Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mudichugal
Mudichugal
Mudichugal
Ebook112 pages30 minutes

Mudichugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateApr 14, 2021
ISBN6580100606201
Mudichugal

Read more from Devibala

Related to Mudichugal

Related ebooks

Reviews for Mudichugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mudichugal - Devibala

    http://www.pustaka.co.in

    முடிச்சுகள்

    Mudichugal

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    *****

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    *****

    அத்தியாயம் 1

    பரசுராம், ரேவதி இருவரும் பதட்டத்தின் உச்சியில் இருந்தார்கள். நேரம் மாலை ஏழு மணி! அடுத்த தொலைபேசி அழைப்புக்காக, கைபேசியை கையில் வைத்துக் காத்திருந்தார்கள்கள். அது அடிக்க,

    திவ்யாதான்! எங்கிட்டக் குடுங்க!

    ரேவதி செல்ஃபோனைப் பறித்து, வேகமாக 'ஹலோ' என்க, வேக ஏதோ வங்கியின் அழைப்பு!

    அடச்சீ! இவங்க தொல்லை தாங்கலை!

    அழைப்பு மணி ஒலிக்க, பரசுராமன் போய் கதவைத் திறந்தார். பரசுராமனின் அக்கா மல்லிகா நின்றிருந்தாள்.

    வாக்கா!

    திவ்யா தகவல் தந்தாளா? நீ ஃபோன் பண்ணவே இல்லையே பரசு?

    நாலு கட்டங்களைக் கடந்து வந்தாச்சு! இது இறுதிக் கட்டம்! அதான் படபடப்பா இருக்குக்கா!

    ஒக்காருங்க அண்ணி! என்றாள் ரேவதி. மல்லிகா முகத்தில் டென்ஷனோடு உட்கார்ந்தாள்!

    என் மருமக புத்திசாலிடா பரசு! ஜெயிச்சிட்டு வந்து நிப்பா பாரேன்!

    காஃபி தரட்டுமா அண்ணி?

    என் மருமக ஜெயிச்ச சேதி வரட்டும்! உங்களுக்கும் சேர்த்து நான் லட்டு தந்துட்டுப் போறேன்! வாங்கிட்டுத்தான் வந்திருக்கேன்!

    உனக்கு திவ்யானா உசத்திதான்க்கா!

    இல்லையாடா பின்னே? தம்பி மக மட்டுமில்லை! நாளைக்கு என் பிள்ளை ராகுலைக் கட்டிக்கப் போறவடா! பொறந்தப்பவே போட்ட முடிச்சுடா பரசு!

    சரி! மாமா எங்கே?

    என்னை விட அவர் துடிப்பா இருக்கார். கோயில்ல போய் ஒக்காந்து பிரார்த்தனை பண்றார்! 'தகவல் வந்ததும் சொல்லு! அப்புறம்தான் வருவேன்'னு சொல்லிட்டார்!

    இத்தனை பேரின் பரபரப்புக்கும் காரணமான நம் கதாநாயகி திவ்யா, பரசு - ரேவதியின் ஒரே மகள். அவன் பிறந்தபோதே பரசுவின் அக்கா மகன் ராகுலுக்கு என பேசி விட்டார்கள்.

    ராகுல் எம்.பி.ஏ முடித்து வெளிநாட்டுத் தொடர்புள்ள நிறுவனம் ஒன்றில் இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் உயர் அதிகாரி! அடிக்கடி வெளிநாடு போய் கரன்சிகளை அள்ளிக் கொண்டு வருபவன்!

    இதோ.. திவ்யா தன் பி.டெக் படிப்பை முடிக்கப் போகிறாள். கல்லூரி வளாகத்தில் பெரிய நிறுவனங்கள் போட்டி போட்டு, இப்போதே வேலைக்கு மாணவர்களை தேர்ந்தெடுக்கும் வைபவம் நடக்கிறது! அதற்காக குடும்பமே காத்திருக்கும் கோலாகலம்!

    இரவு எட்டு மணிக்கு திவ்யாவின் ஃபோன். பரசுராம் எடுத்தார்.

    அப்பா! இன்ஃபோசிஸ்ல என்னைத் தேர்ந்தெடுத்துட்டாங்க! இப்பத்தான் வெளியே வந்தேன். வருஷத்துக்கு ஆறு லட்ச ரூபாய் சம்பளம்! மற்ற விவரங்களை வீட்டுக்கு வந்து சொல்றேன்ப்பா!

    ரொம்ப சந்தோஷம்மா! வாழ்த்துக்கள்!

    போனை வைத்து விட்டு விவரத்தை பரசுராம், அக்கா, மனைவியிடம் சொல்ல, இருவரும் உற்சாகத்தின் உச்சத்தில் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கி, அக்கா மல்லிகா உள்ளே ஓடிப் போய், வாங்கி வந்த லட்டுக்களை தம்பிக்கும் மனைவிக்கும் ஊட்டி விட ,ரேவதி பூஜையறையில் விளக்கேற்றி நன்றி சொல்ல..

    மல்லிகா, தன் கணவருக்கு உடனே தொலைபேசியில் தகவல் சொல்ல, அவர் அரை மணியில் புறப்பட்டு அங்கே வர...

    ராகுலுக்குச் சொன்னியா மல்லிகா?

    இல்லீங்க!

    ஏண்டீ? இதை முதல்ல தெரிஞ்சுக்க வேண்டியவனே அவன்தானேடி! அவனுக்கு சொந்தமாகப் போற திவ்யாவோட வெற்றி நம்ம பிள்ளையோட வெற்றி!

    ஆமாம் மாமா! அதுதான் நிஜம்.

    மல்லிகா, ராகுலுக்கு முயற்சி செய்ய, இணைப்பு கிடைக்கவில்லை.

    விடு, திவ்யாவே தன் வாயால சொல்லட்டும்!

    ஒன்பது மணிக்கு, கல்லூரிப் பேருந்து திவ்யாவை இறக்கி விட்டு விட்டுப் போக, திவ்யா வீட்டுக்குள் நுழைந்ததும் நாலு பேரும் ஆரவாரப்படுத்தி விட்டார்கள்!

    அப்பா! படிப்பு முடியவே இன்னும் எட்டு மாசம் இருக்கு! அப்புறம்தான் வேலை!

    பரசு… அதெல்லாம் போகட்டும்! நல்ல நாளைப் பார்த்து தாம்பூலம் மாத்தி, தேதியை முடிவு செஞ்சிடலாம்.

    அத்தே! நான் வேலைல சேர்ந்து ரெண்டு சம்பளமாவது வாங்க வேணாமா?

    ஆமாண்டி கண்ணு! கல்யாணத் தேதியை அப்புறமாத்தான் குறிப்போம். ஆனா தாம்பூலம் மாத்திக்கிட்டா, பெரியவங்க மத்த ஏற்பாடுகளை கவனிப்போமில்லையா?

    ராகுல்கிட்டப் பேச வேண்டாமாக்கா?

    நாங்க சொல்றதைத் தாண்டி அவன் என்ன சொல்லப் போறான்?

    மல்லிகா! கல்யாணத்தையே கூட வர்ற தைல முடிச்சுக்கலாமே? ஏன் தள்ளிப் போடணும் சிவநேசன் கேட்க,

    அவ வேலைக்குப் போகணும்னு சொல்றாளே அண்ணே? இது ரேவதி,

    வேலைதான் கிடைச்சாச்சே! போகப் போறது உறுதிதானே? அப்புறமா என்னம்மா?

    அதில்லை மாமா! திவ்யா தயங்க,

    விடுங்க! முதல்ல நாள் குறிச்சு தாம்பூவத்தை மாத்திடலாம்! மீதியை பிறகு பேசிக்கலாம்! புள்ளை பசியோட வந்திருக்கும் ரேவதி! சாப்பாடு போடு!

    அண்ணி! நீங்களும், அண்ணனும் சாப்ட்டுட்டுப் போகலாம்!

    இல்லை ரேவதி! ராகுல் வர்ற நேரத்துல நான் இல்லைனா, குழம்பிப் போயிடுவான்! நாங்க புறப்படறோம்!

    மல்லிகா! திவ்யா வந்துட்டா, உன் புள்ளையை கவனிக்கற வேலை உனக்கில்லை! சரியா?

    மாமா அத்தானுக்கு முதல்ல அத்தைதான்! அப்புறம்தான் மத்தவங்க எல்லாம்!

    பார்த்தீங்களா என் செல்லத்தை? எப்படி பேசறா பாருங்க! மல்லிகா, திவ்யாவைக்

    Enjoying the preview?
    Page 1 of 1