Satthamillatha Samuthiram and Soorya Thagam
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsThirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsNanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsSivappu November Rating: 0 out of 5 stars0 ratings100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsVivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsMaranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsEngum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Sivappu Vatathukkul Sinthuja Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5
Related to Satthamillatha Samuthiram and Soorya Thagam
Related ebooks
Thinam Thinam Thigil Thigil Rating: 0 out of 5 stars0 ratingsSaththamillatha Nayaakara Rating: 0 out of 5 stars0 ratingsParappatharku Oru Vanam Vendum Rating: 4 out of 5 stars4/5Aayul Aare Naal Rating: 5 out of 5 stars5/5Unakke Uyiraanen Rating: 0 out of 5 stars0 ratingsNeethana Nejamthana Rating: 0 out of 5 stars0 ratingsMiss Preethi 545 Beach Road Mumbai Rating: 0 out of 5 stars0 ratingsUdaintha Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsThooratthu Ponman Rating: 0 out of 5 stars0 ratingsOotha Nira Devathai Rating: 5 out of 5 stars5/5Ratthathil Oru Kelvikuri! Rating: 4 out of 5 stars4/5Mugamatra Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsPanivanbudan kettu Kolgiren Rating: 5 out of 5 stars5/5Puthiya Thisaigal Rating: 0 out of 5 stars0 ratingsTheepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsOru Ponmaanai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsNalliravu Seithi and Kannilladikuthu Minnal Rating: 0 out of 5 stars0 ratingsKeezhe Vizhatha Nizhal Rating: 5 out of 5 stars5/5Piragu Naan Kondren Rating: 5 out of 5 stars5/5Puthiya Thisaigal Rating: 5 out of 5 stars5/5Arai Vinaadi Aniyaayam Rating: 0 out of 5 stars0 ratingsThendral Varum Jannal Rating: 0 out of 5 stars0 ratingsPuthaithu Vaitha Nila Rating: 0 out of 5 stars0 ratingsSathamillamal Oru Satham Rating: 0 out of 5 stars0 ratingsThazhambu Naagangal! and Irandavathu Mugam Rating: 0 out of 5 stars0 ratingsAthe Nila Athe Kala Rating: 0 out of 5 stars0 ratingsKannellam Unnodudhaan Rating: 2 out of 5 stars2/5Magaa Sathi Rating: 0 out of 5 stars0 ratingsObjection Your Aanar Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi Ethiri Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Satthamillatha Samuthiram and Soorya Thagam
0 ratings0 reviews
Book preview
Satthamillatha Samuthiram and Soorya Thagam - Rajeshkumar
எடுக்கப்படும்.
சத்தமில்லாத சமுத்திரம்
சத்தம் - 1
கல்யாணமான புதிதில் புது மனைவியின் இருமல் சத்தம்கூட கணவனுக்கு இனிமையாக இருக்கும்.
"மிஸ் தாமரை...!"
அடல்ட்ரேஷனைப் பற்றிக் காரமான வார்த்தைகளால் - வெள்ளைத் தாளைக் கறுப்பாக மாற்றிக் கொண்டிருந்த அந்த அழகான தாமரை நிமிர்ந்தாள். சப் - எடிட்டர் கதிர்வேலன் அழகான செக்கச்செவேலென்று சிவந்த தாம்பூல வாயோடு நின்றிருந்தார்.
என்ன ஸார்...?
எடிட்டர் உங்களைக் கூப்பிட்டார்.
தாமரை பேனாவை மூடி - கையில் எடுத்துக் கொண்டு எடிட்டரின் அறையை நோக்கிப் போனாள். கண்ணாடிக் கதவை நெருங்கிய போது - உள்ளே எடிட்டர் தேவகாந்தன் ரிவால்விங் நாற்காலியில் அரைவட்டம் அடித்துக் கொண்டே டெலிஃபோனில் யாரோடோ பேசிக் கொண்டிருந்தார். கதவுக்கு வெளியே நிற்கும் தாமரையைப் பார்வையில் வாங்கியதும் - தலைக்கு மேலே இடதுகையை உயர்த்தி உள்ளே வரச் சொன்னார்.
தாமரை கண்ணாடிக் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போக - தேவகாந்தன் டெலிஃபோன் எதிர்முனையில் இருந்தவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
இதோ பாருங்க ராஜரிஷி! நீங்க என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ... எனக்குத் தெரியாது... அடுத்த இஷ்யூவில அனெளன்ஸ்மெண்ட் வெச்சுப்பேன். தலைப்பு கூட நான் செலக்ட் பண்ணிட்டேன்... சரித்திரக் கதை எழுதியே ஆகணும்...
......
தலைப்பா...? கடல் நாகம்...
.....
இந்தத் தலைப்பு வேண்டாமா? அப்ப நீங்களே ஒரு தலைப்பு சொல்லுங்க...
......
ரெண்டு நாள் கழிச்சு நீங்களே ஃபோன் பண்ணி தலைப்பைச் சொல்றீங்களா...? அப்படி வாங்க வழிக்கு...! இன்னிக்கு புதன்கிழமை. வெள்ளிக்கிழமை காலை பதினோரு மணிக்கு உங்க ஃபோனை எதிர்பார்ப்பேன். ஃபோன் வரலை...? கடல் நாகம் அனெளன்ஸ்மெண்ட் வெச்சுப்பேன்... அப்புறம் அந்த தலைப்புக்கு நீங்க எழுதியே ஆகணும். உங்களுக்கென்ன ஸார்... 'மண்ணாங்கட்டி'ன்னு ஒரு தலைப்பு குடுத்தாக்கூட அதுக்கு தகுந்த மாதிரி அமர்க்களமா எழுதிடுவீங்க...! அப்போ வெள்ளிக்கிழமை உங்க ஃபோனை நான் எதிர்பார்க்கிறேன்.
தேவகாந்தன் ரிஸீவரை வைத்துவிட்டு - தாமரையைப் புன்னகையோடு ஏறிட்டார். ரைட்டர் ராஜரிஷி. இந்த தீபாவளிக்கு அவரோட தொடர்கதை தான்...! நீ உட்கார்ம்மா...
தாமரை - அவர்க்கு எதிரே இருந்த வினைல் நாற்காலியில் உட்கார்ந்தாள். அவர் பேப்பர் வெயிட்டை உள்ளங்கையில் அதக்கிக் கொண்டு பேச ஆரம்பித்தார். வர்ற பதினாலாந்தேதி டெல்லியில் 'ப்ரஸ் ரிப்போர்ட்டர்ஸ் மீட்' ஒண்ணு நடக்கப் போறதா நான் ஏற்கனவே உன்கிட்டே சொல்லியிருக்கேன்...
ஆமா ஸார்...
இந்தியாவில் இருக்கிற எல்லா பத்திரிகைகளும்... ஒவ்வொரு ரிப்போர்ட்டரை அந்த பத்திரிகை சார்பா 'பிரஸ் மீட்'டுக்கு அனுப்பி வைக்கணும்ங்கிறது ஒரு கட்டாயம்... நம்ம பத்திரிகை சார்பா யாரை அனுப்பலாம்...?
இருக்கிற ரிப்போர்ட்டர்களில் சீனியர் கோபால கிருஷ்ணன்தான். அவரையே அனுப்பிடலாம் ஸார்...
கேட்டுப் பார்த்தேன்மா... அவர்க்கு சைனஸ் ட்ரபுளாம்... டெல்லி குளிர் ஒத்துக்காதாம்...
அப்படீன்னா சேகர் கிருஷ்ணாவை அனுப்பலாம் ஸார்.
அனுப்பலாம். ஆனா... அவனுக்கு இங்கிலீஷ் நாலட்ஜ் புவர்... நீளமான ஒரு ஸென்டன்ஸ் பேச அவனால முடியாது... அவன் மெட்ராஸ்ல இருக்கிற நடிகைகள்கிட்டேயும், அரசியல்வாதிகள்கிட்டேயும்... பேட்டி எடுக்கத்தான் லாயக்கு...
தாமரை மௌனமாய் தேவகாந்தனையே பார்க்க - அவர் சிரிப்போடு சொன்னார். டெல்லியில் நடக்கப் போகிற 'ப்ரஸ் ரிப்போர்ட்டர்ஸ் மீட்'டுக்கு நம்ம பத்திரிகை சார்பா... கலந்துக்கப் போறது நீதாம்மா...
ஸ... ஸார்.!!
ஏராளமாய் ஆச்சர்யித்தபடி - நாற்காலியினின்றும் எழ முயன்ற - தாமரையைக் கையமர்த்தினார்.
உட்கார்ம்மா...! நேத்து சாயந்தரமே நான் முடிவு பண்ணிட்டேன். ஃபிளைட் டிக்கெட்டும் எடுத்தாச்சு... பனிரெண்டாம் தேதி மத்தியானம் ரெண்டரை மணிக்கு ஃபிளைட்...
ஸார்...!
டெல்லியில் பத்து நாள் தங்கப் போறே...
ஸார்... வீட்ல பர்மிஷன்...?
அப்பாகிட்டதானே கேட்கணும்...? கேட்டுட்டேன். உங்கப்பாவும் ஓ.கே சொல்லியாச்சு...
ஸார்...!
சொல்லும்மா...
நான் இதுவரைக்கும் டெல்லிக்குப் போனதில்லை...
இப்ப போ...
புது இடம்...
பழகிக்க... ஃபர்ஸ்ட் டேதான்... உனக்கு... புது ஊரு. ரெண்டாவது நாள் பழைய ஊர்ன்னு இங்கிலீஷ்ல ஒரு பழமொழி இருக்கு தெரியுமா...?
ஸார்...
என்னம்மா... ஏன் தயங்கறே...?
நான் இந்த 'ப்ரஸ் மீட்'டுக்கு போறதினாலே... நம்ம ஆபீஸ்ல இருக்கிற சீனியர் ரிப்போர்ட்டர்ஸுக்கு எம்மேல கோபம் வராதே ஸார்...?
யார்க்கும் எந்தக் கோபமும் வராது. ஏன்னா... அவங்கவங்க தகுதியைப் பத்தி அவங்களுக்கே தெரியும். அந்த 'ப்ரஸ் ரிப்போர்ட்டர்ஸ் மீட்'ல கலந்து கொள்ளக் கூடிய தகுதி உனக்கு மட்டுந்தான் இருக்குன்னு நான் நினைக்கிறேன். இந்தா! ஃபிளைட் டிக்கெட். ஹோட்டல் 'ஜன் பாத்'ல உனக்கு ரூம் ரிசர்வ் பண்ணியிருக்கு. டெல்லியில் உனக்கோ உங்கப்பாவுக்கோ தெரிஞ்சவங்க யாரவது இருக்காங்களா...?
தாமரைக்கு சட்டென்று ரோகிணியின் ஞாபகம் வந்தது. அவளோடு எம்.ஏ. ஜர்னலிஸம் படித்தவள்.
என்கூட படிச்ச பொண்ணு ஒருத்தி இருக்கா ஸார்...
ஈஸிட்...? டெல்லியில் எங்கிருக்கா...?
சாணக்யபுரிங்கிற இடத்துல...
சரியான விலாசம் தெரியுமா?
தெரியும் ஸார்...
"கடிதப் போக்குவரத்து உண்டா...?
உண்டு ஸார்... போன வருஷந்தான் அவளுக்கு இங்கே கல்யாணம் நடந்தது. அவளோட கணவர்க்கு பம்பாய்ல ஏதோ வேலை. ஒரு ஆறு மாசம் அங்கே இருந்துட்டு... டெல்லிக்குப் போயிட்டாங்க...
அவர்க்கு என்ன வேலை...?
ஒரு பெரிய கம்பெனிக்கு கன்சல்டன்ட் என்ஜினியரா 'ஒர்க்' பண்ணிட்டிருந்ததா... ரோகிணி சொல்லியிருக்கா...
டெலிஃபோன் இருக்கா...?
இருக்கும். ஆனா... நம்பர் தெரியாது...
நீ டெல்லிக்குப் போனா... சந்தோஷமா உன்னை ரிஸீவ் பண்ணுவாளா?
நான் டெல்லிக்கு வர்றேன்னு தெரிஞ்சாலே பூரிச்சுப் போயிடுவா ஸார்.
அப்படீன்னா... உன்னோட டெல்லி வருகையைப் பத்தி... அந்த ரோகிணிக்கு லெட்டர் எழுதிப் போடேன்.
இன்னிக்கே போட்டுடறேன் ஸார்...
இன்னிக்கே என்ன...? இப்பவே... இந்த நிமிஷமே... என்ன வேலையிருந்தாலும் ஒதுக்கி வெச்சுட்டு லெட்டர் எழுது... இந்த தேதியில்... இந்த ஃபிளைட்டில் வர்றேன்னு விளக்கமா எழுதிடு... அந்தப் பொண்ணு ஏர்போர்ட்டுக்கு வந்து உன்னைப் பிக்கப் பண்ணிக்கட்டும்.
சரி ஸார்.
தாமரை அறையை விட்டு வெளியே வந்து - தன் மேஜைக்குத் திரும்பியதும் உடனடியாய்க் கடிதம் எழுத ஆரம்பித்தாள்.
தாமரை எழுதிய கடிதத்துக்கு - பனிரெண்டாம் தேதி காலை வரைக்கும் ரோகிணியிடமிருந்து பதிலே வரவில்லை. எடிட்டர் தேவகாந்தன் கிண்டலாய்க் கேட்டார்.
என்னம்மா தாமரை! நீ டெல்லிக்கு வர்றது தெரிஞ்சா உன்னோட தோழி ரோகிணி பூரிச்சுப் போயிடுவாள்னு சொன்னே...? அவகிட்டயிருந்து ஒரு போஸ்ட் கார்டுகூட வரலையே...?
லெட்டர், போய் சேர்ந்ததோ இல்லையோ...?
அதெப்படிம்மா போய்ச் சேராமே இருக்கு...? லெட்டர் போய்ச் சேரலைன்னா... உனக்கே திரும்பி வந்திருக்கணுமே... ஊ...ஹூம்... உன்னோட தோழி சரியில்லை. அவ உன்னை அவாய்ட் பண்ண பார்க்கிறா... என்னிக்காவது அவளை நீ சந்திக்கும்போது நான் போட்ட லெட்டர் கிடைச்சுதான்னு கேட்டுப்பாரு... இல்லவே இல்லைன்னு சத்தியம் பண்ணி கண்ணுல நீலிக்கண்ணீரைக் காட்டப் போறா...
மேஜை மேலிருந்த டெலிஃபோன் கூப்பிட்டது. எடிட்டர் ரிசீவரை எடுத்து செவிமடுத்துவிட்டு - தாமரையிடம் நீட்டினார். ஃபோன் உனக்குதாம்மா... உன் லோக்கல் ஃப்ரண்ட் பார்கவி பேசறா...
தாமரை ரிஸீவரை வாங்கி, "ஹலோ' என்றாள்.
என்ன தாமரை...! ரோகிணிகிட்டயிருந்து லெட்டர் வந்ததா?
வரலை...
கடன்காரி...! பெரிய மகாராணிங்கிற நினைப்பு அவளுக்கு. அவ புருஷன் அழகன். பெரிய வேலை. கார் பங்களான்னு ஏகப்பட்ட வசதி... உன் லெட்டரை அவ பிரிச்சுக்கூட பார்த்திருக்க மாட்டா... ஃப்ரம் அட்ரஸைப் பார்த்துட்டு அப்படியே ரெண்டாக் கிழிச்சு... குப்பைக் கூடையில் போட்டிருப்பா...
போன மூணு மாசத்துக்கு முன்னாடிகூட எனக்கு அவ லெட்டர் போட்டிருந்தாளே...?
இந்த மூணு மாசத்துல அவளோட கெளரவம், அந்தஸ்து இன்னமும் கொஞ்சம் அதிகமாயிருக்குமே...?
ரோகிணி இப்படி அலட்சியப்படுத்துவாள்ன்னு நான் கொஞ்சம்கூட நினைச்சே பார்க்கலை...
சரி அந்தக் பாவியை நினைச்சு உன்னோட டெல்லி ட்ரிப்பை பாழ் பண்ணிக்காதே... நல்லா என்ஜாய் பண்ணிட்டு வா, டெல்லியில் இருக்கிற பத்து நாளும் தப்பித் தவறிக்கூட அவ வீட்டுப் பக்கம் போயிடாதே...
ம்...ம். எனக்கு மட்டும் ரோஷமில்லையா என்ன...?
எத்தனை மணிக்கு ஏர்போர்ட் போறே...?
இன்னும் அரைமணி நேரத்துல ஆபீஸை வீட்டுக் கிளம்பி வீட்டுக்குப் போனதும் புறப்பட வேண்டியதுதான்...
சரி... நான் ஒரு மணிக்கு ஏர்போர்ட் வந்துடறேன்.
பார்கவி ரிஸீவரை வைத்துவிட - தாமரையும் ரிஸீவரை வைத்துவிட்டு எடிட்டரை ஏறிட்டாள், அவர் சொன்னார்:
தைரியமாப் போயிட்டு வாம்மா... ஏர்போர்ட்டிலிருந்து 'ஜன்பாத்' ஹோட்டலுக்கு பதினஞ்சு நிமிஷ பிரயாணம்தான். டீஸண்டான ஹோட்டல். நம்ம தமிழ் நாட்டு பத்திரிக்கை நிருபர்களின் பாதிப்பேர்... அந்த ஹோட்டல்லதான் தங்கப் போறாங்க... சாவி பத்திரிகையிலிருந்து ராணி மைந்தன் போறதாக கேள்விப்பட்டேன். அவரைப் பிடிச்சுக்க, டெல்லி ரெண்டே நாள்ல மெட்ராஸ் மாதிரி பழகிடும்...
தாமரை தலையாட்டினாள்.
டில்லி, பாலம் ஏர்போர்ட்.
விமானம் தரை தொட்டபோது - மாலை ஆறுமணி, டில்லியில் எல்லா திசைகளிலும் சாம்பிராணிப் புகை போட்ட மாதிரி பனி அலைந்து கொண்டிருந்தது. தாமரை ஸ்டேர்ஸில் இறங்கி - லௌன்ஞ்சை நோக்கி நடந்தாள். முதல் விமானப் பயணம் வயிற்றை லேசாய்ப் புரட்டிக் கொண்டிருந்தது. லக்கேஜ் பிரிவுக்குப் போய் தன்னுடைய சூட்கேஸைச் சேகரித்துக் கொண்டு - எக்ஸிட் குறிவைத்து நடந்து - ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தாள்.
டெல்லி அதிகமாய்க் குளிரியது. 'இந்த அநியாயக் குளிரில் பத்து நாட்களை எப்படி ஓட்டப் போகிறேன்?' - பயமாய் யோசித்துக் கொண்டே டாக்ஸி வரிசையை நோக்கிப் போனாள். சர்தார்ஜி டிரைவர் ஒருவர் எதிர் கொண்டார்.
கிதர் ஜானே படேகா...?
ஹோட்டல் ஜன்பாத்...
ஃபிஃபடி ருபீஸ்
ஒத்துக் கொண்டு போய்விடலாமா...?' - என்று யோசித்தபோது - தன் முதுகில் ஒரு கரம் படுவதை உணர்ந்து திரும்பினான் தாமரை.
ரோகிணி நின்றிருந்தாள்.
வெள்ளைச்சேலை, துடைத்த நெற்றி, வெறிச்சிட்ட கழுத்து.
சத்தம் - 2
குழந்தையின் கால் கொலுசுச் சத்தம் தாய்க்கு இன்பம்.
தாமரை அதிர்ந்து போய் ரோகிணியையே பார்க்க – அவள் புன்னகைத்தாள், ஸாரி! தாமரை... நான் பத்து நிமிஷம் லேட் ரீகல் சௌக்ல ட்ராபிக் ஜாம், கடந்துக்கிட்டு வர்றதுக்குள்ளே... போதும்... போதும்ன்னு ஆயிடுச்சு...
"தாமரையின் அதிர்ந்த விழிகள் இன்னமும் அப்படியே இருந்தன. உதடுகள் மட்டும் உயிர்பெற்று லேசாய் உச்சரித்தன.
ரோ... ரோ... ரோகிணி...! இ... இது... என்ன கோலம்...?
"ரோகிணி புன்னகை தெயாமல் சொன்னாள்.
தெரியலை...? விதவைக் கோலம்... வெள்ளைப் புடவை... வெறிச்சிட்ட கழுத்து... நெற்றி இதுகளைப் பார்த்தாலே புரிஞ்சிருக்குமே...?
ரோ... ரோகிணி! எ...எப்படி...? எ... என்னாச்சு...?
ட்ரைவர் பார்த்திட்டிருக்கார். நம்ம காருக்குப் போயிடலாமா?
சொன்னவள் - தாமரையின் கையிலிருந்த ஒரு சின்ன சூட்கேஸை வாங்கிக் கொண்டாள்.
ம்... வா...!
தாமரை அவளுக்கு இணையாய் நடந்தாள். போன வருஷம் கல்யாணத்தில் பார்த்தத்தைக் காட்டிலும் ஒரு சுற்று இளைத்திருந்தாள். கண்களுக்குக் கீழே லேசாய்க் கருவளையங்கள்.
நீ இப்போ எந்தப் பத்திரிகைக்கு ரிப்போர்ட்டர்?
குரல்கள்.
"அரசியல் பத்திரிகையா...?
பார்ட்லி...
"தாமரை! நீ முன்னைக்கு இப்போ அழகாயிருக்கே,