Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Santhaikku Vantha Kili
Santhaikku Vantha Kili
Santhaikku Vantha Kili
Ebook99 pages40 minutes

Santhaikku Vantha Kili

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இளம் வயதிலே கணவனை இழந்தவள் ஸ்ருதி. தன்னையும், தன் மகளான பிரதிபாவையும் காப்பாற்றிக் கொள்ள பாடுபடுபவள்.

தான் பணிபுரியும் நிறுவனத்தின், புதிய முதல்வராக வந்தான், விக்ரம். அவனின் நட்பால் சிறு ஆறுதல் கிடைக்கப் பெற்றவள். பின்னாளில் அந்த நட்பிற்கு பங்கம் ஏற்பட்டது. தான் செய்யாத கொலைக்காக, தண்டணை கிடைக்கும் என நினைத்தவள், தன் நிலையை தன் மாமனாரிடம் கூறினாள். அவர் அவளுக்கு உதவினாரா? தன் கணவன் விட்டுப்போன கடன் சுமை, தன் கணவனின் நண்பனால் வரும் இடைஞ்சல், புதிதாய் வந்திருக்கும் கொலைப்பலி இவற்றின் மூலமாய் நடைபிணாமாய் அலையும் அவளுக்கு விக்ரம் உதவுகிறானா?. அவனின் உதவியால் ஸ்ருதி காப்பாற்றப்பட்டாளா? அவளின் இன்னல்கள் விலகி அவளின் வாழ்க்கை ஒளி பெற்றதா? வாசித்து தெரிந்து கொள்வோம்…

Languageதமிழ்
Release dateFeb 7, 2022
ISBN6580100607827
Santhaikku Vantha Kili

Read more from Devibala

Related to Santhaikku Vantha Kili

Related ebooks

Reviews for Santhaikku Vantha Kili

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Santhaikku Vantha Kili - Devibala

    https://www.pustaka.co.in

    சந்தைக்கு வந்த கிளி

    Santhaikku Vantha Kili

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    நெற்றியில் அந்தக் கறுப்பு ஸ்டிக்கர் பொட்டை எடுத்து பதித்துக் கொண்டாள் ஸ்ருதி. கண்ணாடியில் தன் முகத்தை ஒரு முறை அழுத்தமாகப் பார்த்தாள்.

    நெஞ்சுக்குள் லேசான ஒரு கூச்சம் ஏறி உட்கார்ந்தது.

    ஸ்டிக்கரை மறுபடியும் உரித்தாள்.

    ஏன் ஸ்ருதி? விதவைகள் பொட்டு வச்சுக்கற காலம் தானே இது? நீ மட்டும் விதி விலக்கா?

    தலையைச் சிலுப்பிக் கொண்டாள். சேலையை மாற்றிக் கொண்டு, கைப்பையைச் சேகரித்துக் கொண்டாள். கூடத்துக்கு வந்தாள். காலடி ஓசையில் அப்பா நிமிர்ந்தார்.

    நான் புறப்படறேன்பா!

    ஒரு நிமிஷம் ஸ்ருதி!

    என்னப்பா?

    நீ வேலைக்குப் போய்த்தான் ஆகணுமாம்மா?

    இந்தக் கேள்வியை நீங்க கேக்கறது பதினெட்டாவது முறை. நானும் அதே பதிலைச் சொல்ல வேண்டிய கட்டாயத்துல இருக்கேன்பா!

    எத்தனை முறை கேட்டாலும் மனசு ஆறலைம்மா. வீட்டுப்படி தாண்டாம ராசாத்தியாட்டம் இருந்த பொண்ணு. இப்ப கேவலம் எண்ணூறு ரூபா சம்பளத்துக்காக வேஷம் கட்டிட்டு வெளில போறது அவசியம் தானாம்மா?

    ஸ்ருதி அவரையே பார்த்தாள்.

    அப்பா, கைவசம் உள்ள பணம் ஒன்றரை லட்சம். அதுல வர்ற வட்டி ஆயிரத்து அறுநூறு ரூபாப்பா!

    என் பென்ஷன் ஆயிரம் ரூபா இருக்கேம்மா!

    அப்பா, உங்களுக்கு வயசு அறுபத்தெட்டு. ஸாரிப்பா! நெருப்புனா வாய் வெந்துராது. இன்னும் எத்தனை காலத்துக்கு அந்தப் பணம் நிச்சயம்? சொல்லுங்கப்பா!

    அவரால் பேச முடியவில்லை.

    நான் ஒரு தனி மனுஷியா இருந்திருந்தா இந்தப் பணம் எனக்கு அதிகம். ஒரு பெண் குழந்தை இருக்காப்பா எனக்கு. அவளைக் கரை சேர்க்கணும்னா என் சேமிப்பு கரையக் கூடாதுப்பா. நான் கட்டாயம் வேலைக்குப் போயே ஆகணும்!

    அவர் மௌனமாகி விட்டார்.

    நான் வர்றேன்பா. டேபிள் மேல மத்யான சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன். ஃப்ளாஸ்க்ல டீ இருக்கு. மூணு மணிக்கு குழந்தையை ஸ்கூலிலேருந்து கூட்டிட்டு வந்திருங்க. நான் வரட்டுமாப்பா?

    இப்ப நான் கூட வரணுமாம்மா?

    கூட வர வேண்டியவரே பாதி வழில பரிதவிக்க விட்டுட்டுப் போயாச்சு. மற்ற துணைகள் எத்தனை நாள் வரும் அப்பா? நான் வர்றேன்!

    அப்பாவின் கண்கள் கசிந்தன.

    ***

    அது ஒரு கார்மென்ட்ஸ் கம்பெனி. பத்திரிகை பார்த்து விண்ணப்பித்திருந்தாள். நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டாள். சிபாரிசு இல்லை. எதை வைத்து அவளைத் தேர்ந்தெடுத்தார்கள் எனத் தெரியவில்லை. டைப்பிஸ்ட் வேலை.

    நீ டைப்பிங் கத்துக்க ஸ்ருதி!

    எதுக்கு?

    நான் ஒரு மெஷின் வாங்கப் போறேன். நம்ம பிஸினஸ் சம்பந்தப்பட்ட சில ரகசியக் கடிதங்களை வெளில தரக்கூடாது. எனக்கு நேரமிருக்காது. அதனாலதான்!

    அப்போது கற்றுக் கொண்டது இதோ உதவுகிறது.

    பிற்பகல் மூன்று மணி சுமாருக்கு ஆபரேட்டர் அழைத்தாள்.

    ஸ்ருதி! உங்களுக்கு ஃபோன்!

    எனக்கு யார் ஃபோன் செய்வது? அப்பாவாக இருக்கும். வேறு யாருக்கு நான் இங்கே இருப்பது தெரியும்?

    ரிசீவரை எடுத்தாள்.

    ஸ்ருதி பேசறேன்!

    நான் தனபால் பேசறேன். சௌக்கியமா?

    நீங்க யாருன்னு எனக்குத் தெரியலையே!

    தெரியாது. இனிமேல் தெரியும். உன் வாழ்க்கைல நான் ரொம்ப முக்கியமான நபர். அது எப்படீன்னு போகப் போக உனக்கே தெரியும். புது வேலை எப்படியிருக்கு? கூடிய சீக்கிரம் சந்திக்கலாம். வச்சிரட்டுமா?

    எதிர்முனை இறந்து,

    ஸ்ருதியின் முகம் பய ரேகைகளை அணிந்து கொண்டது அவசரமாக.

    2

    அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் போது இருட்டி விட்டது. அப்பா கவலையுடன் வாசலில் நின்று கொண்டிருந்தார். குழந்தையும் கூட நின்றது.

    மம்மீ!

    ஓடி வந்து அவளைக் கட்டிக் கொண்டது நாலு வயசு பிரதிபா.

    மம்மி, இன்னிக்கு ஒரு புது அங்கிள் வந்தார் என்னைப் பார்க்க ஸ்கூலுக்கு!

    யாரது?

    உன் கணவரோட நண்பர்னு நினைக்கறேன்மா. இவ பேரைச் சொல்லிட்டுப் பள்ளிக்கூடம் வந்திருக்கார். குழந்தைக்கு சாக்லெட் தந்துட்டு, உன்னையும் விசாரிச்சிருக்கார்.

    பேர் என்னன்னு சொன்னாரா?

    தனபால்னு சொன்னார் அந்த அங்கிள்!

    ஸ்ருதி சடாரென நிமிர்ந்தாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1