Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanmani Nillu Kaaranam Sollu
Kanmani Nillu Kaaranam Sollu
Kanmani Nillu Kaaranam Sollu
Ebook123 pages32 minutes

Kanmani Nillu Kaaranam Sollu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2017
ISBN9781043466077
Kanmani Nillu Kaaranam Sollu

Read more from Rajeshkumar

Related to Kanmani Nillu Kaaranam Sollu

Related ebooks

Reviews for Kanmani Nillu Kaaranam Sollu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanmani Nillu Kaaranam Sollu - Rajeshkumar

    18

    1

    மாருதி மருத்துவமனையின் வாசலில் பூப்போல் கொண்டுபோய் ஸ்கூட்டரை நிறுத்தினான் மதுமோகன். ஸ்கூட்டரின் பின்சீட்டில் நிரம்பியிருந்த லதா கீழே குதித்து. இறங்க - அவளை அவன் முறைத்தான்.

    என்ன லதா... நீ பாட்டுக்கு குதிச்சு இறங்கறே? - கத்தினான்.

    ஏன்... இறங்கினா என்னவாம்...? - இயல்பாய் கேட்டாள் லதா.

    உன் வயித்திலிருக்கிற... எம் பையன் ஷாக் ஆயிடுவான்...

    ச்சீ... அபத்தமா பேசாம வாங்க... ஆஸ்பத்திரி வராந்தாவில் நின்னுட்டிருக்கிற எல்லாரும் உங்களையும் என்னையும் வேடிக்கைப் பார்த்திட்டிருக்காங்க.

    பார்க்கட்டும்... பார்த்து பொறாமை படட்டுமே...! - சொல்லிக் கொண்டே ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு நர்சிங் ஹோமின் போர்டிகோ படி ஏறினான் மதுமோகன்.

    வராந்தாவில் போடப்பட்டிருந்த நீளமான பெஞ்சில் பெண்கள் இந்திய திருநாட்டுக்கு இன்னும் சில மன்னர்களைப் பெற்றுத் தருவதற்காக வயிற்றைத் தள்ளிக் கொண்டு உட்கார்ந்து இருந்தார்கள். நர்சு ஒருத்தி சுவரோரமாய் நின்று கண்ணை கசக்கிக்கொண்டிருந்த ஒரு பெண்ணை கூச்ச நாச்சமில்லாமல் திட்டிக்கொண்டிருந்தாள்.

    போன தடவை நான் என்ன சொல்லிவிட்டேன். இனிமே வயித்தை ரொப்பிட்டு வந்தா... நான் கொலைகாரியாயிடுவேன்னு சொல்லலை...?

    சொ... சொன்னீங்க நர்சம்மா.

    அப்புறமும் ஏண்டி வயித்தை தூக்கிட்டு வந்து நிக்கிறே...?

    நான் என்ன பண்ணட்டும் நர்சம்மா...? என் வீட்டுக்காரர் ஆசையா எம்பக்கத்துல வர்றப்போ... நான் வேண்டாம்ன்னு சொல்ல முடியலை... ஒண்ணும் ஆவாது ஒண்ணும் ஆவாதுன்னு சொல்லிகிட்டே தொட்டுடறாரு...

    சரி... சரி... அப்படி... போய் உட்கார். அரசாங்க கஜானா பூராவையும் செலவழிச்சு கரடியா கத்தினாலும் உன்னை மாதிரியான பொம்பளைங்க கேக்கவா போறாங்க...

    அந்த நர்சம்மா சொன்னதைக் கேட்டு சிரித்தபடியே கவுண்ட்டரில் இருந்த வரவேற்புப் பெண்ணை நெருங்கினார்கள் மதுமோகனும், லதாவும். அவள் ஒழுங்கான பல் வரிசையைக் காட்டி புன்னகைத்தாள்.

    எஸ். உங்களுக்கு என்ன வேணும்?.

    டாக்டர் கமலவேணியை பார்க்கணும்.

    வரவேற்புப் பெண் மேஜையின் மேலிருந்த நம்பர் பொறித்த பிளாஸ்டிக் டோக்கன் ஒன்றை எடுத்து நீட்ட, மெலிதாய் சிரித்தான். சொன்னான்:

    சாரி மிஸ். நாங்க ஏற்கனவே அப்பாயிண்மெண்ட் வாங்கியிருக்கோம். நேரம் ஒன்பதிலிருந்து பத்துக்குள்.

    அப்படியா... ஒரு நிமிடம்... என்றவள் அருகேயிருந்த நோட்டுப் புத்தகமொன்றை பிரித்து வைத்துக் கொண்டு, பால்பாயிண்ட் பேனா முனையால் தேடி நிமிர்ந்தாள்.

    மிஸஸ் லதாமோகன்?

    எஸ்.

    ஒரு ரெண்டு நிமிடம் அந்த நாற்காலியில் காத்திருங்க... உள்ளேயிருக்கிற பேஷண்ட் வெளியே வந்ததும் நீங்க போகலாம்.

    தாங்க்யூ.

    லதாவும் மதுமோகனும் வராந்தா சுவரோரமாய் தெரிந்த நாற்காலிகளை நோக்கி நகர்ந்த அதே விநாடி...

    டேய் மது!

    முதுகின் பின்பக்கமாய் குரல் கேட்க, திரும்பினான் மதுமோகன். மலர்ந்தான். அவனோடு கல்லூரியில் படித்த ஜார்ஜ் சிரிப்போடு நின்றிருந்தான், கையில் ஒரு பொட்டலம்.

    என்னடா பிரசவ ஆஸ்பிட்டல் பக்கம்...? மதுமோகன் கேட்க - அந்த ஜார்ஜ் சிரித்தான் அகலமாய்.

    மனைவிக்கு பிரசவ நேரம். லேபர் வார்டுல இருக்கா... பிரசவம் எந்த நேரத்திலும் ஆயிடும். இந்த இக்கட்டான நிலையில் அவளுக்கு திடீர்னு பிரியாணி சாப்பிடணும்னு ஆசை வந்துடுச்சு. போய் வாங்கிட்டு வர்றேன்.

    இதுதான் முதல் பிரசவமா...? புன்னகைத்தான் மதுமோகன்.

    சரியாப் போச்சு...! இது மூணாவது பிரசவம்டா. உனக்கு எந்த வருஷம் கல்யாணம் நடந்துச்சோ அதே வருஷந்தான் எனக்கும் கல்யாணமாச்சு. நியாயப்படி பார்த்தா ரோசிக்கு - என் மனைவிக்கு இது நாலாவது பிரசவம். ஒண்ணு அபார்ஷன் மூலமா அல்பாயுசுல போயிடுச்சு. ஆமா உன்னோட மனைவி தானே இவங்க?

    ஆமா.

    பின்னே ஏன் அறிமுகப்படுத்தாம இருக்கே...? நான் சின்ன வீடு செட்டப்போன்னு நினைச்சேன்.

    சாரிடா...! இவ லதா... எங்க ஆபீசுக்கு ஒரு வேலை விஷயமா இன்டர்வியூக்கு வந்தா... நான் இன்டர்வியூ பண்றப்பவே மனசுக்குள்ளே செலக்ட் பண்ணி, வீட்டுக்குப் போனதும் அம்மாகிட்டே சொல்லி வரதட்சணை வாங்காமே கல்யாணம் பண்ணிகிட்டேன்.

    வணக்கம் சிஸ்டர்! ஜார்ஜ் கையிலிருந்த பிரியாணி பொட்டலத்தோடுவணங்கினான். மதுமோகனிடம் திரும்பினான்.

    தேசத்துக்கு எத்தனை குழந்தைகளை கொடுத்திருக்கே?

    மதுமோகன் சிரித்தான்.

    என்னடா சிரிக்கிறே...?

    இனிமேத்தான் கொடுக்கணும்.

    ஜார்ஜ் தன்னுடைய சோடா புட்டி கண்ணாடியின் வழியே பார்த்து ஆச்சரியப்பட்டான்.

    என்னடா இது! கல்யாணமாகி ஐந்து வருஷமாகப் போகுது... இன்னுமா நீ அப்பா ஆகலை...?

    என்னமோ ஆகலை...

    இப்போ சிஸ்டர் விசேஷமா...?

    ஆமா

    ஒரு பையன் ‘அப்பா’ன்னு உன்னைக் கூப்பிட என் வாழ்த்துக்கள். நான் வரட்டுமா? ரோசி பிரியாணிக்காக லேபர் வார்டிலே காத்திட்டிருப்பா...

    சிஸ்டர்... நான் வர்றேன்... ஜார்ஜ் வேகவேகமாய் லேபர் வார்டை நோக்கிப் போனான். லதா கேட்டாள்.

    இவர் பேர் என்ன சொன்னீங்க...?

    ஜார்ஜ்.

    கல்லூரியில் உங்ககூட படிச்சவரா?

    ஆமா...?

    உங்களுக்கும் இவருக்கும் ஒரே வருஷத்துலதான் கல்யாணம் நடந்துச்சா...?

    ஆமா...

    ஐந்து வருஷத்துல நாலு குழந்தைகளுக்கு அப்பாவாயிட்டார். ஆனா நீங்க... இப்பத்தான் முதல் குழந்தைக்கு அஸ்திவாரம் போட்டிருக்கீங்க...!

    மதுமோகன் சிரித்தான். ஏதோ சொல்ல வாயெடுத்த விநாடி -

    டாக்டரம்மாவின் அறைக்கதவு திறக்க, பெண்ணொருத்தி வெளிப்பட்டாள்.

    கவுண்ட்டரில் இருந்த வரவேற்புப் பெண் மதுமோகனுக்கு கண்களைக் காட்டி, நீங்க டாக்டரைப் பார்க்க போங்க சார்.

    மதுமோகன் லதாவோடு அந்த அறைக்குள் நுழைந்தான். தானியங்கிக் கதவு தானே பின்புறமாய் சாத்திக்கொண்டது.

    கண்ணாடி மேஜைக்குப் பின்னால் டாக்டரம்மாள் உயர்த்திப்போட்ட வலைக் கொண்டையோடு தெரிந்தாள். உடம்பு நாற்பது வயதுகளை விழுங்கியிருக்க, நெற்றி முடியில் இந்திரா காந்தி நரை தெரிந்தது. வெள்ளி பிரேமில் மெலிசான மூக்குக் கண்ணாடி கண்களில் தொற்றியிருந்தது.

    கண்களை உறுத்தாத பல் வரிசையைக் காட்டி புன்னகைத்தாள் டாக்டரம்மாள்.

    உட்காருங்க...

    உட்கார்ந்தார்கள். மதுமோகன் பேச்சை ஆரம்பித்தான். டாக்டர் உங்ககிட்டே சின்ன கன்சல்டேஷனுக்கு வந்தோம்.

    சொல்லுங்க...

    டாக்டர்! இவ என்னோட மனைவி லதா... - என்று சொன்னதும் டாக்டரம்மாள் லதாவின் பக்கமாய் திரும்பினாள்.

    இது எத்தனையாவது மாசம்?

    ரெண்டாவது மாசம்... லேசாய் வெட்கப்பட்டு முறுவலித்தாள் லதா. மதுமோகன் தொடர்ந்தான்.

    "டாக்டர் ஐந்து வருஷத்திற்கு பிறகு முதல் தடவையா கர்ப்பமாயிருக்கிற லதா ரொம்பவும் வீக்கா இருக்கா. அவளுக்கு சில மருந்துகள் எழுதிக் கொடுத்தால் பரவாயில்லை டாக்டர்...

    Enjoying the preview?
    Page 1 of 1