Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manasu Vetcha Maranam!
Manasu Vetcha Maranam!
Manasu Vetcha Maranam!
Ebook69 pages24 minutes

Manasu Vetcha Maranam!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இரு வெவ்வேறு பெண்களின் வாழ்க்கையில் ஒரு ஆணால் உண்டாகும் மாற்றங்களே மனசு வெச்சா மரணம் கதையாகும். அவன் அவர்களுக்கு நன்மை செய்தானா இல்லை தீமை செய்தானா அவன் யார் போன்றவற்றை நாம் கதைக்குள் சென்று காணலாம்.

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580100606542
Manasu Vetcha Maranam!

Read more from Devibala

Related to Manasu Vetcha Maranam!

Related ebooks

Related categories

Reviews for Manasu Vetcha Maranam!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manasu Vetcha Maranam! - Devibala

    https://www.pustaka.co.in

    மனசு வெச்சா மரணம்!

    Manasu Vetcha Maranam!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    அப்படியா?

    ஆமாம். சண்டிகர்லேருந்து மாற்றலாகி புதுசா ஒருத்தர் நம்ம ஆபீசரா வர்றார். பேரு ரவிச்சந்திரன். நம்ம தமிழ்நாட்டுக்காரர்தான்!

    கண்டிப்புக்காரப் பேர் வழி!

    அலுவலகத்தில் புதுச் செய்தி கிடைத்த தெம்பில், வேலையை மறந்து சகலரும் வம்பில் ஈடுபட

    சுந்தரேசன் மட்டும் எதிலும் கலந்து கொள்ளவில்லை.

    இதில் மட்டுமல்ல, எதிலுமே கடந்த இரண்டு வருடங்களாக அவர் கலந்து கொள்வதில்லை.

    தான் உண்டு. தன் தொழில் உண்டு.

    அந்த ஆபீசில் யாரும் அவரைப் பொருட்படுத்தவும் இல்லை. அவர் வழிக்கே வரவும் மாட்டார்கள்.

    ஐம்பது வயது சுந்தரேசன், நம்ம தமிழ் சினிமா ரா. சங்கரன் போல அமைதி தவழும் வசீகரமான தோற்றம் சிரிப்பைத் தொலைத்திருந்த முகத்தில் எப்போதும் ஒரு சோகம். சரியாக ஒன்பது இருபதுக்கு ஆஜராகி விடுவார். ஐந்தடித்தால் புறப்பட்டு விடுவார். மதியம் சாப்பிட மாட்டார்.

    மறுநாள் காலை புது மானேஜர் ரவிசந்திரன் வந்து விட்டார். கண்டிப்புக்கார இளைஞன். அதிகபட்சம் முப்பது வயது வசீகரமான முகம், உடல்கட்டு, கம்பீரத் தோற்றம் கொண்ட மனிதன்.

    புது மானேஜரைப் பார்க்க, அறிந்து கொள்ள அத்தனை ஊழியர்களும் பத்து நிமிடம் முன்னாலேயே வந்து விட்டார்கள்.

    எப்போதும் சரியாக வரும் சுந்தரேசன் முப்பது நிமிடம் தாமதம்.

    வந்ததும் அழைக்கப்பட்டார்.

    குட்மார்னிங் சார்!

    மிஸ்டர் சுந்தரேசன் முப்பது நிமிஷம் தாமதமா வந்திருக்கீங்க!

    சார்... நான் இன்னிக்கு மட்டும் தான்...

    அது எனக்குத் தெரியாது. நேத்து வரைக்கும் இங்கே நான் அதிகாரி இல்லை. நான் ஜாயின் பண்ணின இந்த நாள்ள, உங்களைத் தவிர சகலரும் சரியா வந்தாச்சு. இந்த லேட் சமாச்சாரமெல்லாம் எனக்குப் பிடிக்காது. ஏஸ் எ சீனியர்மேன், மத்தவங்களை விட, உங்களுக்கு பொறுப்பு கூடுதலா இருக்கணும் இது எச்சரிக்கை. நீங்க போகலாம்.

    வெறுப்புடன் அவனைப் பார்த்தார் சுந்தரேசன்.

    ஸாரி ஸார்! சட்டென முகம் திருப்பி, விருட்டென வெளியேறி வந்தார்.

    ஒட்டுக் கேட்ட ப்யூன், தந்தி வேகத்தில் தகவல் ஒலி பரப்பு செய்ய அந்த அலுவலகம் மொத்தமும் அனுதாபத்துடன் பார்த்தது சுந்தரேசனை. உள்ளுக்குள்ளே பொங்கிப் பொங்கி பூரித்தது. எலலோரிடமும் பிரமாதமாக பெயரெடுக்கும் சுந்தரேசனிடம் புது மானேஜர் கரும்புள்ளி குத்தியது கண்டு களித்தது.

    மறுநாள் சுந்தரேசன் அலுவலகம் வரவில்லை. எந்தத் தகவலும் இல்லை. ரவிச்சந்திரன் விவரம் கேட்டான்!

    யாருக்கும் தெரியவில்லை.

    மூன்றாவது நாள் வழக்கம்போல வந்து விட்டார்.

    உள்ளே அழைக்கப்பட்டார்.

    உட்காருங்க மிஸ்டர் சுந்தரேசன்!

    ...?

    "ப்ரையர் சாங்ஷன் வாங்காம

    Enjoying the preview?
    Page 1 of 1