Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pazhagi Pakkanum!
Pazhagi Pakkanum!
Pazhagi Pakkanum!
Ebook109 pages52 minutes

Pazhagi Pakkanum!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603132
Pazhagi Pakkanum!

Read more from Devibala

Related to Pazhagi Pakkanum!

Related ebooks

Reviews for Pazhagi Pakkanum!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pazhagi Pakkanum! - Devibala

    http://www.pustaka.co.in

    பழகிப் பாக்கணும்!

    Pazhagi Pakkanum!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    இந்த வேலைக்கு நீபோக வேண்டாம்! அம்மா மீனாட்சி தீர்மானமாகச் சொல்ல, ரேகா நொந்து போனாள்.

    ஏம்மா இப்படி சொல்ற?

    தினமும் நைட் டியூட்டின்னா எதுக்கு அந்த வேலை? பொம்பளை புள்ளை!

    அப்படி என்ன அவசியம்?"

    "என்னம்மா இப்படி பேசற? டிகிரி முடிக்கும் போது எனக்கு கேம்பஸ்ல வேலை கிடைக்கல? என்ஜினீயரிங் முடிச்சும், கிட்டத்தட்ட ஒரு வருஷமா வேலையில்லாம இருக்கேன்! அலையாத இடம் பாக்கியில்லை! இப்பத்தான் அப்ளை பண்ணி, பிபிஓ வேலை வந்திருக்கு! இதுல முழுக்க முழுக்க நைட் டியூட்டிதான்! வேற வழியில்லை!

    அதான் வேண்டாம்னு சொல்றேன்!"

    "அம்மா! கிட்டத்தட்ட பதினஞ்சாயிரம் சம்பளம் வரும்! நமக்கது பெரிய தொகைதானே! அப்பாவுக்கு ரிடையராக ஒரு வருஷம் தான் இருக்கு! அப்புறமா பென்ஷன்தான்! சமாளிக்க முடியுமா! வீடு மட்டும் சொந்தமா இருந்தாப் போதுமா? செலவை சமாளிக்க வேண்டாமா?

    மீனாட்சி மெளனமாக நின்றாள்.

    அப்பா, நீங்க எதுவும் பேசலை!

    சுந்தரம் மெளனமாக நின்றார்.

    அவர் என்னிக்கு வெளிப்படையா தன் அபிப்ராயத்தைச் சொல்லியிருக்கார்

    "அவ சொல்றதும் நியாயம்தான்! நீ சொல்றதுலேயும் தப்பில்லை!

    இந்த பதிலை வச்சிட்டு என்ன முடிவை எடுக்கறது?

    இல்லைம்மா, நான் வேலைல உடனே சேர்றேன்? கொஞ்சம் தாமதப்படுத்தினா, வேற யாருக்காவது போயிடும்!

    "ஊர் கெட்டுக் கிடக்குதுடி தப்பு தப்பா பேசிக்கறாங்க! ராத்திரி நேர வேலை! வயசும் கம்மி! கல்யாணம் ஆகாத பொண்ணு! பயம்மா இருக்குடி! காசுக்கு ஆசைப்பட்டு அவமானப்படக் கூடாது பாரு!

    "என்ன பேசற நீ? ராத்திரி ஷிப்ட் போற எல்லா பொம்பளையும் தப்பா பண்றாங்க?

    இப்படி பேசாதே ரேகா! நான் யாரையும் தப்பா விமர்சிக்கலை மத்தவங்களை தடுக்க எனக்கு உரிமையில்லை நீ ஏன் பொண்ணு? நல்லா இருக்கணும்னு ஒரு அம்மா ஆசைப்பட்டா, அது தப்பா?"

    "தப்பில்லைம்மா! புரிஞ்சுக்கோ! அப்பா ஒருத்தரோட சம்பளத்துல பல பிரச்சனைகளை இப்பவும் சமாளிக்க முடியாம நீ கஷ்டப்படறே! அண்ணனால நமக்கு எந்த ஒரு லாபமும் இல்லை!

    "அதான் உங்கண்ணி அவனைத் தனிக் குடித்தனத்துக்கு இழுத்துட்டு போயிட்டாளே!

    அக்கா வெளிநாட்ல இருக்கா!

    ‘‘அவ வசதியா இருந்தாலும், மாப்பிளை கிட்ட நாம் பணம் கேக்க முடியுமா?

    இதப்பாரு! புலம்பி லாபமில்லை! இப்போதைக்கு நாம மூணு பேர்தான்! அப்பா நிறைய கடன் வாங்கி என்னைப் படிக்க வச்சிருக்கார்! என் துரதிர்ஷ்டம்-உடனே நல்ல வேலை கிடைக்கலை. என்ராசி - எதுவுமே உடனே கிடைக்காது! எல்லாத்துக்கும் தாமதமாகும்

    விடுடி! நீயும் படிச்சு முடிச்சாச்சு!

    "என்ன லாபம்! வீட்ல உக்காரும் போது உறுத்துதும்மா! கிடைச்சதை விடக்கூடாது! அங்கிருந்தே வெளில தேடலாம்! கான்டாக்ட், அனுபவம் ரெண்டும் இருந்தாத்தான் நல்ல இடத்துக்குப் போக முடியும்! கம்பெனி வண்டி பிக்கப் பண்ணி, காலைல கொண்டு வந்து விடும்! கவலை

    வேண்டாம்!

    "சரி ரேகா! உனக்கும் இருபத்தி மூணாச்சு! கல்யாணத்துக்குப் பாக்கணும்! உன் சம்பளம் எங்களுக்கு அதுக்காவது உதவுமில்லை!'

    அதுக்கு இப்ப அவசரமில்லைம்மா! கொஞ்சம் பணம் சேர்த்துக்கிட்டு இறங்களாம்! சரியா?

    மீனாட்சிக்கு விருப்பமில்லை.

    ஆனால் அவள் சொல்வதைத் தட்ட முடியவில்லை!

    சரி! போயிட்டு வா! உனக்கு மன உளைச்சலா, பாதுகாப்பு இல்லாத மாதிரி பட்டா, உடனே வேலைய விட்டுடு ரேகா!

    "சரிம்மா! மனசுக்குப் பிடிக்காத எதையும் நான் செய்யமாட்டேன்! நீ கவலைப்படாதே!

    மீனாட்சி தலையாட்டினாள்

    ரேகா உடனே மெயில் மூலம் கம்பெனிக்கு தன் ஒப்புதலை தெரிவித்தாள்.

    மறுநாளே வந்து சேரும்படி மெயில் வந்தது!

    மீனாட்சி சிக்கனமாகத்தான் குடும்பம் நடத்துகிறாள்.

    சுந்தரத்துக்கு இந்த வீடு - அவர் அப்பா காலத்து வீடு, பழைய வீடு!

    வயதானவர்கள் - அவரின் அப்பா, அம்மா பத்து வருடங்களுக்கு முன்புதான் காலமானார்கள்.

    பெற்றவர்கள் பராமரிப்பு, இரு சகோதரிகளை வாழ வைத்தது, மூன்று பிள்ளைகளை படிக்க வைத்தது, மூத்தவளைக் கட்டிக் கொடுத்தது, கல்யாணம் - கடைசி யாத்திரை, சீமந்தம், படிப்பு, பிரசவம் என நடுத்தர குடும்பத்தின் அத்தனை செலவுகளையும் சந்தித்தார் சுந்தரம்!

    அதனால் சேமிப்பு என்று எதுவும் இல்லை!

    மிஞ்சியது கடன்தான்!

    தனியார் நிறுவனம் தான். பிடித்தம் போக கையில் வருவது இருபதாயிரம்! அதில் மீனாட்சி குடும்பத்தை நடத்தியாக வேண்டும்!

    எப்படி ரேகாவின் கல்யாணம்?

    பதினைந்து நிமிடங்கள் காத்திருந்த பின் உயர் அதிகாரி ரேகாவை அழைத்தார். சகலமும் பரிசீலித்தார்!

    சார்! எனக்கு பகல் நேர டியூட்டி கிடைக்குமா?"

    எதுக்கு கேக்கறீங்க?

    அம்மா ஒடம்பு சரியில்லாதவங்க! வீட்ல நான் ஒருத்திதான் துணை!

    உங்கப்பா இல்லையா?

    இருக்கார். அவரும் வயசானவர்!

    "நே ரேகா! இன்டர்வியூ நேரத்துல இது ஒன்லி நைட் ட்யூட்டினு சொல்லி, நீங்க

    Enjoying the preview?
    Page 1 of 1