Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kuri…
Kuri…
Kuri…
Ebook105 pages50 minutes

Kuri…

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateApr 3, 2019
ISBN9781043466411
Kuri…

Read more from Rajeshkumar

Related to Kuri…

Related ebooks

Related categories

Reviews for Kuri…

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kuri… - Rajeshkumar

    18

    1

    சோலையின் வயிறு தீக்குளித்துக் கொண்டிருந்தது.

    நேற்றைக்கு முன் தினம் காலை ஒரு கல்யாண வீட்டில் அழையா விருந்தாளியாய் நுழைந்து நான்கு இட்லி கொஞ்சூண்டு உப்புமா அரை டம்ளர் காப்பி சாப்பிட்டது தான். அதற்குப் பிறகு அந்த நிமிஷத்திலிருந்து இந்த நிமிஷம் வரைக்கும் ஒரு உணவுப் பதார்த்தத்தைக் கூட சோலை வயிற்றுக்குக் காட்டவில்லை. இரைப்பையும் சிறு குடலும் குழைந்து குழைந்து பார்த்தன மறுபடியும் ஏதாவது ஒரு கல்யாண வீடு கிடைக்குமா என்று ஊர்ச் சத்திரங்களையும், கல்யாண மண்டபங்களையும் மேய்ந்து விட்டு வந்ததில் இன்னமும் கிறுகிறுத்துப் போனான் கண்கள் திடீர் திடீர் என்று சுருட்டி விட்டன, வாய்க்குள் தண்ணீர் காய்ந்து போயிற்று. தொண்டையின் ஆரம்பத்திலிருந்து சிறுகுடலின் முடிச்சுவரை பசி நெருப்பு மாதிரி உட்கார்ந்திருந்தது.

    கீழே வீட்டுக்காரரின் போர்ஷனிலிருந்து கோழிக் கறிக் குழம்பும் வனஸ்பதியும் ஒன்றாகக் கலந்து மணத்து அவனுடைய நாசியின் மேல் சறுக்கி விட்டுப் போனது. வாசனை மூக்கை நெருடும் போதெல்லாம் வாயில் உமிழ் நீர் ‘சொள்’ளென்று ஊறியது.

    டொக்...டொக்...

    அறைக் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது!

    பாயில் குப்புறப் படுத்துப் பசிக்கிற வயிற்றைத் தாஜா செய்து கொண்டிருந்த சோலை எழுந்து லுங்கியைச் சரியாய்க் கட்டிக் கொண்டபடி கதவைத் திறந்தான்.

    உச்சந்தலை வழுக்கையில் அரும்பின் வியர்வையோடும், வெற்று மார்பும், தொப்பைக்குக் கட்டிக் கொண்ட வேட்டியோடும் வீட்டுக்காரர் நின்றிருந்தார்.

    வாங்க ஸார்...

    வீட்டுக்காரர் உள்ளே நுழைந்தார்.

    என்ன சொல்றாங்க?

    ஆறு மாசம் கழிச்சு வரச் சொல்றாங்க சார்.

    ஆறு மாசம் கழிச்சு வரச் சொல்லியிருக்காங்களா? அப்போ எனக்குத் தரவேண்டிய மூணுமாச வாடகையை எப்படித் தரப்போறே?

    நாளைக்கு ஒருத்தர் வரச் சொல்லியிருக்கார் ஸார். புதுசா ஆரம்பிக்கப் போற கம்பெனி. எப்படியும் வேலை கிடைச்சுடும்.

    இதோ பார் சோலை! நீ வேலையைத் தேடிக்கிட்டு நாளைக் கடத்திட்டிருக்கிறதுல ஒரு பிரயோஜனமும் இல்லை. நீ முன்னாடி வேலை பார்த்த கடை முதலாளியே உன்னோட ரூம் தேடிவந்து, நடந்ததையெல்லாம் மறந்துட்டு வேலைக்கு வா’ன்னு சொன்ன பிறகும் நீ போகாமே வீம்பு காட்டிட்டு இருக்கிறது கொஞ்சம் கூடச் சரியில்லை.

    என்னை மன்னிக்கணும் ஸார். ஆயிரம் ரூபாய் கேஷ்ல குறையுதுன்னு தெரிஞ்சதுமே கொஞ்சம் கூட யோசனை பண்ணாமே முதல் ஆளா என்னைத்தான் சந்தேகப்பட்டார். கடையில வேலை செய்யற அத்தனை பேர்க்கும் முன்னாடி என்னோட சர்ட்டைக் கழற்றி வெச்சு. இடுப்பைத் தடவிப் பார்த்து என்னை அவமானப்படுத்தினார். திட்டினார். மரியாதையா பணத்தைக் கொண்டுவந்து தரலைன்னா போலீசுக்குப் போறதா சொன்னார். வீதியில வர்ற ஜனம், போற ஜனம்ன்னு ஒருத்தர் பாக்கியில்லாம கும்பல் கும்பலா நின்னு என்னை வேடிக்கைப் பார்த்தாங்க, பத்தே நிமிஷம்! வெளியே போயிருந்த முதலாளியோட மகன் கடைக்கு வந்ததும் உண்மை தெரிஞ்சு போச்சு. அந்தப் பணத்தை யார்க்கோ கைமாத்தா குடுத்ததை முதலாளி மகன் சொன்னதும், அவர் என்கிட்டே குழைய ஆரம்பிச்சார். செருப்பாலே அடிச்ச கையோடு வெல்லம் தந்த மாதிரி என்னை அவமானப்படுத்திட்டு மன்னிப்புக் கேட்டா சரியாயிடுமா ஸார்? அவரோட மூஞ்சியைப் பார்த்துக்கிட்டு என்னால் எப்படி ஸார் வேலை செய்ய முடியும்?

    அவன் சொல்லச் சொல்ல

    வீட்டுக்காரர் அவனுடைய தோளைத் தட்டினார்.

    தம்பி ...

    ஸார்...

    ரோஷம் பணக்காரனுக்கு வரலாம். ஏழைக்கு வரக்கூடாது, கோபதாபத்தை எல்லாம் விட்டுட்டு அதே கடைக்கு வேலைக்குப் போகப் பாரு!

    சோலை பேசாமல் நகத்தைக் கடித்தான்.

    வீட்டுக்காரர் விடாப்பிடியாய்க் கேட்டார்.

    என்ன போறியா?

    யோசிக்கணும் ஸார்.

    யோசிக்காதே, வேலைக்குப் போற வழியைப் பாரு இன்னிக்கே நாள் நல்லாத்தான் இருக்கு, ம்...கிளம்பு...

    இவர் விடமாட்டார். இவரோடு பேசிக்கொண்டிருப்பதால், பசி அதிகமாகி மயக்கமே வந்துவிடும். வெளியே போகிற மாதிரி பாவ்லா காட்டி விட்டு உள்ளே வந்துவிட வேண்டியதுதான்!

    என்ன யோசனை பண்றே?

    போறேன் சார்....

    கொஞ்சம் அழுக்காய் இருந்த சர்ட்டைக் கொடியினின்றும் உருவி உதறிப் போட்டுக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான் சோலை.

    என்ன தம்பி லுங்கிக் கட்டிட்டேவா வேலைக்குப் போகப் போறே? வீட்டுக்காரர் கேட்க, திரும்பவும் வந்து, பேண்டுக்குள் நுழைந்து வெளியே வந்தான்.

    கோழிக் குழம்பு வாசனை பிரமாதமாய் அடித்தது.

    ஈரத்துணிகளைக் கொடியில் போட்டு உலர்த்திக், கொண்டிருந்த வீட்டுக்கார அம்மாவின், இந்தாப்பா சோலை என்ற குரல் அழைத்து நிறுத்தியது.

    நின்றான்.

    "என்னம்மா?’’

    ரேஷன் கடையில உன்னோட சிநேகிதன் யாரோ ஒருத்தன் வேலை செய்யறதா சொன்னியேப்பா, ஞாபகமிருக்கா?

    ஆமா...

    அந்த சிநேகிதன்கிட்டே சொல்லி அஞ்சு கிலோ கோதுமை அதிகமாப் போடச் சொல்லுப்பா!

    சொல்றேன்மா.

    அப்படியே அஞ்சு கிலோ சர்க்கரைக்கும் சொல்லிடு.

    சரிம்மா ...

    சாப்பிட்டியா?

    "ம்...’’

    சாப்பிடலைன்னா வா... கோழிக்குருமாவும், சப்பாத்தியும் சாப்பிடுவியாம்...

    அந்த அம்மாள் சொல்லச் சொல்லவே நாக்கில் நீர் ஊறினான் சோலை.

    மனசுக்குள் தன்மானம் எழுந்து உட்கார்ந்து அவனை முறைத்தது.

    வேண்டாம்மா, நான் சாப்பிட்டுட்டேன்.

    விருவிருவென்று நடந்து மரத்தாலான காம்பௌண்ட் கேட்டைத் திறந்து கொண்டு வீதியில் காலை

    Enjoying the preview?
    Page 1 of 1