Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ennai Yaarum Thottathillai
Ennai Yaarum Thottathillai
Ennai Yaarum Thottathillai
Ebook91 pages39 minutes

Ennai Yaarum Thottathillai

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Ennai Yaarum Thottathillai

Read more from Rajeshkumar

Related to Ennai Yaarum Thottathillai

Related ebooks

Related categories

Reviews for Ennai Yaarum Thottathillai

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ennai Yaarum Thottathillai - Rajeshkumar

    23

    1

    ஐஸ்வர்யா நகர் எக்ஸ்டென்ஷன்.

    சாயந்தர வேளை இரவு நேரமாக பிரமோஷன் பெற்றுக் கொண்டிருந்தது. தூரம் தூரமாய் வீடுகள். ஜன்னல்களில் வெளிச்ச சதுரங்கள். பக்கத்து ஃபாக்டரியில் ஏழு தடவை தண்டவாள மணி அடித்தது. (தொலைவில் இருந்த ரயில்வே தண்டவாளத்தில் ஒரு கூட்ஸ். ரயில் ரொம்ப நேரம் ‘தடக் தடக்’ என்று டிராக்கை கடந்தது.

    ஜன்னலுக்குப் பக்கத்தில் நின்று - வெளியே கவித்து கொண்டிருந்த இருட்டை வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்த - லேகா உள்ளறையில் டெலிபோன் ஒலிக்கும் சத்தம் கேட்டு - வேகவேகமாய் ரிஸீவரை எடுத்தாள்.

    "ஹலோ ...’’

    என்ன லேகா... போர் அடிக்குதா...?

    அவளுடைய கணவன் ஆனந்த் குரல் லேசாய் சிரிப் கலந்து கேட்டது.

    லேகாவுக்குள் கோபம் சுழன்றது.

    இப்ப மணி எவ்வளவு...?

    ஏழு...

    அஞ்சு மணிக்கே வர்றதா சொன்னீங்க.

    "ஸாரி லேகா... ஆபீஸ்ல மென்னியை முறிக்கிற வேலை அதுவும் இல்லாமே...’’

    சொல்லுங்க...

    நமக்கு கல்யாணமாகி இப்போ எத்தனை மாசமாச்சு?

    "ஆறு மாசம்...’’

    கல்யாணத்துக்கு முன்னாடி ... அதாவது நமக்கு கல்யாணம் நிச்சயமானதும் எங்க ஆஃபீஸ் ஸ்டாஃபுக்கு ஒரு ட்ரீட் தர்றதா சொல்லியிருந்தேன்."

    என்ன ட்ரீட்.?

    அது... அது வந்து... பேச்சிலர்ஸ் ட்ரீட்...

    அப்படீன்னனா...?

    ‘‘பாட்டில் வேணுமாம்..."

    ‘‘சரியாப் போச்சு... அதுக்கெல்லாம் ஒத்துக்காதீங்க. ஏதாவது ஒரு ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப் போங்க ஸ்வீட், காரம் வாங்கிக் குடுங்க. பாட்டில் சமாச்சாரமெல்லாம் வேண்டாம்...’’

    ஸ்வீட், காரம், காப்பிக்கு அவங்க ஒத்துக்க மாட்டாங்க லேகா... எப்படியோ இந்த தடவை அவங்க கேட்டதை வாங்கிக் குடுத்துடறேன், நான் பேச்சிலரா இருந்தப்ப ப்ராமிஸ் பண்ணினது..., ப்ராமிஸை கீப்- அப் பண்ணலைன்னா என் மானத்தை வாங்கிடுவாங்க...

    இந்த கண்றாவி பார்ட்டியையெல்லாம் அப்பவே தடுத்து முடிச்சிருக்க வேண்டியதுதானே...?

    அப்ப சந்தர்ப்பம் கிடைக்கலை...

    நீங்களும் குடிப்பீங்களா...?

    நான் உன்கிட்டே எதையும் மறைச்சதில்லை. எப்பவாவது அக்கேஷனலா குடிப்பேன். அதுவும், ஒரு சின்ன ஸ்மால்தான்...

    இதெல்லாம் நமக்கு வேண்டாங்க.

    இனிமே வேண்டாம். இந்த ஒரு தடவை மட்டும்...

    சரி, எத்தனை மணிக்கு வருவீங்க...?

    எப்படியும் ஒன்பது மணி ஆயிடும்...

    சீக்கிரம் வந்துடுங்க... எனக்கு போர் அடிக்குது...

    டி.வி. பாரு...

    தூக்கம் வந்துடும்...

    சரி... பக்கத்து வீட்ல போய் பேசிட்டிரு...

    அவங்க வெளியே போயிருக்காங்க...

    அப்ப ஒரு காரியம் பண்ணு ...

    என்ன ...?

    நான் வர்ற வரைக்கும்...

    வர்ற வரைக்கும்...?

    "என் போட்டோவை எடுத்து வெச்சுக்கிட்டு...’’

    எடுத்து வெச்சுக்கிட்டு...?

    முத்தம் குடுத்துட்டு இரு... எவ்வளவு முத்தம் குடுத்தேன்னு கணக்கும் வெச்சுக்க... நான் நேர்ல வந்ததும், கணக்கை தீர்த்துடுறேன்...

    உங்களுக்கு முத்தம் தானே வேணும்...? சீக்கிரமா வீட்டுக்கு வாங்க... வேணும்ங்கிற முத்தம் தர்றேன்…

    ஒன்பது மணிக்குள்ளே வந்துடறேன்…

    ரிஸீவரை வைத்த ஆனந்த் - ஆபீஸில் தனக்கு எதிரே உட்கார்ந்திருந்த அந்த மூன்று நண்பர்களையும் புன்னகைத்தான்.

    என் ஒய்ஃப் லேகா பச்சைக் கொடி காட்டிட்டா... வாங்க போலாம்...

    உன் ஒய்ஃப்புக்கு பிடிக்காட்டி வேண்டாம் ஆனந்த்.

    எந்தப் பொண்ணுக்குத்தான் குடிக்கிறது பிடிக்கும்...? ம். வாங்க... லேட் பண்ணாமே போயிட்டு வந்துடலாம்...

    ஆபீஸை விட்டு வெளியே வந்தார்கள்.

    எந்த ‘பார்’க்குப் போகலாம்...?

    கவிதாவுக்குப் போயிடலாம்... சைடு டிஷ்ஷஸ் நல்லா இருக்கும். ஆனா, காஸ்ட்லி ...

    பரவாயில்லை ... அங்கேயே போயிடுவோம்...

    டூ-வீலர்ஸ் பார்க்கிங்கிற்குப் போய் பைக்குகளையும், ஸ்கூட்டர்களையும் எடுத்துக் கொண்டார்கள். பத்து நிமிஷத்தில் கவிதா பாருக்கு வந்தார்கள்.

    பிஸியான ரோடு அது.

    கார்களும், பஸ்களும் ரோட்டின் இரண்டு பக்கமும் பாய்ந்தன - இருட்டின் பின்னணியில் நியான் போர்டுகளின் வண்ணச் சிதறல்கள்.

    கவிதா ஏ.ஸி. பார் கூட்டம் அதிகம் இல்லாமல் காற்றை சாப்பிட்டுக் கொண்டு இருந்தது.

    கார்னர் மேஜையாய் பொறுக்கிக் கொண்டு உட்கார்ந்தார்கள்.

    என்ன சாப்பிடலாம்...?

    விஸ்கி .

    ஆனந்த் கைகளைத் தூக்கி கும்பிட்டான். "ஃப்ரண்ட்ஸ் எனக்கு விஸ்கி வேண்டாம்... சின்னதா ஒரு மினி

    Enjoying the preview?
    Page 1 of 1