Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Athumeeralgal!
Athumeeralgal!
Athumeeralgal!
Ebook122 pages1 hour

Athumeeralgal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழ் அழகான பையன். ஊர்மிளா என்பவள் புத்திசாலியாக இருக்கிறாள் ஆனால் அழகில்லை. தான் அழகில்லை என அனைவரும் சொல்வதை மனதில் வைத்துக் கொண்டு தமிழை அடைய முயற்சிக்கிறாள். தமிழ் பெற்றோரின் மனதில் இடம் பிடிக்கிறாள். இருவருக்கும் கல்யாணம் நிச்சயம் ஆகிறது. ஆனால் ஊர்மிலாவிற்கு தமிழ் தன்னை விட உயர் பதவிக்கு செல்லக்கூடாது என எண்ணி பல சூழ்ச்சிகளை அவனுக்கு செய்கிறாள். சூழ்ச்சிகளை தாண்டி தமிழ் உயிர் பதவிக்கு செல்வானா? ஊர்மிளா, தமிழ் இருவரும் இணைவார்களா? என்பதை படித்து அறிவோம்.

Languageதமிழ்
Release dateFeb 24, 2024
ISBN6580100610249
Athumeeralgal!

Read more from Devibala

Related to Athumeeralgal!

Related ebooks

Reviews for Athumeeralgal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Athumeeralgal! - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அத்துமீறல்கள்!

    Athumeeralgal!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    பொருளடக்கம்

    அத்தியாயம்: 01.

    அத்தியாயம்: 02.

    அத்தியாயம்: 03.

    அத்தியாயம்: 04.

    அத்தியாயம்: 05.

    அத்தியாயம்: 06.

    அத்தியாயம்: 07.

    அத்தியாயம்: 08.

    அத்தியாயம்: 09.

    அத்தியாயம்: 10.

    அத்தியாயம்: 11.

    அத்தியாயம்: 12.

    அத்தியாயம்: 13.

    அத்தியாயம்: 14.

    அத்தியாயம்: 15.

    அத்தியாயம்: 16.

    அத்தியாயம்: 17.

    அத்தியாயம்: 18.

    அத்தியாயம்: 19.

    அத்தியாயம்: 20.

    அத்தியாயம்: 21.

    அத்தியாயம்: 22.

    அத்தியாயம்: 01.

    தமிழ் அழகான பையன்! இருபத்தி ஆறு வயது முடிந்து விட்டது! இரண்டு மூத்த சகோதரிகள்! தமிழ் கடைசி பையன்! சகோதரிகள், திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன்! ஒருத்தி கான்பூரில்! அடுத்தவள் சென்னையில்! தமிழ் படித்தது கோவையில்! ஐந்தாண்டு கால பொறியியல் படிப்பு! ஹாஸ்டலில் தங்கி படிப்பு! அதனால் குடும்பத்தோடு அதிகமாக இருந்ததில்லை! பிரமாதமான புத்திசாலி! அழகு, கம்பீரம், புத்தி என எல்லாம் நிறைந்தவன்! கல்லூரி வளாகத்தில் வேலைக்கு தேர்ந்தெடுக்க, பூனாவில் ஒரு எம். என். சி. நிறுவனத்தில் அறுபதாயிரம் சம்பளத்தில் பணி!

    தமிழின் அம்மா ரேவதிக்கு, பெரிய மனக்குறை! படிக்கவே அவனை கோவைக்கு விட விருப்பமில்லை!

    ஒரே பையன்! அவனை எப்படி பிரிஞ்சிருப்பேன் நான்?

    அப்பா கிச்சாவுக்கு கோபம் வந்து விட்டது!

    அவன் எதிர் காலம் முக்கியமா? உன் மடில கிடந்து அவன் அம்மா கோண்டுவா இருக்கறது அவனுக்கு நல்லதா? பாசம் தேவை தான்! அது எனக்கு இல்லையா ரேவதி? ஆனா பசங்க நல்லா வாழணும் இல்லையா?

    ரேவதி மௌனமாகி விட்டாள்! இங்கு பள்ளி நாட்களிலேயே தமிழ், தானுண்டு, தன் வேலையுண்டு என இருப்பான்! மற்றவர்கள் பத்து வார்த்தைகள் பேசினால் ஒரு வார்த்தை பதிலாக வரும்!

    ரெண்டாவது அக்கா இனியா,

    நீ ஏண்டா இப்படி ஊமையா இருக்கே? பெரியக்கா செல்வி நல்லாவே பழகுவா! அம்மாவும் நானும் ஓட்டை வாய்! அப்பாவும் நல்லா பழகக்கூடியவர் தான்! நீ மட்டும் எப்படி இப்படி ஆனே?

    அதற்கு பதிலாக கன்னம் குழிய சிரிப்பான்! அது வசீகரமாக இருக்கும்!

    அம்மா! இவன் பேரழகனா இருக்கான்! எவளாவது இவனை கொத்திட்டு போகப்போறா!

    வாயை மூடு இனியா! என் பிள்ளை மேல கண் வைக்காதே!

    கல்லூரி முடிந்து புனாவில் வேலை கிடைக்க, அம்மா புலம்பி விட்டாள்!

    நீ ரேங்க் ஹோல்டர்! எந்த கம்பெனில வேணும்னாலும் வேலை கிடைக்கும்! சென்னை கம்பெனியா பார்க்கலாம் இல்லையா? இத்தனை நாள் உன்னை பிரிஞ்சு இருந்தாச்சு! திரும்பவுமா?

    அம்மா! இது நல்ல கம்பெனி! எதிர் காலம் சிறப்பா இருக்கும்! அதை இழக்கக்கூடாதும்மா!

    அவன் சொல்றது தான் சரி ரேவதி! அப்பா கிச்சா பரிந்து வர,

    என்னவோ போங்க! எல்லாரும் பணத்துக்கு பின்னால ஓடறீங்க! நமக்கு தமிழ் ஒரே பையன்! இன்னும் எத்தனை காலம் பிரிஞ்சு இருக்கணுமோ? ஏற்கனவே அதிகம் பேச மாட்டான்! பெத்தவங்க நாம! ரெண்டு சகோதரிகள்! குடும்ப பந்ததிகள் எதுவும் அவனுக்கு தெரியாது!

    அவனுக்கு எதுக்கு தெரியணும்? நாம இல்லையா?

    என்ன பேசறீங்க? நமக்கு பிறகு?

    எல்லாம் தானா கத்துப்பான்? நீயும் நானும் எல்லாம் படிச்சுத்தான் இந்த பூமிக்கு வந்தோமா? அனுபவத்துல எல்லாம் வரும்!

    அப்பா! அம்மா சொல்றதுல சில நியாயங்கள் இருக்கு! இப்பவே குடும்பம் பற்றி எதுவும் தெரியாம, குடும்பத்துல பெரிசா ஒட்டுதலும் இல்லாம இருந்தா, நாளைக்கே கல்யாணம் நடந்தா, வர்றவ எப்படீப்பா இந்த குடும்பத்துல ஒட்டுவா? இவன் ஒரே பையன்! உங்களோட முதுமைல உங்களை தாங்கி பிடிக்க வேண்டிய பையன்!

    இனியா! நீ எதையாவது சொல்லி, உங்கம்மாவை குழப்பாதே! அவ ஏற்கனவே பதட்டமா இருக்கா!

    அப்பா! பேச வேண்டிய நேரத்துல பேசலைன்னா, எல்லாம் தப்பா போயிடும்!

    ரேவதி கதி கலங்கி போனாள்! அப்பாவுக்கு கோபம் வந்தது! ரேவதி நல்ல பெண் தான்! ஆனால் ஏடாகூடமாக ஏதாவது பேசி அவ்வப்போது அம்மா மனசை கலைத்து விடுவாள்! ஏனென்று கேட்க, உள்ளூரில் அவள் ஒருத்தி தான் துணை என்பதால், ரேவதியும் அவள் பேச்சை வேதமாக கருதுவாள்! இது தான் அந்த குடும்பத்தில் பெரிய சூறாவளியை உண்டாக்கப்போகிறது என யாருக்கு தெரியும்?

    அத்தியாயம்: 02.

    மூன்று வருஷங்கள் பூனாவில் ஓடி விட, தமிழ், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வாரக்கடைசியில் வந்து இருப்பான்! விமான பயணம்! அப்பா கிச்சா, ஒரு விமான கம்பெனியில் அதிகாரி! பெரிய சம்பளம்! உலகம் முழுவதும் சுற்றி வந்தவர்! அம்மா ரேவதி ஒரு மகளிர் கல்லூரியில் பேராசிரியை! சொந்த வீடு, கார் என சகல வசதிகளும் உண்டு! இரண்டு பெண்களை நல்ல படியாக வாழ வைத்தாயிற்று! அதனால் தமிழ் சம்பளம் வந்து குடும்பம் நடக்க வேண்டும் என்பதில்லை! இவர்கள் கேட்கவும் இல்லை! அவன் தரவும் இல்லை! இனியா மெல்ல கிளறினாள்!

    தமிழ் சம்பாதிக்க தொடங்கின பிறகு பணம் தந்தானாம்மா?

    எதுக்குடீ? அது வந்து தான் இந்த குடும்பம் நடக்கணுமா?

    நீங்க கேக்கலைன்னாலும் அவனா செய்யணும் இல்லையா?

    நீங்க ரெண்டு பேரும் வேலைல சேர்ந்ததும் தந்தீங்களா?

    நாங்க இன்னொரு இடத்துக்கு வாழப்போற பெண்கள்மா!

    அதனால? இங்கே இருந்த வரைக்கும் தரணும்னு உங்களுக்கும் தோணலை இல்லையா? என் பிள்ளையை குறை சொல்லாதே!

    அவனை தாங்கி பிடிச்சு ஒரு நாள் சங்கடப்பட போறே நீ!

    சரிம்மா! நல்ல சம்பளம் வருது! பெத்தவங்களுக்கு, சகோதரிகள் குடும்பத்துக்கு ஒரு நாள் கிழமைன்னா துணி மணி வாங்கி தரணும்னு தோணுதா அவனுக்கு? அட, எங்களை விடு! பெத்த அப்பா அம்மாவுக்கு செய்யறானா?

    போதும்! அவனை தப்பா பேசிட்டே இருப்பியா? தம்பிங்கற பாசமே உனக்கு இல்லையா? போடீ, வேலையை பார்த்துட்டு!

    இனியா முறைத்து விட்டு விலகியதும் அம்மா தனியாக வந்து உட்காருவாள்! மனசுக்குள் சன்னமாக ஒரு ஏக்கம் படரும்! அப்பாவிடம் நாசுக்காக அதை பகிர்ந்து கொள்ள, அவர் மகனை விட்டுத்தர மாட்டார்!

    அதெல்லாம் குழந்தைக்கு தெரியாது ரேவதி! நாம சொன்னா, செய்வான்!

    அது எனக்கும் தெரியும்ங்க! நாம கேட்டு, அவன் செய்யறதை விட, அவனா முன் வந்து செஞ்சா, அது நமக்கு பெருமையில்லையா?

    விடேன்! இதெல்லாம் பெரிய விஷயமா? இனியா ஏதாவது சொல்றான்னு, தமிழ் மனசை நீ காயப்படுத்திடாதே!

    எனக்கு தெரியாதா?

    அப்பாவுக்கு இன்னும் இரண்டு வருஷங்கள் சர்வீஸ்! அம்மாவுக்கு ஐந்து வருஷங்கள்! அதனால் காலையில் வீட்டை பூட்டி புறப்பட்டால், இரவு ஏழுக்குத்தான் திரும்புவார்கள்! அப்பா வாரத்தில் மூன்று நாட்கள் வெளியூரில்! தமிழ் வரும் போது அவரும் வருவார்! அதனால் இனியா எந்த நேரமும் இங்கே தான்! அடிக்கடி அம்மா மனதை கலைத்து தன் இருப்பிடத்தை இங்கே ஸ்தாபித்து கொண்டாள்! தமிழ் வரும் போதெல்லாம் அவள் இங்கே இருப்பாள்! ஒரு நாள் பிறந்த வீட்டு உறவுகளை அழைத்து சாப்பாடு போடுவதோ, அவர்களுக்கு ஒரு பிறந்த நாள் என வந்தால் பரிசளிப்பதோ இல்லை! ஆனால் தம்பி செய்ய வேண்டும் என்ற எதிர்

    Enjoying the preview?
    Page 1 of 1