!...நீ ஸ்கூலுக்குள்ளாரவே இரு...எப்படியும் ஒரு அஞ்சே கால்...அஞ்சரைக்கெல்லாம் வந்துடறேன்!னு...நாந்தான் மறந்து போய் வெளிய வந்துட்டேன்!
என்றான் கௌதம்.
அப்பச் சரி...வா திரும்பவும் உள்ளாரவே போயி...அந்த மரத்துக்கடில உட்கார்ந்து வெய்ட் பண்ணுவோம்!
இன்னொரு மாணவன் கிருஷ் சொல்ல,
கரெக்ட்...வாங்கடா!
என்றபடி கௌதம் திரும்பி ஸ்கூலுக்குள் நடக்க, எல்லோரும் அவனைப் பின் தொடர்ந்தனர்.
கௌதமின் மம்மி வந்து சேர்வதற்குள் அவனைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம் செய்து கொள்வோமே!
அப்பள்ளியில் பிளஸ்-ஒன் படிக்கும் மாணவனான கௌதம், போன வருடம் வரை வேறொரு பள்ளியில்தான் படித்துக் கொண்டிருந்தான். பத்தாம் வகுப்பில் மிக மிகச் சாதாரண மார்க்கே வாங்கியிருந்த அவனை கே.பி.எஸ்.மெட்ரிக் பள்ளி
சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்று பிளஸ்-ஒன்னில் இடம் கொடுத்ததற்கான காரணம் அவன் ஒரு சிறந்த கிரிக்கெட் பிளேயர் என்பதால்தான்.
பள்ளிகளுக்கிடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில், இதற்கு முன் கௌதம் படித்துக் கொண்டிருந்த பள்ளி தொடர்ந்து எல்லா டிராபிகளையும் வென்று, முதலிடத்தில் நிலையாக நிற்பதற்கு முழு முதற் காரணம் இந்த கௌதம்தான். அவன் அணி உறுதியாகத் தோற்று விடும் என்று நூறு சதவீத ஆடியன்ஸும் தீர்மானிக்கும் மேட்சுகளையும் தன் சுய திறமையால் வென்று காட்டுவான். கொத்துக் கொத்தாய் ரிக்கார்டுகள் அவன் பாக்கெட்டில். அதனாலேயே அனைவருக்கும் அவன் ஜூனியர் தோனி.
கே.பி.எஸ்.மெட்ரிக் பள்ளியில் சேர்ந்த கௌதம், இந்தப் பள்ளியிலும் இனி நாம்தான் கொடி கட்டிப் பறக்கப் போகிறோம்!
என்று இறுமாப்புடன் இருந்த போதுதான், அங்கே தனக்கு ஒரு போட்டியாளன் இருக்கிறான் என்பதை அறிந்தான்.
அவன் பெயர்...அர்ஜுன். இதே கே.பி.எஸ்.மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்து விட்டு, தொடர்ந்து பிளஸ்-ஒன்
னும் இதே பள்ளியில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கும் அவன் இந்தப் பள்ளியின் நிரந்தர கிரிக்கெட் ஹீரோ. அவனும் கௌதமைப் போலவே பல ரிக்கார்டுகளுக்குச் சொந்தக்காரன்.
முந்தைய பள்ளியில் தனிக்காட்டு ராஜாவாக, ஒட்டு மொத்த மாணவர்களின் ஒரே ஹீரோவாக இருந்த கௌதமிற்கு, தனது ஹீரோ இருக்கையை இன்னொருவனுடன் பங்கு போட்டுக் கொள்வதில் துளியும் உடன்பாடில்லை. அதன் காரணத்தினாலேயே அவன் அந்த அர்ஜுனை ஏகமாய் வெறுத்தான். வெறுத்துக் கொண்டிருக்கிறான். வெறுத்துக் கொண்டேயிருப்பான்.
அதே நேரம் அர்ஜுனும், தனக்குப் போட்டியாக இன்னொருவன் முளைத்து விட்டான், என்பதாலேயும், அவன் பர்ஸனாலிட்டியிலும் தன்னை விட மிக மிக உயரத்தில் இருக்கிறான் என்பதாலேயும், ரொம்பவே நொந்து போய், கௌதமின் மேல் ஒரு அபரிமிதமான வெறுப்பைக் காட்டத் துவங்கியிருந்தான்.
டேய்...கௌதம்...என்னடா மணி அஞ்சே முக்காலே ஆயிடுச்சு...இன்னும் உங்க மம்மியைக் காணோம்?
சுரேஷ் லேசாய்ச் சிணுங்க ஆரம்பித்தான்.
வந்துடுவாங்கடா..வந்துடுவாங்கடா!
கௌதம் சமாளித்தான்.
இல்லைடா...இதுக்கு மேலே நான் லேட்டாப் போனா எங்க வீட்டுல என்னைத் திட்டுவாங்கடா!
அப்ப எந்திரிச்சுப் போய்த் தொலை!...நானும் கிருஷ்ஷும் மட்டும் வெய்ட் பண்றோம்!
என்றான் கௌதம் கடுப்புடன்.
ஸாரிடா கௌதம்!...நானும் கிளம்பனும்டா!...எனக்கு ஆறரை மணிக்கு டியூஷன் இருக்குடா!
கிருஷ்ஷும் நழுவினான்.
இருவரையும் எரித்து விடுவது போல் பார்த்து, போங்கடா...போங்கடா!
என்றான் கௌதம் கத்தலாய்.
அதற்காகவே காத்திருந்தாற் போல் அந்த சுரேஷும், கிருஷ்ஷும் தங்கள் புத்தக மூட்டையைத் தூக்கிக் கொண்டு, தலை தெறிக்க ஓடி மறைந்தனர்.
அவர்கள் சென்றதும் தனியே விடப்பட்ட கௌதம் மெல்ல எழுந்து, தன்னிடமிருந்த கிரிக்கெட் மட்டையை சும்மாவெனும் ஓங்கி அடிப்பது போலவும், பந்தைத் தடுத்து நிறுத்துவது போலவும், வெறும் காற்றில் விளையாடிக் கொண்டிருந்தான்.
ஆஹா...என்னாச்சுடா இந்த ஜூனியர் தோனிக்கு...தனியாவே டோர்னமெண்ட் நடத்திட்டிருக்கார்...மறை கழண்டு போச்சா?...இல்லை மைண்ட் சேஞ்ச் ஆயிடுச்சா?
மிகச் சமீபத்தில் அந்தக் குரலைக் கேட்ட கௌதம் சட்டென்று தன் அசைவை நிறுத்திக்