Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Natchathiram Illaatha Iravu
Natchathiram Illaatha Iravu
Natchathiram Illaatha Iravu
Ebook99 pages38 minutes

Natchathiram Illaatha Iravu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Natchathiram Illaatha Iravu

Read more from Rajeshkumar

Related to Natchathiram Illaatha Iravu

Related ebooks

Related categories

Reviews for Natchathiram Illaatha Iravu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Natchathiram Illaatha Iravu - Rajeshkumar

    19

    1

    அரசு அலுவலகம். மத்தியானம் ஒரு மணி. உணவு அருந்தும் அறையில் டிபன் காரியர்கள் கலகலக்கும் சத்தம் கேட்டது. கூடவே பேச்சுக் குரல்கள்.

    என்னடி லலிதா... இன்றைக்கும் தயிர் சாதம்தானா...?

    வேற வழி? இன்னும் அந்த ‘மூன்று நாள்’ முடியவில்லையே?

    உன்னோட கணவருக்கு சமைக்கக் கத்துக் கொடுத்துடறதுதானே?

    அந்த சோம்பேறி மனுஷனுக்கு குழாயில் தண்ணீர் அடிக்கவே உடம்புல தெம்பு கிடையாது. இந்த லட்சணத்துல சமையல் வேற பண்ணுவாராக்கும்?

    ஊர்ல இருக்கிற மாமியாரை உதவிக்கு கூப்பிட்டுக்க வேண்டியதுதானே?

    அந்தக் கிழம் வந்தால் கொட்டிக்கத்தான் தெரியும். குழம்புக்கு எவ்வளவு உப்பு போடறதுன்னுகூட தெரியாது.

    எங்கேடி இன்னமும் சூரியநிலாவைக் காணோம்?

    அதோ வர்றா...

    சூரியநிலா இன்றைக்கு கட்டியிருக்கிற சேலை அமர்க்களம்.

    மெட்டல் ஷிபானாச்சே.

    அதுவும் அவளோட எலுமிச்சம்பழ நிறத்துக்கு படு எடுப்பு...

    சூரியநிலா டிபன் காரியரோடு அவர்களை நெருங்கினாள்.

    என்னடி என்னோட தலையைப் போட்டு உருட்டறீங்க...?

    நீ கட்டியிருக்கிற சேலையைப் பத்தித்தான்...

    எனக்கென்னமோ இந்த கலர் பிடிக்கவில்லை. அரை மனதோடுதான் எடுத்துகிட்டுவந்தேன்... சொல்லிக் கொண்டே டிபன், காரியரின் மேல் மூடியைத் திறந்தாள். முள்ளங்கி சாம்பார் ‘கும்’மென்று மணத்தது.

    ஆகா! லலிதா நாக்கை சப்புக் கொட்டி, மூக்கை உறிஞ்சினாள்.

    உன்னோட கை பாகமே கை பாகம். கட்டிக்கப் போகிற கணவன் கொடுத்து வைச்சவன்... - நாங்களும் முள்ளங்கி சாம்பார் வைக்கிறோம். இப்படியொரு வாசனை வர்றதில்லையே!

    உனக்கு கொஞ்சம் சாம்பார் தரட்டுமா?

    கேட்காதே! ஊத்து.

    சூரியநிலா சாம்பார் இருந்த டிபன் மூடியை எடுத்துக் கொண்டிருக்கும்போது - ஆபீசு பியூன் காளிமுத்து உள்ளே வந்தான்.

    சூரியநிலாம்மா...

    அவள் திரும்பினாள்.

    என்ன காளிமுத்து?

    உங்களுக்கு போன் வந்திருக்கு!

    போனா...? எழுந்தாள்.

    போன்ல யாரு?

    தெரியலேம்மா. தலைமை குமாஸ்தா சொல்லிவிட்டாரு.

    சாம்பாரை எனக்குக் கொஞ்சம் மிச்சம் வைச்சுட்டு எல்லாரும் எடுத்துக்குங்க. நான் போனில் பேசிவிட்டு வந்துடறேன்.

    சூரியநிலா வெளியே வந்து நீளமான வராந்தாவில் நடந்தாள். போன்ல அநேகமாய் ‘யோகா’வாகத்தான் இருக்கணும். அவர் கலந்துகிட்ட கவிதைப் போட்டியில் பரிசு கிடைத்திருக்குமோ...?

    யோகாவின் நினைவு மனசுக்குள் சுரந்ததும் நடையில் வேகம் கூடியது.

    அலுவலக அறைக்குள் நுழைந்ததும் - தலைமை குமாஸ்தா மேசை மேல் ஒருக்களித்து வைக்கப்பட்டிருந்த டெலிபோன் ரிசீவர் தெரிந்தது. நான்கைந்து மேசைகளுக்கு அப்பால் சுவரோரமாய் போடப்பட்டிருந்த ஒரு காலி - மேசையை ஆக்கிரமித்துக் கொண்டு புளியோதரையைத் திணித்த வாயோடு தலைமை குமாஸ்தா அழகான தமிழில் சொன்னார்.

    போழ்ன் உழக்குத்தாம்மா. எழுத்து பேச்சு...

    சூரியநிலா ரிசீவரை எடுத்து காதுக்குக் கொடுத்தாள்.

    அலோ...

    சூரியநிலா... இது அப்பாவின் குரல்.

    என்னப்பா?

    மத்தியானம் லீவு போட்டுட்டு வீட்டுக்கு வாம்மா.

    எதுக்கு?

    பாங்கிலிருந்து நோட்டீசு விட்டிருக்காங்க.

    நோட்டீசா...?

    ஆமாம்மா. வீட்ட வைத்து வாங்கியிருக்கிற ஐம்பதாயிரம் ரூபாய் கடனை இன்னும் ஒரு மாசத்துக்குள்ளே கட்டணுமாம். இல்லேன்னா கோர்ட்டு மூலமா ஜப்திக்கு வந்துடுவாங்களாம்...

    நோட்டீசு எப்ப வந்தது?

    இப்பத்தான் அரை மணி நேரத்துக்கு முன்னாடி.

    சரி. நான் பாங்க் மானேஜரைப் பார்த்து சொல்லிக்கிறேன்.

    நீ என்ன கலெக்டரா? இல்ல மந்திரியா? நீ சொன்னதும் - பாங்க் மானேஜர் கேட்கறதுக்கு?

    அட... ஏம்பா... புரியாம பேசறீங்க? பாங்க் மானேஜர் கடனைக் கட்டச் சொல்லி நோட்டீசு விடறதும், கோர்ட்டு மூலமா ஜப்திக்கு வர்றேன்னு சொல்றதும் ஒரு சடங்கு மாதிரி. நாம் போய் ஏதாவது சாமாதானம் - சொன்னால் ஒத்துக்குவாங்க.

    சரி. நீ அரை நாள் லீவு போட்டுட்டு வீட்டுக்கு வா. இரண்டு பேரும் சேர்ந்தே பாங்க்குக்கு போய் மானேஜரைப் பார்த்துச் சொல்லிட்டு வரலாம்.

    ஆபீசுக்கு ஏம்பா அநாவசியமா லீவு போடணும்? நான் நாலு மணிக்கு மேல ஒரு மணி நேரம் பர்மிஷன் கேட்டுட்டு வர்றேன்.

    ஏன் - லீவு போட்டா என்ன? நான் சொல்ற பேச்சைக் கேட்கக் கூடாதுன்னு தீர்மானம் பண்ணியிருக்கியா? எல்லாம் சம்பாதிக்கிற திமிரு.

    ஏம்பா பெரிய வார்த்தையெல்லாம் பேசறீங்க?

    இதோ பார்! என்னோட ஐம்பது வருட காலத்துக்கு நான் யாருக்குமே கடனாளியா இருந்ததில்லை. உன் நோயாளி அம்மாவுக்கு ஆபரேஷனைப் பண்ணவும், ஊசி மருந்து வாங்கவும்தான் குடியிருக்கிற வீட்டை அடமானம் வைச்சு, ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கினேன். உன் அம்மா ஐந்து வருடத்துக்கு முன்னாடியே செத்திருந்தா வீட்டை அடமானம் வைக்க வேண்டிய நிலைமை எனக்கு வந்திருக்காது...

    ஏம்பா... போன்ல இதையெல்லாம் பேசணுமா?

    ஏன் பேசினால் என்ன? என்னை கடன்காரனாக்கிட்டு உன் அம்மா கைலாசம் போய் கமுக்கமா சேர்ந்து விட்டாள்.

    சூரியநிலா குரலை

    Enjoying the preview?
    Page 1 of 1