Athu Ithu Ethu?
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsThirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsNanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsVidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsRojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Theepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsUchi Nila Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5
Related to Athu Ithu Ethu?
Related ebooks
Kodi Kodi Minnalakal Rating: 0 out of 5 stars0 ratingsIdi Minnal Indira Rating: 0 out of 5 stars0 ratingsKarpura Bommaigal Rating: 0 out of 5 stars0 ratingsArththamulla Arattai Rating: 0 out of 5 stars0 ratingsThee Nila Rating: 0 out of 5 stars0 ratingsBharath Speaking Rating: 0 out of 5 stars0 ratingsIni Poruppathillai Rating: 0 out of 5 stars0 ratingsIruttil Oru Karuppu Poonai! Rating: 0 out of 5 stars0 ratingsOndrum Ondrum Moondru...! Rating: 0 out of 5 stars0 ratingsKili Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsChicago Secret Rating: 0 out of 5 stars0 ratingsSivappu Puraakkal! and Vanna Vanna Thurokangal! Rating: 0 out of 5 stars0 ratingsOlinthaalum Vidamaatten Rating: 5 out of 5 stars5/5Velvet Kutram Rating: 0 out of 5 stars0 ratingsArunthathiyum AaruThottakkalum Rating: 0 out of 5 stars0 ratingsSathyavin Sapatham! Rating: 0 out of 5 stars0 ratingsEthirukal Thevai Rating: 5 out of 5 stars5/5Hongkong Vizhigal Rating: 0 out of 5 stars0 ratingsNenju Porukkuthillaiye Rating: 0 out of 5 stars0 ratingsRatthathil Oru Raathiri Rating: 0 out of 5 stars0 ratingsOru Kulirkaala Kutram Rating: 0 out of 5 stars0 ratingskaikuttaikkul Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsAmirtham Endral visham! Rating: 0 out of 5 stars0 ratingsKarupu Gnayiru Sivappu Thingal Rating: 0 out of 5 stars0 ratingsOru Mathippirkkuriya Kutram... Rating: 0 out of 5 stars0 ratingsKaagitha Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsVer Kooda Poo Pookkum Rating: 0 out of 5 stars0 ratingsEn Piriyamana Virothikaley Rating: 0 out of 5 stars0 ratingsAntha 69 Naatkal! Rating: 0 out of 5 stars0 ratingsKezhe Vizhatha Nizhal and Manam Iranthu Pesukiren Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Athu Ithu Ethu?
0 ratings0 reviews
Book preview
Athu Ithu Ethu? - Rajeshkumar
ராஜேஷ்குமார்
பாம்புக்கும் கீரிக்கும் மட்டும் ஏன் பகை...?
பாம்பிடம் எக்குத் தப்பாய் மாட்டிக் கொள்ளும் எத்தனையோ ஜீவராசிகள், அதனுடன், உயிர் தப்பிக்கும் ஆசையில் ஆக்ரோஷமாய் சண்டையிடுகின்றன. எனினும் இத்தகைய ஜீவமரணப் போராட்டங்களில் இறுதியில் வெற்றி பெறுவது பாம்புகள் மட்டுமே. ஆனால், பாம்புகள் தோற்பது கீரியிடம் மட்டுமே! பாம்பு கடித்து கீரி இறந்த சம்பவம் அநேகமாய் இல்லை. கீரி மட்டும் வெற்றிவாகை சூட என்ன காரணம்? இரண்டாவது அத்தியாயத்தின் ஆரம்பத்தில் காரணம் காத்திருக்கின்றது.
1
‘ஓம் தத் புருஷாய வித்மஹே... வக்ர துண்டாய தீமஹி... தந்நோ தந்தி ப்ரஸோதயாத்’
- விநாயகர்க்குரிய காயத்ரி மந்திரத்தை சொல்லிவிட்டு பூஜை அறையினின்றும் வெளிப்பட்டாள் குமுதா.
தாழ்வார அறையில் உட்கார்ந்து, எதிர்வீட்டிலிருந்து வாங்கி வந்த ஓஸி பேப்பரை வரி விடாமல் படித்துக் கொண்டிருந்த அவளுடைய அப்பா ரங்கநாதன் குரல் கொடுத்தார்.
அம்மா... குமுதா...
என்னப்பா...?
சர்க்கரை ஜாஸ்தியாய் போட்டு ஒரு வாய் காப்பி குடேன்...
அக்கா.... அப்பாவுக்கு காப்பி குடுக்காதே... காலையிலிருந்து இது மூணாவது காப்பி...
கல்லூரிக்குப் புறப்பட்டுப் போகத் தயாராய் இருந்த முதல் தங்கை ஹேமா எதிர்ப்புக் குரல் கொடுத்தாள்.
ரங்கநாதன் உடனே பதில் மனு தாக்கல் செய்தார். அம்மா! ஹேமா பொய் சொல்றா...! நான் காப்பி கேட்கிறது ரெண்டாவது தடவை. முதல் தடவை காப்பி கொடுத்தப்ப அரை டம்ளர்தான் இருந்துச்சு... கேட்டதுக்கு பால் இல்லைன்னு சொல்லிட்டா.
குமுதா, தங்கை ஹேமாவை ஒரு கோபப் பார்வை பார்த்தாள். ஏண்டி! அப்பாவுக்கு அரை டம்ளர் காப்பிதான் கொடுத்தியாமே?
அய்யோ... அக்கா...! அப்பா பொய் சொல்றார். உனக்குத்தான் அப்பாவைப் பத்தித் தெரியுமே...? காலையில் ஏழு மணியிலிருந்து அதே இடத்துலதான் உட்கார்ந்துட்டு இருக்கார். எதிர்வீட்லயிருந்து தினமலரையும், பக்கத்து வீட்ல இருந்து தினத்தந்தியையும் வாங்கி ஒரு வரி விடாமே படிச்சிட்டார். அரை டம்ளர் காப்பி கொடுத்தா அப்பா ஒத்துக்குவாரா...? இப்ப அவர் அடி போடறது மூணாவது காப்பிக்கு.... நான் சொல்றது நிஜம்.
இரண்டு பேரில் யார் சொல்வது உண்மை என்று குமுதா திணறிக் கொண்டு இருக்கும் போதே, சமையலறையிலிருந்து இரண்டாவது தங்கை ஜமுனா வெளிப்பட்டாள். அவள் கையில் காப்பி டம்ளர். படபடவென்று பொரிந்தாள்.
அக்கா...! அப்பாவைப் பத்தித்தான் உனக்குத் தெரியுமே? அவர் சந்தோஷமான மூடில் இருந்தா ஒரு மணி நேரத்துக்குள்ளே மூணு கப் காப்பி சாப்பிடுவார். இன்னிக்கும் அதுதான் நடந்துட்டு இருக்கு... நான் போய் அப்பாவுக்கு காப்பியைக் கொடுத்துட்டு வர்றேன். யாரும் சண்டை போட்டுக்க வேண்டாம்.
அப்பா இன்னிக்கு சந்தோஷமாய் இருக்கார்ன்னு உனக்கு எப்படித் தெரியும்?
இன்னிக்கு... உனக்கு ‘ரெய்ன் ட்ராப் சாஃப்ட்வேர் கம்பெனி’யில் இண்ட்டர்வ்யூ! இல்லையா?
ஆமா...
அதுதான் சந்தோஷம்.
இண்ட்டர்வ்யூதானே...? வேலை கிடைக்கலையே?
கண்டிப்பாய்க் கிடைச்சுடும்ன்னு அப்பா சொன்னார்.
குமுதா பெருமூச்சு விட்டாள். கொண்டா காப்பியை... நான் போய்க் கொடுத்துட்டு அப்பாகிட்டே பேசிட்டு வர்றேன்.
அக்கா...! நீ அப்பாகிட்டே போய்ப் பேசு.... ஆனா அவரோட நம்பிக்கையை ‘பஞ்ச்சர்’ பண்ற மாதிரி பேசிடாதே! அவர் எக்கச்சக்க நம்பிக்கையோடு இருக்கார்.
குமுதா காப்பி டம்ளரோடு - வராந்தா திண்ணையில் உட்கார்ந்து இருந்த அப்பா ரங்கநாதனை நோக்கிப் போனாள்.
பேப்பர்க்குள் தலையை விட்டிருந்த அவர், வளையோசை கேட்டு நிமிர்ந்தார். நீயே வந்துட்டியாம்மா?
மலர்ந்து போனவராய் பத்திரிகையை மடித்தார். மகள் குமுதா நீட்டிய காப்பி டம்ளரை ஏதோ ஒரு பரிசுக் கோப்பையைப் போல் பரவசமாய் வாங்கிக் கொண்டார்.
அட...! நீ ஏம்மா காப்பி கொண்டு வந்தே? ஹேமா, ஜமுனா இல்லையா?
அவங்க காலேஜ்க்கு கிளம்பிட்டிருக்காங்கப்பா...! அதான் நான் கொண்டு வந்தேன்.
உனக்கு இண்ட்டர்வ்யூ எத்தனை மணிக்கு அம்மா?
பதினோரு மணிக்கு...
அப்படீன்னா நீ வீட்டை விட்டுப் பத்து மணிக்கெல்லாம் கிளம்பிடணும்.
ஆமாப்பா...
உனக்கு இந்த வேலை கண்டிப்பாய் கிடைக்கும்ன்னு என்னோட மனசுக்குப் படுதும்மா.
பார்க்கலாம்பா...
ஏம்மா அப்படி சொல்றே...?
அப்பா! ‘ரெய்ன் ட்ராப்’ கம்பெனி ஒரு மல்ட்டி நேஷனல் கம்பெனி. நிறைய பேர் அப்ளை பண்ணியிருப்பாங்க. நான் வெறும் எம்.எஸ்.ஸி. கம்ப்யூட்டர் சயின்ஸ் க்ராஜ்வேட்தான்! என்னைக் காட்டிலும் எஜுகேஷனல் க்வாலிஃபிகேஷன் அதிகம் உள்ளவங்களும் இண்ட்டர்வ்யூவில் கலந்துக்குவாங்க.
கலந்துக்கட்டுமே...! நீ அட்டெண்ட் பண்ணப் போற கடைசி இண்ட்டர்வ்யூ இதுதான். உனக்கு கண்டிப்பாய் வேலை கிடைக்கும். நான் இப்படி ஸ்ட்ராங்காய் அடிச்சு சொல்றதுக்குக் காரணம் இருக்கும்மா.
என்ன காரணம்...?
உன்னோட ஜாதகப்படி போன மாசமே உனக்கு குரு திசை ஆரம்பமாயிடுச்சு. குரு உனக்கு உச்சம். குரு கிரகம் உச்சமாய் இருந்தா அவனுடைய திசை நடக்கும் போது கண்டிப்பாய் நல்ல வேலையில் உட்கார வெச்சுடுவான்.
குமுதா சிரித்தாள் வெறுமையாய்.
ஏம்மா... சிரிக்கிறே...?
உங்களுக்கு இந்த ஜாதகம், ஜோதிடம் மேலே இன்னமும் நம்பிக்கை இருக்காப்பா?
என்னம்மா... இப்படி கேட்டுட்டே...?
கேட்காமே என்னப்பா பண்றது...? ரெண்டு வருஷத்துக்கு முந்தி அம்மாவுக்கு உடம்பு முடியாமே ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணினோம். நல்ல ட்ரீட்மெண்ட் கொடுத்தோம். ட்ரீட்மெண்ட் கொடுத்துட்டு இருக்கும்போதே, நீங்க வியாசர்பாடியில் இருக்கிற ஒரு பிரபலமான ஜோஸ்யரைப் போய்ப் பார்த்தீங்க. அம்மாவோட உயிர்க்கு எந்த ஆபத்தும் இல்லை. அவங்க 90 வயசு வரை இருப்பாங்கன்னு சொன்னார். ஆனா அடுத்த நாளே அம்மா இறந்துட்டாங்க. ஜோஸ்யம் உண்மைன்னா அம்மா உயிரோடு இருந்து இருக்கணுமே?
ரங்கநாதன் ஒரு வாய் காப்பியைத் தொண்டைக்கு அனுப்பிவிட்டு பெருமூச்சோடு பேச்சைத் தொடர்ந்தார்.
இதோ பாரம்மா...! ஒருத்தரோட மரணத்தை ஜோதிடத்தால கணிக்க முடியாது. அது எப்ப வரும்; எப்படி வரும்ன்னு யார்க்கும் தெரியாது. அது கடவுளுக்கு மட்டும்தான் தெரியும். ஒருத்தரோட மரணத் தேதி பற்றி அந்த ஜோதிடர்க்கு தெரிஞ்சிருந்தாலும் அதை அவர் பட்டவர்த்தனமாய் வெளியே சொல்ல மாட்டார். உன் அம்மாவோட விஷயத்திலும் அப்படித்தான் நடந்து இருக்கணும்.
அப்பா! நான் ஒண்ணு சொன்னா நீங்க தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே...?
சொல்லும்மா...
அம்மா இவ்வளவு சீக்கிரத்துல நம்மையெல்லாம் விட்டுட்டுப் போக என்ன காரணம் தெரியுமா...?
என்ன...?
எங்க மூணு பேர்க்கும் இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்குமா என்கிற பயம்தான்...
"உண்மைதாம்மா...! ‘வீட்ல ஒரு கிராம் தங்கம் கிடையாது. ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு கிடையாது. மூணு பொண்ணுகளையும் எப்படி கரையேத்தப் போறோம்’ன்னு புலம்பிட்டே இருப்பா. எத்தனையோ ராத்திரிகளை அவ தூக்கம் இல்லாமே கழிச்சிருக்கா. ‘நம்ம பொண்ணுங்க படிச்சிருக்காங்க. அவங்க வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டா வரன்கள் வரும். கல்யாணமும் நடக்கும்’ன்னு நான் எவ்வளவோ தைரியம் சொல்லியிருக்கேன். அதையெல்லாம் அவ நம்பலை. போய்ச் சேர்ந்துட்டா... ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கம்மா... உனக்கும் சரி; உன்னோட தங்கைகளுக்கும் சரி நல்ல வரன்களோடு சீரும் சிறப்புமாய் கல்யாணம்