Karuppu Malligai
By Rajeshkumar
4.5/5
()
About this ebook
Read more from Rajeshkumar
Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsPanchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsIrandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsEngum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsKondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsUyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Theepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Naal Rating: 5 out of 5 stars5/5Oru Viyalakkilamai Vidintha Pothu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Karuppu Malligai
Related ebooks
Kanavugal Inge Virkkapadum Rating: 0 out of 5 stars0 ratingsKaatrai Kaithu Sei Rating: 5 out of 5 stars5/5Iruttuku Irandu Niram Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Pournamigal Rating: 5 out of 5 stars5/5Matroru Mahaabaratham Rating: 3 out of 5 stars3/5December Nila and Irandil Ondru Paarthu Vidu Rating: 0 out of 5 stars0 ratingsPagal Nera Minnal Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Irakka Piranthaval Sindhu Rating: 4 out of 5 stars4/5Welldone Vivek Rating: 0 out of 5 stars0 ratingsVivekum 41 Nimishangalum Rating: 3 out of 5 stars3/5Iruttil Oru Vaanampaadi Rating: 5 out of 5 stars5/5Vivekum 41 Nimishangalum Rating: 5 out of 5 stars5/5Thik Thik Divya Rating: 5 out of 5 stars5/5Ratthathil Oru Kelvikuri! Rating: 4 out of 5 stars4/5Vivek In Tokyo Rating: 0 out of 5 stars0 ratingsPagal Nera Alligal Rating: 5 out of 5 stars5/5Thalaiyuthir Paruvam Rating: 0 out of 5 stars0 ratingsNatchathiram Illaatha Iravu Rating: 5 out of 5 stars5/5Muthal Pagal Rating: 5 out of 5 stars5/5Sivappu Vatathukkul Sinthuja Rating: 0 out of 5 stars0 ratingssaagavaram Rating: 0 out of 5 stars0 ratingsPulip Pori Rating: 0 out of 5 stars0 ratingsVivek Jakkirathai Rating: 5 out of 5 stars5/5Engiruntho Aasaikal Rating: 0 out of 5 stars0 ratingsThalai Illaatha Silai Rating: 5 out of 5 stars5/5Kannamoochi Rating: 0 out of 5 stars0 ratingsAvizha Marukkum Arumbugal Rating: 5 out of 5 stars5/5Ootha Nira Devathai Rating: 5 out of 5 stars5/5Meendum Vivekin Viswaroobam Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Karuppu Malligai
4 ratings0 reviews
Book preview
Karuppu Malligai - Rajeshkumar
எடுக்கப்படும்.
1
சங்கீதா காலேஜ் வராந்தாவில் வேகவேகமாய் நடந்து அதன் முடிவிலிருந்த படிகளில் தடதடத்து, கார் பார்க்கிங்கைத் தொடுவதற்குள்...
ஹாய்டி...
ஹலோயா...
பல மாணவிகள் 'ஹாய்’ சொல்லி அவளை நிறுத்தப் பார்த்தனர். அவள் நிற்கவே இல்லை.
அவளுக்குள் அவசரம். பரபரப்பு.
வாட்சைப் பார்த்தாள்.
'இன்னும் ஐந்தே நிமிஷம்தான் இருக்கிறது'
ரிவர்ஸ் கியர் போட்டு கேரட் நிற ஸாண்ட்ரோவை விருட்டென்று பார்க்கிங்கிலிருந்து வெளியே உருவி, புழுதி பறக்க காலேஜ் வளாகத்தைவிட்டு வெளியேறினாள்...
அந்த ரோட்டின் மறுமுனையில் இருந்த டெலிஃபோன் பூத்தின் முன்னால் - டயர்கள் தேய நிறுத்தினாள்.
பூத்துக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டு எண்களைச் சுழற்ற ஆரம்பித்தாள்.
இரண்டாவது ரிங்கில் லைன் கிடைத்தது.
ஹலோ முரளி... நான் சங்கீதா...
அவன் பரபரப்பாய்க் கேட்டான்.
சங்கீதா... நான் அரைமணி நேரமா உன்னோட ஃபோன்காலை எதிர்பார்த்துட்டிருக்கேன்...
எசகுபிசகா பிரின்சிபால் மேடம் ரூம்ல மாட்டிக்கிட்டேன்... அடுத்த மாசம் நடத்தப் போற கல்ச்சுரல் கேம்ப் பத்தி டிஸ்கஸ் பண்ண ஆரம்பிச்சவங்க... டிஸ்கஷனை நிறுத்தவே இல்லை. பாதியில் வெட்டிட்டு வரவும் முடியாது... எங்கே உங்ககூட பேச முடியாம போயிடுமோன்னு கவலைப்பட்டுட்டு இருந்தேன்...
ஃப்ளைட் கிளம்ப இன்னும் ஒரு மணி நேரம்கூட இல்லை... நீ நேரா ஏர்போர்ட் வந்துடறியா...?
ம்கூம்...
என்ன ம்கூம்...?
என்னால் ஏர்போர்ட்டுக்கு வரமுடியாது முரளி...
ஏன்...?
இன்னிக்கு ப்ரைம் மினிஸ்டர் வர்றாரே... அப்பா, அண்ணா எல்லாருமே ஏர்போர்ட்ல தான் இருப்பாங்க...
அப்பா ஐ.ஜி., அண்ணா எஸ்.ஐ. நான் கண்டதும் காதல் பண்ணியிருக்கக்கூடாது... உன் குடும்பப் பின்னணியைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு அப்புறமாத்தான் காதலிக்க ஆரம்பிச்சிருக்கணும்...
அப்படியெல்லாம் வந்தா அதுக்குப் பேர் காதல் இல்லை. எதைப் பத்தியும் யோசிக்காம திடீர்ன்னு வர்றதுதான் காதல்... என்னோட குடும்பத்துக்கு என்ன குறைச்சலாம்? நாலு பரம்பரையா எங்க வீட்டில் எல்லாருமே போலீஸ் டிபார்ட்மென்ட்தான்...
அப்படின்னா உங்க கொள்ளு கொள்ளு கொள்ளு கொள்ளுத் தாத்தாவை உதைக்கணும். அவர்தானே இதை ஆரம்பிச்சு வெச்சிருப்பார்... ஆறு மாசம் ஃபாரின் அசைன்மென்ட்... ஏர்போர்ட்டிலாவது உன்கூட ஆசைதீர அஞ்சுநிமிஷம் பேசிட்டுப் போலாம்ன்னா அதுக்கும் இப்ப வழி இல்லை...
பரவாயில்லை... அங்கே போய்ச் சேர்ந்ததும் இன்டர்நெட்டுக்கு வாங்க... வாய்ஸ் ச்சேட் பண்ணலாம்...
'இன்டர்நெட் இருக்க பயமேன்' அப்படின்னு சொல்றியா...? இந்த ஆறு மாசத்துக்கு அது ஒண்ணுதான் ஆறுதல்... ஓ.கே. சங்கீதா, எனக்கு டயமாச்சு... ஸீயூ...
ஸீ யூ...
முரளி ரிசீவரை வைக்கும் சத்தம் கேட்டது.
சங்கீதாவும் தன் கையிலிருந்த ரிசீவரைக் கீழே வைக்க முற்பட்டபோது ஒரு குழப்ப சத்தமும், அதைத் தொடர்ந்து ஆண்குரலும் கேட்டது.
ஹலோ... ஹலோ... நான் சொல்றது கேக்குதா...?
இன்னொரு ஆண்குரல் பதிலளித்தது.
இப்ப தெளிவா கேக்குது... சொல்லு...
மத்தியானம் - ஒரு மணிக்கு - கண்ணம்மா கோபுரத்திலும், சாயந்தரம் நாலு மணிக்கு நீல உலோகத்திலும், ராத்திரி ஏழு மணிக்கு அநாதைக் குரங்கிலும் கறுப்பு மல்லிகை பூக்கும்...
"வெல்டன்...
க்ராஸ் டாக்.
'ஏதோ மென்டல் ஹாஸ்பிட்டல் கேஸ்கள் இரண்டு பேசிக் கொள்கின்றன போலிருக்கிறது.’
சங்கீதா மனசுக்குள் சிரித்துக் கொண்டே - இப்படித்தான் நினைத்துக் கொண்டாள்.
ஆனால்
அந்த க்ராஸ்டாக் விபரீதம் இன்னும் சற்று நேரத்திலேயே அவளை உலுக்கி எடுக்கப் போகிறது என்பது அந்த நிமிஷம் அவளுக்குத் தெரியாது.
காரை போர்டிகோவில் சொருகிவிட்டு படிகளில் உயர்ந்து, சிட்அவுட்டைக் கடந்தாள் சங்கீதா.
டிவி சீரியல் பார்த்துக் கொண்டிருந்த அம்மா காந்தாமணி திரையை விட்டு கண்ணை எடுக்காமலே கேட்டாள்.
என்னடி நேரமே வந்துட்டே...? எப்பவும் கண்ணீர் நதிகள் சீரியல் முடிஞ்சப்புறம்தான் உன் கார் சத்தம் கேட்கும்...
இன்ட்டர்னல் எக்ஸாம் நடக்குது. இந்தவாரம் பூராவும் சீக்கிரமே வந்து டிவி சீரியல் அழுகை சத்தத்தைக் கேட்டுத்தான் ஆகணும். வேற வழியில்லை...
நான் மத்தியானம் அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோதான் டிவி சீரியல் பார்க்கிறேன்... ஆனா நீ வீட்டுக்குள்ளே வந்துட்டா நேரம் காலம் இல்லாம காட்டுக் கூச்சல் இங்கிலீஷ் பாட்டைப் போட்டு கழுத்தறுப்பே...
அம்மா... அதுகாட்டுக் கூச்சலா...? என்னோட மியூசிக் கலெக்ஷன் எல்லாம் மாஸ்டர் பீஸஸ் தெரியுமா? உனக்குக் கொஞ்சம்கூட ரசனையே கிடையாது...
டிவி சீரியல் பார்க்கிறது அத்தையோட ரசனை... இங்கிலீஷ் பாட்டுக் கேக்கறது சங்கீதாவோட ரசனை... ரசனைங்கறது ஆளாளுக்கு மாறுபடற விஷயம். நோ கான்ட்ரவர்ஸி ப்ளீஸ்...
சங்கீதாவும், காந்தாமணியும் புதுக்குரல் கேட்டுத் திரும்பினர். உள்ளறைக்குள் இருந்து ஊதா நிறத்தில் மொடமொடப்பான காட்டன் புடவையில் வெளிப்பட்டாள் வாசுகி.
சங்கீதாவுடைய அண்ணன் தனசேகர் மனைவி.
சங்கீதா விழிகளை உயர்த்தினாள்.
அண்ணி... நீங்க வீட்டில்தான் இருக்கீங்களா...? லேடீஸ் க்ளப்புக்குப் போகலையா...?
செக்ரட்டரி கோமதி நாகராஜனோட அப்பா நேத்திக்கு இறந்துட்டார். எங்களோட மாலைக் கல்வி, மதுக்கடை ஒழிப்பு திட்டத்துக்கெல்லாம் நிறைய உதவி பண்ணியிருக்கார்... அவருக்கு அஞ்சலி செலுத்தறதுக்காக இன்னிக்கு க்ளப் ஆக்ட்டிவிட்டீஸ் எதுவும் வைக்கலை...
கோலப்போட்டி... சமையல் போட்டி இதையெல்லாம் இப்போ விட்டுட்டீங்களா...?
புன்னகைத்தாள் வாசுகி.
யார் சொன்னது...? அதெல்லாம் இல்லாம ஒரு லேடீஸ் க்ளப்பா...? பொழுது போக்கு, சமூக சேவை எல்லாமே எங்க க்ளப்பில் உண்டு. நீ கூட மெம்பரா சேர்ந்துடேன்...
அலறினாள் சங்கீதா. அய்யோ, நான் மாட்டேன்ப்பா...
ஏன்...?
லேடீஸ் க்ளப்ன்னாலே மிடில் ஏஜ் பொம்பளைங்க சமாச்சாரம் போல ஒரு ஃபீலிங். நான் இன்னும் காலேஜ் கூடமுடிக்கலை... இன்னும் கொஞ்ச நேரம் பேசினா நீங்க என்னை உங்க க்ளப்புக்காக கேன்வாஸ் பண்ணினாலும் பண்ணிடுவீங்க... எனக்குப் பசிக்குது அண்ணி...
முகம் அலம்பிட்டு டைனிங் ஹாலுக்குவா... சாப்பிட எடுத்து வைக்கிறேன்...
சாப்பாடு கூட வேண்டாம்... எனக்கு கோக்கும், ப்ரெட்டும் போதும்... இப்படியே சோபாவில் சாய்ஞ்சிக்கிட்டு சாப்பிட்டுக்கிறேன்...
திட்டினாள் காந்தாமணி.
என்னடி பழக்கம் இது...? மத்தியானம் சாப்பாடு சாப்பிடற நேரத்தில் கண்டதையும் சாப்பிட்டு...
மத்தியானம் சாப்பாடுதான் சாப்பிடணும்ன்னு ஏதாவது சட்டமா...?
அத்தை சங்கீதாவுக்கு எப்பவுமே கான்ட்டினன்ட்டல் ஸ்டைல்ஸ் தான் சாப்பிடப் பிடிக்குது... அவளுக்கு எது பிடிக்குதோ அதை சாப்பிட்டுட்டுப் போகட்டும்...
சொல்லிக் கொண்டே - ஃப்ரிட்ஜைத் திறந்து ப்ரெட் ஸ்லைஸ்களை எடுத்தாள் வாசுகி.
பளபளப்பான கத்தியின் உதவியால் அந்த ரொட்டித் துண்டுகளின் மேல் 'பட்டர் – ஜாம்’ தடவி, குளிரில் வியர்த்திருந்த கோக் பாட்டில் ஒன்றையும் எடுத்துக் எடுத்தாள்.
தாங்க்ஸ் அண்ணி...
சங்கீதா ரொட்டியை வாய்க்குள் அதக்க - காந்தாமணி எரிச்சலோடு திட்டினாள்.
ஆஸ்திரேலியாவிலோ, அமெரிக்காவிலோ பிறக்க வேண்டிய ஜன்மம் இங்கே வந்து பிறந்துடுச்சு... வாசுகி மாதிரி ஒருத்தி நம்ம வீட்டுக்கு மருமகளா வாய்ச்சதினாலே நீ பிழைச்சே...
கவலைப்படாதீங்க... நான் காலேஜ் படிப்பை முடிச்ச அடுத்த நாளே ஃப்ளைட் ஏறிடுவேன். பாஸ்போர்ட் ரெடி...
காந்தாமணியைப் பார்த்துப் புன்னகைத்தாள் வாசுகி.
அவளைத் திட்டாதீங்க அத்தை... சங்கீதா இன்னமும் சின்னப் பொண்ணுதான்...
என்னவோ பதில் சொல்ல வந்த காந்தாமணி சட்டென்று 'டிவி'யைப் பார்த்து விட்டுச் சொன்னாள்.
அடப்பாவிகளா... இந்த நாட்டில் நிம்மதியே போச்சு...
என்னாச்சும்மா...?
காந்தாமணி' 'டிவி' திரையின் காலடியில் ஓடிக் கொண்டிருந்த ப்ளாஷ் நியூஸைக் காட்டினாள்.
'ஒரு மணி சுமாருக்கு யசோதா டவர்ஸ் சில மர்ம நபர்களின் வெடிகுண்டுக்கு இரையாகி வெடித்துச் சிதறியது... உயிர்ச்சேதம் பற்றிய விவரம் ஏதும் இதுவரை தெரியவில்லை...'
அந்த ப்ளாஷ் நியூஸ் திரும்பத் திரும்ப ஓடிக் கொண்டிருக்க - சங்கீதாவுக்குள் சட்டென்று சற்று முன்பு தான்கேட்ட க்ராஸ்டாக் நினைவுக்கு வந்தது.
'மத்தியானம் ஒரு மணிக்கு கண்ணம்மா கோபுரத்திலும், சாயந்தரம் நாலு மணிக்கு நீல உலோகத்திலும், ராத்திரி ஏழு மணிக்கு அநாதைக் குரங்கிலும் கறுப்பு மல்லிகை பூக்கும்...'
அவசரமாய்க் கேட்டாள்.
அம்மா... கண்ணனோட அம்மா பேர் யசோதா தானே...?
யாரைக் கேக்கறே...? பழைய கார் டிரைவர் கண்ணனையா?
அவனை எதுக்கு நான் இப்ப கேக்கறேன்... புராண கண்ணன்...
ஆமா, யசோதாதான்...
'அப்படியானால் மத்தியானம் ஒரு மணிக்கு கண்ணம்மா கோபுரத்தில் கறுப்பு மல்லிகை பூக்கும்' என்பதன் அர்த்தம் அந்த நேரத்தில் யசோதா டவர்சில் வெடிகுண்டு வெடிக்கும் என்பதா...? மேலும் சில இடங்களையும் சொன்னார்களே...?'
சங்கீதாவுக்குள் திகில் ஊடுருவியது.
2
காந்தாமணியும், வாசுகியும் வெளிறிப் போன முகத்துடன் இருந்த சங்கீதாவைப் புரியாத பார்வையில் பார்த்தனர்.
திடீர்'ன்னு சம்பந்தமில்லாம கண்ணனோட அம்மாவைப் பத்தி எதுக்காகக் கேக்கறே?
யசோதா டவர்சில் வெடிகுண்டு வெடிக்கப் போறதைப் பத்தி ரெண்டு பேர் கோட் வேர்ட்சில் பேசிக்கிட்டதை நான் க்ராஸ்டாக்கில் கேட்டேன்...
என்னன்னு பேசிக்கிட்டாங்க...?
'கண்ணம்மா கோபுரத்தில் கறுப்பு மல்லிகை பூக்கும்'ன்னு அவங்களுக்குள்ளே தகவல் பரிமாறிக் கிட்டாங்க...
அடக்கடவுளே... அர்த்தம் புரிஞ்சிருந்தா இந்த விபரீதத்தை முன்னமே தடுத்து நிறுத்தியிருக்கலாம்...
அவங்க இன்னும் சில இடங்களையும் சொன்னாங்க...
அவங்க சொன்ன இடங்கள் உனக்கு ஞாபகம் இருக்கா...?
ம்... 'நாலுமணிக்கு நீல உலோகத்திலும், ஏழுமணிக்கு அநாதைக் குரங்கிலும் கறுப்பு மல்லிகை பூக்கும்’ன்னு சொன்னாங்க...
நீல உலோகம்... அநாதைக் குரங்கு... ஒண்ணுமே புரியலையே?
யசோதா டவர்சை எப்படி கண்ணம்மா கோபுரம்ன்னு. குறிப்பிட்டுச் சொன்னாங்களோ... அதே மாதிரி இதுவும் இடங்களைக் குறிக்கும் கோட்வேர்ட்ஸ்தான்...
எந்த இடங்கள்ன்னு புரியலையே...?
இதைப் பத்தி நாம் யோசிக்கிறதில் அர்த்தமே இல்லை... நேரம் விரயமாகி, இன்னொரு விபரீத வெடிகுண்டு விபத்து ஏற்பட்டுடும்... இப்பவே நீ அப்பாவுக்கோ... அண்ணனுக்கோ இதைப் பத்தி தகவல் குடுக்கறதுதான் நல்லது...
நானும் அதைத்தாம்மா நினைச்சேன்...
சொல்லிக் கொண்டே - டெலிஃபோனை நெருங்கி டயலைச்சுழற்ற ஆரம்பித்தாள் சங்கீதா.
'ஆல் த லைன்ஸ் இன் திஸ் ரூட் ஆர் பிசி... ப்ளீஸ் ட்ரை ஆஃப்ட்டர் சம்டைம்...’
பலமுறை டயல் செய்தபோதும், டெலிஃபோன் டிபார்ட்மென்ட்டின் ஆட்டோமேட்டட் குரல் தான் கிடைத்தது.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த வாசுகியும், காந்தாமணியும் கேட்டனர்.
லைன் கிடைக்கவே இல்லையா...?
ம்கூம்...
யாருக்கு ஃபோன் பண்ணினே...?
அப்பாவுக்குத் தான்...
அண்ணனோட செல்ஃபோனுக்கு ட்ரை பண்ணிப் பாரு...
சங்கீதா நம்பரை மாற்றி ஒற்றினாள்.
விரல்கள் களைப்படைந்தது தான் மிச்சம்.
கிடைக்கலைம்மா... கண்ட்ரோல் ரூமுக்குத் தகவல் குடுத்துப்பார்க்கலாமா?
இதுவும் நல்ல யோசனைதான்...
அவசர போலீஸ் எண்ணைத் தொடர்பு கொள்ள முயன்றாள்.
ர்ர்ர்ர்ர்...
ர்ர்ர்ர்ர்...
ர்ர்ர்ர்ர்...
அது தொடர்ந்து 'ரிங்' ஆகிக்கொண்டே இருந்தது.
ரிங் ஆயிட்டிருக்கு... ஆனா, அட்டெண்ட் பண்றதுக்கு யாரும் இல்லை போலிருக்கு...
வாசுகி சொன்னாள்.
இன்னிக்கு ப்ரைம் மினிஸ்டர் வரப்போறார். அதனால் மொத்த போலீஸ் ஃபோர்சுமே அதிலே பிசியா இருப்பாங்க...
அப்படின்னா அப்பாவையோ, அண்ணனையோ நான் நேர்லேயே போய்ப்பார்த்துட்டு வர்றேன்...
எங்கே போய்ப் பார்க்கப் போறே...?
அவங்க ஏர்போர்ட்டில்தான் இருப்பாங்க... ஏர்போர்ட்தான் போகப்போறேன்...
சொல்லிக் கொண்டே – கார் சாவியைப் பொறுக்கினாள் சங்கீதா.
வேகவேகமாய் போர்டிகோ படிகளைக் கடந்து - காருக்குள் அடங்கினாள்.
சாலையில் கார் விரைய ஆரம்பித்தது.
பத்து நிமிஷ அதிவேகப் பயணம்...
ஏர்போர்ட் வளாகத்தின் கார் பார்க்கிங் பகுதியில் தன்னுடைய காரைச் சொருகினாள் சங்கீதா.
காரை விட்டு இறங்கியவள் மணிக்கட்டிலிருந்த வாட்சைப் பார்த்தாள்.
கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் காலாவதியாகி இருந்தது. ஏர்போர்ட் வளாகம் ஏராளமான கூட்டத்தோடு இருந்தது. கட்சிக்கரை வேட்டிகள்.
கட்சிக்கொடிகள்.
தோரணங்கள்.
அவற்றுக்கு இடையிடையே பாதுகாப்புக்காகப் பணியில் அமர்த்தப்பட்டிருந்த காக்கி யூனிஃபார்ம்கள்.
கூட்டத்துக்கு மத்தியில் நீந்திப் போய் வவுன்ஞ்ச் கதவைத் தொட்டாள்.
அங்கே ஏராளமான கெடுபிடி.
உள்ளே நுழைய முயன்ற சங்கீதாவை நீல வர்ண யூனிஃபார்ம் அணிந்த ஏர்போர்ட் அதிகாரி தடுத்தார்.
நோ... பி.எம். வர்ற வரைக்கும் யாருக்கும் உள்ளே அனுமதி இல்லை...
ஸார்... நான் ஐ.ஜி.யோட...
அவள் முழுசாய்ச் சொல்லும் முன்பே கதவை வெடுக்கென்று சாத்திவிட்டார்.
நேரம் இரண்டு நாற்பது. இன்னும் ஒரு