Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sivappu Puraakkal! and Vanna Vanna Thurokangal!
Sivappu Puraakkal! and Vanna Vanna Thurokangal!
Sivappu Puraakkal! and Vanna Vanna Thurokangal!
Ebook262 pages1 hour

Sivappu Puraakkal! and Vanna Vanna Thurokangal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Sivappu Puraakkal! and Vanna Vanna Thurokangal!

Read more from Rajeshkumar

Related to Sivappu Puraakkal! and Vanna Vanna Thurokangal!

Related ebooks

Related categories

Reviews for Sivappu Puraakkal! and Vanna Vanna Thurokangal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sivappu Puraakkal! and Vanna Vanna Thurokangal! - Rajeshkumar

    21

    1

    விடியற்காலையின் கிழக்கு வானம் நீக்ரோவின் முதுகில் சவுக்கடி பட்ட மாதிரி- சிவப்பு வரிகளோடு தெரிந்தது. தை மாதக் குளிர் காற்று எலும்புக்குள் பாய்ந்து குத்திற்று. ‘ஆனந்தராகம்’ பங்களாவின் காம்பவுண்டு சுவரோரமாய் இருபதடி உயரத்துக்கு - சீவிய பென்சில்கள் மாதிரி நின்றிருந்த அசோக மரங்களுக்கு கீழே- பெண்கள் கூட்டம் கைக்குழந்தைகளோடு குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தது.

    பங்களாவின் உள்ளே-

    மீரா டெலிபோனில் பேசிக் கொண்டிருந்தாள்.

    பால் சொசைட்டியா?

    ஆமா...

    நான் மீரா பேசறேன். இன்னிக்கு வெள்ளிக்கிழமை. பால் அனுப்ப வேண்டிய நாள். மறந்துட்டீங்களா...?

    மறக்கலைம்மா. ஞாபகம் இருக்கு...

    இன்னும் பால் வந்து சேரலையே...?

    இப்ப வந்துடும்மா. வழக்கமா வர்ற வேன் டிரைவர் இன்னிக்கு லீவு. வேற டிரைவர் உடனே அனுப்பி வைக்கிறோம்...

    மொத்தம் நூறு லிட்டர் வேணும்...

    ஞாபகம் இருக்கம்மா...

    சீக்கிரமா வாங்க. பங்களாவுக்குள்ளே கும்பல் வந்தாச்சு. குழந்தைங்க பசி பொறுக்க மாட்டாமே... அழுதுட்டிருக்காங்க...

    ஒரு பத்து நிமிடத்துல வேன் வந்துடும்மா...

    மீரா ரிசீவரை வைத்து விட்டுத் திரும்ப- படுக்கையில் படுத்திருந்த கணவன் வாசு மெல்லச் சிரித்தான். பால் தானம் இப்ப நூறு லிட்டரைத் தாண்டியாச்சா...?

    போன வாரமே தாண்டியாச்சு...

    லிட்டர் அஞ்சு ரூபான்னு வெச்சுக்கிட்டாலும்... ஐநூறு ரூபாயாச்சே! அம்மாடி...!

    மீரா கோபமாய் அவனை ஏறிட்டாள். இதோ பாருங்க... பாலை தானம் பண்றப்ப கணக்கு பார்க்கக் கூடாது. இந்த தானம் எதுக்காக பண்றோம்? உங்க உடம்பு சீக்கிரமே குணமாகி- நீங்க பழையபடி ஆரோக்கியமா கம்பெனிக்குப் போகணுங்கிறதுக்காகத்தான்...

    மீரா...

    ம்...

    இப்படி வந்து என் பக்கத்துல உட்காரு...

    எதுக்கு...?

    உட்காரு... சொல்றேன்...

    மீரா, கணவனுக்குப் பக்கத்தில் போய் உட்கார்ந்தாள்.

    என்னவாம்...?

    நான் எத்தனை மாசமா இப்படி படுத்த படுக்கையாக் கிடக்கிறேன்?

    ஆறு மாசமா..

    பால் தானம்... எத்தனை நாளா பண்ணிட்டு வர்றே?

    இன்னிக்கு பனிரெண்டாவது வெள்ளிக்கிழமை...

    கடந்த பனிரெண்டு வெள்ளிக்கிழமையா லிட்டர் லிட்டரா குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பால் தானம் பண்ணியிருக்கே... என் உடம்புல கொஞ்சமாவது முன்னேற்றம் இருக்கா? இந்த பால் தானம் மட்டுமில்லை... வியாழக்கிழமைகள்ல ராகவேந்திரா கோயிலுக்குப் போய் சர்க்கரைப் பொங்கல் விநியோகம் பண்றே...! இதுதவிர ஒவ்வொரு அமாவாசைக்கும் ஆயிரம் பேருக்கு சாப்பாடு போடறே... என்னைப் பொறுத்தவரைக்கும் இதெல்லாம் வீண். போன பிறவியில் நான் பண்ணின பாவம்... இந்தப் பிறவியில் என்னை இப்படி படுக்கையில் தள்ளியிருக்கு. நீ தங்கத்தையே தானம் பண்ணினாலும்... நான் அனுபவிக்க வேண்டியதை அனுபவிச்சுத்தான் ஆகணும்...

    வாசு பேசப் பேச-

    மீராவின் கண்களில் நீர் கட்டிக் கொண்டது. நோயால் மெலிந்து போயிருந்த கணவனின் கையை ஆதரவாய்ப் பற்றிக் கொண்டு குரல் தழுதழுக்க பேசினாள். ஏன்... இப்படியெல்லாம் பேசறீங்க? மனுஷங்களுக்கு நோய் வராமே மரம் மட்டைக்கா வரும்? உங்க ஜாதகத்தைப் பார்த்த அங்கலக்குறிச்சி ஜோதிடர் என்ன சொன்னார்? இது தெய்வக் கோபம்! தெய்வத்தோட கோபம் ஆறி மனசு குளிரணும்னா நாற்பத்தெட்டு வெள்ளிக்கிழமை பால் தானம் பண்ணிட்டு வந்தா போதும்னு சொல்லலையா?

    எனக்கு நம்பிக்கையில்லை மீரா... ஆனால் நீ பண்ற தானத்தை நான் தடுக்க மாட்டேன். ஏன்னா... முந்நூறு குழந்தைங்களுக்கு ஒருவேளை பால் கிடைக்குதே...

    சரி... மெதுவா எந்திரிச்சு உட்காருங்க...

    எதுக்கு...?

    "எனக்கு குங்குமம் இட்டுவிட வேண்டாமா?’

    ம்... கொண்டா... கொண்டா...

    ஏன் இப்படி சலிச்சுக்கறீங்க... நாப்பத்தெட்டு வெள்ளிக்கிழமை உங்க கையாலே குங்குமம் இட்டுக்கிட்டா நீங்க கட்டியிருக்கற தாலிக்கு யானை பலமாம்... -சொல்லிக் கொண்டே போய் அலமாரியில் இருந்த வெள்ளி குங்குமச் சிமிழைக் கொண்டு வந்து கணவனிடம் நீட்டினாள் மீரா.

    வாசு ஆட்காட்டி விரலால் குங்குமத்தைத் தொட்டு மீராவின் நெற்றிக்கு இட்டான். தீர்க்க சுமங்கலி பவ...

    உங்களுக்கு எல்லாமே கேலியும், கிண்டலுமா இருக்கு. சிங்கம் மாதிரி திரிஞ்சுட்டிருந்த நீங்க... இப்படி படுத்த படுக்கையா கிடக்கிறது என் மனசுக்கு எவ்வளவு ரணமா இருக்கு தெரியுங்களா...

    மீரா மறுபடியும் கண் கலங்கிக் கொண்டிருக்கும் போதே- வாசல் காலிங் பெல் கூப்பிட்டது.

    டாக்டர் வந்துட்டார்ன்னு நினைக்கிறேன்...

    மீரா போய் கதவைத் திறந்தாள்.

    டாக்டர் வாசன் ஜாக்கிங் டிரஸ்ஸோடு நின்றிருந்தார். நடுத்தர வயது. ஜாக்கிங் சூட்டில் தொப்பை பிதுக்கம் காட்டியது.

    குட்மார்னிங் டாக்டர்...

    குட்மார்னிங் மீரா...

    உள்ளே வந்தார்.

    வாசுவைப் பார்த்து புன்னகைத்தார்.

    குட்மார்னிங் மை பேஷண்ட்...

    வாங்க டாக்டர். நீங்க இன்னிக்கு பத்து நிமிஷம் லேட்...

    வர்ற வழியில லாயர் கிருஷ்ணமூர்த்தி கிட்டே மாட்டிக்கிட்டேன். மனுஷன் விடுவாரா...? சமீபத்தில் அவர் ஜெயிச்ச கேஸைப் பத்தி பேசி நேரத்தைக் கொன்னுட்டார். அதிருக்கட்டும்... ராத்திரி நல்லாத் தூங்கினீங்களா?

    தூங்கினேன் டாக்டர்...

    மூச்சுத் திணறல்...?

    சுத்தமா இல்லை...

    ராத்திரி என்ன சாப்பிட்டீங்க?

    எண்ணெய் இல்லாத இரண்டு சப்பாத்தி. ஒரு தம்ளர் பால்...

    டாக்டர் வாசன், மீராவிடம் திரும்பினார். அந்த மெடிக்கல் சீட்டைக் கொண்டாம்மா...

    மீரா சீட்டைக் கொண்டு வந்து டீபாயின் மேல் வைத்தாள். டாக்டர் அதைப் பார்த்துக் கொண்டே கேட்டார்.

    என்னம்மா... பாலுக்காக பெண்கள் குழந்தைகளோடு காத்திட்டிருக்காங்க. பால் இன்னும் வரலையா...?

    வரலை டாக்டர். இப்பத்தான் போன் பண்ணினேன். பத்து நிமிடத்துல வேன் வந்துடும்னு சொன்னாங்க...

    வாசுவுக்கு நான் கொடுக்கிற சிகிச்சையோ... நீ ஏழைகளுக்குப் பண்ற பால் தானமோ... எதுவோ ஒண்ணு. சீக்கிரமே... வாசுவோட உடல்நிலையை தேறப் பண்ணனும்...

    வாசு குறுக்கிட்டான்.

    டாக்டர்! நீங்க என்னைப் பத்திக் கவலைப்படறீங்க. நான் மீராவைப் பத்திக் கவலைப்படறேன். அவள் சரியா சாப்பிடறதில்லை. ராத்திரி நேரத்துல ஒழுங்கா தூங்கறதில்லை. ராத்திரியில் திடீர்னு கண் விழிச்சுப் பார்க்கும் போது- என் கால் மாட்டுல உட்கார்ந்து அழுதுட்டிருப்பா. வேளா வேளைக்கு சாப்பிடறதில்லை. பூஜை அறைக்குள்ளே நுழைஞ்சா... ஒரு மணி நேரத்துக்கு குறைஞ்சு வெளியே வர்றதில்லை. இதைத் தவிர தினசரி ஒரு கோயிலுக்குப் போகிறாள். திங்கட்கிழமை ரத்தின விநாயகர் கோயில். செவ்வாய்க்கிழமை அந்தோணியார் கோயில். புதன்கிழமை பெருமாள் கோயில். வியாழக்கிழமை ராகவேந்திரர் கோயில். வெள்ளிக்கிழமை சவுடேஸ்வரி கோயில். சனிக்கிழமை ஆஞ்சநேயர் கோயில். ஞாயித்துக்கிழமை சாய்பாபா கோயில்ன்னு ஒரு பட்டியல் போட்டுக்கிட்டு... கோயில் கோயிலாப் போய் விபூதியையும் குங்குமத்தையும் கொண்டு வந்து என் நெத்தியில் பூசிப் பூசி என் நெத்தியைப் பாருங்க டாக்டர்... அம்மிக்கல் மாதிரி தேய்ஞ்சு போயிடுச்சு...

    டாக்டர் வாசுவின் தோளைத் தட்டினார். இப்பேர்ப்பட்ட மனைவி அமையறதுக்கு நீங்க கொடுத்து வைச்சிருக்கணும் வாசு. மீராவோட தெய்வ நம்பிக்கைதான் உங்களை பழைய ஆரோக்கியத்துக்குக் கொண்டு வரப் போகுது. என்னோட மருந்து, சிகிச்சையெல்லாம் இரண்டாம் பட்சம்தான்...

    வாசல் பக்கம் குரல் கேட்டது.

    அம்மா! பால் வந்தாச்சு...

    மீரா பரபரப்பானாள்.

    டாக்டர்! நீங்க இவரை டெஸ்ட் பண்ணிட்டிருங்க... நான் போய் பால் விநியோகத்தை முடிச்சுட்டு வந்துடறேன்...

    நீ போய் அதை கவனிம்மா...

    மீரா வெளியே போனதும்-

    டாக்டர் ரத்த அழுத்தத்தை பரிசோதித்துப் பார்த்து விட்டு, நார்மல் என்றார்.

    வாசு புன்னகைத்தான். ஏன் டாக்டர், உங்களையும் ஏமாத்திக்கிட்டு என்னையும் ஏமாத்தறீங்க?

    டாக்டர் திகைத்த மாதிரி நிமிர்ந்தார்.

    வாசு... என்ன சொல்றீங்க...?

    நீங்க இன்னிக்காவது உண்மை பேசணும் டாக்டர்...

    உண்மையா? என்ன உண்மை?

    நான் இன்னும் எத்தனை நாளைக்கு உயிரோடு இருப்பேன்?

    யூ ஆர் ஆல்ரைட் வாசு. நீங்க சீக்கிரமே பழைய ஆரோக்கியத்துக்குத் திரும்பிடுவீங்க...

    மீராவுக்கு சொல்ற ஆறுதல் வார்த்தைகளையெல்லாம் எனக்கும் சொல்லாதீங்க டாக்டர். எனக்கு என்ன நோய்... நான் இன்னும் எத்தனை நாள் உயிரோடு இருப்பேன்ங்கிற விஷயமெல்லாம் எனக்குத் தெரியும்...

    வாசு...

    எனக்கு ‘நியூரோபாலிசம்’ என்கிற ஒரு சீரியஸான நரம்பு நோய். நரம்புகளைக் கொஞ்சம் கொஞ்சமா இற்றுப் போக வைக்கிற நோய். லட்சத்துல ஒருத்தருக்குத்தான் இந்த நோய் வரும். அந்த ஒருத்தன் நான்தான். மீறி மீறிப் போனால் நான் இன்னமும் ஒரு மூணு மாசம் உயிரோடு இருப்பேன். சரியா டாக்டர்?

    வாசு... இ... இதெல்லாம் உங்களுக்கு...

    எப்படித் தெரியும்னு கேக்கறீங்களா டாக்டர்? எனக்கு நரம்பு சம்பந்தப்பட்ட நோய். நாளடைவில் சரியாயிடும்னு நீங்க சொன்னதும் என் மனசுல ஒரு சந்தேகம் இருந்துட்டே இருந்தது டாக்டர். கார் டிரைவர் மூலமா மத்திய நூலகத்தில் இருந்து மெடிக்கல் சம்பந்தப்பட்ட புத்தகங்களை எடுத்து வரச் சொல்லிப் படிச்சேன். என் நோயோட அறிகுறிகளையும், ‘நியூரோபாலிசம்’ என்கிற நோயைப் பத்தின அறிகுறிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். சரியா இருந்தது...

    வாசு! நீங்க நினைக்கிற மாதிரி உங்களுக்கு ‘நியூரோபாலிசம்’ கிடையாது. மனசைப் போட்டு குழப்பிக்காதீங்க...

    "இல்லை டாக்டர்! மீராவை வேணுமானால் நீங்க ஏமாத்தலாம். என்னை ஏமாத்த முடியாது. நான் மரணத்தைப் பார்த்து பயப்படலை.

    Enjoying the preview?
    Page 1 of 1