Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sugamana Kaathirupu!
Sugamana Kaathirupu!
Sugamana Kaathirupu!
Ebook140 pages52 minutes

Sugamana Kaathirupu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குடிபோதையில் பைக்கை நிதானமில்லாமல் ஓட்டிச் சென்று ஒரு பள்ளிக் கூடச் சிறுமியை இடித்துக் கொன்று விடுகிறான் ஜீவா. பணக்கார இளைஞனான அவனைக் காப்பாற்ற அவன் குடும்பத்தார் வேறொரு நபரை குற்றத்தை ஒப்புக்கொள்ள வைத்து சட்டத்தின் முன் நிறுத்த எண்ணுகின்றனர்.
ஆனால், அந்த விபத்தை நேரில் பார்த்த சாட்சியான சாவித்திரி, அந்தக் கேஸ் கோர்ட்டுக்கு வரும் போது தானே நேரில் போய் சாட்சி சொல்லப் போவதாய் மீடியாக்களில் அறிவிப்பு செய்கிறாள்.
அவள் வீட்டிற்கு வந்து பெரும் தொகை கொடுத்து அவளை விலைக்கு வாங்க முயற்சிக்கிறான் ஜீவா. ஆனால், சாவித்திரி இறுதி வரை உறுதியாய் நின்று அவனைச் சிறைக்கு அனுப்புகிறாள்.
சிறை வாழ்க்கை தந்த மனமாற்றத்தின் காரணமாகவும், சாவித்திரியின் ஸ்திரமான நேர்மையின் காரணமாகவும் ஜீவாவின் மனம் சாவித்திரியை விரும்புகின்றது. அந்த விரும்ப்பம் காதலாக மாற, தான் சிறையிலிருந்து வெளியே வந்ததும் தனக்கு சாவித்திரியை மண முடித்து வைக்குமாறு தன் பெற்றோரிடம் கோரிக்கை வைக்கிறான் ஜீவா.
சாவித்திரி ஜீவாவை ஏற்றுக் கொண்டாளா?
சஸ்பென்ஸை அறிந்து கொள்ள நாவலைப் படியுங்கள்.
Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580130005117
Sugamana Kaathirupu!

Read more from Mukil Dinakaran

Related to Sugamana Kaathirupu!

Related ebooks

Reviews for Sugamana Kaathirupu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sugamana Kaathirupu! - Mukil Dinakaran

    http://www.pustaka.co.in

    சுகமான காத்திருப்பு!

    Sugamana Kaathirupu!

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    1

    அதிகாலை.

    மெல்லக் கண் விழித்த ஜீவா, தான் வெறும் தரையில் படுத்துக் கிடப்பதை உணர்ந்து அவசரமாய் அவசரமாய் எழுந்தான்.

    தெருவில் அவ்வப்போது ஒரு வாகனம் கடந்து போகும் ஓசை கேட்க, சுற்றும் முற்றும் பார்த்தான்.

    பக்கத்து சோபாவில் அமர்ந்து அவனையே கண் கொட்டாமல் பார்த்தபடி அமர்ந்திருந்த அவன் நண்பன் சுரேஷ், குட் மார்னிங் ஜீவா என்றான். அவன் முகத்தில் எள்ளல்.

    டேய்... சுரேஷ்... நீ எப்படிடா... இந்த நேரத்துல எங்க வீட்டுல? என் அம்மா எங்கே? கண்களைக் கசக்கிக் கொண்டே ஜீவா கேட்டான்.

    ஹா... ஹா... வென்று வாய் விட்டுச் சிரித்த சுரேஷ், ஹலோ... நீ இப்ப இருக்கறது உங்க வீட்டில் அல்ல... எங்க வீட்டில் என்றான்.

    வாட்? உங்க வீட்டிலா? என்றவன் தலையைத் திருப்பித் திருப்பி, அந்த அறையை ஆராய்ந்து பார்த்து விட்டு, அட... ஆமாம்... இது என் ரூம் இல்லை!... ஆமாம்... நான் எப்படி இங்கே? தலையைச் சொறிந்தபடியே கேட்டான் ஜீவா.

    என்னடா? இன்னும் போதை தெளியலையா உனக்கு? நேத்திக்கு ராத்திரி நான்... நீ... நம்ம குமாரு... ஆனந்து எல்லோரும் என்னோட பர்த்டேயை செலிபரேட் பண்ண ஆனந்தோட பண்ணை வீட்டுக்குப் போனோமே... அதாவது ஞாபகமிருக்கா? புன்னகையோடு கேட்டான் சுரேஷ்.

    கண்களை மூடிக் கொண்டு, நிதானமாய் யோசித்த ஜீவா, அட... ஆமாம்... இப்பத்தான் ஞாபகம் வருது!... என்றான்.

    இப்பவாது ஞாபகம் வந்ததே? என்று தலையிலடித்துக் கொண்டு சொன்ன சுரேஷ், நேத்திக்கு ராத்திரி நீ ஓவரா குடிச்சிட்டே... உன்னால நிற்க கூட முடியலை... அந்த நிலைல நீ வீட்டுக்குப் போனா நிச்சயம் பெரிய கலவரமே வெடிக்கும்!னு தெரிஞ்சு... நான்தான் உன்னை என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து... யாருக்கும் தெரியாம என்னோட ரூம்ல படுக்க வெச்சேன்! என்றான்.

    ஓ... காட்!... இத்தனை நடந்திருக்கா? எனக்கு ஒரு பிட்டு கூட ஞாபகமில்லை!... எனி வே... தேங்க்ஸ் ஃபார் யூ!... நான் இப்பவே கிளம்பறேன் எழுந்தான் ஜீவா. அப்போதும் அவனிடம் லேசான தள்ளாட்டம் இருந்தது.

    டேய்... நீ இன்னும் ஃபுல் ஸ்டடி ஆகலை!... அதனால்... மதியம் வரைக்கும் இங்கியே இருந்திட்டு அப்புறமா வீட்டுக்குப் போ என்றான் சுரேஷ்.

    இல்லைடா... ஒணும் பிரச்சினையில்லை... நான் மேனேஜ் பண்ணிக்குவேன்"

    சரி... எப்படிப் போவே? சுரேஷ் கேட்க,

    என்னோட பைக்? என்று யோசித்த ஜீவா, டேய்... என்னோட பைக் எங்கேடா? கலக்கமாகிக் கேட்டான்.

    பதட்டப்படாதே... இங்கதான் இருக்கு!... பண்ணை வீட்டுல நீ விட்டுட்டு வந்த பைக்கை நான் இங்க கொண்டாந்திட்டேன் என்றான் சுரேஷ்.

    ரொம்பத் தேங்க்ஸ்டா... நான் கிளம்பறேன் உடனே வீட்டிற்குப் போக அவசரப்பட்டான் ஜீவா.

    டேய்... கொஞ்சம் அமைதியாய் இரு!... உன்னால இப்ப பைக் ஓட்ட முடியாது!... அதட்டலாய்ச் சொன்னான் சுரேஷ். அந்த அதட்டலுக்குள் நண்பனின் மீதான அக்கறையும் கலந்திருந்தது.

    இல்லைடா... நேத்திக்கு ராத்திரி நான் வீட்டுக்கு போகாததற்கே அம்மா பயங்கரமா பிரச்சனை பண்ணியிருப்பாங்க!... அவங்களை எப்படிச் சமாளிக்கப் போறேன்!னு எனக்கே தெரியலை கையை உதறிக் கொண்டு சொன்னான் ஜீவா.

    அதெல்லாம் சமாளிச்சுக்கலாம்... நீங்க இன்னும் கொஞ்சம் நேரம் படுத்து ரெஸ்ட் எடு

    இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கிக் கும்பிட்ட ஜீவா, என்னைப் போக விடு... உனக்குக் கோடி கும்பிடு என்றான்.

    சுரேஷ் நீண்ட நேரம் வாக்கு வாதம் செய்து விட்டு, கடைசியில் தோற்றுப் போய், சரி... பார்த்துப் போ!... ஸ்பீடு கொஞ்சம் கம்மியாகவே போ!... மார்னிங் டைம்... டிராபிக் ஜாஸ்தி இருக்கும் என்று அறிவுரை கூறி அனுப்பினான்.

    ஜீவா பைக்கை ஸ்டார்ட் செய்யும் நேரத்தில் ஓடி வந்தாள் சுரேஷின் தாய், தம்பி... தம்பி... இருப்பா... ஒரு வாய் காஃபி குடிச்சிட்டுப் போப்பா

    இல்லை ஆண்ட்டி... நான் உடனே போகணும் ஆண்ட்டி

    சுரேஷ் நண்பனுக்கு தோதாய், விடும்மா... போகட்டும்... நேத்திக்கு ராத்திரி வீட்டுக்குப் போகாததால்... வீட்டுல அவங்கம்மா ரொம்பக் கோபமாய் இருக்காங்களாம்!... அதான் இப்படி ஓடறான் என்றான்.

    என்ற சுரேஷின் தாய், நீ ஒண்ணும் பயப்படாதப்பா... உங்கம்மா ரொம்பத் திட்டினா சுரேஷுக்கும் ஒரு போன் போடு... உங்கம்மா கிட்ட நான் பேசறேன் என்றாள்.

    ரொம்பத் தேங்க்ஸ் ஆண்ட்டி

    விர்ரென்று கேட்டுக்கு வெளியே சீறிப் பாய்ந்தது ஜீவாவின் பைக்.

    புறப்படும் போது எதுவும் தெரியவில்லை, சிறிது தூரம் பைக்கை ஓட்டிக் கொண்டு வந்த பின் தான் ஜீவாவிற்கு உறைத்தது. அவனால் இயல்பாய் டிரைவ் செய்ய முடியவில்லை. அவனையும் மீறி அவன் கைகள் நெளிந்தன. பார்வையில் இன்னும் மச... மசப்பு நீங்காமலேயிருந்தது. ஆஹா... பத்திரமா வீடு போய்ச் சேருவேனா? லேசாய் அச்சம் துளிர்த்தது.

    ***

    தன் தந்தையின் சைக்கிளின் பின்புறம் அமர்ந்திருந்த அந்தச் சிறுமி, அப்பா... இப்படியே இங்கியே இறக்கி விடுப்பா... நான் இங்கிருந்து நடந்தே ஸ்கூலுக்குப் போயிடறேன் என்றாள்.

    வேண்டாம்மா... நான் ஸ்கூல் கேட் முன்னாடியே இறக்கி விடறேன்மா!... உன்னால இந்த ரோட்டை கிராஸ் பண்ண முடியாதும்மா என்றார் தந்தை.

    அய்யோ... அப்பா... இந்த ஓட்டை சைக்கிளை வெச்சுக்கிட்டு நீதான் ரோடு கிராஸ் பண்ண சிரமப்படுவே... நான் கூட்டமா போறவங்க கூடவே நடந்து ஈஸியா கிராஸ் பண்ணிடுவேன் என்றாள் சிறுமி.

    வேண்டாம்மா... எனக்கு பயம்மாயிருக்கும்மா

    க்கும்... நீ எல்லாத்துக்கும் பயந்திட்டே இரு!... இப்ப சைக்கிளை நிறுத்தப் போறியா இல்லை நான் ஓட ஓடவே இறங்கட்டுமா?

    அவள் சொல்வதைச் செய்யக் கூடியவள் என்பதை அந்த தந்தை நன்கறிந்திருந்த காரணத்தால் சைக்கிளின் வேகத்தை மட்டுப்படுத்தி சாலையின் இடப்புறமாய் நிறுத்தினார்.

    வேக வேகமாய் இஅங்கிய சிறுமி, ஓ.கே... டாட்டா என்று சொல்லி விட்டு நடக்க,

    பார்த்துப் போம்மா என்று சொல்லி விட்டு பெரியவரும் தன் சைக்கிளைத் திருப்பினார்.

    ***

    என்ன சாவித்திரி மணி ஆயிடுச்சு... இன்னும் கிளம்பலையா நீ? கேட்டவாறே அக்கா மகேஸ்வரி அறைக்குள் வர,

    கிளம்பிட்டேன்... கிளம்பிட்டேன் என்ற சாவித்திரி, ஏய்... மகேஸ்... எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் பண்ணுவியா? கெஞ்சலாய்க் கேட்டாள்.

    சொல்லு செய்யறேன்

    சமையல்கட்டுக்குப் போய் என் டிபனைக் கழுவி, அம்மா என்ன செஞ்சிருக்கோ... அதுல கொஞ்சம் அள்ளிப் போட்டுக் கொண்டு வர்றியா?

    "தாராளமா போட்டுட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1