Kanavu Sumanthu Pogirean
()
About this ebook
சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.
தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.
சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.
கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.
Read more from Mukil Dinakaran
Uyirulla Bommaigal Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Varam! Rating: 0 out of 5 stars0 ratingsVinnai Thodalam Unthan Siragu Rating: 0 out of 5 stars0 ratingsEnnil Neeyadi!... Unnil Naanadi! Rating: 0 out of 5 stars0 ratingsThanga Thamarai Malare! Rating: 5 out of 5 stars5/5Bhuvana Oru Puthumai Penn Rating: 0 out of 5 stars0 ratingsSiragai Viri!!... Sigaram Thodu!! Rating: 0 out of 5 stars0 ratingsPagalil Thondrum Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsIni Ellam Sugame! Rating: 3 out of 5 stars3/5Oru Kathavum... Innoru Kathavum! Rating: 0 out of 5 stars0 ratingsNetru Vaarai Nee Yaaro? Rating: 0 out of 5 stars0 ratingsThee Kozhunthil Pani Thuliyai..!!! Rating: 0 out of 5 stars0 ratingsJeevan Oyum Munney! Rating: 0 out of 5 stars0 ratingsUnakkena Thudikkum Idhayam Rating: 0 out of 5 stars0 ratingsNalla Manam Vazhga! Rating: 0 out of 5 stars0 ratingsMulloduthan Muthangala? Rating: 0 out of 5 stars0 ratingsSugamana Kaathirupu! Rating: 0 out of 5 stars0 ratingsUnakke Vechurikean Moochu! Rating: 0 out of 5 stars0 ratingsIthu Mattum Kadanthu Pogathu! Rating: 0 out of 5 stars0 ratingsMullum Naane...! Malar Naane! Rating: 0 out of 5 stars0 ratingsMalarum Sudugindrathu Rating: 0 out of 5 stars0 ratingsKanneer Varaintha Oviyam Rating: 0 out of 5 stars0 ratingsSaami Potta Mudichu! Rating: 0 out of 5 stars0 ratingsKaatrin Viralgal! Rating: 0 out of 5 stars0 ratingsAnbu Enum Thean Kalanthu! Rating: 0 out of 5 stars0 ratingsAntha Violet Kangal Rating: 0 out of 5 stars0 ratingsCylinder Niraya Anbu Rating: 0 out of 5 stars0 ratingsInge Oru Shahjahan Rating: 0 out of 5 stars0 ratingsTherodi Ointha Theru Rating: 0 out of 5 stars0 ratingsKaraiyai Thedum Odangal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kanavu Sumanthu Pogirean
Related ebooks
Kaanal Neer Kanavugal Rating: 5 out of 5 stars5/5Raathirigal Jakkirathai! Rating: 0 out of 5 stars0 ratingsVilaikku Oru Vanavil Rating: 0 out of 5 stars0 ratingsYetho Mogam Yetho Thaagam Rating: 0 out of 5 stars0 ratingsManathil Pathintha Oviyam Rating: 0 out of 5 stars0 ratingsUnnaiye Rathi Endru... Rating: 0 out of 5 stars0 ratingsEn Kaadhal Mannavaney Rating: 0 out of 5 stars0 ratings"Rendum Rendum Moonu" Rating: 0 out of 5 stars0 ratingsNeelam Pirintha Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsManasu Valikkuthu Mathumitha! Rating: 0 out of 5 stars0 ratingsUnakkenna Venum Sollu! Rating: 0 out of 5 stars0 ratingsNinaikka Therindha Manamey! Rating: 0 out of 5 stars0 ratingsOru Mul Oru Malar Rating: 1 out of 5 stars1/5Rosap Poovu Lesaai Saavu Rating: 5 out of 5 stars5/5Valarpirai Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsAalayamagum Mangai Manathu Rating: 0 out of 5 stars0 ratingsKuliratha Margazhi Rating: 0 out of 5 stars0 ratingsOru Neela Devathai! Rating: 0 out of 5 stars0 ratingsIrulai Virattu Rating: 0 out of 5 stars0 ratingsSoonyakara Kizhavi Rating: 0 out of 5 stars0 ratingsEnakkanave Nee! Rating: 5 out of 5 stars5/5Manitha Subavam Rating: 0 out of 5 stars0 ratingsKuttrangal Kuraivathillai Rating: 4 out of 5 stars4/5Uyirodu Vendum… Rating: 5 out of 5 stars5/5Nadunishi Thendral Rating: 5 out of 5 stars5/5Sivappai Oru Pournami Rating: 4 out of 5 stars4/5கண்ணகி - '96' Rating: 0 out of 5 stars0 ratingsKaathirukka Neramillai Rating: 5 out of 5 stars5/5Naan Nee….Aathma! Rating: 5 out of 5 stars5/5கவிதா நகர் கடைசி தெரு Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kanavu Sumanthu Pogirean
0 ratings0 reviews
Book preview
Kanavu Sumanthu Pogirean - Mukil Dinakaran
http://www.pustaka.co.in
கனவு சுமந்து போகிறேன்!
Kanavu Sumanthu Pogirean!
Author:
முகில் தினகரன்
Mukil Dinakaran
For more books
http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் – 1
அத்தியாயம் – 2
அத்தியாயம் – 3
அத்தியாயம் – 4
அத்தியாயம் – 5
அத்தியாயம் – 6
அத்தியாயம் – 7
அத்தியாயம் – 8
அத்தியாயம் – 9
அத்தியாயம் – 10
அத்தியாயம் – 11
அத்தியாயம் – 12
அத்தியாயம் – 13
அத்தியாயம் – 14
அத்தியாயம் – 15
அத்தியாயம் – 16
அத்தியாயம் – 17
அத்தியாயம் – 18
அத்தியாயம் – 19
அத்தியாயம் – 20
அத்தியாயம் – 21
அத்தியாயம் – 22
அத்தியாயம் – 23
அத்தியாயம் – 24
அத்தியாயம் – 25
அத்தியாயம் – 26
அத்தியாயம் – 27
அத்தியாயம் – 1
கோவை.
இதமான தென்றல் காற்று வீசும் மாலை வேளையில் பத்மாலயா
மேன்சனின் மொட்டை மாடியில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தது, மூன்று பேர் கொண்ட அந்த இளைஞர் குழு.
டேய் சங்கர்... ஒரு நாளைக்கு இல்லாட்டி ஒரு நாளைக்கு அந்தப் பொண்ணுக்கு எல்லா உண்மைகளும் தெரியத்தான் போகுது... அப்புறம் இருக்குதுடி உனக்கு ஆப்பு!
சிகரெட்டை உறிஞ்சிக் கொண்டே சொன்னான் குணா.
சொன்ன குணாவை அலட்சியமாகப் பார்த்த சங்கர், இருபத்தியெட்டு வயது இளைஞன், சொந்த ஊர் கோவையை அடுத்த பொள்ளாச்சி அவனது சொந்த ஊர். வேலை தேடி கோவை வந்தவன் கடந்த நான்கு ஆண்டுகளில் பத்துக் கம்பெனிகளுக்கும் மேல் பணி புரிந்து விட்டான். ஏனோ எங்கும் அவனால் ஆறு மாதங்களுக்கும் மேல் நிலைக்க முடியவில்லை. அவனுடைய அறைத் தோழர்களும் ஏறக்குறைய அவனைப் போல்தான்.
என்ன... என்ன சொன்னே?... எனக்கு ஆப்பா?... கண்ணு... அதுக்கு வாய்ப்பே இல்லை!... ஏன்னா... வாட்ஸ்அப்ல அவளுக்கு நான் அனுப்பியிருக்கற என் போட்டோ... உண்மையில் என் போட்டோவே இல்லை
சொல்லி விட்டுச் சிரித்தான் சங்கர்.
அடப்பாவி... வேற யார் போட்டோவை அனுப்பு வெச்சிருக்கே?... அஜீத் போட்டோவையா?... இல்லை ஜெயம் ரவி போட்டோவையா?
குணா சிகரெட்டைத் தூக்கி எறிந்து விட்டுக் கேட்டான்.
ம்ஹூம்... அதையெல்லாம் போட்டா தெரிஞ்சிடும்... அதனால... யாருன்னே தெரியாத ஒரு இளைஞனோட போட்டோ நெட்டுல கிடைச்சுது!... பாத்தா ஆள் ஹீரோ கணக்கா இருந்தான்... சரின்னு அவன் போட்டோவைப் போட்டு... இதுதான் நான்
னு சொல்லிட்டேன்!... அவளும் நம்பிட்டா!" புன்னகையோடு சொன்னான் சங்கர்.
அடப்பாவி...
கரு... கருன்னு காமெடியனுக்குக் கூட லாயக்கில்லாத நீ... ஹீரோவாட்டம் இருக்கற வேற ஒருத்தனோட போட்டோவைப் போட்டு ஒரு பொண்ணை ஏமாத்திட்டு இருக்கறியே?... இது நியாயமாடா?
அது வரையில் அமைதியாய் அமர்ந்து எதிர் விட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்த ஒரு ஆண்ட்டியை சைட் அடித்துக் கொண்டிருந்த ராஜய்யன் கேட்டான்.
இதுக்கே இப்படி பீதியடையறீங்களே... இன்னும் மீதியைச் சொன்னா என்ன ஆவீங்க?
கேட்டான் சங்கர்.
ஓ... இன்னும் நிறைய இருக்கா?... சொல்லு... சொல்லு!
ஆர்வமாய்க் கேட்டான் குணா.
என் பேரு சங்கர்
என்று சங்கர் ஆரம்பிக்க,
பரவாயில்லை பேரை மாத்திச் சொல்லாம உண்மையான பேரைச் சொல்லியிருந்தியே?... அதுவே பெரிய விஷயம்!
என்று ராஜய்யன் இடையில் புகுந்து சொல்ல,
ப்ச்!
என்று அவனைக் கடுப்படித்த சங்கர் தொடந்தான், ஐ.யாம்... சங்கர்.எம்.பி.ஏ...
எம்.பி.ஏ.? வா?... அடப்பாவி... பிளஸ்டூ... பெயிலான நீ... எம்.பி.ஏ. வா?
என்று சத்தமாய்க் கேட்டு விட்டு வாய் விட்டுச் சிரித்தான் குணா.
ஆமாம்...
சங்கர் எம்.பி.ஏ., மார்க்கெட்டிங் மேனேஜர் இன் மல்டி நேஷனல் கம்பெனி!ன்னு சொல்லியிருக்கேன்!
அய்யோ... அய்யோ... ஆபீஸ்பாய் ஆகவும்... கொரியர் பாய் ஆகவும்... பெட்ரோல் அடிக்கிற லேபராகவும் வேலை பார்க்கற நீ... மார்க்கெட்டிங் மேனேஜர்?...
வாயைத் திறந்து உள்ளங்கையால் அடித்துக் கொண்டான் ராஜய்யன்.
அட... அவ என்ன இங்க வந்து பார்க்கறவா போறா?... சும்மா விட வேண்டியதுதானே?
சங்கர் தன் செயலுக்கு நியாயம் கற்பிக்க முயன்றான்.
ஒருவேளை வந்திட்டான்னா... என்ன பண்ணுவே?
அதுக்குத்தானே போட்டோவை மாத்திக் குடுத்திருக்கேன்?... நான் நேரிலேயே போனாலும் என்னை அடையாளம் தெரியாது அவளுக்கு!...
சில நிமிடங்கள் அமைதி காத்த குணா, டேய்... அந்தப் பொண்ணோட பேர் என்ன?ன்னு நீ சொல்லவே இல்லையே?
தீபா...
அப்படியே அவளோட போட்டோவையும் காட்டிடு... நாட்டுல இப்படியும் ஒரு முட்டாள் பொண்ணு இருக்குன்னு நாங்களும் தெரிஞ்சுக்கறோம்!
என்று சொல்லியபடி சங்கரின் அருகில் வந்து, அவன் கையிலிருந்த செல்போனைப் பிடுங்கினான் குணா.
இருடா... இருடா... நானே காட்டறேன்!
என்று சொல்லி தன் வாட்ஸ்அப்பிலிருந்த அந்தப் பெண்ணின் புகைப்படத்தைக் குணாவிற்குக் காட்ட, அவன் வாயைப் பிளந்தான்.
குணாவின் முகத்தில் தெரிந்த பிரகாசத்தைக் பார்த்த ராஜய்யன் அவனும் ஓடி வந்தான், டேய்... டேய்... சங்கர்... எனக்கும் காட்டுடா!
அவனுக்கும் காட்டினான் சங்கர்.
ஆடிப் போனான் ராஜய்யன், டேய்... பார்த்தா ரொம்ப ஹோம்லியா இருக்காடா... நோகடிச்சிடாதடா... பாவம்டா!
நானா வலியப் போய் இழுக்கறேன்?... அதுவா வந்து மாட்டுது...
திமிராய்ச் சொன்னான் சங்கர்.
ம்... உன்னோட நிஜ போட்டோவைப் போட்டுப் பாரு... அடுத்த நாளே காறித் துப்பிட்டுக் காணாமப் போயிடுவா!
என்றான் ராஜய்யன்.
இடையில் புகுந்த குணா, என்னடா சொல்றா?... ஐ லவ் யூ
ன்னு சொல்லிட்டாளா?" அங்கலாய்ப்புடன் கேட்டான்.
அதை மட்டும்தான் சொல்லலை!... மத்தபடி
உங்களோட பேசினா மனசுக்கு ரொம்ப இதமாயிருக்கு சங்கர்!... பேசிக்கிட்டே இருக்கலாம்னு தோணுது சங்கர்ன்னு சொல்லுவா!.
ஓ... அப்புறம்?
எங்க அம்மா... அப்பாவுக்கு அடுத்தபடியா என் மனசுல இடம் பிடிச்சது நீங்க மட்டும்தான் சங்கர்!
ன்னு புலம்புவா!"
ஆபீஸ் டென்ஷனெல்லாம் நீங்க பேசினா பறந்து போயிடுது
ன்னு சொல்லுவா... ஒவ்வொரு நிமிடமும்... ஒவ்வொரு விநாடியும் என் மனசு உங்களையே நினைச்சிட்டிருக்கு சங்கர்!... அதை மாத்தணும்னு நானே நெனச்சாலும் என்னால மாத்த முடிய மாட்டேங்குது சங்கர்!
ம்பா!"
அப்ப சந்தேகமேயில்லை... இது காதல்தான்!
என்றான் ராஜய்யன்.
ஆனா இதுவரைக்கும் நேரடியா அதைச் சொல்லவே இல்லையே?
சங்கர் சொல்ல,
நீயா புரிஞ்சுக்க வேண்டியதுதான்...
என்றான் ராஜய்யன்.
அது செரி... உன்னோட மொபைல் நெம்பர் குடுத்திருக்கியே... அதை வெச்சு உன்னைக் கண்டுபிடிச்சிடலாமே?
புதிதாய் எதையோ கண்டுபிடித்து விட்ட மாதிரி குணா சொல்ல,
அந்த அளவுக்கு நான் முட்டாளா என்ன?... என் போன்ல இருக்கற சிம் என் பேர்ல இல்லை!... ஊர்ல எங்க மாமா குடுத்தார்... அவர்கிட்ட எக்ஸ்ட்ரா ஒண்ணு இருந்தது...
பலே கில்லாடிதாண்டா நீ!
ஆபீஸ் டென்ஷன்
னு சொன்னியே?... அந்தப் பொண்ணு ஆபீஸுக்கு வேலைக்குப் போற பொண்ணா?" ராஜய்யன் கேட்டான்.
ம்... ஒரு பெரிய கார்ப்பரேட் கம்பெனில ஹெச்.ஆர்.மேனேஜராம்!... எம்.பி.ஏ... ஹெச்.ஆர்... படிச்சவளாம்!
விழிகளைப் பெரிதாக்கிச் சொன்னான் சங்கர்.
அப்படின்னா நல்ல சம்பளம் வருமே?... பேசாம கையைக் காலைப் பிடிச்சாவது செட்டிலாயிடுடா!
என்றான் ராஜய்யன்.
எங்க போய் செட்டிலாகறது?... அவ என்னோட ஒரிஜினல் முகத்தைப் பார்த்தான்னா... மயக்கம் போட்டு விழுந்தாலும் விழுந்திடுவா!
தன்னைத் தானே சொல்லிக் கொண்டான் சங்கர்.
சரி... என்னதான் பண்ணலாம்னு இருக்கே?
குணா கேட்க,
உதட்டைப் பிதுக்கினான் சங்கர்,