Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyirulla Bommaigal
Uyirulla Bommaigal
Uyirulla Bommaigal
Ebook144 pages52 minutes

Uyirulla Bommaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிறுகதை என்பது மூன்று அல்லது நான்கு பக்கங்களுக்குள் ஒரு சிறிய சம்பவத்தை கற்பனையோடு விவரித்து, சிறியதாய் ஒரு முடிச்சிட்டு, குறைவான பாத்திரங்களோடு, மிகையில்லாத வசனங்களோடு, கதையின் இறுதியில் அந்த முடிச்சை நாசூக்காக அவிழ்க்க வேண்டும். அவ்வாறு அவிழ்க்கும் போது சமூகத்திற்கு உறைக்கும் விதத்தில் ஒரு கருத்து பொதிந்திருந்தால் மிகவும் சிறப்பு.
“உயிருள்ள பொம்மைகள்” என்னும் இத்தொகுப்பில் 20 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. குடும்பக் கதைகளும், சமூகக் கதைகளும், சுயமுன்னேற்றக் கருத்துரைக்கும் கதையும் இடம் பெற்றிருந்த போதிலும் இடையே ஒரு திரில்லர் கதையும் உண்டு.
ஒவ்வொரு சிறுகதையும், படித்து முடித்த வாசகனின் மனதில் ஒரு சிறு சலனத்தை ஏற்படுத்துகின்ற போதுதான், அக்கதை வெற்றி பெற்றதாக அர்த்தம். அவ்வாறு வாசகனின் மனதில் ஊடுருவ வேண்டுமெனில் சிறுகதை பாமரனுக்கும் சென்றடையும் விதத்தில் எளிமையான வார்த்தைகளோடு, அலங்காரமற்ற காட்சி விவரிப்புகளுடன் இருத்தல் அவசியம்.
இத்தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் அந்த வகையில் உள்ள கதைகளே என்பது எனது நம்பிக்கை.
நன்றி
இவண்,
முகில் தினகரன்
Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580130005604
Uyirulla Bommaigal

Read more from Mukil Dinakaran

Related to Uyirulla Bommaigal

Related ebooks

Reviews for Uyirulla Bommaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyirulla Bommaigal - Mukil Dinakaran

    http://www.pustaka.co.in

    உயிருள்ள பொம்மைகள்

    Uyirulla Bommaigal

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. எளிது... எளிது... வெல்வதும் எளிது

    2. காய்கறிக்காரி

    3. மாறியது நெஞ்சம்

    4. மலைக்கோயில்

    5. மாமனோட மனசு

    6. நாம்… நமது…

    7. பாவ விமோசனம்

    8. பசுமரத்தாணிகள்

    9. பொன் நிறத்தில் ஒரு பறவை

    10. பொன்னாடை

    11. புதிர்களின் நடுவில்

    12. சில நிஜங்கள்

    13. தாலாட்டும் கிள்ளைகள்

    14. தீதும்… நன்றும்!

    15. தெய்வத்துள் வைக்கப்படும்

    16. உயிருள்ள பொம்மைகள்

    17. உயிரே… உயிரே… உயிரை விடு

    18. வெல்வெட் வாழ்க்கை

    19. சுமங்கலி மனசு

    20. நேர் துருவங்கள்!

    என்னுரை

    சிறுகதை என்பது மூன்று அல்லது நான்கு பக்கங்களுக்குள் ஒரு சிறிய சம்பவத்தை கற்பனையோடு விவரித்து, சிறியதாய் ஒரு முடிச்சிட்டு, குறைவான பாத்திரங்களோடு, மிகையில்லாத வசனங்களோடு, கதையின் இறுதியில் அந்த முடிச்சை நாசூக்காக அவிழ்க்க வேண்டும். அவ்வாறு அவிழ்க்கும் போது சமூகத்திற்கு உறைக்கும் விதத்தில் ஒரு கருத்து பொதிந்திருந்தால் மிகவும் சிறப்பு.

    உயிருள்ள பொம்மைகள் என்னும் இத்தொகுப்பில் 20 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. குடும்பக் கதைகளும், சமூகக் கதைகளும், சுயமுன்னேற்றக் கருத்துரைக்கும் கதையும் இடம் பெற்றிருந்த போதிலும் இடையே ஒரு திரில்லர் கதையும் உண்டு.

    ஒவ்வொரு சிறுகதையும், படித்து முடித்த வாசகனின் மனதில் ஒரு சிறு சலனத்தை ஏற்படுத்துகின்ற போதுதான், அக்கதை வெற்றி பெற்றதாக அர்த்தம். அவ்வாறு வாசகனின் மனதில் ஊடுருவ வேண்டுமெனில் சிறுகதை பாமரனுக்கும் சென்றடையும் விதத்தில் எளிமையான வார்த்தைகளோடு, அலங்காரமற்ற காட்சி விவரிப்புகளுடன் இருத்தல் அவசியம்.

    இத்தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் அந்த வகையில் உள்ள கதைகளே என்பது எனது நம்பிக்கை.

    நன்றி

    இவண்,

    முகில் தினகரன்

    1. எளிது... எளிது... வெல்வதும் எளிது

    நாளை மறுநாள் சாவித்திரி அந்த ஊருக்குப் புறப்படுகிறாள்.

    முன்னதாக இன்றே, மேஜை, நாற்காலி, கண்ணாடிகள், அலமாரிகள், மற்றும் ஒரு மகளிர் அழகு நிலையத்திற்குத் தேவையான அலங்கார வஸ்துக்கள் எல்லாவற்றையும் வேனில் ஏற்றி அனுப்பி விட்டு இப்போதுதான் அறைக்குத் திரும்பினாள். வந்தவள் உடையைக் கூட மாற்றாமல் அப்படியே தொப்பென்று படுக்கையில் விழுந்து சோம்பல் முறித்தாள்.

    மேலிருந்து வந்த ஃபேன் காற்று அவள் உடம்பை இதமாய்த் தடவ,

    அவள் மனதின் நினைவுச் சிறகுகள் அந்த ஊரை நோக்கி...தன் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட அந்த நாளை நோக்கிப் பறக்கத் துவங்கின.

    அந்த ஊர் என்பது வேறெதுவுமில்லை. சாவித்திரி பிறந்து, கிட்டத்தட்ட பத்துப் பதினோரு வயது வரை வளர்ந்த ஊர்தான். ஊரைச் சுற்றி வயல்காடுகள். ஊரின் மேற்குப் புறத்தில் ஒரு சிறிய மலைக்குன்று. அதன் உச்சியில் வழக்கம் போல் ஒரு கோயில். பதினேழு வருடங்களுக்கு முன் அந்த ஊரை விட்டு வந்தவள் இப்போதுதான் திரும்பப் போகிறாள். அதுவும் வெறுமனே இல்லை, சிட்டியில் தான் நட்த்திக் கொண்டிருக்கும் மிக மிக நவீனத்துவம் வாய்ந்த மகளிர் அழகு நிலையத்தின் கிளை ஒன்றை அந்த ஊரில் துவக்குவதற்கான சகலவிதமான ஏற்பாடுகளுடன்.

    அய்யய்ய...போயும் போயும் அந்த ஊரிலா உன் ப்யூட்டி பார்லரோட பிராஞ்ச்சை ஓப்பன் பண்ணப் போறே? சரியான கிராமம்டி அது! கல்யாணம் மாதிரி ஏதாவது பெரிய விசேஷம்!ன்னாத்தான் மூஞ்சிக்கு பவுடரே போடுவாங்க! அதுவும் சில வீடுகள்ல பவுடர் வாங்கற மிச்சப்படுத்திக்கிட்டு மைதா மாவைக் கூடப் பூசிக்குவாங்க! அங்க போய் பிராஞ்சை ஓப்பன் பண்றதும் கண்ணைத் திறந்துக்கிட்டே போய் கரண்ட் வர்ற ஒயரைத் தொடறதும் ஒண்ணுதான்! உன்னோட வசந்தம் மகளிர் அழகு நிலையமும், அதோட சீஃப் பியூட்டிஸியனான உன்னோட புகழும் தொலைக்காட்சிகள் மூலமா மொத்த தமிழ்நாடு முழுவதும் பரவியிருக்கு! சினி ஃபீல்டுல இருந்து கூட உன்னை அப்ரோச் பண்ணிட்டிருக்காங்க! ஒன்றிரண்டு பெரிய நடிகைகளுக்கும் நீ மேக்கப் பண்ணியிருக்கே! இந்தச் சமயத்துல அங்க போய்...ஓப்பன் பண்ணி... பேரைக் கெடுத்துக்காதே! சக தோழிகள் அறிவுரைத்த போதெல்லாம் அதை அலட்சியம் செய்தாள்.

    காரணம்? காயம்!. அந்தக் காயத்தினால் பீறிட்டெழுந்த லட்சியம். அந்த லட்சியத்தினால் உண்டான உழைப்பு.

    அவள் வாழ்வின் லட்சியமே அந்த ஊரில் ஒரு அழகு நிலையம் உருவாக்குவதுதான். அதற்காகத்தானே அந்த அழகுக் கலை கோர்ஸே படித்தாள். அந்த துறையில் சாதித்து, பேரும் புகழும் பெற வேண்டும், பின்னர்தான் அந்தக் கிராமத்துக்குப் போக வேண்டும், என்கிற எண்ணத்தில்தான் சென்னையில் தன் முதல் அழகு நிலையத்தைத் துவக்கினாள்.

    கீழ் சாதிப் பிறப்பு, அதிலும் சவங்களுக்கு இறுதி ஜோடிப்பு செய்யும் தொழிலை குலத் தொழிலாய்க் கொண்ட சாதியில் பிறந்தவள் என்கிற ஒரே காரணத்திற்காக பதினேழு வருடங்களுக்கு முன் அவள் பட்ட ஒரு அவமானம்தான் அவளுக்கு ஒரு தூண்டு கோலாயிருந்தது. அவளுக்குள் ஒரு நம்பிக்கைத் தண்டவாளத்தைப் பதித்தது என்றால் அது சத்தியமான உண்மை. ஆனால், அவளது தந்தையோ, பாட்டனாரோ, முப்பாட்டனாரோ யாருமே தாங்கள் பட்ட அவமானங்களின் வீரியத்தைப் புரிந்து கொள்ளாமல் மனித ஜடங்களாக காலங்காலமாய் வாழ்ந்து வந்திருக்கிறார்களே... என்பதை நினைக்கும் போதெல்லாம் அவளுக்குள் ஒரு கோபத்தீ மூளும்.

    பல வருடங்களுக்கு முன் அப்படித்தான் ஒரு நாள் கோபத்தீ மூண்டது.

    அப்போது சாவித்திரிக்கு வயது பத்து அல்லது பதினொன்று இருக்கும். ஊர்ப் பெரியவரும், மேல் சாதி மக்களின் தலைவருமான பொன்னுரங்கம் அய்யா வீட்டு மாட்டுக் கொட்டிலில் எடுபிடி வேலைக்கு அவளை விட்டிருந்தார் அவள் தந்தை. கல்வி கற்க வேண்டும், எதிர்காலத்தில் பெரியதொரு நிலைக்கு வர வேண்டும், தன் சாதி சனத்தின் இழி நிலையை மாற்ற வேண்டும், என்கிற ஆசையை அந்த வயதிலேயே தனக்குள் விதைத்து வைத்திருந்த சாவித்திரி, மனதிற்கு சற்றும் பிடிக்காத அந்த வேலையை தந்தையின் அடிக்கு பயந்து செய்து கொண்டிருந்தாள்.

    அன்று காலையிலிருந்தே மனம் ஒரேயடியாய் வெறுத்து போயிருக்க, வேலைக்குப் போகாமல் அடம் பிடித்து வீட்டிலேயே கிடந்தாள்.

    ஆனாலும் அவளை விடாமல் தர... தரவென்று இழுத்து வந்து பொன்னுரங்கம் அய்யா முன் நிறுத்தி, சாமி... பாருங்க சாமி இந்தக் கழுதையை... வேலைக்குப் போக மாட்டேன்...இஸ்கூலுக்குத்தான் போவேன்ன்னு அடம் பிடிக்கறா சாமி! நீங்க ரெண்டு போடுங்க சாமி... அப்பத்தான் கேட்பா என்று தன் மகளை அடிக்கும் உரிமையைத் தன் முதலாளிக்குத் தாரை வார்த்தார் சாவித்திரியின் தந்தை.

    பண்ணையில் வேலை செய்யும் ஆட்களை அதிலும் கீழ் சாதியைச் சேர்ந்த ஆட்களை மனிதர்கள் என்றே நினைக்காமல் சரமாரியாக அடித்துத் துவம்சம் செய்வதை தன் எஜமான கௌரவம் என்றெண்ணி வாழ்ந்து வரும் அந்தப் பொன்னுரங்கம் அய்யா அந்தக் கீழ்ச் சாதி சிறுமியை மட்டும் விட்டு வைப்பாரா?

    ஒரே எட்டில் அவள் தலை முடியைப் பற்றி வெறி கொண்ட மட்டும் இழுத்து ஏலேய் சவம் ஜோடிக்கற சாதில பொறந்த பொட்டைக் கழுதைக்குப் படிப்புக் கேட்குதாலேய்? என்றபடி

    Enjoying the preview?
    Page 1 of 1