Manjal Diary
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsThirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsNanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsSivappu November Rating: 0 out of 5 stars0 ratings100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsVivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsMaranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsEngum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Sivappu Vatathukkul Sinthuja Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5
Related to Manjal Diary
Related ebooks
Thedungal Kidaikkathu and Indiya Nadu En Vedu-II Rating: 0 out of 5 stars0 ratingsThalai Illaatha Silai Rating: 5 out of 5 stars5/5Nagaratha Nizhal Ondru! Rating: 0 out of 5 stars0 ratingsAthe Nila Athe Kala Rating: 0 out of 5 stars0 ratingsSatthamillatha Samuthiram and Soorya Thagam Rating: 0 out of 5 stars0 ratingsPagai Enakku Pagai Rating: 0 out of 5 stars0 ratingsKovaiyil Oru Kutram Rating: 5 out of 5 stars5/5Pathinooravathu Avatharam Rating: 4 out of 5 stars4/5Nagaratha Nizhal Ondru! Rating: 0 out of 5 stars0 ratingsThee... Deepa... Deepavali Rating: 5 out of 5 stars5/5Piragu Naan Kondren Rating: 5 out of 5 stars5/5Ippadikku Oru Indian Rating: 0 out of 5 stars0 ratingsSaiva Kokkugal Rating: 5 out of 5 stars5/5Sinnaj Siru Kiliye Rating: 0 out of 5 stars0 ratingsAayul Aare Naal Rating: 5 out of 5 stars5/5Kolai Vallal Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Hospital, Marupadiyum Iranthavan and Oru latsam Vinaadikal Rating: 2 out of 5 stars2/5Avenue Marangal Rating: 5 out of 5 stars5/5Thavanai Murayil Maranam Rating: 0 out of 5 stars0 ratingsPoruthathu Pothum Vivek! Rating: 5 out of 5 stars5/5Enna Satham Indha Neram? Rating: 4 out of 5 stars4/5Lekha! En Lekha! Rating: 3 out of 5 stars3/5Kurithuvaithu Kol! Rating: 5 out of 5 stars5/5March - 6, Raththa Aaru Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Monalisa (Punnagai) Azhugai Rating: 0 out of 5 stars0 ratingsTheeratha Dhrogam Rating: 5 out of 5 stars5/5Nimishathukku Nimisham Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Neruppu! Rating: 3 out of 5 stars3/5
Related categories
Reviews for Manjal Diary
0 ratings0 reviews
Book preview
Manjal Diary - Rajeshkumar
18
பூமிக்கு துணைக்கோள்
ஒன்று
மட்டுமே!
1
புதுடெல்லி. செமர்த்தியாய்பனி பெய்து கொண்டிருந்த விடியற்காலை. நேரம் 5.45. உதிக்கப் போகும் சூரியனுக்காக கிழக்கு திசைமட்டும் சாயம் போயிருக்க வானத்தின் மற்ற திசைகளில் நட்சத்திரங்கள் இன்னமும் கண்ணடித்துக் கொண்டிருந்தன.
சப்தர்ஜங் சாலையில் நிஜாமுடீன் ரயில்வே ஸ்டேஷனை நோக்கி அந்த டாக்ஸி வேகமாய் ஓடிக்கொண்டிருக்க - டாக்ஸியின் பின்சீட்டில் ரிஷியும் ரேணுகாவும் நிலை கொள்ளாமல் உட்கார்ந்திருந்தனர்.
ரிஷி? இருபத்தேழு வயது. படிப்பு எம்.ஏ ஜர்னலிஸம். எம்.ஏ. எக்னாமிக்ஸ். எம்.பில். நல்ல அரசு வேலை கிடைத்தும் அதை உதறிவிட்டு வங்கியில் கடன் வாங்கி ‘பாற்கடல்’ என்ற பத்திரிகையை ஆரம்பித்து இலக்கிய தாகத்தோடு நடத்திக் கொண்டிருப்பவன். ‘பாற்கடல்’ சொற்ப பிரதிகளே விற்று கையைக் கடித்துக் கொண்டிருந்தாலும் அதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாதவன். காரணம் அவன் பிறந்த ஊரான திருப்புறம்பியத்தில் அவனுடைய அப்பாவும் தாத்தாவும் சம்பாதித்து வைத்து விட்டுப் போன ஏராளமான சொத்துக்கள்தான்! ‘பாற்கடல்’ என்றைக்காவது தமிழ்நாட்டில் ஆறு லட்சம் பிரதிகள் விற்கும் என்று கண்களைத் திறந்தபடியே கனவு கண்டு கொண்டிருப்பவன். டெல்லியில் கடந்த மூன்று நாட்களாய் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருப்பவன்.
இனி ரேணுகா...! ரேணுகாவுக்கு 23 வயது. படிப்பு பி.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ். ‘பாற்கடல்’ பத்திரிகைக்கு துணையாசிரியை. வேலைக்குச் சேர்ந்த புதிதில் ‘பாற்கட’லைக் காதலித்தவள்- இப்போது கடந்த ஆறு மாத காலமாய் ரிஷியையே காதலிக்க ஆரம்பித்து இருப்பவள். ரிஷி அவளுக்கு சம்பளம் கொடுக்கும் ‘Boss’ ஆக இருந்தாலும் ஒருமையில்தான் பேசுவாள். அப்படித்தான் பேச வேண்டும் என்பது ரிஷியின் கட்டளையும் கூட.
டாக்ஸி லஜ்பத் நகரைத் தாண்டிக் கொண்டிருக்க, ரேணுகா தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ரிஷியின் தோளை தன் ஆள்காட்டி விரலால் சுரண்டினாள்.
ரிஷி...!
ம்...
ட்ரெயினை பிடிக்க முடியுமா...?
பிடிச்சுடலாம்...
எனக்கு நம்பிக்கையில்லை. டயத்தைப் பார்த்தியா...? 5.45. இன்னும் பத்து நிமிஷம்தான் இருக்கு. 5.55க்கெல்லாம் ஜெயந்தி ஜனதா கிளம்பிடும். சே! நாலு மணிக்கு அலாரம் வெச்சேன். உன்னை எழுப்பி உட்கார வைக்கவே ஒரு மணி நேரமாயிடுச்சு. நீ மட்டும் கொஞ்சம் சீக்கிரமா எந்திரிச்சிருந்தியன்னா இப்படி டென்ஷன்பட வேண்டியது இல்லை.
ஸாரி ரேணு...! விடியற்காலைத் தூக்கம் எனக்கு பாதாம் அல்வா மாதிரி...!
ரிஷி...! உன்கிட்டே நிறைய ப்ளஸ் பாயிண்ட்கள் இருக்கு. எழுத்துத் திறமை, பேச்சுத் திறமை, பத்திரிகைத் துறையில் பெரியதாய் சாதனை புரியணும்கிற தாகம், ஒரே அறையில் நாம ரெண்டு பேரும் தங்கியிருந்தாலும் நீ என்கிட்டே காட்ற கண்ணியம்- எல்லாமே டபுள் ஓ.கே. பட்... இந்த தூக்கம்தான் உனக்கு ஒரு பெரிய மைனஸ் பாயிண்ட். 5.55க்கு ட்ரெயின் புறப்பட்டுடும்னு தெரிஞ்சும் அஞ்சே கால் வரைக்கும் இழுத்து போர்த்திட்டு தூங்கினா என்ன அர்த்தம்...? இந்த ட்ரெயினை நாம மிஸ் பண்ணினால் ஒரு வாரத்துக்கு எந்த ட்ரெயினிலும் ஏற முடியாது. சென்னை போகிற எல்லா ட்ரெயினும் ஃபுல். அப்புறம் ஏதாவது ஒரு சர்தார்ஜியோட லாரி புடிச்சுத்தான் சென்னை போய்ச் சேரணும்...
ரேணு...! புலம்பாம வா... எப்படியும் ஜெயந்தி ஜனதாவை 5.55க்குள்ளே போய் புடிச்சுடலாம்...
இந்த டாக்ஸிக்கு இறக்கை முளைச்சாத்தான் அது சாத்தியம்...!
அந்த சீக்கிய டிரைவர் காரை ஃபிப்த் கியர்க்கு மாற்றிக் கொண்டே திரும்பிப் பார்த்து சிரித்தான்.
காப்ரா நை மேடம். மெட்ராஸ் காடி ஜரூர் மிலேகா...!
ரேணு ரிஷியைப் பார்த்தாள்.
டிரைவர் என்ன சொல்றார்...?
‘பயப்படாதீங்க... மெட்ராஸ் போற ட்ரெயின் கண்டிப்பா கிடைக்கும்’னு சொல்றார்...
டிரைவர்! உனக்கு தமிழ் தெரியுமா...?
கெஞ்சம்... கெஞ்சம்... தொரியும்...
டாக்ஸி ‘மஹாராணி பாக்’கைக் கடந்தது. ரேணுகா தன் மணிக்கட்டில் இருந்த சிட்டிஸன் டிஜிடல் வாட்சைப் பார்த்தாள். நேரம் 5.49.
ரிஷி... இன்னும் ஆறு நிமிஷம்தான் இருக்கு...
கவலைப்படாதே...! ட்ரெயின் நமக்காக காத்துகிட்டு இருக்கும்...
ரேணுகா, ரிஷியை வியப்போடு பார்த்தாள்.
என்னது...! ட்ரெயின் நமக்காக காத்துகிட்டு இருக்குமா? எப்படி...?
எல்லாம் ஒரு ஜோஸியம்தான்...
உன்னோட ஜோஸியம் பொய்யாயிட்டா...?
உன்னை சென்னைக்கு ஃப்ளைட்ல கூட்டிட்டுப் போறேன். போதுமா...?
ப்ராமிஸ்...?
ப்ராமிஸ்...
டாக்ஸி- போக்குவரத்தற்ற சோடியம் வேப்பர் விளக்குகளின் வெளிச்சத்தில் மெழுகப்பட்டிருந்த ரோடுகளில் உண்மையிலேயே பறக்க, சரியாய் 5.55க்கு நிஜாமுடீன் ரயில்வே ஸ்டேஷன் வந்தது. ஸ்டேஷனுக்கு முன்னால் ஏகப்பட்ட டாக்ஸிகள், ரிக்ஷாக்கள், வாடகை பைக்குகள் இறைக்கப்பட்ட தினுசில் நின்றிருந்தன.
‘கடவுளே! ட்ரெயின் புறப்பட்டுப் போகாமல் இருக்க வேண்டுமே...!’
ரேணுகா சூட்கேஸை எடுத்துக் கொண்டு டாக்ஸியினின்றும் இறங்க, ரிஷி டிரைவரின் கையில் இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களை திணித்தான். சொன்னான். உனக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தொரியும்ங்கிற காரணத்துக்காகவே எனக்கு பாக்கி சில்லறை வேண்டாம்... நீயே வெச்சுக்க...
சுக்ரியா ஸாப்...
ரிஷியும், ரேணுகாவும் கைகளில் சூட்கேஸ்களோடு ஸ்டேஷன் படிக்கட்டுகளில் ஏறினார்கள். எதிரே ஒரு போர்ட்டர் இறங்கிக் கொண்டிருக்க, ரிஷி அவனிடம் ஹிந்தியில் கேட்டான்.
ஜெயந்தி ஜனதா இன்னும் புறப்படலையே...?
வண்டி புறப்பட்டுப் போய் விட்டது...
போர்ட்டர் சொல்லிக் கொண்டே கீழே இறங்க, படிகளில் ஏறிக் கொண்டிருந்த ரேணுகா அப்படியே நின்று கையில் வைத்து இருந்த சூட்கேஸை கோபத்தோடு ‘டொம்’ என்று வைத்தாள்.
ரிஷி...! உன்னோட ஜோஸ்யம் பொய்யாயிடுச்சு... இப்படியே ஏர்போர்ட் போயிடலாமா...?
"ஒரு நிமிஷம் ரேணு...! டெல்லியிலிருந்து ஏகப்பட்ட ஜெயந்தி ஜனதாக்கள் வெவ்வேறு ஊர்களுக்கு புறப்பட்டுப் போகும். நம்ம சென்னை ஜெயந்தி ஜனதா புறப்பட்டுப் போயாச்சான்னு கேட்டு