Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Malligai Poovai Mari Vida Asai
Malligai Poovai Mari Vida Asai
Malligai Poovai Mari Vida Asai
Ebook95 pages36 minutes

Malligai Poovai Mari Vida Asai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு எதிர்பாராத கோரமான விபத்தால் இரு குடும்பங்கள் சின்னாபின்னமாகின்றன.அதில் உயிர் பிழைத்தவர்களுக்கு நேரும் அதிர்ச்சியான,குழப்பமான சம்பவங்கள், நிச்சயம் நம்மை உலுக்கும்.

Languageதமிழ்
Release dateJul 31, 2021
ISBN6580100407189
Malligai Poovai Mari Vida Asai

Read more from Rajesh Kumar

Related to Malligai Poovai Mari Vida Asai

Related ebooks

Related categories

Reviews for Malligai Poovai Mari Vida Asai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Malligai Poovai Mari Vida Asai - Rajesh Kumar

    https://www.pustaka.co.in

    மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை

    Malligai Poovai Mari Vida Asai

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajesh Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    1

    ‘அம்மா...’

    ‘பால் பொங்கி வழிகிறதா என்று கவனமாய் பாத்திரத்தை பார்த்துக்கொண்டிருந்த வேதம், மகள் நீரஜாவின் குரலைக் கேட்டு திரும்பினான்.’

    நீரஜா கத்திரிப்பூ நிற கம்ப்யூட்டர் சேலையில், ஒரு பெரிய ஊதாப்பூ மாதிரி நின்றிருந்தாள். தோளில் டம்பப் பை. வலது கையில் மதிய டிபன்பாக்ஸ் அடங்கிய லெதர் பேக்.

    ‘என்ன... ஆபீசுக்கு புறப்பட்டுட்டியா?’

    ‘மணி ஒன்பது கூட ஆகலை...’

    ‘இன்னிக்கு ஆபீஸ்ல ஒரு ப்ராஜெக்ட் ஒர்க். கொஞ்சம் சீக்கிரமா போய் கவனிக்கணும்.’

    ‘சாயந்தரம் லேட்டாகுமா?’

    ‘ஆகாது ஆறு மணிக்கெல்லாம் வந்துடுவேன்.’

    ‘நிச்சயமா ஆறு மணிக்கு வந்துடுவியா?’

    ‘ஏன்...?’

    வேதம் தயக்கமாய் புன்னகைத்து விட்டு, மெல்லிய குரலில் சொன்னாள்.

    ‘ஒண்ணுமில்லே. இன்னிக்காவது அந்த ஜோஸ்யர்கிட்டே போய் உன்னோட ஜாதகத்தைக் காட்டி, பரிகாரம் ஏதாவது கேட்டுட்டு வரலாம்ன்னு நினைச்சேன்...’

    நீரஜா அம்மாவை முறைத்தாள். ‘இதோ பாரம்மா. இந்த ஜோஸியம் பார்க்கிறது. சாமியார்கிட்டே போய் அருள் வாக்கு கேட்கிறது, இதெல்லாம் எனக்கு பிடிக்காதுன்னு உனக்குத் தெரியாதா? எதுக்காக என்னை இப்படி சோதனை பண்றே?’

    பொங்கிய பால் பாத்திரத்தை கீழே இறக்கி வைத்துவிட்டு மகளை ஏறிட்டாள் வேதம்.

    ‘ஜோஸியம், ஜாதகம் இதெல்லாம் உனக்கு பிடிக்காதுன்னு எனக்கு தெரியும். என்னோட திருப்திக்காகவாவது நீ வரக் கூடாதா? மைலாப்பூர்லதான் அந்த ஜோஸியர் இருக்கார். போய் பார்த்துவிட்டு ஒரு மணி நேரத்துல வந்துடலாம்.’

    ‘சாயந்தரம் வந்து சொல்றேன்.’

    கிளம்ப முற்பட்ட நீரஜாவை, ‘ஒரு நிமிஷம் நில்லடி, என்று கூறி நிறுத்தினாள், வேதம்.’

    ‘என்னம்மா?’

    ‘நீ கட்டியிருக்கிறது புதுப்புடவைதானே?’

    ‘ஆமா.’

    ‘புடவை முந்தானைக்கு மஞ்சள் வெச்சியா?’

    ‘வெச்சிருக்கேன். கற்பூர ஆரத்தி மட்டும் காட்டலை. அதையும் காட்டச் சொன்னா காட்டிடறேன். காட்டட்டுமா, வேண்டாமா?’

    ‘உனக்கு எல்லாமே கேலிதாண்டி...’ வேதம் தலையில் அடித்துக்கொள்ள - நீரஜா வெளியே வந்தாள்.

    காலை ஒன்பது மணி சூரியன் பிடரியில் உறைத்தான், வறண்ட காற்றில் உஷ்ணம், கட்டியிருந்த புதுச் சேலைக்குள் உடம்பு லேசாக வியர்த்தது. ஆபீஸ் போய் சேருவதற்குள் பவுடர் நிச்சயமாய் கரைந்துவிடும். கவலைப்பட்டுக்கொண்டே நடந்து தெருமுனைக்கு வந்து சேர்ந்தபோது அந்த ரத்த வண்ண மாருதி 1000 காத்திருந்தது. காருக்கு சாய்ந்தபடி குளிர் கண்ணாடி தரித்த அந்த இளைஞன் நீரஜாவைப் பார்த்ததும். தயக்கமாய் அவளை நெருங்கினான்.

    ‘குட்மார்னிங் நீரஜா.’

    நீரஜா பதிலுக்கு குட்மார்னிங் சொல்லாமல் மெல்ல தலைகுனிந்து வந்தாள்.

    அந்த இளைஞன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, மெல்ல அவளை பின் தொடர்ந்தான்.

    ‘ஆபீசுக்குத்தானே...? கார்ல போயிடலாம்... ப்ளீஸ் கெட்-இன்...’

    நீரஜா பொருட்படுத்தாமல் நடந்தாள்.

    ‘உனக்காக

    Enjoying the preview?
    Page 1 of 1