Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kagithapoo Thean
Kagithapoo Thean
Kagithapoo Thean
Ebook440 pages2 hours

Kagithapoo Thean

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Kagithapoo Thean

Read more from Rajeshkumar

Related to Kagithapoo Thean

Related ebooks

Related categories

Reviews for Kagithapoo Thean

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kagithapoo Thean - Rajeshkumar

    39

    1

    "அற்புதம்" என்றாள் அஜந்தா.

    எதைச் சொல்றே? - மெட்டாடர் வேன் நீலகிரி மலைச்சரிவின் கப்பி ரோட்டில் 'தத்தித் தத்தி' இறங்கி கொண்டிருக்க, அஜந்தாவுக்கு எதிர்சீட்டில் உட்கார்ந்திருந்த பாலமுரளி கேட்டான். அஜந்தா ஜன்னல் வழியே கையைக் காட்ட, அவன் குனிந்து பார்த்தான். சந்தோஷத்தில் விசிலடித்தான் அவன்.

    அடர்த்தியான கோபால்ட் ப்ளூ நிறத்தில், காம்பௌண்ட் சுவர் மாதிரி மலைகள் தேயிலைத் தோட்டங்களின் பச்சை நிற காம்பினேஷனோடு, மனசை நொறுங்கடித்தது. நீலமலைகளுக்கும் தேயிலையின் பச்சைத் தோட்டங்களுக்கும் மத்தியில் பால் நிற மேகங்கள் காற்றில் யோசனையோடு 'வாக்' போய்க் கொண்டிருந்தன.

    அஜந்தாவின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த லதா தன் நெயில் பாலீஷின் சிவப்புப்பூச்சு விரல்களால் நோகாமல் தன் தலையில் அடித்துக் கொண்டாள்.

    ஏண்டி, நீ திருந்தவே மாட்டியா? ஒரு மேகம் நீலமா இருக்கக் கூடாது. ஒரு கொக்கு பறக்கக் கூடாது. உடனே மெய் மறந்துடுவே. நீ இந்த உலகத்துக்கு வந்து இருபது வருஷமாகுது. விபரம் தெரியாத முதல் பத்து வருஷத்தை வேணுமானா மைனஸ் பண்ணிடு. மீதி இருக்கிற பத்து வருஷத்துல எத்தனை தடவை மேகம் பார்த்திருப்பே, மலையைப் பார்த்திருப்பே, இன்னுமா உனக்கு அலுக்கலை? கல்யாணமாகி புருஷனோடு ஹனிமூன் போறப்பவும் இப்படித்தான் மலை மட்டையை ரசிச்சிட்டிருப்பியா?

    லதா அப்படிக் கேட்டதும், வேனில் அடைபட்டிருந்த சோசியாலஜிப் பிரிவைச் சேர்ந்த மாணவ மாணவிகள் சிரித்தார்கள்.

    மொத்தம் பதினான்கு பேர்.

    ஏழு ஆண்கள். ஏழு பெண்கள்.

    அந்த ஏழு பெண்களிலும் அஜந்தா அழகாக இருந்தாள். அவளுடைய உடம்பின் நிறத்துக்கு சரியான உவமை சொல்ல வேண்டுமென்றால், சூரியன் உதிப்பதற்கு முன்பாக எழுந்து கிழக்குத் திசையைப் பார்க்க வேண்டும். சூரியனின் சிவப்பு மொட்டைத்தலை துளியூண்டு தெரியும் போது, பொன்னிறமாய் ஒரு வெளிச்சப் பிசிறு அடிக்கும். அதில் சிவப்பு மிதமாய் இழையோடியிருக்கும். அந்த நிறத்தை மட்டும் பார்த்துவிட்டு, அஜந்தாவைப் பாருங்கள். வித்தியாசமே தெரியாது. நான் இதுவரை எழுதிய நாவல்களில் நீங்கள் பார்த்த கதாநாயகிகளை விட இவளே அழகானவள். நீங்கள் இந்தப் பாராவை வாசிக்கிற இந்த நிமிஷம் சல்வார் கம்மீஸில் சந்தன சிற்பமாய் மின்னினாள். மார்புகளை கலை ரசனையோடு பார்த்துவிட்டு மறுபடியும் முகத்திற்கு போய் விடுங்கள்.

    அஜந்தா லதாவின் பக்கமாய் திரும்பினாள்.

    தாகூர் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா லதா?

    என்ன சொல்லியிருக்கார்?

    குழந்தையின் மழலை, நகர்கிற மேகம், தொலைதூர மலை, விழுகிற பனி, மோதுகிற கடல் அலை, பறக்கிற பறவை, உதிக்கின்ற சூரியன், அசைகின்ற தென்னங்கீற்று - இவைகளையெல்லாம் ரசிக்கத் தெரியாதவர்கள் பூமியில் பிறந்தே இருக்க வேண்டாம்னு சொல்லியிருக்கார்.

    லதா குறுக்கிட்டாள்.

    ரூஸ்வெல்ட் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

    என்ன?

    இயற்கையை ரசிப்பதாக சொல்லிக்கொண்டு பொழுதைப் போக்குகின்ற சோம்பேறிகளை, அந்த இயற்கையே மன்னிக்காது - லதா இப்படி சொல்லி முடித்ததும் கைதட்டலும், சிரிப்பொலியும் வேனின் மேற்கூரையில் பட்டு எதிரொலித்தன.

    அஜந்தா லதாவுக்கு பதிலடி தருவதற்காக வாயைத் திறந்த அதே விநாடி -

    'டப்'பென்று ஏதோ சத்தம். வேன் விக்கியது.

    தொடர்ந்து வேன் கோணல் மாணலாய் ஓடி, ரோட்டோரமாய் நின்றது. முன்சீட்டில் உட்கார்ந்திருந்த ஸ்காலர் நித்தியானந்தம் டிரைவரிடம் கேட்டார்.

    என்னாச்சு டிரைவர்?

    டயர் பொத்துகிச்சி ஸார்...

    பொத்த்துகிச்சா? ஸ்டெப்னி இருக்கா?

    இருக்கு ஸார்! ஒரு அரை மணிநேரம் அந்த மரத்துக்குக் கீழே போய் உட்காருங்க ஸார்! நான் டயரை மாத்திடறேன்.

    லதா அடிச்ச விட்டுல டயரும் சிரிச்சுடுச்சு போலிருக்கு - பாலமுரளி சொல்ல வேனின் வயிற்றிலிருந்து எல்லோரும் கீழே வந்தார்கள்.

    மணி எவ்வளவுடா குமார்?

    நாலு பத்து...

    வழுக்குப் பாறை போய்ச் சேர... ஆறு மணியாயிடும் போலிருக்கு.

    இப்பவே இந்தக் குளிர் குளிருது. நேரமாக நேரமாக ரத்தமெல்லாம் கட்டி கட்டியாக மாறிடும் போலிருக்கு.

    எல்லோரும் மரத்தடிக்குப் போய், சிதறியிருந்த பாறைத் திட்டுகளில் உட்கார்ந்தார்கள்.

    அஜந்தாவும், லதாவும் கொஞ்சம் தள்ளிப் போய், லான் மாதிரி தெரிந்த புல்வெளியின் மத்தியில் எதிரெதிராய் அமர்ந்தார்கள்.

    நிஜமாவே ரூஸ்வெல்ட் அப்படித்தான் சொன்னாரா?

    மண்டு... மண்டு... லதா சிரித்தாள். நான்தான் அப்படிச் சொன்னேன். ரூஸ்வெல்ட் என்கிற பேர்க்கு ஸ்பெல்லிங்கே எனக்குத் தெரியாது அஜந்தா...

    இந்த ஜாலியும், வேடிக்கையும் இன்னும் ஒரு பத்து நாளைக்குத்தான். அப்புறம் எல்லாருமே அவங்கவங்க ஊரை பார்க்க போயிடுவோம். நினைக்கும் போதே கஷ்டமாயில்லையா லதா?

    கஷ்டம்தான். அதுக்காக அதையே நினைச்சுட்டிருந்தா, இருக்கிற ஜாலியும் கெட்டுப் போயிடுமே என்று பேசிக்கொண்டு போனவள் சட்டென்று பேச்சை நிறுத்தி தலைகுனிந்து கிசுகிசுத்தாள்.

    அஜந்தா.

    ம்...

    எனக்கு இடதுபுறமா, கொஞ்சம் தள்ளி ஒரு பாறைத் திட்டு மேலே உட்கார்ந்திருக்கிற பாலமுரளி உன்னையே வெச்ச கண்ணு எடுக்காமே பார்த்திட்டிருக்கார்.

    அஜந்தா புன்னகைத்தாள்.

    அது எனக்குத் தெரியும்.

    கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாத...

    அவரைத் திட்டாதே லதா!

    ஏன், அவரை நீ காதலிக்கிறியா?

    நாட் யெட்...

    நீ என்னடி சொல்றே?

    ரொம்ப நாளாகவே அவர் என்னை விரும்பற விஷயம் தெரியம். நான்தான் அவரைக் காதலிக்கலாமா வேண்டாமான்னு யோசனை பண்ணிட்டிருக்கேன்.

    நீ பேசறதைக் கேட்டா எனக்கு தலையைச் சுத்துது அஜந்தா. பாலமுரளியை உனக்கு பிடிச்சிருந்தா காதலுக்கு பச்சைக்கொடி காட்ட வேண்டியதுதானே... இதுல போய் என்ன தயக்கம்?

    பாலமுரளி நல்லவர்தான். பார்க்கவும் ஒரு சினி ஹீரோ மாதிரிதான் இருக்கார். எந்தவிதமான கெட்ட பழக்கமும் அவர்கிட்டே கிடையாது. அதுவும் எனக்குத் தெரியும். ஆனாலும் அவரோட லவ் அப்ளிகேஷன் இன்னமும் கன்சிடரேஷன்லதான் இருக்கு.

    பாவண்டி அந்த முரளி!

    ரொம்பவும் பரிதாபப்படாதே... நம்ம மலைவாழ் மக்கள் மேம்பாட்டு ஆராய்ச்சி கேம்ப்பை முடிச்சுட்டு ஊர் திரும்பற அன்னிக்கு அவரை நான் காதலிக்கிறேனா இல்லையாங்கிறதை தீர்மானம் பண்ணிடப் போறேன்.

    பீங்க்க்க்...

    விசில் சத்தம் கேட்க, இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்.

    ஸ்காலர் நித்தியானந்தம் மரத்தடியில் நின்று கொண்டு கம் நியர் டு மீ மை ஸ்டுடண்ட்ஸ் என்று கத்த, லதா எரிச்சலோடு சொன்னாள்.

    கொஞ்ச நேரம் ஓய்வா உட்கார்ந்தா போதும், ஸ்காலர்க்கு பிடிக்காது. கூப்பிட்டு வெச்சு லெக்சர் அடிக்க ஆரம்பிச்சுடுவார்.

    எல்லோரும் ஸ்காலரை நெருங்கி வட்டமாய் உட்கார்ந்தார்கள். அவர் தொண்டையை கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்,

    வேனில் இன்னும் ஒரு ரிப்பேர் பார்க்க வேண்டிய வேலை இருப்பதால் அதை சரி செய்து கொண்டு புறப்பட எப்படியும் ஐந்து மணியாகிவிடும். வழுக்குப் பாறை குடியிருப்புக்கு நாம் போய்ச் சேர ஏழு மணியாகிவிடும். அங்கே போய் சொல்ல வேண்டிய சில விபரங்களை, இப்போது நமக்கு வலுக்கட்டாயமாய்க் கிடைத்திருக்கிற ஒய்வு நேரத்தில் சொல்லி விடலாமென்றிருக்கிறேன்.

    எல்லோரும் அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க,

    அவர் கையிலிருந்த ஒரு பைலை புரட்டிப் பார்த்து விட்டுத் தொடர்ந்தார்.

    வழுக்குப் பாறை குடியிருப்பு ஜனங்களைப் பற்றியும், அந்த ஜனங்கள் வாழும் சுற்றுப்புறச் சூழ்நிலைகளைப் பற்றியும் ஆராய்ந்து குறிப்புகள் எடுத்து, ஒரு ரிப்போர்ட் தயார் செய்து, மலைவாழ் மக்கள் மேம்பாட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப் போகிற பணியில் ஈடுபடுவதற்காக நாம் இங்கே வந்திருக்கிறோம்.

    அம்மாடி எவ்வளவு நீளமான வாக்கியம். வேறு யாராவது இந்த வாக்கியத்தை பேசியிருந்தா நிச்சயமா அவங்க நுரையீரலில் சுளுக்கே விழுந்திருக்கும் லதா தலையைக் குனிந்து கொண்டு மெல்லிய குரலில் முனக, அஜந்தா சிரிப்பை அடக்க சிரமப்பட்டாள்.

    நித்தியானந்தம் தொடர்ந்தார்,

    வழுக்குப்பாறை மலைவாழ் மக்கள் நம் அரசாங்கத்தின் எந்தவிதமான சட்டத் திட்டங்களுக்கும் கட்டுப்படாமல், அவர்கள் சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு, அந்த மலைப்பகுதியில் தன்னிச்சையாய் வாழ்ந்து வருகிறார்கள். அரசாங்கத்திலிருந்து அவர்கள் எந்த உதவியையும் எதிர்பார்ப்பதில்லை. அதே மாதிரி அந்நிய ஆட்கள் யாரையும் அவர்களின் எல்லைக்குள் வரவிடுவதில்லை. மீறிப் போனவர்களை கொன்றும் இருக்கிறார்கள். நாம் அவர்கள் வாழும் மலைப்பகுதிக்கு போகாமல், மலை அடிவாரத்திலுள்ள அரசு விடுதியில் தங்கி, அவர்களைப் பற்றிய விபரங்களை சேகரிக்கப் போகிறோம்.

    பாலமுரளி எழுந்து சந்தேகம் கேட்டான்.

    மேலேயிருக்கிற வழுக்குப்பாறை குடியிருப்புக்குப் போகாமே எப்படி ஸார் விபரங்களை சேர்க்க முடியும்?

    அடிவாரத்தில் வாழ்கிற நம்மை மாதிரியான ஜனங்ககிட்டே இன்டர்வ்யூ பண்ணி விபரங்களை சேர்த்துக்க வேண்டியதுதான்.

    அடிவாரத்திலிருந்து மலை எத்தனை தூரம் ஸார்?

    ரெண்டு கிலோ மீட்டர் தூரம்தான்.

    அந்த ஜனங்க கீழே இறங்கி வர்றதேயில்லையா ஸார்?

    குறிப்பிட்ட எல்லை வரைக்கும் வருவாங்களாம். அப்படியே திரும்பிப் போயிடுவாங்களாம். ஏதேதோ கட்டுப்பாடுகள் வெச்சிருக்கிறதா பரவலான கருத்து உண்டு.

    போலீஸ் உதவியோடு அரசாங்கமே மேலே போய் பார்க்கலாமே ஸார்.

    ரெண்டு தடவை முயற்சி செய்து உயிர்ச்சேதம் ஏற்பட்டதுதான் லாபம். அவங்களை வழிக்குக் கொண்டு வர முடியலை. நாம் இத்தனை நாளும் சந்தித்த கார்குடி, முதுகுடி, மசினகுடி, ஓரவல்லாறை மலைவாழ் மக்களைக் காட்டிலும் நிரம்பவும் மூர்க்கமான, பழமையான மக்கள் குடியிருப்பைக் கொண்டது வழுக்குப்பாறை. அதனோட ஜ்யாக்ரபிகல் ஸ்டரக்சரைச் சொல்கிறேன். எல்லோரும் அவங்கவங்க டயரியில் நோட் பண்ணிக்குங்க.

    எல்லோரும் பாக்கெட் டயரியை எடுத்துக் கொண்டார்கள். நித்தியானந்தம் பைலைப் பார்த்து, ஜ்யாக்ரபிகல் வார்த்தைகளை உதிர்க்க, எழுதிக் கொள்ள ஆரம்பித்தார்கள்.

    கிட்டத்தட்ட முப்பது நிமிஷம்.

    டிரைவர் வேலையை முடித்துக் கொண்டு ஹாரனை அழுத்த, நித்தியானந்தம் பைலை மூடினார். லதா பெருமூச்சு விட்டாள்.

    அம்மாடி! அறுவை மழை நின்றது.

    வேன் வழுக்குப்பாறை மலையடிவாரத்தை நெருங்கிய போது நேரம் சரியாய் 7 .௦௦ மணி. மேற்குத் திசையில் சூரியன் அடியோடு புதையுண்டு போயிருக்க --- மேகங்களின் விளிம்புகளில் மட்டும் சிவப்புச் சாயம் தெரிந்தது. காற்றும் குளிரும் கல்யாணம் செய்து கொண்ட மகிழ்ச்சியில் விசிலடித்துக் கொண்டிருக்க -- பனி அட்சதையாய்ப் பொழிந்து கொண்டிருந்தது.

    வழுக்குப்பாறை மலையடிவார அரசினர் விடுதி கோணல் மாணலான தமிழ் எழுத்துக்களில் ஒரு சிமெண்ட் போர்டு வழிகாட்ட -- வேன் அதற்குக் கட்டுப்பட்டு உள்ளே போய் எதிர்ப்பட்ட கருங்கல் கட்டிடத்திற்கு முன்னால் மௌனமானது.

    கறுப்புப் பேண்ட், உல்லன் ஸ்வெட்டர், குல்லாய் தரித்த வாட்ச்மேன் கிழவன் ஓடி வந்தான். கும்பிட்டான்.

    அய்யா... கோயமுத்தூரிலிருந்தா வர்றீங்க?

    ஆமா. என்றார் நித்தியானந்தம் இறங்கிக் கொண்டே.

    நீங்களெல்லாம் வருவீங்கன்னு பஞ்சாயத்து பிரசிடெண்ட் அய்யா இப்பத்தான் சொல்லிட்டுப் போனார். மோட்டார் காரை அப்படி ஓரமா நிப்பாட்டிக்குங்கய்யா.

    அஜந்தா கீழே இறங்கினாள்.

    உள்ளங்கைகளை ஒன்றோடு ஒன்று வைத்து தேய்த்துக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தாள். மலையடிவாரம் மயான அமைதியோடு இருந்தது. சுற்றிலும் கோட்டை அரண் மாதிரி மலைகள். அவைகளின் இடுப்பில் உட்கார்ந்திருக்கும் மேகங்கள்.

    வழுக்குப்பாறை குடியிருப்பு எந்தப் பக்கம் ஸார் இருக்கு? --- யாரோ ஒரு மாணவன் நித்யானந்தத்திடம் கேட்டுக் கொண்டிருக்க, அவர் இடது புறமாய்த் திரும்பி நின்று அந்த மலையைக் காட்டினார்.

    அஜந்தா பார்வையை அந்தப் பக்கமாய்த் திருப்பினாள்.

    சற்று உயரம் குறைவான மலைதான். மலையின் உச்சியில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. காற்றில் மரங்கள் வேகமாய் அசைந்து கொண்டிருந்தது. எல்லா பாறைகளும் பாலிஷ் போட்ட மாதிரி "மொழுக்'கென்று தெரிந்தது.

    லதா அஜந்தாவின் தோளைத் தட்டினாள். சிரித்துக் கொண்டே சொன்னான்,

    என்ன அஜந்தா... அந்த வழுக்குப்பாறை மலையை அப்படி வெறிச்சுப் பார்த்துட்டிருக்கே? நீதான் இயற்கை அழகை ரசிக்கிறவளாச்சே... மேலே போய் ரசிக்கிறதுதானே?

    சொல்லிவிட்டு --- அவள் தன் லக்கேஜ்களை எடுப்பதற்காக வேனை நோக்கி நகர்ந்து விட --- அஜந்தாவின் மனசில் முதன் முதலாய் அந்த எண்ணம் தோன்றியது.

    "யார்க்கும் தெரியாமல் வழுக்குப்பாறை மலைக்குப் போய்விட்டு வந்தால் என்ன? இந்த ராத்திரியே முயற்சி செய்யலாமா...?'

    'செய்' --- என்றது அவளது மூளை.

    மழை உச்சியில் எரிகிற அந்த நெருப்பு ஒரு சிவப்பு தீற்றல் மாதிரி

    அஜந்தாவுக்குத் தெரிய, அதையே வெறித்துக் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

    2

    அரசாங்கத்திற்குச் சொந்தமான அந்த வழுக்குப்பாறை மலையடிவாரக் கட்டிடம் பகல் நேரங்களில் பஞ்சாயத்து யூனியன் ஆபீஸாகவும், ராத்திரி நேரங்களில் சுற்றுலா விடுதியாகவும் உபயோகப்பட்டு வந்தது. மலையடிவாரத்தில் கிடைத்த கற்களை வைத்துக் கொண்டே உள்ளூர் கொத்தனாரின் எஞ்சினீரிங் மூளையோடு இந்தக் கட்டிடத்தை 'திம்' மென்று கட்டியிருந்தார்கள். நீளமான கடப்பைக்கல் வராந்தாவில் சின்னச் சின்னதாய் ஏலெட்டு அறைகள்.

    பஞ்சாயத்து யூனியனின் தலைவர் மாதப்பன் திருமலை நாயக்கர் தூண் சைஸுக்கு வளர்ந்து பார்க்கிறவர்களின் மூச்சை சில வினாடிகளுக்கு நிறுத்தினார். ஒரு அரசியல் கட்சியின் கொடி நிறத்தை தான் கட்டியிருந்த வேஷ்டியின் ஓரத்தில் காட்டினார். தான் அணிந்திருந்த மோதிரத்தில் கட்சியின் தலைவரை க்ளோசப்பில் காட்டினார். சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் இரவும் பகலும் ஆயிரக்கணக்கான வணக்கங்களைப் போட்டதில் அந்த கும்பிடுகிற றதனம் ஒரு மேனரிஸம் மாதிரி ஒட்டிக் கொள்ள --- காரணமில்லாமல் எல்லோருக்கும் வணக்கம் போட்டார்.

    ஸ்காலர் நித்தியானந்தத்திடம் தன் கடைவாயில் ஒளிந்திருந்த தங்கம் தெரிய குழைந்து குழைந்து பேசினார்.

    ரெண்டு நாளைக்கு முன்னாடியே தாலுகா ஆபீஸிலிருந்து எனக்கு லெட்டர் வந்துடுச்சு ஸார். நீங்க மொத்தம் பதினாலு பேர் வரப் போறதாகவும், வேண்டிய ஏற்பாடுகளை செஞ்சு குடுக்கும்படியாகவும் இன்ஸ்ட்ரக்ட் பண்ணியிருந்தாங்க. நீங்க மொத்தம் எத்தனை நாள் இங்கே தங்கப் போறீங்க ஸார்?

    பத்து நாள்.

    ஏழு நாள்ன்னு லெட்டர்ல பார்த்ததா ஞாபகம். பரவாயில்லை. தங்குங்க. சாப்பாட்டு வசதிகளை நான் பார்த்துக்கிறேன். வேளா வேளைக்கு என்னோட வீட்டிலிருந்து காபி, டிபன், சாப்பாடு இங்கே வந்துடும். அதுக்காக உங்க வேனை நான் உபயோகப் படுத்திக்கலாமா?

    தாராளமா.

    தேங்க்ஸ். எதாவது வசதிக் குறைவு இருந்தா என்கிட்டே சொல்லுங்க. கவர்மெண்ட்டுக்கு லெட்டர் எழுதி போட்டுடாதீங்க. வாங்க டிபன் சாப்பிடலாம். நீங்க ஆறு மணிக்கு வந்திருந்தா வேறு ஏதாவது டிபன் பண்ணியிருக்கலாம். ஏழு மணிக்கு வந்ததினாலே, அவசர அவசரமா கிச்சடி பண்ணச் சொன்னேன்.

    ஏதோ ஒண்ணு, நல்லாயிருந்தா சரி.

    நித்தியானந்தம் சொல்லிக் கொண்டே மாதப்பனோடு கட்டிடத்தின் பின் பகுதியை நோக்கி நடந்தார். கேட்டார்.

    இந்த வழுக்குப்பாறை மலையைச் சுத்தி மொத்தம் எத்தனை கிராமம் இருக்கும்?

    மொத்தம் பதினைஞ்சு கிராமம் ஸார். அதுல கோம்பை மேடும், அருவாமலையும் கொஞ்சம் பெரிய கிராமங்க.

    அப்போ... எப்படியும் ஒரு நாளைக்கு ரெண்டு கிராமம் பார்த்தாதான் வந்த வேலை சீக்கிரம் முடியும்.

    ஸார்... மாதப்பன் தயக்கமாய் குரல் இழுத்தார்.

    என்ன...

    நான் ஒரு விஷயம் சொன்னா, நீங்க தப்பா நினைச்சுக்கக் கூடாது.

    சொல்லுங்க...

    வழுக்குப்பாறை மலை ஜனங்களைப் பத்தி தெரிஞ்சுக்கிறதுக்காக --- நீங்க எல்லாரையும் கூட்டிகிட்டு வந்திருக்கீங்க?

    ஆமா...

    அந்த காட்டு ஜனங்களைப் பத்தி தெரிஞ்சுக்கிறதுனால யார்க்கு என்ன லாபம் ஸார். ஏதோ மிருகங்க கூட்டம் கூட்டமா வாழற மாதிரி அவங்க இஷ்டத்துக்கு இருந்துட்டு போறாங்க. அவங்களை எதுக்காக அரசாங்கம் சீண்டிப் பார்க்கணும். வருஷத்துக்கு ரெண்டு தபா உங்களை மாதிரி க்ரூப்ஸ் இங்கே வர்றாங்க. வாரம் பத்து நாள் தங்கறாங்க. எதை எதையோ எழுதிகிட்டு போறாங்க. அதனால என்ன பிரயோஜனம்?

    நித்தியானந்தம் சிரித்தார்.

    நீங்களே அதை அரசாங்கத்துக்கு எழுதிக் கேட்டுட வேண்டியது தானே?

    நான் கேக்க முடியுமா ஸார்?

    அப்போ பேசாம கிச்சடி சாப்பிட வாங்க நித்தியானந்தம் சொன்னதைக் கேட்டு --- பஞ்சாயத்து பிரஸிடெண்ட் மாதப்பன் முகம் மாறினார்.

    ராத்திரி மணி பத்து.

    பக்கம் பக்கமாய் போட்ட கயிற்றுக் கட்டில்களில் கம்பளிகளைப் போர்த்துக் கொண்டு படுத்திருந்தார்கள் அஜந்தாவும், லதாவும்.

    கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே - வழுக்குப் பாறை மலைப் பிராந்தியம் 'ஜொம்' என்று இருட்டில் தெரிந்தது. ஊம்... ஊம்... என்று உறுமி மேளம் அடிக்கிற சைஸில் ஏதோ ஒரு பறவை இடைவிடாமல் கத்திக் கொண்டிருந்தது.

    அஜந்தா...

    ம்....

    நம்ம சோசியாலஜி டூரிலேயே இதுதான்.... பயங்கரமான இடம்....

    எம்மனசுக்கு அப்படித் தெரியலை. ரம்யமா இருக்கு.

    உனக்கு எல்லாமே ரம்யம்தான். இந்த ஏரியைாவை விட்டு எப்போ கிளம்பிப் போகலாம்ன்னு மனசு துடிச்சுட்டு இருக்கு.

    எனக்கு அந்த வழுக்குப்பாறை ஜனங்களை போய் பார்க்க மாட்டோமானு மனசு கிடந்து அடிச்சுக்குது.

    போய் பார்க்கிறதுதானே.

    துணைக்கு நீ வர்றியா?

    அம்மாடி... அடுத்த மாசம் எனக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணி வெச்சிருக்குடி. நான் உருப்படியா ஊர் போய்ச் சேரணும்.

    போடி பயந்தாங்கொள்ளி.

    "இவ பெரிய ஜான்சிராணி... படுத்துத்

    Enjoying the preview?
    Page 1 of 1