Nenjellam Nerunji Mul
By Rajesh Kumar
()
About this ebook
Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.
Read more from Rajesh Kumar
Karuppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Vivek Thotrathillai Rating: 5 out of 5 stars5/5Vivek, Vishnu, Oru Vidukadhai Rating: 4 out of 5 stars4/5Puthiya Abaayam Rating: 4 out of 5 stars4/5Uyir Meethu Thaagam Rating: 4 out of 5 stars4/5Manidhan Rating: 5 out of 5 stars5/5Mella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Mathangalil Aval Margazhi Rating: 5 out of 5 stars5/5Uyir Urugum Satham Rating: 5 out of 5 stars5/5Sorgam Rating: 5 out of 5 stars5/5Kuttralathil Oru Kutram Rating: 0 out of 5 stars0 ratingsSivappai Oru Pournami Rating: 4 out of 5 stars4/5Naan Naaneythaan Rating: 4 out of 5 stars4/5Dinasari Moondru Kolaigal Rating: 4 out of 5 stars4/5Vendru Vaa Vivek Rating: 3 out of 5 stars3/5Theeratha Dhrogam Rating: 5 out of 5 stars5/5Isai Kolai Rating: 5 out of 5 stars5/5Nalliravu Seithi Rating: 4 out of 5 stars4/5Oru Kulir Kaala Kutram Rating: 5 out of 5 stars5/5Shimla Ramya Rating: 5 out of 5 stars5/5Only Vivek! Rating: 5 out of 5 stars5/5Sorry Wrong Number Rating: 4 out of 5 stars4/5Antha 69 Naatkal! Rating: 5 out of 5 stars5/5Vivek, Roopala Thuppariyum Novelgal Thoguthi 1 Rating: 4 out of 5 stars4/5Uravugal Pirivathillai Rating: 5 out of 5 stars5/5Good Night Krotham! Rating: 5 out of 5 stars5/5Oru Everest Thavaru! Rating: 5 out of 5 stars5/5‘Sorry... Konnuttean..!’ Rating: 0 out of 5 stars0 ratingsNadunishi Thendral Rating: 5 out of 5 stars5/5
Related to Nenjellam Nerunji Mul
Related ebooks
Vivekum 41 Nimishangalum Rating: 3 out of 5 stars3/5Kannellam Unnodudhaan Rating: 2 out of 5 stars2/5Pathinooravathu Avatharam Rating: 4 out of 5 stars4/5Sorgathin Saavi Rating: 0 out of 5 stars0 ratingsOru Maalainera Maranam Rating: 0 out of 5 stars0 ratingsMattroru Naal Rating: 4 out of 5 stars4/5Athirum Uthiram Rating: 0 out of 5 stars0 ratingsSingapore Vinaadigal and Thigil Kaalam Rating: 4 out of 5 stars4/5Endrendrum Un Ethiri Rating: 4 out of 5 stars4/5Kandupidiyungal Rating: 5 out of 5 stars5/5Everest Thottuvidum Uyaramthaan Rating: 0 out of 5 stars0 ratingsSathamillamal Rathamillamal... Rating: 5 out of 5 stars5/5Un Nizhalum Naanthane Rating: 0 out of 5 stars0 ratingsKuri Rating: 5 out of 5 stars5/5Kanniley Neer Yetharku Rating: 0 out of 5 stars0 ratingsSaadhal Samrajyam Rating: 4 out of 5 stars4/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsPaainthu Vaa Vivek Rating: 0 out of 5 stars0 ratingsGood Night Krotham! Rating: 5 out of 5 stars5/5Thodarnthu Vaa Thottu Vidathea Rating: 4 out of 5 stars4/5Agmark Drogam Rating: 4 out of 5 stars4/5November Rathirigal Rating: 5 out of 5 stars5/5Redrose Guest House Rating: 0 out of 5 stars0 ratingsSilent Killers Rating: 0 out of 5 stars0 ratingsOotha Nira Devathai Rating: 5 out of 5 stars5/5Kaatrin Niram Karuppu Rating: 5 out of 5 stars5/5Piragu Naan Kondren Rating: 4 out of 5 stars4/5Irandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Manjal Diary Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Nenjellam Nerunji Mul
0 ratings0 reviews
Book preview
Nenjellam Nerunji Mul - Rajesh Kumar
http://www.pustaka.co.in
நெஞ்செல்லாம் நெருஞ்சி முள்
Nenjellam Nerunji Mul
Author:
ராஜேஷ் குமார்
Rajesh Kumar
For more books
http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
என்னுரை
வணக்கம்!
‘நெஞ்செல்லாம் நெருஞ்சிமுள்' தலைப்பில் வெளிவந்துள்ள இந்நூல், மனசுக்குள் அழுக்கும் உதட்டுக்குள் சிரிப்பையும் வைத்துக்கொண்டு நடமாடும் மனிதர்கள் இந்த உலகத்தில் எவ்வளவோ பேர் உண்டு. அவர்களிடம் நல்ல மனம் கொண்டவர்கள் மாட்டிக் கொள்ளும்போது ஏற்படுகின்ற பிரச்சினைகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு எழுதப்பட்டதுதான் இந்த நாவல், இது ஒரு 'க்ரைம்' நாவல் போல் தோற்றம் கொடுத்தாலும் ஒரு குடும்பத்தில் நடக்கின்ற சம்பவங்களே கதை முழுவதும் இடம்பெற்றுள்ளன. என்னுடைய நாவல்களில் இது சற்றே வித்தியாசமானது.
அதேபோல் இந்தப் புத்தகத்தைப் படித்து அருமையான முறையில் அணிந்துரை வழங்கியுள்ள திரு. பழ. தரும. ஆறுமுகம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மீண்டும் என் வணக்கம்.
மிக்க அன்புடன்
ராஜேஷ்குமார்
*****
அணிந்துரை
தமிழ் நாட்டில் நம் காலத்தில் வாழ்ந்த – வாழ்ந்து கொண்டிருக்கிறவர்களில் தத்தம் துறைகளில் தனிமுத்திரை பதித்தவர்கள் பல பேர் இருக்கிறார்கள்.
கவிதையில் முத்திரை பதித்தவர்கள் பாரதிதாசனும் கண்ணதாசனும்!
வரலாற்று நாவல்களில் முத்திரை பதித்தவர்கள் ‘கல்கி’யும், சாண்டில்யனும்!
சமூக நாவல்களில் முத்திரை பதித்தவர்கள் அகிலனும், நா. பார்த்தசாரதியும்.
வட்டார வழக்கில் முத்திரை பதித்தவர்கள் கி. ராஜநாராயணனும், கவிஞர் வைரமுத்துவும்!
நகைச்சுவையில் முத்திரை பதித்தவர்கள் தேவனும், ரா.கி. ரங்கராஜனும்.
இப்படி இன்னும் பலரைச் சொல்லலாம்.
மர்மக்கதைகள் எனப்பெறும் 'கிரைம்’ நாவல்களில் முத்திரை பதித்தவர்கள் என்றால்...
தமிழ்வாணன்... சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நாங்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் தனக்கென ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டவர் தமிழ்வாணன்.
அவர் கோவைக்கு வரும்போதெல்லாம் ஒரு பெருங்கூட்டம் அவரை மொய்த்துக் கொள்ளும்! அக்கால எழுத்தாளர்களில் அவர் ஒரு 'சூப்பர் ஸ்டார்' என்றே சொல்ல வேண்டும்.
அவர் திடீர் என மறைந்தபோது ஒரு வெற்றிடம் ஏற்பட்டது.
அதை நிறைவு செய்ய வந்தவர் என் அன்பிற்கினிய நண்பர் ராஜேஷ்குமார்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னால் குமுதத்தில் ஒரு சிறுகதை வந்தது. அதில் எங்கள் ஊரைச் சுற்றி நிகழ்ச்சிகள் நடப்பதாகத் தத்ரூபமாக எழுதப்பட்டிருந்தது. அதை எழுதியவர்,
ராஜேஷ்குமார்...!
அப்போது முதல் ராஜேஷ்குமாரின் கதைகளை விரும்பிப் படிக்க ஆரம்பித்தேன்.
அவருடைய படைப்புகள் அத்தனையும் படித்திருக்கிறேன்.
பெரும்பாலானவற்றின் நிகழ்வுகள் கோவையைச் சுற்றி நிகழ்வதாக இருக்கும்.
நிறைய எழுத்தாளர்களின் சிறுகதைகள், நாவல்கள் அனைத்தும் சென்னையைச் சுற்றியே இருக்கும். அல்லது தஞ்சை, திருச்சி வட்டாரங்களில் நிகழ்வதாக இருக்கும்.
அப்போதெல்லாம் என்னைப் போன்றவர்களுக்கு நம் கோவையைச் சுற்றிய நிகழ்வுகளுடன் கதைகள் வரவே வராதா என்ற ஏக்கம்கூட உண்டு!
அதை நிறைவேற்றி, நெஞ்சில் நிறைந்தவர் ராஜேஷ்குமார்.
அவருடைய சிறுகதைகளாகட்டும்; நாவல்களாகட்டும்; எல்லாவற்றிலும் ஒரு நீதி இருக்கும். விஞ்ஞான நிகழ்வுகள் அனைத்தும் தக்க ஆதாரங்களுடன் இருக்கும்.
அவருடைய கதைகளில் விஞ்ஞானத்திற்கு மீறிய புனைவுகள் இருக்காது.
மெய்ஞ்ஞானத்தையும் தொடுவார்... அதன் மேன்மையை மிக்க மென்மையுடன் நம் மனதில் பதியவைப்பார்.
அவருடைய கதையின் முக்கியமான பாத்திரத்துக்கு ஓர் இக்கட்டான நிலையில் தாயே சௌடேஸ்வரி! என்னைக் காப்பாற்று!
என்று மனமுருக வேண்டுவதாக அமையும்!
பிறகென்ன...? அக்கதாபாத்திரத்தின் துன்பம் துடைக்கப்படும்.
இதன் மூலம் அவர் தன் குலதெய்வமாகிய செளடேஸ்வரியின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கை நமக்குப் புலப்படும்.
நெஞ்செல்லாம் நெருஞ்சி முள்
கதையை எடுத்துக்கொண்டால் வளர்மதியின் பாத்திரப் படைப்பு நம் நெஞ்சில் நிறைகிறது.
இதோ இப்போது மானேஜர் பரசுராம் வளர்மதியைச் சூறையாடப் போகிறார் என்று நினைக்கின்ற ஒவ்வொரு சமயத்திலும் இயல்பாக ஏற்படுகின்ற தடங்கல்கள் - அதன்மூலம் வளர்மதி களங்கப்படாமல் காப்பாற்றப்படுவது... எத்தனை இயல்பாக இருக்கிறது.
அதேபோல் வளர்மதி தப்பிக்கப் போகிறாள் என்று நினைக்கின்ற நேரத்தில் ஏற்படும் இடையூறுகள்! அப்பப்பா... கதை எப்படிப் பின்னப்பட்டிருக்கிறது. படிக்க ஆரம்பித்தால் முடிக்காமல் கீழே வைக்க மனம் வருவதில்லை
தொடர்பே இல்லாமல் இருவேறு திசைகளில் (ட்ராக்) செல்லுகின்ற கதைகளை இறுதிக்கட்டத்தில் இணைக்கின்ற அவருடைய பாங்கே தனி!
அதேபோல் கதையில் விழும் முடிச்சுகள் இறுதியில் அவிழ்க்கப்படுவதும் வெகு இயல்பு!
நல்லவனாகவே நாம் நினைத்துக் கொண்டிருக்கும் பாத்திரம் இறுதிக் கட்டத்தில் துரோகியாவதும் அல்லது இறுதிக்கட்டத்தில் புதிதாக முளைக்கும் ஒரு சிறு பாத்திரம் அனைத்துக்கும் ஒரு நல்ல முடிவை ஏற்படுத்துவதும், அப்பாத்திரம் வெகு இயல்பாகக் கதைக்குப் பொருந்தி வருவதும் அருமையிலும் அருமை!
நெஞ்செல்லாம் நெருஞ்சிமுள் கதையில் தண்டிக்கப் படவேண்டிய பீட்டர் போலீசின் பிடியில் சிக்கினால் குற்றமற்றவளாகிய வளர்மதி - மாறன் இருவரும் தருண் கொலையில் சம்பந்தப்பட்டதைச் சொல்லிவிடுவான் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கும்போது...
தருணின் காதலி நீனா திடீரென வந்து எழுதுகின்ற முடிவுரை யதார்த்தமானது!
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், ஜீவா (பா. ஜீவானந்தம்) வாகீச கலாநிதி கி. வா. ஜகந்நாதன் இவர்களெல்லாம் மூன்று மணி நேரம் தாங்கள் ஆற்றிய சொற்பொழிவின் சாரத்தை - சொற்பொழிவை முடிப்பதற்கு முன்பாக மூன்று நிமிடத்தில் சொல்லி - நினைவுபடுத்தி முடிப்பார்கள்!
ஆம்...
ராஜேஷ்குமாரின் கதைகளில் விழும் ஏகப்பட்ட முடிச்சுகள் கடைசி அத்தியாயத்தில் வெகு இயல்பாக அவிழ்க்கப்படும்.
அதுதான் ராஜேஷ்குமார்...!
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் நான் கோவை ரயில் நிலையத்தில் புத்தகக் கடை வைத்திருக்கும் என் நண்பரைச் சந்தித்தேன். அவருடைய கடையில் ராஜேஷ்குமாரின் நாவல்கள் ஏராளமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சில பழைய நாவல்களும் இருந்தன!
நான் அவரைக் கேட்டேன்!
இவற்றையெல்லாம் எப்படி, விற்கப்போகிறீர்கள்?
அவர் சொன்னார்.
சார் நீங்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். இத்தனை நாவல்களிலும், அவற்றின் தலைப்பைவிட
ராஜேஷ்குமார் என்ற பெயரே பெரிதாகப் போடப்பட்டிருப்பதைப் பாருங்கள்? ராஜேஷ் குமாரைப் பொருத்த வரை அவருடைய நாவல்கள் எப்படியும் விற்றுவிடும்! விற்காமல் போய்விடும் என்ற பேச்சுக்கே இடமில்லை!
என்றார்.
உண்மைதான்.
கோவை - 35.
22-8-2015
நட்புடன்,
பழ-தரும-ஆறுமுகம்
*****
1
வங்கக் கடல் தூரத்தில் இரைந்து கொண்டிருக்க - வளர்மதி கடற்கரை மணலில் தன் ஆட்காட்டி விரலால் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.
எதிரே - கடந்த ஒரு வருட காலமாய் அவளைக் காதலித்துக் கொண்டிருக்கும் சாந்தகுமார். இருவருடைய முகங்களிலும் கவலை கனமாய் உட்கார்ந்திருந்தது. வளர்மதியின் சந்தன வண்ண முகத்தில் சற்று அதிகப்படியான கவலை.
மணலில் கோலம் போடுகிற அவளுடைய ஆட்காட்டி விரலை மெல்லப் பற்றினான் சாந்தகுமார்.
வளர்மதி...
உம்...
உன்னோட அக்கா கல்யாணத்துக்கு இன்னும் எவ்வளவு நாள் இருக்கு
சரியா பதினாறு நாள்.
"கல்யாணத்தை ஒரு வாரம் தள்ளி வைக்க முடியாதா?
மாப்பிள்ளை வீட்டுக்காரங்க அழைப்பிதழ் அச்சடித்துக் கல்யாணத்துக்குக் கூப்பிடவும் ஆரம்பிச்சுட்டாங்க. இப்ப போய்க் கல்யாணத்தைத் தள்ளி வைக்கணும்னு சொன்னா... அவங்க என்ன நினைப்பாங்க? அது சரியில்லை. அக்காவோட செவ்வாய் தோஷ சாதகத்துக்குப் பொருத்தமாய் அந்த மாப்பிள்ளை கிடைச்சதே பெரிய விசயம்.
நீ ஒரு தப்பு பண்ணிட்டே வளர்மதி...
என்ன?
மாப்பிள்ளை வீட்டுக்காரங்ககிட்டே இருபது பவுன் நகை போடறேன்னு சொல்லியிருக்கக் கூடாது. அதை பத்துப் பவுனா குறைச்சிருந்தா பணத்துக்காக இப்படி அல்லாட வேண்டியிருக்காது.
நான் சொன்னேன்... அம்மா கேட்கலை. அக்கா கவுரிக்கு வாய்ச்சிருக்கிற நல்ல இடம் தட்டிப் போயிடக் கூடாதேங்கிற ஆதங்கத்துல புரோக்கர் சொன்ன எல்லாத்துக்கும் அம்மா ஒத்துக்கிட்டா.
சரி. கல்யாணச் செலவு - சீர் செலவுக்கு இப்போ பணம் எவ்வளவு தேவைப்படும்
அம்பதாயிரம்! சிட்பண்ட்ஸ் சதாசிவம் எப்படியும் சீட்டுத் தொகை எடுத்துத் தர்றேன்னு சொல்லி ஏமாத்திட்டார்... புது ஆபீசுல வேலைக்குச் சேர்ந்து ஆறு மாசம்தான் ஆச்சு. லோன் எதுவும் கேட்கமுடியாது... பழைய ஆபீசுல வேலை பார்த்த வகையில் இருபதாயிரம் ரூபாய் அரியர்ஸ் வர வேண்டியிருக்கு. போய் பணம் கேட்டால் தலைமை ஆபீசிலிருந்து ஒப்புதல் ஆகி வரலைன்னு சொல்றாங்க...
பழைய கம்பெனி மானேஜரைப் போய் பார்த்தியா?
இந்த வாரத்துல அந்த ஆபீசுக்கு மூணு தடவை போயிட்டேன். அவரைப் பார்க்கவே முடியலை. வெளியூர் போயிட்டாராம்.
பழைய மானேஜர் சுபாவத்துல எப்படி?
ரொம்ப நல்லவர். அனுசரணையா பேசக் கூடியவர். நான் லீவு கேட்டாலோ, அட்வான்ஸ் கேட்டாலோ முகம் சுழிக்காதவர்.
வெளியூரிலிருந்து அவர் எப்போ வருவாராம்?
கேட்டால் தெரியாதுன்னு சொல்றாங்க.
மானேஜர் பேர் என்ன?
பரசுராம்.
அவரைப் பார்த்தால் காரியம் ஆகுமா?
அது பார்த்த பின்னாடிதானே தெரியும். அவர் தலைமை ஆபீசுக்குச் சிபாரிசு பண்ணினால் பணம் எனக்கு உடனடியா கிடைக்கும். நம்ம கெட்ட நேரத்துக்கு அவர் ஊர்ல இல்லை.
மானேஜர் பரசுராமுக்கு வீடு எங்கே?
தரமணி போற வழியில் 'சூர்யா நகர்'ன்னு ஒரு காவனி வரும். அங்கே மகள் வீட்டுல தங்கியிருக்கார். அடுத்த ரெண்டு வருடத்தில் ரிடையர் ஆனதும் கிராமத்துக்குப் போயிடப் போறதா சொல்லியிருக்கார்.
வீட்டுக்கு போன் இருக்கா?
இருக்கு.
பின்னே வீட்டுக்கு போன் பண்ணி அவர் பொண்ணுகிட்டே அப்பா எப்போ வருவார்ன்னு கேட்டுப் பார்க்கிறதுதானே?
போன் பண்ணினேன். ரிசீவரை யாரும் எடுக்கலை. போன் மணி அடிச்சுட்டேயிருந்தது... வீட்டுல யாரும் இல்லைன்னு நினைக்கிறேன்.
சரி, வளர்மதி. நான் ஒரு காரியம் பண்றேன்
என்ன?
இன்னிக்கு இராத்திரி நான் சேரன் எக்ஸ்பிரசில் கிளம்பி கோயமுத்தார் போறேன்.
போய்...?
அங்கே எனக்கு குமாரவேல்னு ஒரு நண்பன் இருக்கான். அவன் ஒரு மில் அதிபரோட பையன். அவனைப் போய் பார்த்து நிலைமையைச் சொல்லி பணம் வாங்கிட்டு வர்றேன்.
உங்கள் நண்பர் கொடுப்பாரா?
கடனாத்தானே கேட்கப் போறேன்.
எனக்கென்னவோ நம்பிக்கையில்லை. பணம் கேட்காத வரைக்கும்தான் நண்பர்கள். பணம் கேட்டுட்டா ரெண்டு பேருக்கும் மத்தியில் ஒரு அந்நியம் வந்துடும்...
"இந்த