Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Indru Paathi
Indru Paathi
Indru Paathi
Ebook154 pages1 hour

Indru Paathi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateOct 7, 2020
ISBN6580100606054
Indru Paathi

Read more from Devibala

Related to Indru Paathi

Related ebooks

Reviews for Indru Paathi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Indru Paathi - Devibala

    http://www.pustaka.co.in

    இன்று பாதி

    Indru Paathi

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    *****

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    *****

    அத்தியாயம் 1

    ரங்கராஜன் அன்று மாலை வீடு திரும்பி, வேட்டிக்கு மாறி ஈஸிசேரிலே வந்து சாய்ந்தபோது,

    சாவித்ரி எதிரே வந்தாள் டிகிரி காப்பியுடன். காலடியில் உட்கார்ந்து கொண்டாள்.

    கீர்த்தனா எங்கே?

    லைப்ரரி போயிருக்கா. சின்னது ட்யூசன் போயிருக்கு!

    ம்! காபியை ஆற்றத் தொடங்கினார்.

    என்னங்க!

    சொல்லு!

    எனக்கொரு யோசனை. நீங்க கோவப்படலைனா சொல்றேன்.!

    என்னா?

    கொஞ்ச நாளைக்கு நீங்களும் சின்னவளும் சமாளிக்க முடியுமானா கீர்த்தனா கூட நான் மெட்ராஸ் போகட்டுமா?

    என்ன சொல்றே நீ?

    என்னை பேசவிட்டு உங்க அபிப்ராயம் சொல்லுங்க. காலம் இருக்கற இருப்புல பொண்ணுகளுக்கு வேலை இல்லைன்னா, கல்யாண மார்கெட்ல மவுசு இல்லை. அதுவும் நல்ல வேலை அவசியமாக இருக்கு. இவளுக்கு தானா கிடைச்சிருக்கு, நீங்க 28 வருஷம் சர்வீஸ் போட்டு வாங்கற சம்பளத்தை சேர்ந்த உடனே அவ வாங்கப் போறா. விடலாமா?

    சரிம்மா... எப்படி அவளை தனியா...?

    எதுக்குத் தனியா? உங்களுக்கு சமையல் தெரியும். இந்த வீட்ல கைக்குழந்தையா இருக்கு சமாளிக்க? கொஞ்ச நாள் ஒப்பேத்துங்க. நான் கீர்த்தனா கூடப்போறேன்!

    அவளோட ஆபிஸ், மெட்ராஸ் மாதிரி மெட்ரோ சிட்டிகள்லதான். நீ எந்தக்காலத்துல வீடு திரும்பறது?

    அதை அப்புறம் யோசிக்கலாமே! ஒரு ஆறுமாசம் பொறுமையா இருங்க. வழி பிறக்கும். சம்மதிக்கக் கூடாதா?

    நர்த்தனா ட்யூசன் முடிந்து வீடு திரும்பினாள்.

    ஆமாம்பா. நீயும், நானுமா சமாளிச்சுக்கலாம். அக்காவுக்கு அம்மா துணையா போகட்டும்.

    சரி! ஆனா ரெண்டு பேரும் தங்கறது எங்கே? உன் தம்பி வீட்லேயா? வாயைப் பார்த்துட்டு இருக்கணும்.

    வேற வழியிருக்கா?

    வேற என்ன வழி?

    இப்படி செஞ்சா?

    சொல்லு!

    உங்களுக்கு நிறைய நண்பர்கள் உண்டு. நெருங்கின ஒருத்தர் சிபாரிசால, தனி வீடு எடுத்துட்டு தங்கிர்றம் நானும், கீர்த்தனாவும். அவளுக்கு நல்ல சம்பளம். சமாளிக்க முடியாதா? அது வந்துதான் இங்க ஆகணும்னு இருக்கா?

    ஆண் துணையில்லாமல் இரண்டு பெண்கள் இருக்கலாமா?

    அக்கம் பக்கம் பழகிட்டாப் போச்சு. நல்லவங்க இருக்க மாட்டாங்களா?

    அப்பா அன்று இரவு முழுக்க மூளையைக் கசக்கிக் கொண்டார்.

    காலையில் அவர் புறப்படும் நேரம் வாசலில் ஆட்டோ வந்து நின்றது. கையில் பெட்டியோடு இறங்கினான் அவன்.

    ரங்கநாதன் சார்! என்ன முழிக்கிறீங்க? என்னைத் தெரியலை?

    பானு சந்தரா?

    போச்சுடா ஆளையே மறந்தாச்சா?

    வா பானு! என்ன இது திடீர்னு வந்து நிக்கற? உன்னை நான் பார்த்து நாலைஞ்சு வருஷம் இருக்குமா?

    மேலேயே இருக்கும்! நான் சேலத்துல இருந்தப்ப நீங்க பார்த்திருப்பீங்க

    உட்காரு பானு! சாவித்திரி இங்க வா!

    சாவித்திரி வெளியே வந்தாள்.

    நம்ம சரவணமூர்த்தியோட தம்பிமா!

    வணக்கம்!

    உட்காருங்க. காபி கொண்டு வர்றேன்!

    அதோட விட்ருவேனா? சாப்பிட்டுத்தான் போகணும் நீ!

    உங்க மேல எனக்குக் கோபம் சார்!

    எதுக்கு?

    என் கல்யாணத்துக்கு நீங்க வரவே இல்லை!

    எப்ப நடந்தது உன் கல்யாணம்?

    அது ஆச்சு நாலு வருஷம்!

    ஸாரிடா.... அந்த நேரம் ஏதோ ஒரு சிக்கல்ல இருத்தேன் நான். எத்தனை குழந்தைகள்?

    ரெண்டு வயசுல ஒருபையன், திரும்பவும் இப்ப டெலிவரிக்குப் போயிருக்கா!

    இதோட நிறுத்திக்கோ!

    கீர்த்தனா காபியை எடுத்துக் கொண்டு வந்தாள்.

    நான் பார்த்தப்ப பாவாடை சட்டையோட இருந்த உங்க மூத்த மகளா இவ? அழகான ஒரு பேர் உண்டே இவளுக்கு?

    கீர்த்தனா!

    ஆமாம். சச் எ பொயட்டிக் நேம். என்னம்மா பண்ணுறே?

    டிகிரியும் கம்யூட்டரும் பண்ணிமுடிச்சுட்டேன்!

    வேலைகூட கிடைச்சாச்சு. அதுலதான் நாலு நாளா வீடு யுத்தகளமா இருக்கு! - ரங்கராஜன்

    எங்கே வேலை?

    மெட்ராஸ்ல ஒமேகால கம்யூட்டர் ஜூனியர் ஆபிசர்!

    யம்மாடி! எப்படி புடிச்சே அந்த வேலையை? கிடைக்கறது ரொம்ப கஷ்டமாச்சே!

    மெரிட்ல அங்கிள்!

    அசாத்தியமான பொண்ணா இருக்கியே!

    அது நல்ல வேலைதானே அங்கிள்?

    நல்ல வேலையா? அங்கே ஒரு ப்யூன் வேலை கிடைச்சாக் கூட போக நானே தயாரா இருக்கேன்

    அப்பாகிட்ட சொல்லுங்க. நான் போகக் கூடாதாம்..!

    ஏன் சார்?

    ஹாஸ்டல்ல குழந்தையை விட இஷ்டமில்லை!

    எதுக்கு ஹாஸ்டல்? நம்ம வீடு இருக்கே வந்து தங்கிக்க வேண்டியது தானே? ரெண்டு பேரும் வாங்க. நாளைக்கு நான் ஊர் திரும்புவேன். என்னோட வந்துருங்க. என்னைக்கு நீ ஜாயின் பண்ணணும்?

    இன்னும் ஒரு வாரத்துல!

    அதுல பிரச்சனையே இல்லை. சார், நான் பார்த்து அவளுக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்யறேன்!

    அதுல பானு...!

    சொல்லுங்க சார்!

    உன் வீட்ல எத்தனை நாள் ரெண்டுபேரும் இருக்க முடியும்?

    ஏன்? எத்தனை நாள் வேணும்னாலும் இருக்கலாம்!

    அதெல்லாம் சரிப்படாது. தற்காலிகமா அதிகபட்சம் ஒரு மாசம் தங்கலாம். அதுக்குள்ள ஒரு வீட்டை ஏற்பாடு பண்ணிக்குடுத்துடு. நீ பக்கத்துல இருந்து பார்த்துக்கோ!

    என்னைப் பிரிக்கறீங்க சார். நீங்க எனக்கு செஞ்ச உதவிக்கு, உங்களுக்கு செருப்பா உழைக்கணும் நான்!

    ஷ்! ஏன் பெரிய வார்த்தைகள்? நீயா இருக்கிறதாலதான் ரெண்டு பேரையும் நம்பிக்கையோட அனுப்பறேன். சாப்பாடு ரெடிபண்ணு சாவித்திரி. கீர்த்தனா நீ போய் இலை வாங்கிட்டு வா!

    பானுசந்தர் குளித்தான்.

    அவருடைய வேட்டியைக் கட்டிக் கொண்டான்.

    எப்ப உங்க மனைவிக்கு ட்யூ டேட்?

    கேட்ட சாவித்ரியை நிமிர்ந்து பார்த்தான்.

    அடுத்த மாசக் கடைசில. பிரசவம் முடிஞ்சு ரெண்டு மூணு மாசம் பிறந்த வீட்ல இருப்பா!

    இங்கே சாப்பாட்டுக்கு?

    ஒட்டல்தான். எனக்கு சார் மாதிரி சமைக்க வராது!

    குடும்பத்துக்காக உழைச்சவன் பானு. உனக்கு லேட் மாரேஜ்தான் இல்லையா?

    ஆமாம் சார். முப்பத்தி ஒண்ணுல! இப்ப முப்பதஞ்சு!

    சாப்பிட வாங்க!

    நான் உங்களைவிட சின்னவன். சாரோட சிஷ்யன். எதுக்கு வாங்க... போங்க? உங்க தம்பி மாதிரி நினைச்சுக்குங்க. நான் உங்களை அக்கானே அழைக்கறேன். என்ன சார்?

    அன்று மாலை பானுசந்தர் அலுவலக வேலையாகப் புறப்பட்டான். இரவு வந்துவிட்டான். யாரையோ பிடித்து இவர்கள் இருவருக்கும் ரயிலில் டிக்கெட் வாங்கி விட்டான்.

    மறுநாள் மாலை பெட்டிகளெல்லாம் கூடத்துக்கு வந்துவிட்டன. பானு ஆட்டோ பிடிக்க வெளியே போக, அம்மாவுக்கு, அப்பா - நர்த்தனாவை விட்டுப் போக என்னவோ போலிருந்தது.

    ரெண்டு பேரும் ஜாக்கிரதை! குரல் இடறியது.

    அப்பா நான் வர்றேன்! அவள் நமஸ்கரித்தாள்.

    "ஜாக்கிரதைடா. நீ பிறந்தது முதல், உன்னைப்

    Enjoying the preview?
    Page 1 of 1