Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Moongil Ilai
Moongil Ilai
Moongil Ilai
Ebook132 pages1 hour

Moongil Ilai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateApr 14, 2021
ISBN6580100606200
Moongil Ilai

Read more from Devibala

Related to Moongil Ilai

Related ebooks

Reviews for Moongil Ilai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Moongil Ilai - Devibala

    http://www.pustaka.co.in

    மூங்கில் இலை

    Moongil Ilai

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    *****

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    *****

    அத்தியாயம் 1

    இந்த வெள்ளிக்கிழமை தீபாவை பெண் பார்க்க வரப்போறாங்க.

    அப்படியாம்மா? நல்ல வரனா?

    ஆமாம் சித்ரா! நாலு நாள் முன்னால நான் கோவிலுக்கு போயிருந்தப்ப என் பழைய சினேகிதி ஒருத்தியை சந்திச்சேன். ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம். அவ பையன் பேங்க்ல வேலை செய்யறானாம்! ஆபிசரா இருக்கானாம். நல்ல சம்பளம். இவனுக்கு ரெண்டு பொண்ணுங்க, ஒரு பையன். ரெண்டு பொண்ணுங்களையும் கட்டிக் குடுத்துட்டா. இந்தப் பையன் நாலு வருஷமா சம்பாதிக்கிறான். வீட்டுக்காரர் பிசினஸ்! சொந்த வீடு, கார்னு எல்லா வசதிகளோடவும் இருக்கா.

    சரிம்மா!

    என்னைப்பற்றி விசாரிச்சா! நம்ம தீபாவும் பிரைவேட் கம்பெனியில நல்ல சம்பளத்துல இருக்கான்னு சொன்னேன். உடனே ஜாதகம் கேட்டா. சாயங்காலமே தர்றேன்னு சொன்னேன். இப்பவே வீட்டுக்கு வந்து வாங்கிக்கிறேன்னு கையோட வந்துட்டா. காபி குடிச்சா. அவளுக்கே நல்லா ஜாதகம் பார்க்கத் தெரியும். பார்த்தா. பிரமாதமா பொருந்தியிருக்குன்னு சொன்னா! நம்ம தீபாவோட போட்டோ பார்த்தா, ரொம்ப புடிச்சுப் போச்சு. வீட்ல விவரத்தை சொல்லிட்டு வெள்ளிக்கிழமையே பெண் பார்க்க வர்றதா சொல்லிட்டா.

    ரொம்ப வேகமா நடக்குதே!

    பையன் இங்கே மவுண்ட் ரோடு சிட்டி பேங்க் கிளைவு அதிகாரி. இவளுக்கு வீடு, நம்ம வீட்லேர்ந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் தான். எல்லாம் அம்சமா பொருந்தியிருக்கு!

    சரி அப்பாவை பற்றிச் சொன்னியா?

    அவ கேட்டா உங்கப்பா வாலன்டரி ரிடையர்ன்மென்ட் வாங்கிட்டதா சொன்னேன்.

    அவர் வேலைக்கே போகலையேம்மா.

    சரிடீ அந்த விஷயம் நமக்கு தெரியும். வெளிய சொல்லிட்டிருக்க முடியுமா? பிஸினஸ் பண்றார்னு சொல்லி வச்சிருக்கேன்.

    அடக்கஷ்டமே என்ன பிஸினெஸ்?

    நான் ஊறுகாய், அப்பளம், சிப்ஸ் எல்லாம் செஞ்சு விக்கலையா? அதை நாங்கன்னு மாத்திக்க வேண்டியது தான்!

    சித்ரா பேசவில்லை.

    மீனாட்சி கடுமையான உழைப்பாளி. கங்காதரன் அவள் கணவன். உதவாக்கரை! மீனாட்சியை அந்த காலத்தில் பொய் சொல்லி கல்யாணம் செய்தவர் கல்யாணம் நடந்த பிறகு மீனாட்சி பட்டபாடு கொஞ்சமில்ல! அவரைத் திருத்த முயன்று தோற்றே போனாள்!

    முதல் பத்து வருடங்களுக்கு பிறந்த வீட்டின் தயவில்தான் மீனாட்சி வாழ்ந்தாள்!

    அதற்குள் சித்ராவுக்கு எட்டு வயதும், தீபாவுக்கு நாலு வயதும் ஆகி விட்டது!

    கங்காதரனைப் போல ஒரு உதவாக்கரை ஊரில் இருக்க முடியாது! வறட்டு ஜம்பம், முன்கோபம், வெட்டிப் பெருமை, பிடிவாதம் தவிர சகல கெட்ட குணங்களும் உண்டு.

    ஆள் நல்ல வெள்ளை நிறத்தில் ஆறடி உயரத்தில் மன்மதனைப் போல் இருப்பார். ஐம்பது கடந்தும் அதே வசீகரம் போகவில்லை! மீனாட்சி மயங்கியது அதில் தான்!

    மீனாட்சி மட்டுமில்லை, வேறு சில பெண்களுடனும் தொடர்பு உண்டு! அதெல்லாம் விவகாரமாகி, போலீஸ் வரை போய் வெளியே கொண்டு வந்து களேபரமான கதை பெரிய கதை. மீனாட்சி படாத டார்ச்சர் இல்லை!

    இனி பிறந்த வீட்டின் தயவில் வாழ்ந்தால் கேவலம் என உணர்ந்து மீனாட்சியே களத்தில் இறங்கி விட்டாள்!

    தாலிக் கொடியை விற்று மூலதனம்.

    அதிகபட்சம் நூறு பேர் சாப்பிடலாம். வாய்க்கு ருசியாக மீனாட்சி சமைத்துப் போட்டதால் கூட்டம் வந்தது!

    அதோடு ஊறுகாய், அப்பளம், சிப்ஸ், முறுக்கு, அதிரசம் போன்றவைகளை தயாரித்து விற்பனை செய்தாள்!

    பொடி வகைகளும் உண்டு!

    அதில் வந்த வருமானத்தில் இரண்டு பெண்களும் வளர்ந்தார்கள்! படித்தார்கள்!

    அதை சரியாக நடத்த விடாமல் கங்காதரன் கொடுத்த டார்ச்சர் கொஞ்சமல்ல.

    ஒரு கட்டத்தில் தெருவும், வாடிக்கையாளர்களும் பக்கபலமாக நின்று மீனாட்சியை ஆதரிக்க, கங்காவின் ஜம்பம் சாயவில்லை!

    இனி உதைபடுவோம். விவகாரம் போலீஸ் வரை போகும் என்ற பயம் வந்து விட்டது!

    ஏற்கனவே பல தப்புகள்!

    மாட்டிக் கொண்டால் வெளியே எடுக்கக்கூட ஆட்கள் இல்லை!

    அடங்கி விட்டார் கங்கா!

    மீனாட்சியும் தாலிக்கு மதிப்பு கொடுத்து விரட்டாமல் ஆதரவு கொடுத்து வந்தாள்!

    பெண்கள் இருவருக்கும் சுத்தமாக அப்பாவை வெறுத்து விட்டது! அம்மா படும்பாடு வேதனை தந்தது!

    மீனாட்சியும் அழகாக வனப்பமாக இருப்பாள். அதனால் சந்திக்க நேர்ந்த இடையூறுகள் கொஞ்ச நஞ்சமில்லை!

    கணவன் உறுதியாக இருந்தால் யாரும் நெருங்க முடியாது! இங்கே அது இல்லாமல் போனதால் பிரச்சனைகள் அதிகமாக இருந்தது!

    ஆனாலும் மீனாட்சியும் விடவில்லை போராடத் தயங்கவில்லை!

    தனி ஒருத்தியின் உழைப்பால் பெண்களை நல்ல நிலைக்கு கொண்டு வந்து விட்டாள்!

    சித்ராவுக்கு நல்ல வரன் பார்த்து கல்யாணம் செய்து கொடுத்தாள். சித்ராவுக்கு மத்திய அரசாங்க உத்யோகம். பட்டதாரி. கை நிறைய சம்பளம். கணவனும் நல்ல நிலையில் இப்போது மூன்று வயதில் ஒரு குழந்தை!

    ஆனால் பிறந்த வீட்டுக்கு சித்ராவால் உதவ முடியவில்லை!

    உதவ அவர்கள் விடவில்லை.

    நீ சந்தோஷமா வாழ்ந்தாப் போதும். நான் சமாளிச்சுக்கறேன்! அதேப்போல இந்த நாலு வருடங்களில் சித்ராவின் கல்யாணக் கடன்களை அடைத்து விட்டாள்! இதோ இப்போது தீபா! அவளும் கை நிறைய சம்பாதிக்கிறாள்!

    அம்மா வரன் பார்த்துட்டியே பணமிருக்கா?

    கொஞ்சம் இருக்கு சித்ரா. பாதிக்கு மேல் கடன் தான் வாங்கணும்!

    தீபா சம்பளமும் போயிடுமேம்மா! நீ போராடணும்!

    இத்தனை நாட்கள் என்ன செஞ்சேன். போராட்டம் எனக்கு புதுசா? காலாகாலத்துல அவளையும் கட்டிக் குடுத்துட்டா, நிம்மதியா இருக்குமே!

    அம்மா இனி உழைக்க உன் உடம்புல தெம்பு இருக்கா?

    உழைச்சுத்தான் ஆகணும். முதலாவதா கடன் அடைக்கணும். அடுத்தபடியா என்னை நம்பி நூறு பேர் சாப்பிட இருக்காங்க! அவங்களை நான் விட முடியுமா?

    நான் ஏதாவது செய்யறேன்மா

    புரியலை

    லோன் போட்டா பிடித்தம் போக கணக்கு காட்டணும்!

    பைலை வித்ட்ராவில போட்டு மூணு லட்ச ரூபாய் நான் தர்றேன்மா!

    உன் புருஷனுக்கு சொல்லாமலா?

    என்னம்மா பேசற நீ? சொன்னா தர விடுவாரா? உனக்கு அவரைப் பற்றி தெரியாதா? அப்பா உதவாக்கரை! இவர் கஞ்சன். நானும் சந்தோஷமா இல்லைமா

    "தப்பும்மா. எனக்கு செஞ்சாத்தான் உன் சந்தோஷம் அடிபடும்! இல்லைன்னா

    Enjoying the preview?
    Page 1 of 1