Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Idhayam Unakkalla
Idhayam Unakkalla
Idhayam Unakkalla
Ebook109 pages1 hour

Idhayam Unakkalla

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சினிமா மீது ஏற்பட்ட ஆசையின் காரணமாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் கைவிடப்பட்டு தற்கொலைக்கு முயன்ற கதையின் நாயகன் முகேஷின் வாழ்வில் ஒரு இரவில் நடந்த நிகழ்வுகளும், விலைமாதான அன்னத்தின் பரிட்சயமும் அவன் வாழ்வை எப்படி மாற்றியது? நாயகனின் கனவு நனவானதா என்பதை கதையைப் படித்து அறிவோம்.

Languageதமிழ்
Release dateNov 27, 2021
ISBN6580100606646
Idhayam Unakkalla

Read more from Devibala

Related to Idhayam Unakkalla

Related ebooks

Reviews for Idhayam Unakkalla

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Idhayam Unakkalla - Devibala

    https://www.pustaka.co.in

    இதயம் உனக்கல்ல

    Idhayam Unakkalla

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    தற்கொலை ஒன்றுதான் வழி என்று முடிவுக்கே வந்துவிட்டான் முகேஷ். தன் முகத்தை அந்தக் கண்ணாடியில் பார்த்தான். ஷேவ் செய்யப்படாத முகம். தாறுமாறாக முளைத்திருந்த முடிகளில் ஒன்றிரண்டு வெள்ளை முடி வேறு. எண்ணைக் காணாத தலை வேறு! கண்கள் ஒரு மாதிரி உள்ளே போய் பரிதாபமாக இருந்தது முகம்.

    இந்த நிலையில் இனி யாருக்காக வாழ வேண்டும்?

    எந்த லட்சியத்தை மனத்தில் கொண்டு சென்னைக்கு ஓடிவந்தேனோ, அது இனி நிறைவேறும் என்று தோன்றவில்லை!

    தெரிந்தவர்கள் அத்தனை பேர் முகத்திலும் ஒரு கேலிப் புன்னகை...

    நெருங்கிப் பழகியவர்களின் பார்வையில் பரிதாப உணர்ச்சி!

    இன்னும் முயற்சியைக் கைவிடாதே! என்று உபதேசிக்கும் சிலர்.

    அந்த உபதேசம் கொல்வதைப் போல இருந்தது.

    பிள்ளையார், அம்மன், பாபா, பாண்டிச்சேரி அம்மா என்று நம்பிக்கை பட்டியல் ஒருபுறம். அதனால் விரல்களில் இடம்பிடித்த மாதிரி வகையறாக்கள்...

    வெறுத்துப் போனது!

    என்ன இல்லை என்னிடம்?

    ஏன் எனக்கு மட்டும் தொடர்ந்து ஏமாற்றங்கள்?

    நான் தேர்ந்தெடுத்த வழிகள் தப்போ?

    அந்த நம்பிக்கையில் வாழ்வினைக் கடத்திவிட்டேனோ?

    புரியவில்லை!

    சுய அலசல் கொஞ்ச நாட்களாக வருகிறது. தன்னம்பிக்கை குறைந்து, தளர்ச்சி வரும்போது, விமர்சனங்கள் எழுகின்றன.

    இப்போது எல்லாம் முடிந்து, வெறுப்பு வந்துவிட்டது.

    இனி மரணம்தான்!

    எப்படி? எப்படி சாவைத் தேர்ந்தெடுப்பது?

    விஷமா?

    மூட்டைப்பூச்சி மருந்து வாங்கி எதிலாவது கலந்து குடித்து விடலாமா?

    வேண்டாம். அதை வாங்கக் காசு வேண்டும். முதலில் அதுவே இல்லை!

    அந்த யோசனை வேண்டாம்!

    தூக்கு மாட்டிக் கொள்ளலாம் என்றால், கயிறு இல்லை!

    ரயிலில் தலை வைத்தால்?

    ம்கூம்... அது கூட சரிப்படாது!

    கடலில் விழுந்து தற்கொலை?

    இதுதான் ஓரளவு சாத்தியமாகப்பட்டது!

    இதோ கூப்பிடும் தூரத்தில் கடற்கரை பொடிநடையாக பதினைந்து நிமிடங்கள் நடந்தால் பீச் வந்துவிடும்! நன்றாக இருட்டிய பிறகு போக வேண்டும்!

    போலீஸ்காரர்கள் நடமாடாத நேரமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்!

    கடலில் இறங்கிவிட வேண்டியதுதான்!

    போய்க் கொண்டே இருந்தால், முடிவு வந்துவிடும்!

    இன்று இரவு அந்த முடிவைத் தேடிக் கொள்ளத்தான் வேண்டும்!

    காலையில் அருண் சொல்லி விட்டான்!

    நீ இந்த ரூம்ல இருந்தா, வாடகை தர வேண்டி வரும் முகேஷ்!

    அருண்!

    ஆமா... என் சிநேகிதன்னா எத்தனை நாள் உனக்காக ரூம்ல நான் வச்சுக்க முடியும்? கூட இருக்கற ரூம் மேட்ஸ் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டாங்க. ஓணரும் கேக்கறார். அவருக்கும் தகவல் எட்டியாச்சு! ஒண்ணு நீ வாடகையை ஷேர் பண்ணிக்கோ. இல்லைனா, இங்கிருந்து போயிடு!

    முகேஷ் முகத்தில் அறை விழுந்தது.

    வாடகை தரப் பணமில்லாமல் தானே இங்கு வர நேர்ந்தது!

    அருண் பாவம்! இத்தன நாள் அடைக்கலம் தந்த நண்பன்!

    அவனுக்கு இன்று தர்ம சங்கடமான நிலை!

    இடமும் தந்து, சாப்பாடும் வாங்கித் தந்து, இதற்குமேல் எத்தனைதான் அவனால் தரமுடியும்?

    ‘அவனால் உதவ முடியும்?’

    அவனும் மணியடித்தாகிவிட்டது.

    இதைவிட்டு வெளியேறினால், வீதியில்தான் நிற்கவேண்டி வரும்!

    அதைவிட உயிரை விடுவது தேவலை!

    நேரம் பார்த்தான் முகேஷ்!

    மாலை ஐந்து மணி வெயில் இன்னும் குறைந்தபாடில்லை.

    சரியாகச் சாப்பிட்டு பல நாட்களாகிவிட்டது.

    அதனால் ஒரு நிரந்தரப் பசி வயிற்றில் இருந்து கொண்டே இருந்தது!

    அருண் மத்யானம் ரெண்டு மணிக்குத்தான் ஷிப்டுக்குப் போனான்.

    இரவு பதினொரு மணிக்குத்தான் வருவான்.

    அதற்குள் போய்விட வேண்டும்.

    ‘கடிதம் எழுதி வைக்க வேண்டுமா?’

    ‘யாருக்கு?’

    ‘நான் போய் விட்டால், அருண் தேடவாப் போகிறான்?’

    ‘விட்டது சனி’ என்று நிம்மதியாக இருப்பான். அவனது மற்ற அறைத் தோழர்கள் மாலை ஏழு, எட்டு என வரிசையாக வந்து விடுவார்கள்.

    அவர்கள் முகத்தில் எல்லாம் ஒரு வெறுப்பு!

    அவர்கள் வருவதற்குள் போய்விட வேண்டும்!

    நேரம் ஆறாக வெயில் நன்றாகக் குறைந்து கடற்காற்று வீசத் தொடங்கிவிட்டது.

    முகேஷ் எழுந்தான் கால்கள் கூட ஒரு மாதிரி பின்னிக் கொண்டன. கீழே வந்தான். டீக்கடைக்காரரின் முகத்தில் கோபம்.

    என்ன முகேஷ் எப்ப பழைய பாக்கியைத் தரப் போறே?

    வாரக் கடைசியில நாயர்!

    இது மாதிரி எத்தனை வாட்டி சொல்லுவ? டீயைக் குடிச்சிட வேண்டியது. பணம் தரணும்னு இல்லை! ஏன்யா, எல்லாரும் உழைச்சுத்தானே பிழைக்கணும். இது மாதிரி ஓசி கிராக்கிங்க உருப்படுமா?

    முகேஷ் பேசவில்லை!

    எத்தனையோ பேரிடம் பேச்சு வாங்கியாகிவிட்டது!

    அதில் இந்த நாயர் ஒருவன்!

    முகேஷ் நடக்கத் தொடங்கினான். கடற்கரை வந்துவிட்டது.

    கொஞ்ச தூரம் நடந்து மனித நடமாட்டம் அதிகமுள்ள இடத்தைத் தவிர்த்தான்.

    அங்கொன்றும், இங்கொன்றுமாய்த் தலைகள்.

    நேரம்

    Enjoying the preview?
    Page 1 of 1