Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thoguthi Pangeedu
Thoguthi Pangeedu
Thoguthi Pangeedu
Ebook103 pages49 minutes

Thoguthi Pangeedu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த சங்கதி தொடங்கி முப்பது வருஷ காலம் ஆகிவிட்டது. பணம், பதவி, சொத்துக்கள் முக்கியம்தான்! ஆனால் பொறுப்பு, பாசம், கடமை என்பதை மறந்து அடுத்தவர் முதுகில் சவாரி செய்ய நினைக்கும் இன்றைய தலைமுறைக்கு இந்தக் கதை மிகவும் அவசியம்!

அன்புடன், தேவிபாலா

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603999
Thoguthi Pangeedu

Read more from Devibala

Related to Thoguthi Pangeedu

Related ebooks

Reviews for Thoguthi Pangeedu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thoguthi Pangeedu - Devibala

    http://www.pustaka.co.in

    தொகுதி பங்கீடு

    Thoguthi Pangeedu

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    நாவல் பற்றி...

    இந்த சங்கதி தொடங்கி முப்பது வருஷ காலம் ஆகிவிட்டது. பணம், பதவி, சொத்துக்கள் முக்கியம்தான்! ஆனால் பொறுப்பு, பாசம், கடமை என்பதை மறந்து அடுத்தவர் முதுகில் சவாரி செய்ய நினைக்கும் இன்றைய தலைமுறைக்கு இந்தக் கதை மிகவும் அவசியம்!

    அன்புடன்,

    தேவிபாலா

    *****

    1

    குறிப்பு: கண்டிப்பாக இது அரசியல் தொடர்பான கதைதான்... ஆனால், நீங்கள் எதிர்பார்க்கும் நாட்டு அரசியல் அல்ல... வீட்டு அரசியல். இங்கும் உச்சக்கட்ட குழப்பம், ஓரவஞ்சனை, சுயநலம். எல்லாம் நிறையவே உண்டு!

    ராமலிங்கம், ஓய்வு பெற்ற அரசாங்க அதிகாரி. அவரது மனைவி லோகேஸ்வரிக்கு வங்கிப் பணி. இந்த வருடம் பணி நிறைவு.

    மூத்த மகன் சம்பத். 'ஐ.டி.' நிறுவனத்தில் வேலை. அவனது மனைவி இன்பா, கல்லூரி விரிவுரையாளர். அவர்களுக்கு இரண்டும் பெண் குழந்தைகள்.

    அடுத்தவள் சங்கவி. வேலைக்குப் போக பிடிக்காமல், அதற்காக மெனக்கெடாமல். ஆனால், படித்து கொஞ்ச நாள் வேலைக்குப் போய் இப்போது போகாதவள். அவள் கணவன் மகேஷ், தனியார் நிறுவனத்தில் வேலை. ஒரே பையன். வயது நான்கு.

    மூன்றாவது கவிதா. சமீபத்தில் கல்யாணமான கடைக்குட்டி. 'பி.பி.ஓ.’வில் வேலை. கணவர் எந்த இடத்திலும் நிலைக்காமல், கூடு விட்டு கூடு பாயும்-பொறுப்பு குறைவான சுனில்.

    இதுதான் குடும்பம்!

    ராமலிங்கம் தன் கடமையில் - குறை வைக்கவில்லை. பிள்ளைகளையும் ஆளாக்க பாடுபட்டவர். இருவரும் வேலைக்குப் போனதால், தொடக்க நாளில் இருந்தே பணப் பிரச்சினை இல்லை. 'லோன்' போட்டு. வீடும் கட்டிவிட்டார்.

    சென்னை தாம்பரம் பக்கத்தில் 30 வருடங்களுக்கு முன்பு முப்பதாயிரம் ரூபாய்க்கு ஒரு 'கிரவுண்டு' நிலம் கிடைத்தது. அப்போது அந்த இடம் பொட்டைக் காடாக இருந்தது. அதில் ராமலிங்கம் ஆயிரத்து ஐநூறு சதுர அடிக்கு வீடு கட்டும்போது... உறவும், நட்பும் எதிர்த்தது.

    'இந்த இடம் முன்னேறாது' என சாபம் விடாத குறைதான்!

    இரண்டு பேரும் ‘டூ வீலரில்' 3 கிலோ மீட்டர் பயணித்து ‘பஸ் ஸ்டாப்புக்கு வந்தால், அங்கே ஒரு 'ஸ்டாண்டில்' 'மொபட்’டை விட்டுவிட்டு பஸ் பிடிப்பார்கள். வீடுதிரும்பும்போது, இரவு ஏழு மணி கடந்துவிடும். ராமலிங்கத்தின் அம்மா கொஞ்ச நாளும், லோகேஸ்வரியின் அம்மா கொஞ்ச நாளும் பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டார்கள்.

    அதற்கே ஆயிரம் பேச்சு!

    அதெல்லாம் கடந்து வந்தாகிவிட்டது.

    அந்த செந்தில்நகர் இன்று பிரமாதமாக வளர்ந்து, பக்கத்து தெரு வரை பேருந்து வருகிறது

    அதே தெருவில் ஏகப்பட்ட கடைகள், ஓட்டல், நாலு முனை ரோட்டில் ஒரு 'காம்ப்ளக்ஸ்' தியேட்டருடன்...

    என்ன இல்லை?

    பிரமாதமாக வளர்ந்துவிட்டது அந்தப் பிரதேசம். பிள்ளைகளும் வளர்ந்து, 3 பேருக்கும் கல்யாணமாகி... இன்று குடும்பம் நல்ல நிலைக்கு வந்துவிட்டது.

    நாலு வருடங்களுக்கு முன்பு... சம்பத் தனியாக வீடு கட்ட ஆசைப்பட்டான். மனைவி இன்பாவின் உந்துதல்.

    எதுக்குடா சம்பத்? நம்ம வீட்ல தாரளமா இடம் இருக்கு எதுக்கு இன்னொரு வீடு?

    அத்தே! நாங்க சம்பாதிக்கிறோம். எங்களுக்குன்னு சொத்து வேணுமில்லையா? என்றாள் மருமகள்.

    இந்த வீட்ல மூணுல ஒரு பங்கு அவனோடதுதானே இன்பா?

    அது இருக்கட்டும்... எங்களுக்கும் ஒண்ணு அவசியம்தான்!

    அப்பா குறுக்கிட்டார்.

    அவங்க சொல்றதும் நியாயம்தான்... வாங்கட்டும். தடுக்காதே!

    சரிங்க.

    அவர்கள் கிண்டிக்குப் பக்கத்தில் இடம் பார்த்தார்கள். 'வில்லா டைப்' வீடு அப்போதே 80 லட்சத்துக்கு வந்தது. நாலு படுக்கை அறையுடன் சகல வசதிகளும் கொண்டது.

    'லோன்' போட்டு வாங்கலாம் எனக் கணக்கிட்டார்கள்.

    சம்பத்துக்கு கல்யாணமாகி இருவரும் சம்பாதித்தாலும்... ராமலிங்கம், குடும்ப 'பட்ஜெட்'க்கு - கணக்கு பார்க்கவில்லை.

    'அவன் தருவதை தரட்டும்' என்றுவிட்டுவிட்டார்.

    ராமலிங்கம்-லோகேஸ்வரி வருமானத்தில்தான் வழக்கம் போல் குடும்பம் நடந்தது-

    மூத்தவள் சங்கவிக்கு முழுக்க முழுக்க ராமலிங்கம்தான் செலவழித்துக் கல்யாணம் செய்தார். மகனை எதிர்பார்க்கவில்லை. அடுத்தவள் கவிதாவுக்கு கல்யாணம் வரும்போது பணப் பற்றாக்குறை இருந்தது. அம்மா லோகேஸ்வரி தன்னிடம் இருந்த 25 சவரன் நகைகளை போட்டுவிட்டாள். 2 பேரும் எல்லாவித கடன்களையும் வாங்க... தன் சேமிப்பில் இருந்தும் சம்பத் 20 லட்சம் பணம் எடுத்துத் தந்தான்.

    அதற்கே இன்பா முனகினாள்.

    அந்தப் பணம் இருந்தா, நாம வாங்கற வீட்டுக்குக் கட்டலாம் இல்லே?

    நான் இந்த வீட்டுக்கு மூத்த பையன். எனக்கும் கொஞ்சம் பொறுப்பு இருக்கு இன்பா. ரெண்டு பேரும் ஆறு வருஷமா சம்பாதிக்கிறோம். அப்பாதான் எல்லா செலவுகளையும் பார்த்துக்கிறார். நாம பேசாம இருந்தா அசிங்கம்.

    அவள் பதில் பேசவில்லை.

    கடன் வாங்கி வீட்டை பதிவு செய்துவிட்டார்கள்.

    Enjoying the preview?
    Page 1 of 1