Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poochuduthe En Vaalibam!
Poochuduthe En Vaalibam!
Poochuduthe En Vaalibam!
Ebook149 pages54 minutes

Poochuduthe En Vaalibam!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கல்லூரி மாணவியான நித்யாவை சக மாணவன் விக்னேஷ் விடாமல் துரத்தி தன் காதலைச் சொல்லுகிறான். தான் ஏற்கனவே நரேனைக் காதலித்துக் கொண்டிருப்பதை அவள் சொல்லியும் விடாமல் நச்சரிக்கிறான்.

ஒரு கட்டத்தில் அந்த விக்னேஷ் கல்லூரியில் வைத்த எல்லோர் முன்னிலையிலும் நித்யாவிற்குத் தாலி கட்டி விடுகிறான். காதலன் நரேனிடம் விஷயத்தைச் சொல்ல, அவன் கழற்றி எறியச் சொல்கிறான். தமிழ்ப் பெண்ணான நித்யா தாலி கழற்றி எறிய மனம் வராமல், என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கிறாள்.

கோபம் கொண்ட நரேன் அவளைப் பிரிந்து, படிப்பையும் விட்டு விட்டு சொந்த ஊருக்கே செல்கிறான்.

காதலித்தவனையும் பிரிய முடியாமல், கட்டாயத் தாலி கட்டியவனுடன் செல்லவும் மனமில்லாமல் தவித்த நித்யா...

தன் காதலனுடன் சேர்ந்தாளா...? தாலி கட்டியவுடன் வாழந்தாளா...?

என்னும் முடிச்சினை சுவாரஸியமாய் அவிழ்த்து, நல்லதொரு முடிவை அளித்துள்ளார் கதாசிரியர்.

Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580130004801
Poochuduthe En Vaalibam!

Read more from Mukil Dinakaran

Related to Poochuduthe En Vaalibam!

Related ebooks

Reviews for Poochuduthe En Vaalibam!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poochuduthe En Vaalibam! - Mukil Dinakaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பூச்சூடுதே என் வாலிபம்!

    Poochuduthe En Vaalibam!

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    1

    கோவை நம்பிக்கை நாகராஜன் கலைக்கல்லூரி காலை நேரப் பரபரப்பிலிருந்தது.

    வண்ண வண்ண உடைகளில் மாணவிகளும், வித... விதமான இரு சக்கர வாகனங்களில் மாணவர்களும், கல்லூரிக் காம்பௌண்டினுள் நுழைந்து கொண்டிருந்தனர்.

    ஹாய்... மாம்ஸ் வாடா... மச்சீ... வாய்யா... மாப்ள... வணக்கம் தல என்ற கத்தல்கள் மாணவர்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டேயிருக்க, க்ளுக்... க்ளுக் என்ற சிரிப்பொலி மட்டும் மாணவிகள் மத்தியில் ஒலித்தது.

    பஸ்ஸிலிருந்து இறங்கி கல்லூரியின் மெயின் கேட்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த நித்யா, தன் பேக்கிலிருந்த மொபைலை எடுத்து, நரேனுக்கு கால் செய்தாள்.

    ஹலோ நித்யா... குட் மார்னிங்! எதிர் முனையில் சந்தோஷமாய் வழிந்தான் நரேன்.

    குட்மார்னிங் நரேன்...! ஆமாம் நீ இப்ப எங்கிருக்கே?

    ஹாஸ்டல்ல இருந்து கிளம்பியாச்சு...! ரூமைப் பூட்டிட்டிருக்கேன்...! ஏன்...? என்ன விஷயம்?

    உன்னை அவசரமாய்ப் பார்க்கணும்...! ஒரு முக்கியமான விஷயம் உன் கிட்ட சொல்லணும்! நித்யாவின் குரலில் ஒருவித அச்சம் தெரிய,

    என்னப்பா... என்ன பிராப்ளம்? தணிந்த குரலில் கேட்டான் நரேன்.

    ப்ச்...! அதையெல்லாம் போன்ல சொல்லிட்டிருக்க முடியாது...! நீ கிளாஸுக்குப் போறதுக்கு முன்னாடி கேண்டீனுக்கு வா! என்றாள் நித்யா.

    ஓ.கே...! நேரா அங்கியே வந்திடறேன்! சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்த நரேன், உடனிருந்த சகாக்களிடம், டேய் நீங்கெல்லாம் கிளாஸுக்குப் போங்க... நான் கேண்டீன் வரைக்கும் போயிட்டு வர்றேன்! என்றான்.

    என்னது...? கேண்டீன் வரைக்குமா...? இப்பத்தாண்ட ஹாஸ்டல் மெஸ்ல சாப்பிட்டே...? மறுபடியும் என்ன கேண்டீன்? பக்கத்து அறைத் தோழன் கேட்க,

    டேய்... ஆராய்ச்சி பண்ணாம விடுடா...! அவன் அவனோட ஆளைப் பார்க்கப் போறான்! என்றான் இன்னொரு தோழன்.

    ஓ... சரி... சரி...! நீ போப்பா...! நாங்க உன்னைத் தடுக்கலை! என்று தமாஷாய்ச் சொல்லிவிட்டு எல்லோரும் கோரஸாய்ச் சிரித்தனர்.

    அவர்களை அன்போடு முறைத்துவிட்டு, அவசர அவசரமாய் கேண்டீனை நோக்கி நடை போட்டான் நரேன்.

    கேண்டீனின் வலப்புற மூலையிலிருந்த மேஜையில் தனியாய் அமர்ந்திருந்தாள் நித்யா. முகத்தில் எக்கச்சக்க கலவரம். விரல் நகங்களை ஆவேசமாய்க் கடித்துக் கடித்து துப்பிக் கொண்டிருந்தாள்.

    அவள் நாற்காலிக்கு எதிர் நாற்காலியில் அமர்ந்த நரேன், என்ன நித்யா...? எனி ப்ராப்ளம்? நெற்றியைச் சுருக்கிக் கொண்டு கேட்டான்.

    நான் உன்கிட்ட ஏற்கனவே சொன்ன பிராப்ளம்தான்...! வர... வர... இந்த விக்னேஷ் தொல்லை ரொம்ப அதிகமாயிடுச்சு...! தினமும் என்னை டார்ச்சர் பண்ணிட்டேயிருக்கான்...! ப்ச்... அவனை நினைச்சா காலேஜுக்கு வரவே பிடிக்கலை! சொல்லும் போது அவள் முகத்தில் பரிதாபம் வழிந்தது.

    இடியட்! என்று சொல்லிவிட்டு பற்களை நற... நற என்று கடித்த நரேன், ஏன்... என்ன சொல்றான்? கேட்டான்.

    நான் எங்க போனாலும் என் பின்னாடியே வந்து என்னோட லவ்வை ஏத்துக்கோ...! ஏத்துக்கோன்னு தொந்தரவு பண்றான்...! மத்தவங்க பார்க்கிறதைப் பத்தி துளிக்கூட கவலைப்படாமல் ஓப்பனா புரபோஸ் பண்றான்...! எனக்கு என்ன பண்றதுன்னே புரியலை...! ரெண்டு மூணு தடவை லைட்டா இன்ஸல்ட்டும் பண்ணிப் பார்த்துட்டேன்...! அவன் அதைக் கேரே பண்ணிக்கலை...! ரொம்ப ஓவராய்க் கத்தி சீன் போடவும் முடியலை...! பேசாம பிரின்ஸிபால்கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணிடலாமான்னு பார்த்தா அதுக்கும் பயமாயிருக்கு!

    ஏன்...? அதிலென்ன பயம்...? பண்ணிட வேண்டியதுதானே?

    என்ன பயமா...? அவன் பெரிய பணக்கார வீட்டுப் பையன்...! அவனோட அப்பா சிட்டில பெரிய இண்டஸ்ட்ரியலிஸ்ட்...! போதாக்குறைக்கு இந்தக் கல்லூரி சேர்மேனோட திக் ஃபிரெண்ட் வேற...! அதனால அவன் மேல் என்ன கம்ப்ளைண்ட் பண்ணினாலும் எடுபடாது...! கம்ப்ளைண்ட் குடுத்தவங்கதான் அசிங்கப்பட்டுப் போகணும்!

    வெளியூரிலிருந்து வந்து ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் தான், உள்ளூர்ப் பணக்கர மாணவனுடன் மோதும் பட்சத்தில் அது தன் படிப்பையே கெடுத்துவிடும், என்கிற அச்சத்தில், தன் கோபத்தை அடக்கிக் கொண்ட நரேன், நித்யா... ஒரு ஐடியா சொல்றேன்... அது சரிப்பட்டு வருமான்னு பாரு! என்றான்.

    என்ன ஐடியா...? பேசாம காலேஜைவிட்டு நின்னுடுன்னு சொல்றியா? எரிச்சலோடு கேட்டாள்.

    ப்ச்...! டென்ஷனாகாதே நித்யா...! அவனுக்கு நம்ம ரெண்டு பேரும் லவ்வர்ஸ் என்கிற விஷயம் தெரியாது...! அது தெரியாததினாலதான் திரும்பத் திரும்ப வந்து உன்கிட்ட புரபோஸ் பண்ணிட்டே இருக்கான்...! அதனால... என்று நரேன் நிறுத்த,

    அதனால...?

    பேசாம நெக்ஸ்ட் டைம் அவன் உன்கிட்ட வந்து பேசும் போது ஸாரி... நான் ஆல்ரெடி வேறொருத்தரை லவ் பண்ணிட்டிருக்கேன்...! இனிமே என்னை டிஸ்டர்ப் பண்ணாதேன்னு அடிச்சுச் சொல்லிடு...! அதுக்கப்புறம் அவன் எந்த மூஞ்சியை வெச்சுக்கிட்டு உன்கிட்ட வந்து புரபோஸ் பண்ணுவான்?

    ம்... ஏதோ அரசல் புரசலா... அங்கங்கே லீக்காயிருக்கற நம்ம லவ்மேட்டரை... தண்டோரா போட்டுச் சொல்லி என் காலேஜ் படிப்புக்கே மூடுவிழா நடத்தச் சொல்றே...? அப்படித்தானே?

    அடடே... எது சொன்னாலும் ஏன் இப்படி எதிர்மறையாவே யோசிக்கறே...? எந்தப் பையனுமே... வேறொருத்தரை லவ் பண்ணிட்டிருக்கற பொண்ணை லவ் பண்ண விரும்ப மாட்டான்! நம்பிக்கையோடு சொன்னான் நரேன்.

    சில நிமிடங்கள் யோசித்த நித்யா, சரி... நீ சொல்ற மாதிரியே நான் வேறொருத்தரை லவ் பண்ணிட்டிருக்கேன்னு நான் சொல்லிட்டா உடனே அவன் அதை நம்பிடுவானா...? அவனை அவாய்ட் பண்றதுக்காக நான் சொல்ற பொய்ன்னு நெனச்சுக்கிட்டு...யாரை லவ் பண்றே...? அவன் பேரென்னா...? ஊரென்னன்னு கேட்டுத் துளைச்செடுப்பானே

    தைரியமாச் சொல்லு...! தேர்ட் பி.காம் ஸ்டூடண்ட் நரேனைத்தான் லவ் பண்றேன்...! அவனைத்தான் கல்யாணமும் பண்ணிக்கப் போறேன்னு சொல்லிடு!

    வந்து... அப்படிச் சொல்றதினால நம்ம ரெண்டு பேர் படிப்பிற்கும் எந்த ஆபத்தும் வந்திடாதே நரேன்? பயந்து போய்க் கேட்டாள்.

    எப்படி வரும்...? காதலிக்கறது நம்மோட பர்ஸனல் விஷயம்...! அதுக்கும் காலேஜ் படிப்பிற்கும் சம்மந்தமில்லை...! காதலர்கள் என்பதினால நாம ரெண்டு பேரும் காலேஜுக்கே வராம கிளாஸ் கட் அடிச்சிட்டு ஊர் சுத்திட்டா இருக்கோம்...? ரெகுலரா காலேஜுக்கு வர்றோம்... கிளாஸ் அட்டெண்ட் பண்றோம்...! சின்சியரா படிக்கறோம்...! எக்ஸாம் எழுதறோம்...! எல்லா சப்ஜெக்ட்டிலும் பாஸ் பண்றோம்...! இதுவரைக்கும் நாம ரெண்டு பேரும் அரியர்ஸ் வாங்கியிருக்கோமா...? இல்லையே...? அப்புறம் எப்படி படிப்புக்கு ஆபத்து வரும்?

    அப்ப சொல்லிடலாம்கறியா? திரும்பவும் கேட்டாள் நித்யா.

    இப்போதைக்கு அவன் வாயை அடைக்க, அவனோட டார்ச்சரிலிருந்து உன்னை மீட்க... அது ஒண்ணுதான் வழி!

    ஓ.கே. நரேன்...! நீ சொன்ன மாதிரியே செஞ்சிடறேன்!

    குட்...! பொண்டாட்டின்னா இப்படித்தான் இருக்கணும்...! புருஷன் சொன்னா மறு பேச்சில்லாம ‘கம்’முன்னு கேட்டுக்கணும்! தமாஷாய்ச் சொன்னான் நரேன்.

    அதே மாதிரி பொண்டாட்டி சொன்னாலும் புருஷன் ‘கும்’முன்னு கேட்டுக்கணும்! என்று சிரித்தபடியே திருப்பியடித்தாள்

    Enjoying the preview?
    Page 1 of 1