Muthal Pagal
By Rajeshkumar
5/5
()
About this ebook
Read more from Rajeshkumar
Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsThirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsNanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsSivappu November Rating: 0 out of 5 stars0 ratings100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsVivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsMaranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsEngum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Sivappu Vatathukkul Sinthuja Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5
Related to Muthal Pagal
Related ebooks
7 - vathu Arivu Rating: 0 out of 5 stars0 ratingsNinaithen, kondren Rating: 4 out of 5 stars4/5Malligai Poovai Mari Vida Asai Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Rattham Rating: 5 out of 5 stars5/5Thurathum Thorogangal Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Oru Thadavai! Rating: 0 out of 5 stars0 ratingsThaduththaal Kooda Tharuven Rating: 0 out of 5 stars0 ratingsJannalkal Thirakkinrana Rating: 0 out of 5 stars0 ratingsNimishathukku Nimisham Rating: 0 out of 5 stars0 ratingsSivappu Vatathukkul Sinthuja Rating: 0 out of 5 stars0 ratingsVithi Puthithu Rating: 5 out of 5 stars5/5Ulagai Vilai Kel Rating: 5 out of 5 stars5/5Iraval Sorgam Rating: 0 out of 5 stars0 ratingsWelldone Vivek Rating: 0 out of 5 stars0 ratingsKannukkul Neethaan Rating: 5 out of 5 stars5/5Aahaya Kottai Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Neruppu Rating: 0 out of 5 stars0 ratingsSorgathin Saavi Rating: 0 out of 5 stars0 ratingsSorkkathin Savee Rating: 0 out of 5 stars0 ratingsNanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Iravu Pathu Rating: 0 out of 5 stars0 ratingsUyrin Oli! and Puthithaaga Oru Boogambam! Rating: 0 out of 5 stars0 ratingsVivekum 41 Nimishangalum Rating: 3 out of 5 stars3/5முத்திரை சதி Rating: 5 out of 5 stars5/5Uyir Meethu Thaagam Rating: 4 out of 5 stars4/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5December Iravukal Rating: 0 out of 5 stars0 ratingsThoorathil Theriyum Sorgam Rating: 0 out of 5 stars0 ratingsEllam Poi and Karuppu Thamarai Rating: 0 out of 5 stars0 ratingsKolai Vallal Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Muthal Pagal
1 rating0 reviews
Book preview
Muthal Pagal - Rajeshkumar
26
1
பூர்ணி சொன்ன வாக்கியம் ஒரு புது பிளேடின் கூர்மையோடு, நந்தியாவின் இருதயத்தைக் கீற, அவள் துடித்துப் போய் நிமிர்ந்தாள். அக்கா!
பூர்ணி தீர்மானமான குரலில் சொன்னாள். நான் எதையும் வேடிக்கைக்காகவோ, விளையாட்டுக்காகவோ சொல்ல மாட்டேன்னு உனக்கே தெரியும். நீ இனிமே அண்ணியையும், அண்ணனையும் எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசக் கூடாது...
அப்போ... அவங்க என்ன பேசினாலும் கேட்டுக்க வேண்டியதுதானா?
அவங்க என்ன்வோ பேசிட்டு போகட்டும்... அவங்க பேசறதுனால ஒரு குறைச்சலும் நமக்கு வந்துடப் போறதில்லை.
அக்கா! நாம சோத்துக்கு உப்பு போட்டு சாப்பிடறோம். அவங்க பேசற பேச்செல்லாம் நமக்கு கேக்காமே இருக்கணும்ன்னா இனிமே சோத்துக்கு உப்பைப் போட்டுக்கக் கூடாது. சரியா?
நந்தியா! உனக்கு இந்த பெரிய பேச்செல்லாம் வேண்டாம். நான் சொன்ன பேச்சை நீ கேப்பியா, மாட்டியா?
சரி கேக்கிறேன்.
இனிமே அண்ணனையும், அண்ணியையும் நீ எதிர்த்து பேசக் கூடாது.
பேசலை! இந்த வீட்ல எது நடந்தாலும், கண்டும் காணாத மாதிரி இருந்துக்கிறேன். யார் என்ன பேசினாலும் ஒரு ஊமை மாதிரி இருந்துடறேன். போதுமா?
போதும்... தூங்கு...
பூர்ணி திரும்பிப் படுத்தாள். மனதுக்குள் இருந்த கனம் இப்போது குறைந்திருந்தது. நேத்து காலையில் கண்ட கன்னியாகுமரி சூரியோதயக் கனவு மறுபடியும் நினைவுக்கு வந்தது. என்ன அழகான கனவு? நிஜமாகவே சூரியோதயம் பார்த்த மாதிரி இருந்ததே? அதுவும் ராகுலோடு... அந்த பாறை மீது உட்கார்ந்து கொண்டு...?
அந்த கனவுக்கு என்ன அர்த்தம்?
ராகுல் எனக்கு சொந்தமாகப் போகிறாரா?
அது சாத்தியமில்லையே? பி.ஈ. படித்து எலக்ட்ரானிக் என்ஜினீயராக துபாயில் வேலை பார்க்கும் ராகுலுக்கு என்னை கட்டி வைக்க மாமாவுக்கும், அத்தைக்கும் பைத்தியமா பிடித்திருக்கிறது?
நியாயப்படி பார்த்தால் - அந்த ஆறாவது வயதில் என் பார்வை பறிபோனதுக்கு காரணமா இருந்தவர்களே... அத்தையும், மாமாவும்தான்...'
பூர்ணிக்குள் அந்த பழைய நாட்கள் புரண்டன. பார்வை பறி போன அந்த இருபது மணி நேரங்கள் மனசுக்குள் ரணமாய் வலித்தது. வலியோடு அசை போட்டாள்.
ஆறு வயது பூர்ணி காதுகளில் ஜிமிக்கிகள் அசைய - சமையலறைக்குள் நுழைந்து பூரிக்கு மாவு பிசைந்து கொண்டிருந்த கோமதியின் கழுத்தை கட்டிக் கொண்டாள்.
அம்மா...
என்னடி கண்ணு?
நா... இன்னிக்கு பள்ளிக்கூடத்துக்கு போகலை...
ஏண்டியம்மா?
பள்ளிக்கூடத்துல இன்னிக்கு ஊசி போடா வர்றாங்களாம்.
ஊசியா?
ஆமாம்மா... பெரிய ஊசி. ஊசியை நெருப்புல காட்டி... இடது கை புஜத்துல நறுக்ன்னு ஏத்துவாங்களாம்...
பக்கத்தில் நின்றிருந்த பத்து வயது பாஸ்கரனும் சொன்னான். அம்மா... இது சொல்றது காலரா ஊசி... எங்க பள்ளிக்கூடத்துக்கும் வருவார்களாம்... வாத்தியார் சொன்னாரு. அந்த ஊசி போட்டுக்கிட்டா காலரா வராதாம்...
பூர்ணி கோமதியின் கழுத்தை கட்டிக் கொண்டாள். அம்மா! எனக்கு அந்த ஊசி வேண்டாம். நா பள்ளிக்கூடத்துக்கு போக மாட்டேன்.
அப்பா ரங்கநாதன் சமையலறைக்குள் நுழைந்தார்.
பூர்ணி என்ன சொல்றா?
பள்ளிக்கூடத்துல காலரா ஊசி போடறாங்களாம். ஊசிக்கு பயந்துட்டு பள்ளிக்கூடத்துக்கு போக மாட்டாளாம்...
ஏம்மா... அப்படியா சொன்னே?
ஆமாப்பா.
உன் பள்ளிக்கூடத்துல நீ மட்டுமா ஊசி போட்டுக்கப் போறே?
இல்ல... எல்லாரும்தான்.
பின்னே ஏன் நீ மட்டும் வேண்டாங்கிறே?
எனக்கு பயமாயிருக்கப்பா. ஊசியை நெருப்புல காட்டி குத்துவாங்களாமே?
உனக்கு யார் சொன்னா?
எம் பக்கத்துல உட்கார்ந்திருப்பாளே... வசந்தா... அவதான்.
அவ பொய் சொல்லி இருக்காம்மா! ஊசியை நெருப்புல காட்டி போட மாட்டாங்க. டாக்டர் போடற ஊசி மாதிரிதான் போடுவாங்க. அந்த ஊசி மருந்து உடம்புக்குள்ளே போனாதான் நமக்கு காலரா நோய் வராது.
அம்மா! எனக்கு அந்த ஊசி வேண்டாம்மா...
கோமதியின் கழுத்தை மறுபடியும் இறுக்கிக் கொண்டாள் பூர்ணி.
கோமதி ரங்கநாதனை ஏறிட்டாள். என்னங்க... குழந்தைதான் பயப்படறாளே? அவ இன்னிக்கு பள்ளிக்கூடம் போகாமே இங்கேயே இருக்கட்டுமே?
ஊசிக்கு பயந்துட்டு பள்ளிக்கூடம் போகாமே இருக்கிறதா? பூர்ணி பள்ளிக்கூடத்துக்கு போகட்டும். நா வேணும்ன்னா அவ கிளாஸ் டீச்சர்கிட்டே 'ஊசி போடாதீங்க'ன்னு சொல்லிடறேன்.
டீச்சர் கேட்க மாட்டாங்கப்பா.
நான் வந்து சொல்றேன் வாம்மா...
- பூர்ணியை அழைத்துக் கொண்டு பக்கத்து தெருவிலிருந்த நகராட்சி பள்ளிக்கூடத்தை நோக்கிப் போனார் ரங்கநாதன். பள்ளிக்கூட வாசலிலேயே பூர்ணியின் வகுப்பு டீச்சர் மரியம் புஷ்பம் கிடைத்தாள்.
வணக்கம் டீச்சர்...
வணக்கம். என்ன ஸார் இன்னிக்கு பூர்ணியை நீங்களே கூட்டிட்டு வந்துட்டீங்க? வழக்கமா அம்மா கூடத்தானே வருவா...
பூர்ணிக்கு இன்னிக்கு பயம்.
பயமா... என்ன பயம்?
பள்ளிக்கூடத்துல இன்னிக்கு காலரா ஊசி போடப் போறாங்களா?
ஆமா... பதினோரு மணிக்கு மேலே சானிடரி இன்ஸ்பெக்டர் வரப் போறதா சொல்லி இருக்கார். அவர் வர்றாரா இல்லையான்னு நிச்சயமா தெரியாது.
டீச்சர்! நீங்க எனக்கொரு உதவி பண்ணனும்.
சொல்லுங்க...
பூர்ணி ஊசின்னாலே பயப்படறா... அவளுக்கு ஊசி போடாதீங்க.
மரியம் புஷ்பம் சிரித்தாள். இவ்வளவுதானே? நான் ஊசி போடாமே பார்த்துக்கிறேன்! பூர்ணி வாம்மா... கிளாசுக்கு போகலாம்.
ரங்கநாதன் நன்றி சொல்லிவிட்டு நகர்ந்து போக பூர்ணி டீச்சரின் பின்னால் மருண்ட பார்வையோடு வகுப்புக்குப் போனாள். அந்தப் பிஞ்சு இருதயம் 'திக்... திக் என்று அடித்துக் கொள்ள ஆரம்பித்தது.
சரியாய் பதினோரு மணிக்கு --- வெள்ளை நிற பெயிண்ட் அடித்த அந்த சுகாதாரத் துறை வேன் வேகமாய் --- பள்ளிக்கூட மைதானத்தின் நடுவேயிருந்த -- வேப்ப மரத்துக்கு பக்கத்தில் வந்து நின்றது. வேனின் பின்பக்கக் கதவைத் திறந்து கொண்டு -- வெள்ளை ஜாக்கெட், நீலநிறச் சேலை அணிந்த இரண்டு பெண்கள் இறங்க -- முன்பக்கமிருந்து --- உயரமாய் --- வழுக்கைத்தலையோடு அந்த சுகாதார அதிகாரி இறங்கினார்.
நர்சரி ரைம்ஸை உரக்கப் படித்துக் கொண்டிருந்த --- பூர்ணி ஜன்னல் வழியே -- அந்த வெள்ளைநிற வேனைப் பார்த்ததும் - அதுவரைக்கும் காணாமல் போயிருந்த பயம் குபீரென்று மறுபடியும் வந்து இருதயத்தில் அப்பிக் கொண்டது.
டீச்சரைப் பார்த்தாள்.
மரியம்புஷ்பம் பிளாஸ்கில் இருந்த காப்பியை டம்ளரில் வார்த்து --- அதை உதட்டுக்கு கொடுத்துக் கொண்டிருந்தாள்.
'டீச்சரிடம் போய் சொல்லலாமா? வேண்டாமா'
பூர்ணி யோசித்துக் கொண்டிருக்கும் போதே -- பள்ளிக்கூட ப்யூன் வெங்கடாசலம் உள்ளே வந்தான். மரியம் புஷ்பம் அவனை ஏறிட்டாள்.
என்னப்பா?
சானிடரி இன்ஸ்பெக்டர் வந்துட்டார்ம்மா... புள்ளைகளை எல்லாம் வரிசையா நிக்க வெச்சு... மைதானத்துக்கு கூட்டிட்டு வரும் படியா ஹெட் மாஸ்ட்ரம்மா சொன்னாங்க.
சரி... நீ புள்ளைகளை கூட்டிட்டுப் போ... நான் பின்னாடியே வர்றேன்
மரியம்புஷ்பம் சொல்ல --- ப்யூன் வெங்கடாச்சலம் பிள்ளைகளை விரட்டினான்.
எல்லோரும் வெளியே வாங்க... வந்து வரிசையா நில்லுங்க.
வகுப்பறை முழுவதும் ஒரே 'காச்மூச்' சத்தம். ஒருத்தரை யொருத்தர் தள்ளிக் கொண்டு... சிரித்துக் கொண்டு...
பூர்ணி டீச்சரிடம் வந்தாள்.
டீச்சர்
காப்பியை ரசித்து துளித்துளியாய் உறிஞ்சிக் கொண்டிருந்த மரியம்புஷ்பம் எரிச்சலாய் ஏறிட்டாள்.
என்னடி?
எ... எனக்கு... ஊசி போட... வேண்டாம்னு சொ... சொல்லுங்க டீச்சர்.
சொல்றேன்... போய்... மொதல்ல வரிசையில நில்லு
எ...எனக்கு பயமாருக்கு டீச்சர்
நீ மொதல்ல கிரவுண்ட்டுக்கு போடி... வந்து... சொல்றேன்! வெங்கடாசலம்! இதை கூட்டிக்கிட்டு போ...
வெங்கடாசலம் வேகமாய் வந்து பூர்ணியை -- தோள் பட்டையைப் பற்றி இழுத்துக் கொண்டு போனான்.
வேப்ப மரத்துக்கு கீழே ஒரு பெரிய மேஜை போடப் பட்டு --- ஸ்பிரிட் விளக்கில் சுடு நீர் கொதித்துக் கொண்டிருந்தது. சுகாதார அதிகாரி ஜான் கிறிஸ்டோபர் -- பள்ளித் தலைமையாசிரியை ஞானாம்பிகாவிடம் லெட்ஜரைப் புரட்டிக் கொண்டே கேட்டார்.
மொத்தம் எத்தனை குழந்தைங்க?
ஆறுநூத்தி எண்பது பேர் ஸார்.
இன்னிக்கு ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்லிருந்து தேர்ட் ஸ்டாண்டர்டு வரைக்கும் வாக்ஸினேட் பண்ணிடலாம். நாளைக்கு ஃபோர்த் அண்ட் ஃபிப்த் ஸ்டாண்டர்ஸ் ஸ்டூடண்ட்ஸை வெச்சுக்குவோம்
சொல்லிக் கொண்டே ஜான் கிறிஸ்டோபர் திரும்பிப் பார்த்தார். சின்னக் குழந்தைகள் வரிசையாய் -- ப்யூன்
வெங்கடாசலத்தின் தலைமையில் நின்று கொண்டு இருந்தார்கள்.
ஒவ்வொரு குழந்தையா அனுப்பு.
வெங்கடாசலம் அனுப்ப ஆரம்பித்தான். வரிசையின் மையத்தில் நின்றிருந்த பூர்ணிக்கு கைகளும், கால்களும் நடுங்க ஆரம்பித்தது. கொஞ்சம் தொலைவில் பள்ளிக் கூட வராந்தாவில் -- மற்ற டீச்சர்களோடு அரட்டையடித்துக் கொண்டிருக்கும் -- மரியம்புஷ்பம் டீச்சர் கண்ணில் பட்டாள்.
ஓடிப் போய் டீச்சர்கிட்டே சொல்லலாமா!
க்யூவைவிட்டு நகர முயன்றாள். ப்யூன் சத்தம் போட்டான். யாரும் நகரக் கூடாது. நகர்ந்தா அடிப்பேன்...
பூர்ணி அப்படியே நின்று கொண்டாள்.
க்யூ நகர ஆரம்பித்தது. நீலச் சேலை அணிந்த பெண்கள் ஊசியை கொதி நீரில் முக்கி எடுத்து ஸிரிஞ்சில் மஞ்சளாய் ஒரு மருந்தை ஏற்றி முதல் பெஞ்ச் சுப்புலட்சுமிக்கு தோள் பட்டையில் குத்தினார்கள்.
அவள் வீறிட்டாள்.
ப்யூன் வெங்கடாசலம் அவளை நோக்கிப் போக,
பூர்ணி வரிசையினின்றும் நழுவி -- பள்ளிக்கூட காம்பவுண்ட் கேட்டை நோக்கி தலைதெறிக்கிற வேகத்தில் ஓடினாள்.
ஏ... ஏய்.. குட்டி... நில்லு...
வெங்கடாசலம் பின்னால் இருந்து கத்த --- பூர்ணி
இன்னமும் அதிகமாய் பயந்து போய் ஓடினாள். தெருவுக்கு வந்து அடுத்த தெருவில் இருக்கும் தன் வீட்டை நோக்கி பாய்ச்சல் எடுத்த விநாடி.
அவளை யாரோ 'கப்' பென்று பிடித்தார்கள்.
திரும்பினாள்.
ராகுலின் அப்பாவும், அம்மாவும் நின்றிருந்தார்கள்.
அத்தே!
பூர்ணி அவளைக் கட்டிக் கொண்டாள்.
ஏண்டியம்மா, இப்படி ஓடறே?
பள்ளிக்கூடத்துல ஊசி போடறாங்க அத்தை!
ப்யூன் வெங்கடாசலம் அதற்குள் வந்து சேர்ந்திருந்தான். ஸார்! ஸ்கூல்ல சானிடரி இன்ஸ்பெக்டர் வந்து கலரா ஊசி போட்டுகிட்டு இருக்காங்க... வரிசையில நின்னுக்கிட்டிருந்த இந்தப் பொண்ணு ஓடி வந்துடுச்சு ஸார்
ராகுலின் அப்பா திரிவேதி சொன்னார். இது எங்க வீட்டு பொண்ணுதாம்பா... நீ... போ... நாங்க சமாதானம் பண்ணி கூட்டிட்டு வர்றோம்.
சரிங்க ஸார்!
அவன் நகர்ந்து போக -- பூர்ணி தன் அத்தையின் இடுப்பைக் கட்டிக் கொண்டாள். எனக்கு ஊசி வேண்டாம் அத்தே! பயம்மாயிருக்கு.
சொன்னவளின் உடம்பு மெதுவாக நடுங்க ஆரம்பித்தது.
2
தன்னுடைய இடுப்பை இறுக்கமாய் கட்டிக் கொண்ட பூர்ணியைப் பார்த்து மெல்ல சிரித்தாள் அத்தை சொர்ணம். தலையை மெல்ல கோதி விட்டாள்.
ஊசின்னா ஏம்மா பயப்படறே?
வேண்டாம் அத்தே. எனக்கு ஊசி வேண்டாம்...
மாமா திரிவேதி அவளருகே குனிந்தார். உன் பள்ளிக் கூடத்துல படிக்கிற எல்லாப் பெண்களுமே பயப்படாமே ஊசி போட்டுக்கும்போது... நீ மட்டும் ஏன் பயப்படணும்? நீ ஒருத்திதான் அழுதுட்டு வெளியே ஓடி வந்திருக்கே?
மா...மா...
நீர் நிரம்பிய கண்களோடு பூர்ணி திரிவேதியை ஏறிட்டாள். எனக்கு அந்த ஊசியைப் பார்த்தாலே பயம்மா இருக்கு மாமா. என்னை வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போயிடுங்க மாமா.
அய்யய்யே! என்னம்மா நீ இத்துனூண்டு ஊசிக்குப் போய் பயப்படறே? அந்த ஊசி போட்டுகிட்டா உடம்புக்கு நல்லது. காய்ச்சல் வராது. அம்மை வராது. டாக்டர்கிட்டே போக வேண்டியதே இல்லை.
வேண்டாம் மாமா...
ஊசியை வலிக்காமே நான் போடச் சொல்றேன் வா!"
சொன்னவர் அவளை அள்ளித் தூக்கிக் கொண்டு பள்ளிக் கூட்டத்திற்குள் நுழைந்தார். அத்தை சொர்ணமும் தொடர்ந்தாள். சானிடரி இன்ஸ்பெக்டர் அருகே நின்றிருந்த தலைமை ஆசிரியை ஞானாம்பிகா கடுகடுப்பாய் பூர்ணியை நோக்கி வந்தாள்.
ஊசி போட்டுக்காமே ஓடறியா?
டீச்சர் மரியம்புஷ்பம் குறுக்கிட்டு சொன்னாள். மேடம்! அந்த பொண்ணுக்கு ஊசிபோட வேண்டாம்ன்னு அவளோட ஃபாதர் காலையிலேயே என்கிட்டே சொல்லிட்டுப் போனார்
பேரண்ட்ஸ் அப்படித்தான் சொல்லுவாங்க. ஊர் பூராவும் காலரா இருக்கு. கடந்த ஒரு மாசத்துல மட்டும் இருபத்தேழு குழந்தைங்க காலராவுக்கு பலியாகி இருக்காங்க. இதெல்லாம் குழந்தைகளை பெத்தவங்களுக்கு எங்கே தெரியப் போகுது?
திரிவேதி, பூர்ணியை கீழே இறக்கி விட்டபடி சொன்னார். "ஹெட்மாஸ்டரம்மா! நானும் உங்க கட்சிதான். பூர்ணிக்கு ஊசி போடச் சொல்லுங்க. அவளோட அப்பா