Marupadiyum Oru Thadavai
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsKonjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsIruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsVetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Piriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsKondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsEngum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsTheepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsMella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsUchi Nila Rating: 0 out of 5 stars0 ratings
Related to Marupadiyum Oru Thadavai
Related ebooks
Moochil Vazhum Pullankuzhalkal Rating: 0 out of 5 stars0 ratingsNitthiyavin Nimishangal Rating: 0 out of 5 stars0 ratingsVelvet Kutram Rating: 0 out of 5 stars0 ratingsRaththamindri Oru Yuttham Rating: 0 out of 5 stars0 ratingsAntha 69 Naatkal! Rating: 0 out of 5 stars0 ratingsAgmark Murder Rating: 0 out of 5 stars0 ratingsIdi Minnal Indira Rating: 0 out of 5 stars0 ratingsThottavanai Vittathillai Rating: 0 out of 5 stars0 ratingssaagavaram Rating: 0 out of 5 stars0 ratingsNeela Nira Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsUyiradangu Utharavu Rating: 0 out of 5 stars0 ratingsHongkong Vizhigal Rating: 0 out of 5 stars0 ratingsViolet Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsIndiya Naadu En Veedu! Rating: 0 out of 5 stars0 ratingsArunthathiyum AaruThottakkalum Rating: 0 out of 5 stars0 ratingsOosi Munaiyil Oor Uyir Rating: 5 out of 5 stars5/5Kavitha Nagar Kadaisi Theru Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Pommai Nanum Pommai Rating: 0 out of 5 stars0 ratingsNeethana... Nijamthana? Rating: 0 out of 5 stars0 ratingsKili Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsAmirtham Endral visham! Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Thisaigal Rating: 0 out of 5 stars0 ratingsEn Piriyamana Virothikaley Rating: 0 out of 5 stars0 ratingsKezhe Vizhatha Nizhal and Manam Iranthu Pesukiren Rating: 0 out of 5 stars0 ratingsRatthathil Oru Raathiri Rating: 0 out of 5 stars0 ratingsNylon Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsIndia Naadu En Veedu Rating: 0 out of 5 stars0 ratingsVanakkathirkuriya Kutram Rating: 0 out of 5 stars0 ratingsIni Poruppathillai Rating: 0 out of 5 stars0 ratingsOnbathaavathu Thisai Paththavathu Giragam Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Marupadiyum Oru Thadavai
0 ratings0 reviews
Book preview
Marupadiyum Oru Thadavai - Rajeshkumar
ராஜேஷ்குமார்
ஒருவனின் வாழ்க்கை மேன்மையான நிலைக்கு வரவேண்டுமானால் அவன் மூன்று விஷயங்களை மனதுக்குள் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
1. உனக்கு உதவி செய்தவரை மறக்காதே -
கீதை.
2. உன்னை நேசித்தவரை வெறுக்காதே -
பைபிள்.
3. உன்னை நம்பியவரை ஏமாற்றாதே -
குர்ஆர்.
1
கற்பக விநாயகம் - கமிஷனர் ஆஃப் போலீஸ், தன் காரில் ஜி.ஹெச். போய்ச் சேர்ந்த போது அஸிஸ்டண்ட் கமிஷனர் ரிச்சர்ட் படிகளில் வேகமாய் இறங்கி வந்து ஒரு சல்யூட்டோடு எதிர்கொண்டார். பிறகு பவ்யமாய் குனிந்தார். நேரம் மாலை 6.45.
ஸார்...! கம்... திஸ் சைட்...
இறுகிப்போன முகத்தோடு - கற்பக விநாயகம் நடந்து கொண்டே கேட்டார்.
ஹௌ ஈஸ் ஹி?
இன்னும் கான்ஷியஸ் திரும்பலை ஸார்.
அடி பலமா...?
பின்னந்தலையில் ஒரு பெரிய ரத்தப் பொத்தல். அடிக்க இரும்புக் கம்பியை யூஸ் பண்ணியிருக்காங்க ஸார்.
என்ன வயசு இருக்கும்?
முப்பது ப்ளஸ் ஸார்.
தன்னோட பேரைச் சொன்னானா?
"சொல்லலை ஸார். தலையில் ரத்தம் வழிய போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் ஓடிவந்து இருக்கான் ஸார். ஸ்டேஷன் வாசலில் நின்றிருந்த செண்ட்ரிகிட்டே ‘மறுபடியும் ஒரு தடவை’ன்னு ரெண்டு வார்த்தை பேசிட்டு மயக்கமாயிட்டான். ஸ்டேஷனில் இருந்த இன்ஸ்பெக்டர் அருணகிரி உடனடியாய் முதல் உதவி பண்ணியும் அவனுக்கு கான்ஷியஸ் வராமல் போகவே ட்ரீட்மெண்ட்டுக்காக ஜி.ஹெச். கொண்டு வந்துட்டார்."
டாக்டர் என்ன சொல்றார்...?
‘தலையில் அடி பலமா விழுந்து இருக்கு. ஸ்கல் போர்ஷனை ஸ்கேன் பண்ணிப் பார்த்த பிறகுதான் எதையுமே தீர்மானமாய் சொல்ல முடியும். ஒரு அரை மணி நேரம் வெயிட் பண்ணுங்க. பேஷண்ட் எந்த கண்டிஷன்ல இருக்கார்ன்னு சொல்லிடறேன்’னு சொல்லிட்டு ஐ.ஸி.க்குள்ளே போனவர் இன்னும் வெளியே வரலை ஸார்.
செண்ட்ரி கான்ஸ்டபிள்கிட்டே அவன் என்ன வார்த்தை சொன்னான்?
"மறுபடியும் ஒரு தடவை..."
அதுக்கு மேலே அவன் பேசலை...?
பேசலை...
என்ன சொல்ல வந்து இருப்பான்?
மஸ்ட் பி சீரியஸ் ஸார்...
எப்படி சொல்றீங்க?
இல்லேன்னா ரத்தக் காயத்தோடு அவன் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் ஓடி வந்து இருக்க மாட்டான் ஸார்.
ஐ.ஸி. யூனிட் வந்தது. கண்ணாடி கதவருகே இன்ஸ்பெக்டர் அருணகிரி பதட்டமாய் தெரிந்தார். கமிஷனரைப் பார்த்ததும் விருட்டென்று அட்டென்ஷனுக்கு வந்தார். கமிஷனர் கேட்டார்.
டாக்டர் ஏதாவது சொன்னாரா?
நாட் யெட் ஸார்.
அந்த இளைஞனோட சர்ட், பேண்ட் பாக்கெட்டில் ஏதாவது திங்க்ஸ் இருந்ததா?
இரண்டு பத்து ரூபாய் நோட்டுகள் மட்டும் இருந்தது ஸார்.
வேற எதுவும் இல்லை?
இல்லை ஸார்.
தென்... எப்படி ஐடெண்டிஃபை பண்ணப் போறீங்க?
நோ... அதர்... வே...! அவன் கான்ஷியஸ்க்கு வரணும் ஸார்.
இன்ஸ்பெக்டர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே டாக்டர் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு வெளிப்பட்டார். கமிஷனரைப் பார்த்ததும் லேசாய் மலர்ந்தார்.
ஸ்பாட்டுக்கு நீங்களே வந்துட்டீங்களா?
கமிஷனர் பெருமூச்செறிந்தார்.
வேற வழி...? இன்னிக்கு நாடு இருக்கிற நிலைமை அவ்வளவு சந்தோஷமாய் இல்லையே...? யார் நல்லவன்... யார் கெட்டவன்னு ஜட்ஜ் பண்ண முடியலை. போலீஸ் ஸ்டேஷனுக்கு முன்னாடி வந்து ஒருத்தன் ரத்த காயத்தோடு விழுந்து செண்ட்ரி கான்ஸ்டபிளைப் பார்த்து ஏதோ சொல்ல முயற்சி பண்ணியிருக்கான். அந்த முயற்சியின் விளைவாய் ‘மறுபடியும் ஒரு தடவை’ன்னு சொல்லிட்டு மயக்கமாயிட்டான். அவன் என்ன சொல்ல வந்தான்? ஈஸ் தேர் எனி சீரியஸ் மேட்டர்ன்னு யோசிக்க வெச்சுட்டான்.
டாக்டர் புன்னகைத்தார்.
நவ் ஹி ஈஸ் அவுட் ஆஃப் டேஞ்சர்...! முழுமையாய் பரிசோதனை பண்ணிப் பார்த்துட் டோம். எந்த நிமிஷத்திலும் அந்த இளைஞனுக்கு உணர்வு திரும்பலாம். பட்... யூ ஹேவ் டூ வெயிட் ஃபார் ஸம் டைம்.
நோ... ப்ராப்ளம் டாக்டர்... வீ... ஆர்... ஹியர்...
வாங்க! நம்ம ரூமுக்கே போயிடலாம். பேஷண்ட்டுக்கு கான்ஷியஸ் திரும்பியதும் ஸ்பாட்ல இருக்கிற நர்ஸ்கிட்டயிருந்து தகவல் வரும். ப்ளீஸ் கம் வித் மீ...
டாக்டர் சொல்ல கமிஷனர் கற்பக விநாயகம் அவரோடு இணைந்து கொண்டு நடக்க ஆரம்பித்தார்.
அஸிஸ்டண்ட் கமிஷனர் ரிச்சர்ட் இன்ஸ்பெக்டர் அருணகிரியிடம் ஏதோ சொல்ல முயன்ற விநாடி அருணகிரியின் செல்போன் ஒலித்தது. எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் திருமூர்த்தி.
சொல்லுங்க திருமூர்த்தி.
ஸார்...! நம்ம ஸ்டேஷனுக்கு முன்னாடி தலையில் ரத்த காயத்தோடு வந்து விழுந்து ஏதோ ஒரு செய்தியை சொல்ல முயற்சி பண்ணின ஆள் யார்ன்னு தெரிஞ்சுடுச்சு ஸார்...
ஈஸிட்... யார் அவன்?
அவன் பேர் சடகோபன் ஸார்... அவன் ஒரு மென்ட்டல் பேர் வழியாம்...
என்னது...! மென்ட்டலா...?
"ஆமா... ஸார்...! வானகரத்துக்குப் பக்கத்துல ‘நேச்சர் க்யூர்’ என்கிற ஹாஸ்பிட்டலில் அட்மிட்டாகி ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு இருந்த சடகோபன் ரெண்டு மணி நேரத்துக்கு முந்தி எப்படியோ தப்பிச்சு சிட்டிக்குள்ளே வந்திருக்கான். எங்கேயோ கீழே விழுந்து தலையில் அடிபட்டிருக்கான். அவன் ஹாஸ்பிட்டல்ல அட்மிட்டாகியிருந்த ரெண்டு மாசமும் பேசற ஒரே வார்த்தை ‘மறுபடியும் ஒரு தடவை’ங்கிறதுதானாம். அதுக்கு மேலே பேசவும் மாட்டானாம்.
இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது...?
நேச்சர் க்யூர் ஹாஸ்பிட்டலிலிருந்து தப்பிச்சுட்டு வந்த சடகோபனைத் தேடிகிட்டு ஒரு டாக்டரும் ரெண்டு ஆர்டர்லியும் ஒரு வேன்ல புறப்பட்டு வந்திருக்காங்க. சட்கோபனோட போட்டோவைக் காட்டி ஒவ்வொரு ஏரியாவாய் விசாரிச்சுக்கிட்டு வந்திருக்காங்க. நம்ம ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் இருக்கிற பெட்டிக் கடையில் விசாரிச்சப்ப அவன் போட்டோவை பார்த்துட்டு ஸ்டேஷன் வாசல்ல வந்து விழுந்தவனைப் பத்தி சொல்லியிருக்கான். உடனே அந்த டாக்டரும் ரெண்டு ஆர்டர்லியும் ஸ்டேஷனுக்கு வந்து என்னைப் பார்த்தாங்க. போட்டோவைக் காட்டி விபரம் கேட்டாங்க. நான் சடகோபன் இப்ப ஜி.ஹெச்.சில் இருக்கிற விபரத்தை சொன்னேன்.
இன்ஸ்பெக்டர் அருணகிரி பெருமூச்சு விட்டார்.
அப்பாடா...! இந்த ‘மறுபடியும் ஒரு தடவை’ பிரச்னை ஒரு பெரிய தலைவலியாய் மாறி டிபார்ட்மெண்ட்டையே உலுக்கி எடுக்கும்ன்னு நினைச்சுட்டு இருந்தேன். தப்பிச்சுட்டோம். அந்த டாக்டர் பக்கத்தில் இருக்காரா?
இருக்கார் ஸார்.
அவர் பேர் என்ன?
சாரங்கபாணி...! அறுபது வயசு இருக்கும். நேச்சுராபதி டாக்டர். பேஷண்ட் சடகோபனைத் தேடி களைச்சுப் போயிட்டார்.
திருமூர்த்தி...! நீங்க போனை அந்த டாக்டர்கிட்டே கொடுங்க... நான் பேசறேன்.
இதோ... ஸார்...
அடுத்த பத்து விநாடிகளில் டாக்டர் சாரங்கபாணியின் தளர்ந்த குரல் கேட்டது.
குட் ஈவினிங் இன்ஸ்பெக்டர்.
குட் ஈவினிங் டாக்டர்...! நீங்க தேடிட்டு வந்த பேஷண்ட் சடகோபன் இப்ப ஜி.ஹெச். - ஐ.ஸி. யூனிட்டில் இருக்கான். உயிர்க்கு எந்த ஆபத்தும் இல்லை.
சடகோபனோட உயிர்க்கு எந்த ஆபத்தும் இல்லைங்கிறது ஒரு சந்தோஷமான விஷயம்தான் இன்ஸ்பெக்டர். பட் அவன் சுய நினைவுக்கு வந்து நார்மலாயிட்டான்னா மத்தவங்களோட உயிர்க்கு ஆபத்து. ஹி ஈஸ் வெரி வெரி டேஞ்சரஸ். அவனோட கையையும் காலையும் கட்டிலோடு சேர்த்துக் கட்டி வெச்சு ட்ரீட்மெண்ட் தர்றது பெட்டர்.
அவனுக்கு இப்போ கான்ஷியஸ் இல்லை.
கான்ஷியஸ் இல்லாத வரைக்கும் பிரச்னையில்லை. உணர்வு வந்துட்டா அவனோட நடவடிக்கைகள் நாம எதிர்பார்க்கிற விதமாய் இருக்காது.
"அது என்ன மறுபடியும் ஒரு தடவை...?"
"எங்களுக்கும் புரியலை. ரெண்டு மாசத்துக்கு முந்தி சடகோபனை அட்மிட் பண்றதுக்காக அவனோட அப்பா வந்து இருந்தார். சொந்த ஊர் ஆந்திரா பார்டரில் ‘எர்ரா கொண்டலு’ என்ற கிராமம். அவர் ஒரு விவசாயி. பண வசதியுள்ளவர். சடகோபனுக்கு எதனால மனநலம் பாதிக்கப்பட்டதுன்னு கேட்டேன். அவர்க்கும் பதில் சொல்லத் தெரியலை. கிராமத்து வீட்ல இருந்தப்ப ஒரு கரித்துண்டை எடுத்துக்கிட்டு ஒரு சுவர் பாக்கி விடாமே ‘மறுபடியும் ஒரு தடவை’ன்னு எழுதிட்டே இருந்தானாம் ‘ஏண்டா இப்படி எழுதறே?’ன்னு கேட்டா பதில் சொல்ல மாட்டானாம். அதுக்கப்புறம் யாரைப் பார்த்தாலும் கல் எடுத்து அடிக்க ஆரம்பிச்சானாம். அப்புறம் அரிவாளை கையில் எடுத்துக்கிட்டு