Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ini Sogamillai!
Ini Sogamillai!
Ini Sogamillai!
Ebook122 pages42 minutes

Ini Sogamillai!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இது முழுக்க முழுக்க சோகமும், பாசமும், பக்தி உணர்வும் நிறைந்த ஒரு சமூக நாவல்! நல்ல நட்பு அனைத்தையும் கடந்தது என்ற நிதர்சனம் இன்றைய தலைமுறையினரிடம் உருவாகி வருகிறது. அது வளருமானால் சமூகக் குற்றங்கள் குறையும். ஒரு புதிய விழிப்புணர்ச்சி உண்டாக இது ஒரு நல்ல ஆரம்பம்!

Languageதமிழ்
Release dateOct 8, 2022
ISBN6580100607878
Ini Sogamillai!

Read more from Devibala

Related to Ini Sogamillai!

Related ebooks

Reviews for Ini Sogamillai!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ini Sogamillai! - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இனி சோகமில்லை!

    Ini Sogamillai!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    என்னுரை

    இது முழுக்க முழுக்க சோகமும், பாசமும், பக்தி உணர்வும் நிறைந்த ஒரு சமூக நாவல்!

    ஆண் - பெண் உறவு என்றாலே உடல் சம்பத்தமானதுதான் என்று ஒரு தவறான, அழுத்தமான அபிப்ராயம் மக்களிடையே உருவாகி விட்டது.

    அது இப்போது மாறிவருகிறது.

    பவித்திரமான, அன்பும் புரிந்துகொள்ளும் நேசமும் இருந்தால், உடல் கடந்து மனது உசத்தியானது என்ற உண்மை புரியும்.

    நல்ல நட்பு காமத்தைக் கடந்தது என்ற நிதர்சனம் இன்றைய தலைமுறையினரிடம் உருவாகி வருகிறது.

    அது வளருமானால் சமூகக் குற்றங்கள் குறையும். ஒரு புதிய விழிப்புணர்ச்சி உண்டாக இது ஒரு நல்ல ஆரம்பம்!

    அத்தகைய சமுதாயம் உருவாக ராமனுக்குப் பாலம் கட்ட வந்த அணில் போல், இலக்கியப் பாலம் கட்ட வந்த அணில் இனி படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்!

    நன்றி!

    உங்கள்

    தேவிபாலா

    1

    நம்ம கல்யாணம் நடந்தே ஆகணும் செந்தில்!

    இப்படி சொன்னா எப்படி நிம்மி? கல்யாணம் அத்தனை சுலபமா, சட்டையை மாட்டிக் கழட்டற மாதிரி? நீ இந்த அளவுக்கு அவசரப்படறது சரியில்லைனு எனக்குத் தோணுது!

    நிர்மலா முகத்தில் கோபம் கொப்பளித்தது.

    புரியாம பேசறீங்க. இதுவரைக்கும் வந்த நாலு வரன்களை நான் தட்டிக் கழிச்சாச்சு. எல்லாமே நல்ல இடங்கள் இனியும் நான் தட்டிக் கழிக்க முடியாது. எங்க வீட்ல அப்பா, அண்ணன் எல்லாரும் கடுப்புல இருக்காங்க புரிஞ்சுகுங்க.

    அவன் பேசவில்லை!

    நாளைக்கு ஒரு பார்ட்டி பெண் பார்க்க வருது! ஜாதகம் சேர்ந்தாச்சு. கேட்ட சீரைச் செய்ய அப்பா தயாரா இருக்காங்க நிச்சயமா இதை நான் தட்டிவிட்டா, வீட்ல நிலைமை கேவலமாகும் புரிஞ்சுகோ செந்தில்!

    இப்ப நான் பேசட்டுமா?

    ம்!

    இப்படி நீ வீட்ல அலைபாயறதுக்கு, என்னைக் காதலிக்கற விஷயத்தைச் சொல்லலாம் இல்லையா?

    எ... எப்படி செந்தில்?

    ஏன்?

    நாம காதலிக்கத் தொடங்கி எத்தனை காலமாச்சு?

    சுமார் ரெண்டு வருஷம்!

    இந்த ரெண்டு வருஷத்துல, நீங்க வேலைக்குப் போய் சம்பாதிச்சது எவளோ?

    அவன் தலை குனிந்தான்.

    செந்தில்! நான் உங்களைக் குத்திக் காட்டலை! இன்ஃபர்மேஷன், சொல்லுங்க நீங்க சம்பாதிச்சது எவளோ?

    எதுவுமில்லை.

    இதுவரைக்கும் உங்களுக்கு நிரந்தரமா ஒரு வேலை கிடைக்கலை! பல காரணங்கள். கெடைச்ச வேலைகள்ள உங்களால ஒட்ட முடியலை. அதுக்கும் நீங்க ரீசன் காட்டுவீங்க. விடுங்க! விமர்சனம் இப்பத் தேவையில்லை. விஷயத்துக்கு வர்றேன். நான் ரெண்டு வருடமாக் காதலிக்கற ஒருத்தர், வேலையில்லாம இருக்கார்னு உண்மையைச் சொன்னா, யாரு செந்தில் கல்யாணத்துக்கு சம்மதிப்பாங்க?

    அப்ப அவங்க சொல்ற பையனுக்குக் கழுத்தை நீட்டு?

    இருங்க செந்தில்! இந்தக் கோபம்தான் முன்னேற்றத்துக்குத் தடை! என்னைப் பேசவிடுங்க! கழுத்தை சுலபமா நீட்டிரலாம் மனசை?

    நிம்மி...

    நான் ஒரு பொண்ணு! சட்டை மாதிரி மனசை அப்பப்ப புதுசா மாத்திக்க முடியாது. என் மனசுல நீ ஏறி உட்கார்ந்தாச்சு! அதை யாராலும் எடுத்து வெளியே போட முடியாது?

    அதனால?

    பெரியவங்ககிட்ட இதைச் சொன்னா, ஜீரணிக்க மாட்டாங்க. எங்க அண்ணன் முரடன். அவனால உங்களுக்கு ஆபத்து வர வாய்ப்பிருக்கு?

    ஸோ?

    நம்ம கல்யாணம் கூடிய சீக்கிரம் நடக்குது!

    நிம்மி!

    ஆமா! ஒரு கோயில்ல வச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, கூடிய சீக்கிரம் பதிவும் பண்ணிக்கணும். நான் நாளை முதலே ஏற்பாடுகளை நண்பர்கள் மூலமா செய்துடரேன். இந்த வாரக் கடைசில முகூர்த்தம்.

    நிம்மி! என்னைக் கொஞ்சம் பேச விடறியா?

    சொல்லுங்க!

    எனக்கு வேலை இல்லை! சல்லிக்காசு என்னால உனக்கு உபயோகமில்லை.

    நான் சம்பாதிக்கறேன் செந்தில். மாசம் எட்டாயிரத்துக்கு மேல எனக்கு வருது! இன்னும் உயரும் என் ஒரு சம்பளம் நம்ம இரண்டு பேருக்கும் போதாதா? சொல்லுங்க.

    போதும்... ஆனா...

    நோ ஆனா! பேச்சே இல்லை இனிமேலும் தாமதிச்சா, நீங்க என்னை நிரந்தரமா இழக்க வேண்டி வரும். சம்மதம்னா இன்னிக்கே ‘குட்பை’ சொல்லிட்டுப் போயிட்டே இருக்கலாம். சரியா?

    செந்தில் முகம் வாடியது.

    பிடிக்கலை இல்லை! வேலையில்லாத காரணமா உங்ககிட்ட ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கு. அதை நான் குறை சொல்லலை! ஆனா என்னை இழக்க உங்களுக்கு சம்மதமில்லை! அப்படித்தானே?

    நிமிர்ந்து பார்த்தான்.

    ஆமாம் நிம்மி

    குட் நீங்கதான் வேணும்னு அதிகம் படிச்ச, பிரமாதமா சம்பாதிக்கறவங்களைக்கூட நான் தள்ளி வச்சாச்சு. ஸோ, கல்யாணம் நடக்கும்!

    இதனால விவகாரம்?

    "வராம நான் பாத்துக்கறேன். என்னதான் பிடிவாதமும், முரட்டுத்தனமும் இருந்தாலும், தன் வீட்டுல பொண்ணு கழுத்துல ஏறன தாலியைக் கழட்டற

    Enjoying the preview?
    Page 1 of 1