En Piriyamana Virothikaley
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsThirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsNanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsSivappu November Rating: 0 out of 5 stars0 ratings100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsVivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsMaranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsEngum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Sivappu Vatathukkul Sinthuja Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5
Related to En Piriyamana Virothikaley
Related ebooks
saagavaram Rating: 0 out of 5 stars0 ratingsSivappu Puraakkal! and Vanna Vanna Thurokangal! Rating: 0 out of 5 stars0 ratingsEllam Poi and Karuppu Thamarai Rating: 0 out of 5 stars0 ratingsKarpura Bommaigal Rating: 0 out of 5 stars0 ratingsUravukal Pirivathillai Rating: 3 out of 5 stars3/5Thevai Oru Thevathai Rating: 0 out of 5 stars0 ratingsNil Kavani Kol Rating: 0 out of 5 stars0 ratingsArunthathiyum AaruThottakkalum Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Pommai Nanum Pommai Rating: 0 out of 5 stars0 ratingsSaathal Saamraajjiyam Rating: 0 out of 5 stars0 ratingsIravu Nera Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsOndrum Ondrum Moondru Rating: 0 out of 5 stars0 ratingsSorkkam En Kaiyil Rating: 0 out of 5 stars0 ratingsThapu Thappai Oru Kolai Rating: 0 out of 5 stars0 ratingsNylon Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Pournamigal and Villaiyaga Oru Kolai Rating: 0 out of 5 stars0 ratingsJannal Seethaikal Rating: 0 out of 5 stars0 ratingsNeeya? Naana? Rating: 0 out of 5 stars0 ratingsAintham Pirai Rating: 0 out of 5 stars0 ratingsViolet Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsKagithapoo Thean Rating: 0 out of 5 stars0 ratingsDecember Pournami Rating: 0 out of 5 stars0 ratingsThookkumara Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsChicago Secret Rating: 0 out of 5 stars0 ratingsMoochil Vazhum Pullankuzhalkal Rating: 0 out of 5 stars0 ratingsThappu Thappai Oru Kolai Rating: 0 out of 5 stars0 ratingsNovember Nalliravu Narmatha Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Oru Thadavai Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi Ethiri Rating: 0 out of 5 stars0 ratingsNil...Kavani...Kadhali... Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for En Piriyamana Virothikaley
0 ratings0 reviews
Book preview
En Piriyamana Virothikaley - Rajeshkumar
ராஜேஷ்குமார்
1
கல்பகா தூக்கத்திலிருந்து விடுபட்டுக் கண்விழித்தபோது, அலாரம் டைம்பீஸ் மணி 5.45ஐ துல்லியமாக காட்டிக் கொண்டிருந்தது. எழுந்து உட்கார்ந்து ஜன்னலின் திரைச்சீலையை விலக்கினாள். தோல் சீவப்பட்ட பீட்ரூட் நிறத்தில் கிழக்குத் திசை விடிந்து கொண்டிருந்தது. ரோட்டுக்கு அப்பால் தெரிந்த பிரம்மாண்டமான அரசமரத்தில் பறவைகள் இரைச்சலில் இருந்தன. சோம்பல் முறித்தபடி கட்டிலிலிருந்து இறங்கிய கல்பகாவுக்கு இருபத்தி மூன்று வயது. மாநிறமாய், எடுப்பான உடல்வாகு. எந்த ஆணையுமே சபலப்படுத்தக்கூடிய வசீகரம் அவளுடைய உடலமைப்பில் ரசித்துக் கொண்டிருந்தது. எம்.ஏ. ஜர்னலிசம் வரைக்கும் படித்த கல்பகா, இப்போது ஓர் அரசியல் வாரப் பத்திரிகையின் பிரதான ப்ரஸ் ரிப்போர்ட்டர்.
கல்பகா மாடிப்படிகளில் இறங்கிக் கீழே வந்தாள். அப்பா பூஜையறையில் இருப்பது தெரிந்தது. அம்மா வழக்கம்போல் வேலைக்காரியோடு சண்டைபோட்டுக் கொண்டிருந்தாள்.
ஏண்டி.. லேட்டு...?
வேலைக்காரி காவிப்பற்களோடு இளித்தாள்.
அசந்து தூங்கிட்டேம்மா..
தினமும் இதைத்தானே சொல்றே...?
நா.. இன்னாம்மா பண்றது..? ராவு பத்தரை மணிக்கு மேல சாராயத்தைக் குடிச்சுட்டு வர்ற புருஷனுக்கு சூடா எதையாவது ஆக்கிப் போடணும். இல்லேன்னா அந்த பாழாப்போன மனுஷன் என்னை மிதிச்சே கொல்லுவான். அந்தக் கடன்காரப் புருஷனுக்கு ஆக்கிப் போட்டு - அவன் வாந்தி எடுத்தா சுத்தம் பண்ணிட்டுப் பாயைப் போடறதுக்குள்ளே பாதி ராத்திரி தாண்டிடும்.. அதுக்கப்பறம் தூங்கி எழுந்திரிச்சு.. குழாய்ல தண்ணி பிடிச்சு...
சரி.. சரி.. லேட்டா வந்துட்டு.. தினசரி ஒரே கதையை சொல்லிட்டிருக்காதே... போய் மொதல்ல வாசலைப் பெருக்கு.. தண்ணி தெளி. அய்யா கோயிலுக்குப் போறதுக்கு முன்னாடி... வாசல்ல கோலம் இருக்கணும்.
அம்மாக்காரி மனோன்மணி, இடுப்பில் கை வைத்துக்கொண்டு மகளை முறைத்தாள். பல் தேய்ச்சியா...?
இல்ல...
போய் தேய்ச்சுட்டு வா.. அப்பத்தான் காப்பி...
அம்மா... ப்ளீஸ்...
நீ என்ன கெஞ்சு கெஞ்சினாலும் சரி.. பல்லை விளக்கிட்டு வந்தால்தான் காப்பி.. நீ பல்லைத் தேய்க்காம காப்பி குடிச்சா உங்கப்பா உன்னைத் திட்டமாட்டாரு... காப்பியை ஏன் கொடுத்தேன்னு என்னைத்தான் திட்டுவாரு...
அம்மா.. அம்மா.. என் கண்ணு.. அம்மா.. இன்னைக்கு ஒருநாள் மட்டும் குடு... நாளையிலிருந்து நான் எப்படிக் கெஞ்சினாலும் தராதே...
உனக்குத்தான் சத்தியம் சர்க்கரைப் பொங்கலாச்சே...?
அய்யோ.. அம்மா.. என்னை நம்பு..!
என்ன, ரெண்டு பேரும் காலங்காத்தாலே சண்டை போட்டுக்கறீங்க?
கேட்டபடியே பூஜை அறையினின்றும் வெளிப்பட்டார் ராஜசேகர். குட்மார்னிங் ஃபாதர்...
குட்மார்னிங்.. மை சைல்ட்! அம்மாகிட்டே என்ன சண்டை போட்டுக்கிட்டு இருக்கே...?
பாருங்கப்பா.. இந்த அம்மாவை...! பல்லைத் தேய்ச்சாத்தான் காப்பி கொடுப்பேன்னு சொன்னா பரவாயில்லை.. அப்பா பூஜை ரூமிலிருந்து வர்றதுக்குள்ளே காப்பியைக் குடிச்சுடுன்னு அம்மா சொல்றா... நான் மாட்டவே மாட்டேன்னு சொல்லிட்டிருக்கேன்.
அடிப்பாவி..!
மோவாயில் கை வைத்தாள் மனோன்மணி. ராஜசேகரன் சிரித்தார்.
அரசியல் பத்திரிகையிலபோய் வேலைக்கு சேர்ந்தாலும் சேர்ந்தே.. பொய் பொய்யாப் பேசக் கத்துக்கிட்டே...! உங்கம்மாவும், நீயும் சண்டை போட்டுக்கிட்டிருந்ததைக் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன்...
கல்பகா தன் இடது கையால் தலையைத் தட்டிக்கொண்டு - நாக்கை முன் பற்களால் கடித்தபடி - குளியலறையை நோக்கி நடக்க - ராஜசேகரன் நில்லும்மா...
என்றார். கல்பகா நின்றாள். சரியா அஞ்சரை மணிக்கு உனக்கு ஒரு போன் கால் வந்தது....
அவளுடைய புருவங்கள் உயர்ந்தன. போன்ல யாருப்பா?
உங்க பத்திரிகையில் வேலை பார்க்கிற ரிப்போர்ட்டர். பேரு கலாதரனாம்.
கலாதரனா..? என்ன சொன்னார்...?
உன்கிட்டே பேசணும்னு சொன்னார். எனக்கு உன்னை எழுப்ப இஷ்டமில்லாததனாலே... கல்பகா வாக்கிங் போயிருக்காள்னு சொல்லிட்டேன்.
கல்பகா கோபப்பட்டாள். ஏம்பா.. அப்படிச் சொன்னீங்க..? கலாதரன் ஒரு சின்ஸியரான ப்ரஸ் ரிப்போர்ட்டர். காரணமில்லாமே அவர் ஃபோன் பண்ண மாட்டார். நீங்க என்னை எழுப்பியிருக்கலாம்...
இதோ பார் கல்பகா.. நீ எம்.ஏ.ஜர்னலிஸம் படிக்கணும்ன்னு ஆசைப்பட்டே. படிக்க வைச்சேன். நீ ஒரு குடும்ப பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்திருந்தா நான் ரொம்பவும் சந்தோஷப்பட்டிருப்பேன். ஆனா, நீயோ ஒரு ஆபத்தான அரசியல் வாரப் பத்திரிகையில் போய்ச் சேர்ந்துட்டே. இந்தக் காலத்துல அரசியல்வாதியை பகைச்சுக்கிட்டா ஆண்டவனையே பகைச்சுக்கிட்ட மாதிரி...
அப்பா...! உங்க மக கல்பகா வெறும் கோலம் போடறதைப் பத்தியும், தையல் வேலையைக் கத்துக்கிறதைப் பத்தியும் - பத்திரிகையில் எழுத ஜர்னலிஸம் படிக்கலை.. அரசியல், சினிமா, பொது வாழ்வு - இந்த மூணு துறையிலேயும் நிறைய பொய்யர்கள் இருக்காங்க... அவங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரணுங்கறதுக்குத்தான் எங்க ‘நள்ளிரவுச் சூரியன்’ பத்திரிகையோட ஆசிரியர் குழு போராடிக்கிட்டு இருக்கு... அதுக்கான ஆயத்த வேலைகளில்தான் நானும் கலாதரனும் இறங்கியிருக்கோம். அவர் ஏதோ முக்கியமான செய்தியைச் சொல்றதுக்காகத்தான் எனக்கு ஃபோன் பண்ணியிருக்கணும். ஏதாவது மெஸேஜ் கொடுத்தாரா...?
ஒண்ணும் தரலை.. மறுபடியும் ஆறு மணிக்கு ஃபோன் பண்றேன்னு சொல்லியிருக்கார்...
கல்பகா நிமிர்ந்து சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தாள். நேரம் 5.50. ஒரு துணியை உடம்பில் சுற்றிக்கொண்டு - குளியலறைக்குள் நுழைந்து - சரியாய் ஆறுமணிக்கு வெளிப்பட்டாள் கல்பகா.
டெலிபோன் அழைத்துக் கொண்டிருந்தது. சேலையை உடம்பில் சுற்றிக் கொண்டு - வேகவேகமாகப் போய் ரிஸீவரை எடுத்தாள். ஹலோ...
கல்பகா...! நான் கலாதரன்...
சொல்லுங்க கலாதரன்.. உங்க போனுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கேன்...
இப்பத்தான் தூங்கி எந்திருச்சீங்களா?
ஆமா...! குளியலையும் முடிச்சுட்டேன்...! என்ன விஷயம்?
கல்பகா! நான் இப்ப.. ஈச்சம்பாக்கத்துக்குப் பக்கத்தில் இருக்கிற ஹைவேஸ் ரோடு - பெட்ரோல் பங்க் டெலிபோன் பூத்திலிருந்து பேசிட்டிருக்கேன்.
ம்... சொல்லுங்க...
சென்ட்ரல் மினிஸ்டர் ரமேஷ் மெஹ்ராவைப் பற்றி ஓர் அதிர்ச்சியான நியூஸ் கிடைச்சிருக்கு... அந்த நியூஸ் இந்த வாரமே.. நம்ம பத்திரிகையில் வரணும்...
இந்த வாரப் பத்திரிகைன்னா.. இன்னும் ரெண்டு நாள்தானே இருக்கு...?
தெரியும்.. இப்ப ஓடிட்டிருக்கிற மேட்டரை நிறுத்திட்டு முதல் பக்கத்தில் இந்த ‘ரமேஷ் மெஹ்ரா’ நியூஸ் வந்தாகணும்...
எடிட்டர்க்கு போன் பண்ணிச் சொல்லீட்டீங்களா...?
போன் பண்ணினேன். ஆனா, எங்கேஜ்ட் டோன்.. எக்சேஞ்சுக்கு போன் பண்ணி விசாரித்தேன். எடிட்டரோட போன் அவுட் ஆஃப் ஆர்டர்ன்னு சொன்னாங்க. அதுக்கப்புறம்தான் உங்களுக்குப் போன் பண்ணினேன். மேட்டரை உங்ககிட்டே சொல்றேன். நீங்க அதை எடிட்டர் டேபிளுக்குக் கொண்டு போயிடுங்க... நீங்களும் எடிட்டரும் சேர்ந்து மேட்டரை ரெடி பண்றதுக்குள்ளே நான் வேண்டிய ‘ஸ்நேப்’போட வந்துடுவேன்.