Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vivekum 41 Nimishangalum
Vivekum 41 Nimishangalum
Vivekum 41 Nimishangalum
Ebook155 pages52 minutes

Vivekum 41 Nimishangalum

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Vivekum 41 Nimishangalum

Read more from Rajeshkumar

Related to Vivekum 41 Nimishangalum

Related ebooks

Related categories

Reviews for Vivekum 41 Nimishangalum

Rating: 4.6 out of 5 stars
4.5/5

5 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vivekum 41 Nimishangalum - Rajeshkumar

    21

    1

    கேள்வி: குற்றவாளிகளிடமிருந்து உண்மைகளை வரவழைக்க போகும் ட்ரூத் ஸீரம் (TRUTH SERUM) எனப்படும் மருந்தின் பெயர் என்ன?

    பதில்: ஸ்கோபோலேமைன் ஸ்கோபோலாமைன் (SCOPOLAMINE) இஞ்செக்ஷன்.

    ஒரு டிசம்பர் மாத ஞாயிற்றுக்கிழமையின் அதிகாலைப் பொழுது சென்னையில் கொஞ்சம் கலர்ஃபுல்லாய் விடிந்து கொண்டிருந்தது.

    பனிப்புகைக்கு நடுவே வாக்கிங் போய்க் கொண்டு இருந்தவர்கள் ஒரு விநாடி தெரிந்து மறுவிநாடி மறைந்தார்கள். குரல்கள் மட்டும் காற்றில் கேட்டன.

    குட் மார்னிங் கார்த்திகேயன்...

    குட் மார்னிங் சிவப்ரகாசம்...

    பிசினஸ் எப்படி போயிட்டிருக்கு?

    வெரி வெல் கோயிங்.

    என்ன... சபாபதி! உன்னோட லேட்டஸ்ட் படம் எல்லா சென்டரிலேயும் பிச்சுகிட்டு போகுதாமே...?

    எல்லாம் அரவிந்த அன்னையோட ப்ளஸ்ஸிங்க்ஸ். எனக்கொரு தாய் இருக்கின்றாள். என்றும் என்னை காக்கின்றாள்.

    இனிமே படம் எடுக்காதீங்க... இருக்கிற காசும் போயிடப் போகுது...

    ரமா...! இனிமே அந்த ‘ஸ்லிம்’ டேப்ளட்ஸ் சாப்பிடாதே...!

    ஏன்...?

    டாக்டர்கிட்டே கேட்டேன். சைட் எஃபெக்ட்ஸ் பயங்கரமாய் இருக்குமாம்...

    எங்க ஃபேமிலி டாக்டர் சாப்பிடச் சொன்னாரே...?

    நான் சொல்றதை சொல்லிட்டேன்... அப்புறம்... உன்னோட இஷ்டம்...

    குரல்கள் நாலாபக்கமும் வந்து மோதிக் கொண்டிருக்க ஜட்ஜ் சுந்தரபாண்டியன் அவைகளைப் பொருட்படுத்தாமல் வேகமாய் நடை போட்டுக் கொண்டிருந்தார். அணிந்திருந்த ஜாக்கிங் சூட்டுக்குள் உடம்பு வியர்த்து ஊற்றியது. முப்பது வருஷ கால நடைப் பயிற்சி அவருடைய ஐம்பத்தி ஐந்து வயது உடம்பை இழைத்த தேக்கைப் போல் வைத்திருந்தது. தன்னுடைய 24 - வது வயதில் கறுப்பு கவுனைத் தரித்துக் கொண்டு செஷன்ஸ் கோர்ட்டுக்குள் நுழைந்தவர் இந்த 55 - வது வயதில் ஹைகோர்ட் ஜட்ஜாய் உயர்ந்திருக்கிறார். அவர் கொடுத்த தீர்ப்புகள் எல்லாம் நெற்றியடி தீர்ப்புகளாய் அமைந்ததில் சமீபத்திய தினசரிகளில் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்து இருந்தார்.

    ஹலோ... குட்மார்னிங் சுந்தரபாண்டியன்! தனக்குப் பின்னால் வெகு அருகாக குரல் கேட்டுத் திரும்பினார் சுந்தரபாண்டியன்.

    டி.ஜி.பி. வைகுந்த் சர்மா ஜாக்கிங் சூட்டில் தெரிந்தார். ஐம்பது வயது. ஆறடி உயரம். முடி கொட்டாததால் அடர்த்தியான நரை கிராப். மேல் உதட்டை பூர்ணமாய் ஆக்ரமிப்பு செய்திருந்த மீசை.

    சுந்தரபாண்டியன் மலர்ந்தார்.

    ஓ... சர்மா... நீங்களா... குட்மார்னிங்...! இன்னிக்கு ஜாக்கிங் சீக்கிரமாவே கிளம்பிட்டீங்க போலிருக்கே...?

    ஆமா...! உங்களை இன்னிக்குப் பார்த்துப் பேசணும்ங்கிறதுக்காக அரைமணி நேரமா வெயிட் பண்ணிட்டிருக்கேன்.

    என்னைப் பார்த்து பேசறதுக்காகவா...?

    ஆமா...

    என்ன விஷயம்...?

    என்னோட கார்க்குப் போயிடலாமா...?

    வாங்க...

    இருவரும் பேவ்மெண்ட்டைவிட்டு விலகி ரோட்டின் ஒரமாய் நிறுத்தியிருந்த கார்க்கு வந்தார்கள் ஆஷ் க்ரே வண்ண லான்சர் கார்.

    என்ன சர்மா... புது கார் போலிருக்கே... ‘பெலிநோ’ காரை கொடுத்துட்டீங்களா...?

    ஆமா...! என்னோட ஒய்ஃபுக்கு லான்சர் கார் மேல் காதல். வாங்கியே தீரணும்ன்னு ஒரே பிடிவாதம்... போன மாசம்தான் வாங்கினேன். டி.ஜி.பி. வைகுந்த் சர்மா சொல்லிக் கொண்டே கார் சாவியை முன்பக்கக் கதவுக்குக் கொடுத்தார். கதவு திறக்க இரண்டு பேரும் உள்ளே போய் உட்கார்ந்தார்கள். சுந்தரபாண்டியன் கேட்டார்.

    என்ன சர்மா... எனிதிங்க் இம்பார்ட்டண்ட்?

    எஸ்...! இல்லேன்னா இவ்வளவு காலையில் உங்களை வாக்கிங்கூட போகவிடாமே இப்படி கார்க்கு கூட்டிட்டு வந்து பேசிகிட்டு இருப்பேனா...?

    சொல்லுங்க... என்ன விஷயம்...?

    "இன்னிக்குக் காலையில் அஞ்சு மணி சுமார்க்கு நான் எழுந்து மொட்டை மாடியில் ‘வார்ம் அப்’ பண்ணிட்டிருந்தபோது எனக்கு ஒரு போன் கால் வந்தது. ரிசீவரை எடுத்து நான் ‘ஹலோ’ சொன்னதும் மறுமுனையில் பேசிய ஒரு ஆள் ‘டி.ஜி.பி. ஸாரா?’ன்னு கேட்டான். நான் ‘ஆமா’ன்னு சொன்னதும் ‘உங்க காம்பௌண்ட் கேட்டில் இருக்கிற லெட்டர் பாக்ஸை திறந்து பாருங்க’ன்னு சொல்லிட்டு அதே விநாடி ரிஸீவரை வெச்சுட்டான். நான் உடனே இண்ட்டர்காம் மூலமா வாசலில் நின்றிருந்த செண்ட்ரிக்கு போன் பண்ணி லெட்டர் பாக்ஸைத் திறந்து உள்ளே என்ன இருக்குன்னு பார்க்கச் சொன்னேன். அவனும் பார்த்துட்டு இதைக் கொண்டு வந்து கொடுத்தான். டி.ஜி.பி. வைகுந்த் சர்மா சொல்லிக் கொண்டே தன் பாக்கெட்டுக்குள் கையை நுழைத்து அந்த ஆடியோ காஸட்டை எடுத்துக் காட்டினார்.

    இந்த கேஸட்டா லெட்டர் பாக்ஸுக்குள்ளே இருந்தது?

    ஆமா...

    கேஸட்டைப் போட்டுப் பார்த்தீங்களா?

    ம்... போட்டேன்... கேட்டேன்! விஷயம் முழுக்கமுழுக்க உங்களைப் பத்தித்தான்...

    என்னைப் பத்தியா...?

    ம்... கேஸட்டைப் போடறேன். கேளுங்க...

    வைகுந்த் சர்மா கார்க்குள்ளிருந்த டேப்ரிக்கார்டரை உயிர்க்குக் கொண்டு வந்து கையிலிருந்த காஸட்டை அதன் வாய்க்குள் திணித்துவிட்டு டேப் பட்டனைத் தட்டினார். சில விநாடிகளுக்குப் பின் ஒரு பெண் குரல் கணீரென்று ஒலித்தது.

    "வணக்கம் டி.ஜி.பி. வைகுந்த் சர்மா அவர்களே!

    இந்த காலை நேரத்தில் உங்களைத் தொல்லைபடுத்துவதற்காக முதலில் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

    உங்களால் எனக்கொரு காரியம் ஆக வேண்டியிருக்கிறது.

    அந்தக் காரியத்துக்காக நீங்கள் தூது போக வேண்டிய

    கட்டாயத்திலும் இருக்கிறீர்கள். நீங்கள் யாரிடம் தூது

    போகவேண்டும் தெரியுமா? உங்கள் நண்பரான நீதியரசர் ஹைகோர்ட் ஜட்ஜ் சுந்தரபாண்டியனிடம்தான்.

    சமீப காலமாய் சுந்தர பாண்டியன் பல்வேறு வழக்குகளில் அதிரடியான தீர்ப்புகளை வழங்கி தமிழ்நாட்டையே கலக்கி வருகிறார். அவருடைய தீர்ப்புகள் பொது மக்களால் பாராட்டப்படுகிறது என்கிற காரணத்துக்காக தன்னை ஒரு மனு நீதி சோழனாக பாவித்துக் கொண்டு மண்டைக்கனம் தலைக்கேறி மமதையோடு நடந்து வருகிறார். சமீபத்திய என்கௌண்டர்

    Enjoying the preview?
    Page 1 of 1