Tharisanam
By Devibala
()
About this ebook
“அன்பான கணவன் ஆசை மகன் இவர்கள் தன்மீது கொண்டுள்ள பாசத்தைக் கொண்டே அவர்களை அடிமையாக்கி அராஜகம். அநீதி இழைக்க நினைக்கும் தாய்மார்கள் திருந்த வேண்டும் என்பதற்காகவே இந்த தரிசனம்”!
பிறந்த வீட்டுக்கு செல்லும் பெண்ணுக்கு பொறுமையும் தேவை, அதே நேரம் தேவைப்படுகிற பொழுது தன் உரிமைகளை நிலைநாட்டவும் தெரிந்திருக்க வேண்டும். கருணை, குடும்பம், குடும்பத்தின் சூழல் அறிந்து மயோசிதமாகநியாயத்தை நிலைநாட்கஷ்டப்படுகிற பெண்ணான, இக்கதையின் நாயகி சுஜிதா உங்களை கவர்வது நிச்சயம் நன்றி தேவிபாலாRead more from Devibala
Koottai Kalaikkatheenga Rating: 0 out of 5 stars0 ratingsTheeyodu Vilaiyadum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsMundhanai Pandhal Rating: 0 out of 5 stars0 ratingsThurathi Varum Dhurogam Rating: 4 out of 5 stars4/5Kanney Varuvaya? Rating: 5 out of 5 stars5/5Enakku Mattumthaan! Rating: 0 out of 5 stars0 ratingsNenje Unnidam Rating: 0 out of 5 stars0 ratingsVizhikul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsBathil Mariyathai Rating: 5 out of 5 stars5/5Irumbu Changili Rating: 0 out of 5 stars0 ratingsKodi Kodi Aasai Rating: 0 out of 5 stars0 ratingsKaaladiyil Poomalai Rating: 0 out of 5 stars0 ratingsAmma Gondu…! Rating: 5 out of 5 stars5/5Naan Uppa? Sarkkaraiya? Rating: 0 out of 5 stars0 ratingsAthuvarai Poruthiru! Rating: 0 out of 5 stars0 ratingsInikkum Ilamai Rating: 5 out of 5 stars5/5Unakkum Vazhvu Varum Rating: 0 out of 5 stars0 ratingsKaanikkai Rating: 5 out of 5 stars5/5Panam, Penn, Pathavi! Rating: 0 out of 5 stars0 ratingsUnakku, Neethan Neethipathi! Rating: 0 out of 5 stars0 ratingsKana Kanum Kangal Rating: 3 out of 5 stars3/5Udaney Vaazha Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsManithan Paathi! Mirugam Paathi! Rating: 0 out of 5 stars0 ratingsMounamthan Pesiyatho Rating: 0 out of 5 stars0 ratingsChakkalathi Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Vittal Yarumillai! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Tharisanam
Related ebooks
Azhagana Aabathu Rating: 0 out of 5 stars0 ratingsKetten Thanthaai Rating: 5 out of 5 stars5/5Baagirathi Rating: 0 out of 5 stars0 ratingsVaazha Vaa Rating: 0 out of 5 stars0 ratingsIndhiya Manaivi Rating: 0 out of 5 stars0 ratingsvayulla Oomaigal Rating: 0 out of 5 stars0 ratingsNetruvarai Kaadhali! Rating: 0 out of 5 stars0 ratingsPuli Vaal Rating: 0 out of 5 stars0 ratingsPadma Viyugam Rating: 0 out of 5 stars0 ratingsKurai Ondrumillai Rating: 0 out of 5 stars0 ratingsKathiruppai Kaadhalane Rating: 0 out of 5 stars0 ratingsIchai Kiligal Rating: 0 out of 5 stars0 ratingsPoruthathu Pothum! Rating: 0 out of 5 stars0 ratingsJeevanamsam Rating: 0 out of 5 stars0 ratingsDeepangal Aarathanai Rating: 0 out of 5 stars0 ratingsEppavum Naan Raja Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kanakku Rating: 0 out of 5 stars0 ratingsIlakku Rating: 0 out of 5 stars0 ratingsThalattuthe Vaanam! Rating: 0 out of 5 stars0 ratingsKelvi Pirakatum Rating: 0 out of 5 stars0 ratingsAaniver Rating: 0 out of 5 stars0 ratingsAva(l) Thaaram Rating: 0 out of 5 stars0 ratingsOomai Kuyil Rating: 5 out of 5 stars5/5Naalaikum Nilavu Varum! Rating: 0 out of 5 stars0 ratingsMela Satham! Rating: 0 out of 5 stars0 ratingsIni Sogamillai! Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Thedathey! Rating: 0 out of 5 stars0 ratingsஜரிகை வேட்டி Rating: 0 out of 5 stars0 ratingsPoiththaan Aaganum Rating: 0 out of 5 stars0 ratingsKaduthasi Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Tharisanam
0 ratings0 reviews
Book preview
Tharisanam - Devibala
http://www.pustaka.co.in
தரிசனம்
Tharisanam
Author:
தேவிபாலா
Devibala
For more books
http://www.pustaka.co.in/home/author/devibala-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
முன்னுரை
அன்பான கணவன் ஆசை மகன் இவர்கள் தன்மீது கொண்டுள்ள பாசத்தைக் கொண்டே அவர்களை அடிமையாக்கி அராஜகம். அநீதி இழைக்க நினைக்கும் தாய்மார்கள் திருந்த வேண்டும் என்பதற்காகவே இந்த தரிசனம்
!
பிறந்த வீட்டுக்கு செல்லும் பெண்ணுக்கு பொறுமையும் தேவை, அதே நேரம் தேவைப்படுகிற பொழுது தன் உரிமைகளை நிலைநாட்டவும் தெரிந்திருக்க வேண்டும். கருணை, குடும்பம், குடும்பத்தின் சூழல் அறிந்து மயோசிதமாகநியாயத்தை நிலைநாட்கஷ்டப்படுகிற பெண்ணான, இக்கதையின் நாயகி சுஜிதா உங்களை கவர்வது நிச்சயம்
நன்றி
தேவிபாலா
1
இன்னும் ஒரு வாரத்தில் சுஜிதாவுக்கு 'கல்யாணம்... வீடே களை கட்டி பரபரப்பாக இருந்தது. முக்கியமாக உறவுக்காரர்களின் நடமாட்டம் அதிகாகமாகவே இருந்தது. சுஜிதா அழகான பெண்! எம்.காம்., படித்து விட்டு தனியார் நிறுவனமொன்றில் இருபதாயிரம் 'சம்பளத்திற்கு வேலை... கடந்த ஒரு வருடமாக போய் வருகிறாள்.
ஒரே பெண், வேறு உடன்பிறப்புகள் இல்லை! அப்பா கோபால், வங்கி ஒன்றில் அதிகாரி! அம்மா சுமதி பள்ளிக் கூடத்தில் தலைமை ஆசிரியை! அப்பாவின் அம்மா ஜானகி பாட்டி வீட்டோடு இருக்கிறார். சுஜிதாவின் இரண்டு அத்தைகள் இதே சென்னையில்!
சுஜிதாவின் மாமா எக்ஸ்போர்ட் வர்த்தகத்தில்! இவர்கள் தனியாக வாழ்ந்தாலும், உறவுகள் புடைசூழ வாழும் மனநிலையில் உள்ளவர் கோபால். சுமதி தன் மாமியார் உட்பட உறவுகளை அனைத்துக் கொண்டு செல்பவள்.
வெளிநாட்டுக்குச் சென்றால் கூட, எல்லாரும் இணைந்து மினிபஸ் போல ஏற்பாடு செய்து கொண்டுதான் போவார்கள்.
சுஜிதாவின் அத்தை - கோபாலின் அக்காவுக்கு - சுஜிதாவை தன் மருமகளாக்கிக் கொள்ள கொள்ளை ஆசை. ஆனால் அவள் பிள்ளை பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காமல் ஊரை சுற்றி உருப்படாமல் போய், இப்போது ஓர்க்ஸ் ஷாப் ஒன்றில் வேலை செய்கிறான்! –
அடுத்த அத்தைக்கு இரண்டும் பெண்கள். வழியில்லை. மாமா பையன் - வேற்று ஜாதிப் பெண்ணைக் காதலித்து ஒரு கட்டத்தில் காதல் முறிந்து ஏதேதோ ஆகிவிட்டதால், அந்த இடமும் அடிபட்டுவிட்டது.
சுஜிக்கு காதலில் நம்பிக்கை இல்லை. கோபாலும், சுமதியும் முறையாக ஜாதகம் எடுத்து எல்லா பொருத்தங்களையும் பார்த்து தேர்ந்தெடுக்கப்பட்ட பையன் தான் ஹரி!
எம்.டெக் படித்து ஒரு தனியார் நிறுவனத்தில் லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கும் இளைஞன்! அப்பா முரளிதர் ஒரு அட்வகேட்! அம்மா குடும்பத் தலைவி! ஹரிக்கு ஒரு அண்ணன். அவனது குடும்பம் அமெரிக்காவில்! அடையாறில் சொந்த வீடு, கார் என எந்தக் குறையும் இல்லாத குடும்பம். சுஜிதாவை பார்த்ததும் பிடித்து விட, உடனே தாம்பூலம் மாற்றப்பட்டது.
கல்யாணத் தேதியும் குறித்தாகிவிட்டது.
இது நடந்து நான்கைந்து மாதங்கள் ஆகிவிட்டன. சுஜிதா ஹரியுடன் வெளியே சுற்றத் தொடங்கி விட்டாள். பீச், எம்.ஜி.எம்., சினிமாக்கள் என வாரக்கடைசியில் போகாத இடமில்லை.
ஹரியே வீட்டுக்கு வந்து தன் காரில் அவளை அழைத்துப் போய் விடுவான்!
கோபாலும், சுமதியும் உற்சாகத்தின் விளிம்பில் இருந்தார்கள். வாழப் போகும் புகுந்த வீட்டுக்கு சுஜி இப்போதே ஹரியுடன் போகத் தொடங்கி, மாமியார், மானாருடன் நெருங்கி பழகத் தொடங்கி விட்டாள். அவர்களுக்கும் சுஜியை ரொம்பவே பிடித்து விட்டது.
இதையெல்லாம் சுமதி உறவுக்காரர்களிடம் சொல்லி பெருமைப்பட, வெளியே சிரித்தாலும் உள்ளுக்குள் பொறாமை வெடித்தது.
பாட்டி ஜானகி ஒரு மாதிரி பேச ஆரம்பித்து விட்டாள்.
கழுத்துல தாலி ஏறல... புருஷன் - மனைவி மாதிரி ஜோடி போட்டுட்டு வாரம் தவறாம சுத்துறாளாமே?
அம்மா நீ எந்த காலத்துல இருக்கே?
இல்லடா கோபால்! காலம் எதுவானா என்ன? பொம்பளை, பொம்பளைதானே? நாளைக்கு வரம்பு மீறி எதுவும் நடந்துடக் கூடாது இல்லையா?
அத்தே! சுஜிதா அவங்க வீட்டு மனுஷங்க கூடவே பழகறா! அவங்களும் எதுக்கும் தடை போடலை விடுங்க!
"ஒரு பெண் என்பதால் ஓரளவு சேமித்து வைத்திருந்தார்கள். இப்போது சகலத்தையும் வகைப்படுத்தினார்கள். --
நூறு சவரனுக்கு தங்க நகை - தவிர வைர நகைகள்! வெள்ளிப் பாத்திரங்கள், பட்டுச்சேலைகள், மாப்ளைக்கு வைர மோதிரம், தங்க பிரேஸ்லெட்டு, செயின், விலை உயர்ந்த உடைகள் என பட்டியல் நீண்டது.
ராஜா முத்தையா அரங்கத்தில் கல்யாணம்
ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு அழைப்பு!
கட்டில், மெத்தை, டிவி, பிரிட்ஜ் என ஒன்றும் பாக்கி இல்லாமல் சீதனம் தர குவித்து விட்டார்கள்.
தவிர மாப்பிள்ளை உறவிற்கு புத்தம் புதிய கார் ஒன்றையும் பதிவு செய்து விட்டார்கள்.
புதுசா ஒரு ஃப்ளாட் வாங்கித் தர கூட ஆசைதான் ஆனால் முடியலை
இது கோபாலின் ஆதங்கம்...
ஏறத்தாழ அறுபது லட்ச பட்ஜெட்!
அத்தைகள் அம்மா ஜானகியிடம் கேட்டார்கள்.
"ஏம்மா! இப்படி செலவழிக்கிறானே உன் பிள்ளை! ஏது இத்தனை பணம்!
அவன் பேங்க்ல உத்யோகம் பார்க்கிறான்... அவள் டீச்சர், இருபத்தஞ்சு வருஷமா சம்பாதிக்கறாங்களே?"
"இருக்கட்டும்மா! குடும்பச் செலவுக்கு எடுக்கலையா? தாரளமா செலவழிச்சு குடும்பம் நடத்தும் போது, ரெண்டு பேர் வருமானத்துல இத்தனை பணம் சேமிக்க முடியுமா? ரொம்ப அகலக் கால் வைக்கறானா உன் பிள்ளை?
அம்மா கேட்டே விட்டாள் கோபாலிடம்
எல்லாம் சேமிப்பு மட்டும் இல்லைம்மா! நிறைய லோன் போட்டிருக்கோம் ரெண்டு பேரும்!
சம்பளத்துல் பிடிப்பாங்க?
"பிடிக்கட்டும்மா! இவ ஒரு பெண் தானே! வேறு யாருக்கு நான் செய்ய போறேன். எங்க ரெண்டு பேருக்கும் இன்னும் பத்து வருஷத்துக்கு சர்வீஸ் இருக்கு