Kanniley Neer Yetharku
By Rajesh Kumar
()
About this ebook
Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.
Read more from Rajesh Kumar
Puthiya Abaayam Rating: 4 out of 5 stars4/5Kuttralathil Oru Kutram Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Vivek Thotrathillai Rating: 5 out of 5 stars5/5Vivek, Vishnu, Oru Vidukadhai Rating: 4 out of 5 stars4/5Mathangalil Aval Margazhi Rating: 5 out of 5 stars5/5Manidhan Rating: 5 out of 5 stars5/5Theeratha Dhrogam Rating: 5 out of 5 stars5/5Sorgam Rating: 5 out of 5 stars5/5Naan Naaneythaan Rating: 4 out of 5 stars4/5Sivappai Oru Pournami Rating: 4 out of 5 stars4/5Mella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Sorry Wrong Number Rating: 4 out of 5 stars4/5Uyir Urugum Satham Rating: 5 out of 5 stars5/5Dinasari Moondru Kolaigal Rating: 4 out of 5 stars4/5Oru Kulir Kaala Kutram Rating: 5 out of 5 stars5/5Vivek, Roopala Thuppariyum Novelgal Thoguthi 1 Rating: 4 out of 5 stars4/5Uyir Meethu Thaagam Rating: 4 out of 5 stars4/5Shimla Ramya Rating: 5 out of 5 stars5/5Nalliravu Seithi Rating: 4 out of 5 stars4/5Only Vivek! Rating: 5 out of 5 stars5/5‘Sorry... Konnuttean..!’ Rating: 0 out of 5 stars0 ratingsThavarukkum Thavarana Thavaru! Rating: 5 out of 5 stars5/5Isai Kolai Rating: 5 out of 5 stars5/5Oomai Pullanguzhalgal Rating: 5 out of 5 stars5/5Antha 69 Naatkal! Rating: 5 out of 5 stars5/5Vendru Vaa Vivek Rating: 3 out of 5 stars3/5Mudhal Nimisham Rating: 2 out of 5 stars2/5Oru Everest Thavaru! Rating: 5 out of 5 stars5/5
Related to Kanniley Neer Yetharku
Related ebooks
Vilaikku Oru Vanavil Rating: 0 out of 5 stars0 ratingsHydrogen Pookkal Rating: 5 out of 5 stars5/5Meendum… Meendum… Rating: 5 out of 5 stars5/5Kuri Rating: 5 out of 5 stars5/5Agmark Drogam Rating: 4 out of 5 stars4/5Nizhalin Niram Sivappu Rating: 5 out of 5 stars5/5Pathinooravathu Avatharam Rating: 4 out of 5 stars4/5Abaya Noyali Rating: 3 out of 5 stars3/5Saadhal Samrajyam Rating: 4 out of 5 stars4/5Irakka Piranthaval Sindhu Rating: 4 out of 5 stars4/5Nenjellam Nerunji Mul Rating: 0 out of 5 stars0 ratingsMiss. Preethi, 545, Beach Road, Mumbai Rating: 0 out of 5 stars0 ratingsUlagai Vilai Kel Rating: 5 out of 5 stars5/5Santharpathai Payanpaduthi Kol Rating: 5 out of 5 stars5/5Namruthavin Naal Rating: 5 out of 5 stars5/5Vivekum 41 Nimishangalum Rating: 3 out of 5 stars3/5Thodarnthu Vaa Thottu Vidathea Rating: 4 out of 5 stars4/5Cynaide Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsOru Everest Thavaru! Rating: 5 out of 5 stars5/5Kadaisi Punnagai Rating: 5 out of 5 stars5/5Athikalai Nila Rating: 0 out of 5 stars0 ratingsNovember Rathirigal Rating: 5 out of 5 stars5/5Kurithuvaithu Kol! Rating: 5 out of 5 stars5/5Redrose Guest House Rating: 0 out of 5 stars0 ratingsIruttil Oru Vaanampaadi Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsRaajali Rating: 3 out of 5 stars3/5Kuttra Muthirai Rating: 5 out of 5 stars5/5Iruttile Rendu Per Rating: 4 out of 5 stars4/5Marupadiyum Oru Thadavai! Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Kanniley Neer Yetharku
0 ratings0 reviews
Book preview
Kanniley Neer Yetharku - Rajesh Kumar
http://www.pustaka.co.in
கண்ணிலே நீர் எதற்கு...
Kanniley Neer Yetharku…
Author:
ராஜேஷ் குமார்
Rajesh Kumar
For more books
http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
என்னுரை
'கண்ணிலே நீர் எதற்கு?’ முழுக்க முழுக்க ஒரு சமூகப் படைப்பு. பெண் என்றாலே அழப் பிறந்தவள் என்கிற சாபத்தை மாற்றும் முயற்சியாக இந்த தொடர் கதையின் கருவை அமைத்துக்கொண்டு எழுத ஆரம்பித்தேன். கதையின் நாயகி சுரபி கணவன் மூலமாக தனக்கு வரும் எல்லாப் பிரச்னைகளையும் ஒரு சொட்டுக் கண்ணீரைக்கூட வெளியே காட்டாமல் எப்படி தீர்த்துக் கொள்கிறாள் என்பதே இந்த கதை. இந்தக் கதையைப் படித்து முடித்ததும் ‘இப்படியும் ஒரு பெண் இருப்பாளா...? இருப்பது சாத்தியமா?’ என்று வாசகர்கள் பலர்க்கு முக்கியமாக வாசக சகோதரிகளுக்கு சந்தேகம் வரலாம் அப்படியொரு சந்தேகம் யார்க்கு வந்தாலும் உடனே அதை அழித்துவிடுங்கள். ஏனென்றால் சுரபி கற்பனை பாத்திரம் கிடையாது. நிஜ வாழ்க்கையில் இன்னமும் நடமாடிக் கொண்டிருக்கிற ஜீவன் சுரபிக்கு ஏற்பட்ட எல்லாப் பிரச்னைகளும் உண்மை. அந்தப் பிரச்னைகளை அவள் அழாமல் தீர்த்துக் கொண்டதும் உண்மை. ஆனால் இந்தக் கதையின் முடிவு மட்டும் என்னுடைய கற்பனை. கதைக்கு இப்படி ஒரு முடிவு கொடுத்தது எனக்குள் இருக்கும் ராஜேஷ்குமார் என்ற எழுத்தாளனுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. அந்த சந்தோஷத்தை வாசகர்களும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். சுரபியைப் போன்ற பெண்கள் இந்த சமூகத்தில் லட்சக்கணக்கில் இருக்கலாம். இந்தப் புத்தகத்தைப் படிக்கும் சகோதரிகளுக்கும் சுரபி எதிர்கொண்ட பிரச்னைகள் வரலாம். அவர்களையெல்லாம் நான் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்.
சுரபியைப் போல் வாழக் கற்றுக் கொள்ளுங்கள். தயவுசெய்து அழக் கற்றுக் கொள்ளாதீர்கள். பிரச்சனைகள் என்பது விடியற்காலை இருட்டைப் போன்றவை. துணிச்சல் என்கிற சூரியன் உதிக்கும்போது அந்த இருட்டு காணாமல் போய்விடும்.
‘கண்ணிலே நீர் எதற்கு...?’ தொடர்கதையை லேடீஸ் ஸ்பெஷல் இதழில் வெளியிட்ட பத்திரிகையின் ஆணையர் திருமதி. கிரிஜா ராகவன் அவர்களுக்கும், தொடர்கதைக்கான மதிப்புரையை உவகையோடு எழுதிக் கொடுத்த கோவை நிர்மலா கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் டாக்டர். சாந்தா பழனிசாமி அவர்களுக்கும் -
மீண்டும் அடுத்த படைப்பில் சந்திப்போம்.
வணக்கம்!
மிக்க அன்புடன்
ராஜேஷ்குமார்
*****
முனைவர் கி. சாந்தா பழனிசாமி, பி.எஸ்ஸி, எம்.ஏ.எம்ஃபில், பி.எச்.டி.,
தலைவர் & பேராசிரியர், தமிழ்த்துறை,
நிர்மலா மகளிர் கல்லூரி, கோவை-18
கண்ணிலே நீர் எதற்கு? காலமெல்லாம் அழுவதற்கு என்று ஒரு பாடலில் வரும். ஆனால் எழுத்தாளர் திரு. ராஜேஷ்குமார் அவர்கள் எழுதிய கண்களிலே நீர் எதற்கு? என்ற நாவல் பெண்கள் கண்ணீர் விடட்பிறந்தவர்கள் அல்ல, சாதிக்கப் பிறந்தவர்கள், பெண்களை மற்றவர்கள் வாதிப்பது கண்டு அவர்கள் எதற்காகக் காப்பாளர் விடவேண்டும்? 'பெண்ணே! நீ துன்பங்களைக் கண்டு துவண்டு விடாதே! எந்த சூழ்நிலையிலும் மனந்தளராமல் தன்னம்பிக்கையோடு துணிந்து நின்று போராடு’ என்று சிந்தனையைத் தூண்டும் நாவல் ஆணும், பெண்ணும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய மிகச் சிறந்த வாழ்வியல் நாவல் கண்ணிலே நீர் எதற்கு - என்னும் இந்நாவல்.
நாவலில், வேலைக்குப் போகும் ஒரு பெண் வாழ்க்கையில் சந்திக்கும் பலவகை பிரச்சினைகள், வீட்டிலும் அலுவலகத்திலும் அவள் சுமக்கும் வேலைப் பளு என, பொதி சுமக்கும் கழுதைகளாய்ப் பெண்கள் பாடுபடும் நிலை, எத்தனை பாடுபட்டாலும் வேலைக்காரியாய் நடத்தும் மாமியார், நாத்தனார்கள், பணம் சம்பாதிக்கும் இயந்திரமாய் நினனக்கும் கணவன், அவளுடைய உணர்வுகளை மதிக்காத மாமியார் வீட்டிலுள்ளவர்கள், பெற்றோர்களும் புரிந்துகொள்ளாமல் ஆதரிக்காத தன்மை, சமுதாயத்தில் ஒரு பெண் வெளியே வந்தால் சந்திக்கும் பிரச்சினைகள் இவையனைத்தையும் மிக நடப்பியலாக (எதார்த்தமாக) படம் பிடித்துக் காட்டியுள்ளார் நாவலாசிரியர்.
அன்பே வடிவான பெண் சுரபி, இரக்கம், பண்பு இவற்றோடு கடமை ஆற்றும் காரிகை, கல்யாணமான புதிதில் தன் கணவனின் சில தீயபழக்க வழக்கங்களைத் திருத்த இதமாய் சொல்லிப் பார்த்தாள். பான்பராக் போடறது'. சிகரெட் பிடிக்கறது, குளிக்காமலேயே இருக்கிறது இதெல்லாம் நல்லாயில்லை விட்டுடக்கூடாதா?
என்று, ஆனால் இந்த இரண்டும் இல்லாமே என்னால முடியாது. எனக்கு மூட் இருந்தா குளிப்பேன், மூட் இல்லேன்னா போய்ட்டேயிருப்பேன். நான் குளிக்கலைன்னா என் பக்கத்துல வந்து படுத்துக்க மாட்டியா – என்ன?
கணவனின் இந்த அதிரடிப் பேச்சினால் அடங்கிப்போனாள். அதற்குப்பிறகு வாயையே திறக்கவில்லை.
ஆணாதிக்கத்தின் பிரதிநிதியாகச் சித்தரிக்கப்பட்டுள்ள பாத்திரம் ஜெயராமன் படுக்கையை ஆக்கிரமித்து ஆக்டோபஸ் மாதிரி கைகாலினைப் பரப்பி வைத்து குறட்டை விட்டு அவன் உறங்கும் நிலையை அறிமுகப்படுத்தும் ஆசிரியர் முரட்டு சுபாவம், முன்கோபி, பான்பராக் சிகரெட் எழுந்ததும் வேண்டும், பல கெட்ட பழக்கங்கள் உள்ளவன், சுத்தம் இல்லாதவன், என்பதைத் தெளிவு படுத்துகிறார். இவர்கள் இருவருக்குமிடையே நடக்கும் போராட்டம் நாவலில் காட்டப்படுகின்றது.
கல்யாணமாகி இரண்டு வருடத்தில் கல்யாண நாளைக்கூட மறந்து விடுகிறான். மனைவியின் சின்னசின்ன அனாசகளைக்கூட நிறைவேற்றப் மறுக்கிறான். தான் விரும்பும்போதுதான் மனைவிக்குக் குழந்தை கொடுப்பேன் என்று, கருத்தடை மாத்திரைகளை வாங்கிக் கொடுக்கிறான். கரிசனம் இல்லாத ஜெயராமன்.
மாமியார் மரகதம், நோய் சொல்லாத நாளே சிடையாது. மகன் ஜெயராமனிடம் நோயாளி வேஷம் போட்டு நடித்து இரக்கம் சம்பாதிப்பதே அவள் வேலை. மகன் எந்தத் தவறு செய்தாலும் ‘காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது போல அவனுக்காகப் பரிந்து பேசி மருமகளைக் கடித்து கொள்வாள். அம்மா மகன் கூட்டாளியை யாராலும் உடைக்க முடியாது. என்கிறார் எழுத்தாளர்.
நாத்தனார் கோகிலா திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிவிட்ட போதிலும் அடிக்கடி அம்மா வீட்டில் வாசம் செய்கிறாள். அவள் கணவனுக்கு மருந்துக் சம்பெனி சேல்ஸ் எக்ஸிக்யூட்டிவ் உத்தியோகம். ஊமைக்கோட்டான் மாமியார்
அப்புறமென்ன அம்மா வீட்டில் மாதத்தில் பாதிநாள் டேரா. போட்டு அண்ணியை அம்மாவோடு சேர்ந்து அதிகாரம் செய்கிறாள்.
ரேவதி திருமணமாகாத இன்னொரு நாத்தனார். டி.வி. - யே கதி என்று கிடப்பாள். கால்வலியால் அவதிப்படும் தாயிடம் கூடப்பாசம் காட்டத் தெரியாத பேதைப்பெண். ஆனால் அண்ணியை அதிகாரம் செய்கிறாள் தாயைப் போலவே, இன்றைய இளம் பெண்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் ரேவதி.
சுரபியின் தந்தை திருவேங்கடம், மகள் மீது பாசம், மாப்பிள்ளை மீது நம்பிக்கை. மகளுக்கு அட்வைஸ் பண்ணி அட்ஜஸ்ட் பண்ணிப் போகச் சொல்லும் தந்தை. மாப்பிள்ளைக்கு வீட்டை அடமானம் வைத்து பணம் உதவ நினைப்பவர். சாஸ்திரத்தைப் பெரிதாக மதிப்பவர். தன் மூத்த மகள் கல்யாணி கலப்பு மணம் பண்ணிக்கொண்டதற்காக அன்றே அவளைத் தலைமுழுகி திவசம் பண்ணினவர். ரிட்டையர்ட் பள்ளிக்கூட வாத்தியார். நல்ல மனம் கொண்ட இவர் மத்தியஸ்தம் பண்ணி சமாதானம் பண்ணி வைக்கிறார். சுரபியின் டைவர்ஸ்க்கு ஆதரவு தராது தைரியம் சொல்லாது விரட்டி அடிக்கிறார். மனைவி செளந்தரம், எவ்வள்வோ எடுத்துச் சொல்லியும் கேட்காத கணவன், அவரை மீறி எதையும் செய்ய இயலாது அழுகின்றாள். பழமையான பெண்கள் மெளனமாக அடங்கி இருந்தால் எதையும் சாதிக்க முடியாது என்பதை செளந்திரம் பாத்திரம் வாயிலாகக் காட்டுகிறார்.
லாயர் கல்யாணி அன்வரைக் கலப்பு மணம் செய்து கொண்டு தந்தையின் வெறுப்புக்கு ஆளானவள். 'மென் சைக்காலஜி' தெரிந்தவள். மதம் வேறுபட்டாலும் மனங்கலந்து கணவனோடும் மகனோடும் மகிழ்ச்சியாக வாழத்தெரிந்த புதுமைப் பெண் ஒரு நல்ல வாழ்க்கைக்குத் தேவை ஜாதியோ, மதமோ கிடையாது ரெண்டு நல்ல மனசுதான் என்று சொல்லி வாழ்ந்து காட்டும் பாத்திரம் கல்யாணி.
கல்யாணியும், அன்வரும் சேர்ந்து தங்களிடம் வந்த சுரபிக்கு அடவர்ஸ் செய்யாமலே பிரச்சினைகளைத் தீர்க்க வழிகாட்டுகின்றனர். அப்படி சுரபிக்கு அறிமுகப்படுத்தியதுதான் 'மனசு’ என்னும் வாரப்பத்திரிக்கை பெண்களாலேயே பெண்களுக்காக நடத்தப்படுகிற மனசு பத்திரிக்கைக்கு வியாபார நோக்கம் கிடையாது. கதைகளில்லாது தன்னம்பிக்கை கட்டுரைகள் கொண்டது. பெண்களோட பிரச்சினைகள் அதைத் தீர்க்கும் வழிகள் பக்கத்துக்குப் பக்கம் இடம் பெற்றிருக்கும். அந்தப் பத்திரிக்கையை நடத்தும் மங்கையர்க்கரசி அம்மையார் பொது நலச் சேவை செய்யும் பெண்களுக்கு, முன்மாதிரி பாத்திரம். மனசு பெண்கள் இயக்கம் நடத்திச் செல்லும் தலைமைத் தன்மை, உண்மையாகவே பெண்கள் நலனில் ஈடுபாடு கொண்டு, உதவும் கரங்களாகவே மாறித்தன் கையையே தியாகம் செய்த பண்பு, இவையனைத்தும் கொண்ட மங்கையர்க்கரசி அம்மையார் வாயிலாக பொது நலச் சேவை செய்யும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறார்.
இன்றைய காலகட்டத்தில் படித்த பெண்கள், படிக்காத பெண்கள், ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடின்றி டைவோர்ஸ் கேட்டு கோர்ட்டுக்குப் போவது சகஜமாகி விட்டது. இதைப்பற்றி எழுத்தாளர் டைவர்ஸ் கேட்டு கோர்ட்டுக்குப்போறது ரொம்பவும் சுலபம், ரெண்டு பக்க பேப்பர் போதும், அதுக்குப் பின்னாடி நிகழ்கிற ஒவ்வொரு சம்பவத்தையும் ஃபேஸ் பண்றதுலதான் கஷ்டங்கள் இருக்கு, ஒரு பெண் கல்யாணத்தைப் பண்ணிக்கிறது டைவோர்ஸ் கேட்டு கோர்ட்டுக்குப் போறதுக்காக இல்லை. போராடி வாழ்க்கையை மீட் பண்றதுக்காகத்தான், உலகத்துல தொண்ணாறு சதவீத தம்பதிகள் சந்தோஷமாகவே இல்லை. பாக்கி பத்து சதவீதம் பேர் சந்தோசமா இருக்கிற மாதிரி நடிச்சுக்கிட்டிருக்கறாங்க.
என்கிறார். நாவலாசிரியர், பெண் சமுதாய நலனில் கொண்ட அக்கறை, பெண்கள் இயக்கம் எப்படி செயல்பட வேண்டும் என்ற கருத்துக்களை எடுத்துக் காட்டுகிறார்.
மனசு இயக்கம் பொன் மொழிகள் என்று குறிக்கப்படும்
பெண்ணே!
புலியை முடித்தால் துரத்தியடித்த சரித்திர சம்பவம் உனக்குப்
பின்னால் இருக்கும்போது
பூனை மனம் உனக்கு எதற்கு...?
உமிழ்நீரும் பயன்படும் உண்ட உணவு செரிப்பதற்கு!
இந்தக் கண்ணீரால் என்ன பயன்?
பெண்ணே!
உன் கண்ணில் நீர் எதற்கு?
மக்கள் தொகையில் சாதனை படைத்தோம்
பெண்ணின் வாழ்க்கையில் மட்டும் சோதனை ஏன்?
பெண்ணே ஏவுகணை போல் வானை நோக்கிப் புறப்பட்டால்
மேகம் ஒரு தடையா உனக்கு?
அந்த நிலவும் உன் கையில்!
இந்த வரிகள் சுரபி போன்ற பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் தன்னம்பிக்கை