Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Indhiya Manaivi
Indhiya Manaivi
Indhiya Manaivi
Ebook90 pages31 minutes

Indhiya Manaivi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெண்ணின் வாழ்வை பூர்த்தியடையச் செய்வது தாய்மை. தாய்மையை விட்டு, சாதிக்கத் துடிக்கும் ஷாலினி சாதித்தாளா? மனைவியை பிரிந்து வாழும் பரத்தின் நிலை என்ன? பெற்றோர்களின் பாசத்தை இழந்து வாழும் குழந்தையின் நிலை என்ன? வாருங்கள் படிப்போம் தடைகளைத் தகர்த்து சாதிக்க துடிக்கும் இந்திய மனைவியை...

Languageதமிழ்
Release dateJun 4, 2022
ISBN6580100607834
Indhiya Manaivi

Read more from Devibala

Related to Indhiya Manaivi

Related ebooks

Reviews for Indhiya Manaivi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Indhiya Manaivi - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இந்திய மனைவி

    Indhiya Manaivi

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    அமெரிக்கால சிகாகோல எனக்குத் தெரிஞ்சு ஒரு நல்ல வேலை இருக்கு. நீ அப்ளை பண்றியா ஷாலினி? விளையாட்டாகக் கேட்டார் ஜி.யெம்.

    ஏன்? பண்ண மாட்டேன்னு நெனைச்சிங்களா?

    நான் விளையாட்டா சொல்லலை! மூவாயிரம் அமெரிக்கன் டாலர் சம்பளம், கம்பெனியே வீடெல்லாம் தருது! கார்கூடக் கிடைக்கும். அமோக வாழ்க்கை!

    ஷாலினிக்கு கண்கள் விரிந்தன.

    ஆனா நீ மட்டும்தான் போக முடியும் ஷாலினி

    முகம் சுருக்கினாள் ஷாலினி!

    இதைத்தான் சொன்னேன். நம்ம தென்னிந்திய பெண்களுக்கு அத்தனை துணிச்சல் இல்லை!

    ஏன் இல்லை?

    நான் குறை சொல்லலை ஷாலினி! குடும்பம் இருக்கு! கணவன், குழந்தைகளை விட்டுட்டுப் போக முடியாது. வீட்டுப் பெரியவங்க இருப்பாங்க! தடுப்பாங்க! எத்தனை பிரச்சனைகள்? தாண்டிட்டு காலை எடுத்து வெளில வைக்கவும் முடியாது. எல்லாத்துக்கும் மேல சென்ட்டிமெண்ட்ஸ், தவிர, ஹோம் சிக்!

    நான் அப்ளை பண்றேன் சார். போட்டி எப்படி?

    எக்கச்சக்கப் போட்டி மொத்தம் நாலு வேகன்ஸிதான். ஆனா ஆயிரக் கணக்குல அப்ளிகேஷன் குவியும் இங்கே மும்பைல வச்சு இண்டர்வியூ நடக்கும்.

    ஷாலினி அவரிடம் அதற்கான விண்ணப்ப படிவத்தை வாங்கித் தரச் சொன்னாள்.

    தேவையான சர்டிபிகேட்ஸ், புகைப்படம், அவளது தற்போதைய உத்யோகம், திறமைகள், வாங்கும் சம்பளம் என சகலமும் இணைத்து அழகாக கம்ப்யூட்டரில் ஒரு புக்லெட் போலத் தயாரித்தார். அதை அதிகாரியிடம் அனுமதியும் கம்பெனி முத்திரையும் வாங்கி பதிவுத் தபாலில் அனுப்பி வைத்தாள்.

    ஷாலினி அழகான பெண். இருபத்தி நாலு வயது! அந்த சாப்ட்வேர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் ஒரு ஜூனியர் அதிகாரி!

    சம்பளம் பிடித்தம் போக எட்டாயிரம் ரூபாய்.

    அதீத புத்திசாலி!

    ஷாலினிக்கு இரண்டு வருடங்கள் முன்புதான் கல்யாணம் முடிந்தது. கையில் ஒரு வயதுக் குழந்தை பெண் குழந்தை!

    காதல் கல்யாணம்தான்.

    அவளது அழகிய, புத்திசாலித்தனத்தில் தன்னை இழந்து அவளைக் கல்யாணம் செய்து கொண்டான் பரத்.

    பிறந்த வீட்டில் ஷாலினிக்கு ஒரு தங்கை, ஒரு தம்பி, அப்பா இல்லை. விதவை அம்மா!

    தம்பி அவளை விட இரண்டு வயது இளையவன்.

    நாலைந்து, மாதங்களுக்கு முன்புதான் அவனுக்கு வேலை கிடைத்தது. அதுவரை தன் சம்பளத்தில் ஒரு கணிசமான தொகையை பிறந்த வீட்டுக்கு ஷாலினி கொடுத்து வந்தாள்.

    கல்யாணம் நிச்சயமான போதே பரத்திடம் இதைப் பேசி விட்டாள்.

    என் குடும்பத்துக்குத் தலைவன் இல்லை பரத். என் தம்பி தலையெடுக்கற வரைக்கும் பாதிச் சம்பளம் அங்கே போகும். என் தங்கை கல்யாணத்துக்கு கணிசமா நான் செலவு செய்ய வேண்டி வரும்.

    பரத் தன் அப்பா, அம்மாவிடம் இதைச் சொல்லவில்லை அவசியம் இல்லையென்று நினைத்தான்.

    ஆனால் கல்யாணம் முடிந்து இது நடைமுறைக்கு வந்த போது பெரியவர்களுக்குப் பிடிக்கவில்லை.

    ஷாலினி பொருட்படுத்தவில்லை! அவர்களிடம் சொல்லவும் இல்லை!

    மகன் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டதே பெரியவர்களுக்குப் பிடிக்கவில்லை!

    ஷாலினியின் சுதந்திரப் போக்கு, பளிச்சென்ற பேச்சு, பிடிவாதம் இதெல்லாம் அவர்களைக் கணிசமாக பாதித்தது.

    எடுத்துச் சொன்னால் சண்டை வரும் என்று பேசவில்லை.

    பரத் மணலியில் ஒரு ரசாயனத் தொழிற்சாலையில் இளநிலை விஞ்ஞான அதிகாரியாக இருந்தான்.

    குடும்பம் வசதியாகத்தான் இருந்தது.

    ஷாலினி பிடிவாதக்காரியாக இருந்தாலும் வீட்டில் மாமியாரை எந்த வேலையும் செய்யவிட மாட்டாள்.

    தானே சீக்கிரமாக எழுந்து சகல வேலைகளையும் முடித்து விட்டுத்தான் கிளம்புவாள்.

    ஒரு நொடிகூட ஓய்வெடுக்க மாட்டாள்.

    விடுமுறை நாட்களில் கூட பம்பரமாகச் சுழன்று வீட்டை சுத்தமாகக் கண்ணாடி போல் வைத்திருப்பாள்.

    மற்றவர் சுதந்திரத்தில் தலையிட மாட்டாள்.

    தன் எண்ணத்தை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டாள்.

    பரத்துக்கு ரெண்டு தங்கைகள்...

    கல்யாணம் ஆனவர்கள்.

    Enjoying the preview?
    Page 1 of 1