Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pore Megangal!
Pore Megangal!
Pore Megangal!
Ebook102 pages1 hour

Pore Megangal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

முரளி தான் நேசிக்கும் ரஞ்சனியைத் தான் திருமணம் செய்வேன், என்று தனது பெற்றோர்களிடம் விவாதித்து அதில் வெற்றியும் அடைகிறான். ஆனால் முரளியின் பெற்றோர்கள் முடிவு செய்துள்ளது அவனின் மாமன் மகள் ஜோதியை. ரஞ்சனி மற்றும் ஜோதி இருவரின் செயல்களால், யாரை திருமணம் செய்துக் கொள்வது?... என்ற பல்வேறு தடுமாற்றத்தில் முரளியின் மனநிலை. சற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் நடந்தேறிய முரளியின் திருமணம். ரஞ்சனி (ம) ஜோதி இவர்களில் யாரை முரளி கரம் பிடித்தான் என்பதை வாசித்துத் தெரிந்துக் கொள்வோம்.

Languageதமிழ்
Release dateNov 28, 2022
ISBN6580100608148
Pore Megangal!

Read more from Devibala

Related to Pore Megangal!

Related ebooks

Reviews for Pore Megangal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pore Megangal! - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    போர் மேகங்கள்!

    Pore Megangal!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    1

    ரஞ்சனியை தான் காதலிப்பதை படக்கெனபோட்டு உடைத்துவிட்டான் முரளி!

    அம்மாதான் முதலில் ஆடிப் போனாள்.

    தன் தம்பி மகள் ஜோதியைத் தான் அம்மா மனதில் வைத்திருந்தாள். ஜோதி வளர்ந்ததே இங்குதான். சரி! கல்யாணப் பேச்சை எடுக்கும் நாளில் இதைப் பற்றிச் சொல்லிக் கொள்ளலாம் என்றிருந்தாள்.

    ஜோதி, முரளியைவிட ஏழு வயது இளையவள். இப்போதுதான் படிப்பை முடித்து ஒரு நல்ல உத்யோகத்தில் சேர்ந்திருந்தாள்.

    ஜோதி பிறந்ததுமே முரளிக்குத்தான் என்று எல்லாரும் பேசினார்கள். பத்து வயது வரை இந்தப் பேச்சு நீடித்தது! பிறகு அப்பாதான் தடை போட்டார்.

    ‘குழந்தைகள் வளரத் தொடங்கிய பிறகு இந்த மாதிரிப் பேச்சு வேண்டாம்’.

    ஆசைகளை வளர்த்துவிட்டு அவஸ்தை கூடாது! ‘நாளைக்கு யாருக்கு யாரை தெய்வம் முடிச்சு போட்டிருக்குமோ தெரியாது’ என்றார்.

    அது சத்ய வாக்காகிவிட்டது!

    முரளி இன்ஜினியரிங் முடித்து, கணிப்பொறி சம்பந்தப்பட்ட வேறு சில படிப்புகளையும் முடிக்கும் போதே இருபத்திநாலு வயசு!

    வெளிநாட்டுத் தொடர்புள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை! ஆறு மாதம் கழித்து அமெரிக்கப் பயணம். அங்கே ஒரு வருடம். இதோ திரும்பி வந்து ஒரு வருடம் ஆகிறது!

    சரி! இருபத்திஏழை கடப்பதால் கல்யாணம் பேசலாம் என அம்மா நினைத்தாள்.

    பேச்சை ஆரம்பித்தாள்.

    ரஞ்சனியை தான் காதலிப்பதை முரளி சொல்லிவிட்டான்.

    அவளும் என்ஜினியர்.

    வெளிநாட்டுக்கு வந்தவள். அங்கேயே நட்பு தொடங்கி வளர்ந்து காதலாகிவிட்டது.

    இங்கு வந்த பிறகும் அது வளர்கிறது. ரஞ்சனியின் அக்கா கல்யாணம் முடியட்டும் என்று ரஞ்சனி காத்திருக்கிறாள்.

    அக்கா கல்யாணம் முடிவாகிவிட்டது.

    அது முடிந்த பிறகு பேசலாம் என முரளி நினைக்க, அம்மா தொடங்கி விட்டாள்!

    அம்மா அதிர்ச்சியில் நிலைகுலைந்து போயிருந்தாள்.

    அப்பா வந்ததும் அழுதேவிட்டாள்!

    ஜோதியைத்தான் கட்டிப்பான்னு நினைச்சேனே! இப்படி போட்டு உடைச்சிட்டானே!

    அப்பாபேசவில்லை!

    என் தம்பி முகத்துல எப்படி நான் முழிப்பேன்? ஜோதிக்கு நான் என்ன சமாதானம் சொல்லுவேன்?

    …..!

    நான் புலம்பிக்கிட்டே இருக்கேன். நீங்க பேசாமலே இருந்தா எப்படீங்க?

    என்ன பேசறது? அவன் வேறொரு பொண்ணை விரும்பிட்டான். வாழப் போறது அவன்தான். அவன் விருப்பம் முக்கியமில்லையா?

    என்ன பேசறீங்க? ஜோதிதான் என் மருமகள்னு நான் முடிவெடுத்திருந்தேன்!

    நிறுத்து சிவகாமி! உன் மகனைக் கேக்காம முடிவெடுக்கற உரிமையை உனக்கு யார் குடுத்தது?

    நான் அவனைப் பெத்த அம்மா!

    அதுக்காக? அவன் மடில படுத்துட்டு பால் குடிக்கற குழந்தை இல்லை! பருவம் வந்தபையன். அவன் மனசுக்குப் புடிச்சதைத்தான் தேர்ந்தெடுக்க முடியும்!

    ஜோதிகிட்ட என்ன குறை?

    நிறுத்து சிவகாமி! அவனுக்கு வேற ஒருத்தியைப் புடிச்சிருந்தா, நீ சொல்ற வளை கட்டிப்பானா? குழந்தை மாதிரி பேசறியே!

    நீங்களும் என்னைப் புரிஞ்சுகலை! உங்க மகன் பக்கம்தான் இருக்கீங்க!

    அப்பா எரிச்சலானார்.

    நீபாட்டுக்கு பேசிட்டே போறியே! புத்தியிருந்தா யோசனை பண்ணு! குழப்பத்தை உண்டாக்காதே! நாளைக்கு அந்தப் பொண்ணு இந்த வீட்டுக்கு வாழவரணும்! முரளி நமக்கு ஒரே மகன். நீ ஜோதியை மனசுல வச்சுகிட்டு இவளை சரியா நடத்தலைனா, போர் மேகங்கள் சூழும்! குடும்பம் யுத்த களமாகும். எல்லார் நிம்மதியும் அழியும்! தேவைதானா?

    அம்மா முகத்தில் கலக்கம்! குழந்தைங்க ஒரு முடிவை எடுத்துட்டா, நாம அதுக்கு தலை வணங்கறதுதான் விவேகம். இல்லைனா, கடைசி காலத்துல மிஞ்சறது கசப்புதான்

    …!

    முரளிகிட்ட மேற்கொண்டு பேசி, ஆக வேண்டியதைப் பார்க்கலாம்!

    அப்பா எழுந்து போய்விட்டார். அம்மாவால் ஜீரணிக்க முடிய வில்லை! எல்லாமே புரிந்தது. புத்தியில்லாதவள் இல்லை ஆனால் மனசுக்குள் ஒரு கோட்டையைக்

    Enjoying the preview?
    Page 1 of 1