Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poruppai Sumakkanum!
Poruppai Sumakkanum!
Poruppai Sumakkanum!
Ebook127 pages1 hour

Poruppai Sumakkanum!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603154
Poruppai Sumakkanum!

Read more from Devibala

Related to Poruppai Sumakkanum!

Related ebooks

Reviews for Poruppai Sumakkanum!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poruppai Sumakkanum! - Devibala

    http://www.pustaka.co.in

    பொறுப்பை சுமக்கணும்!

    Poruppai Sumakkanum!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    அடுத்தமாதம் அப்பா வாகீசனுக்கு ரிடையர்மெண்ட்! அறுபது வயது முடியப்போகிறது! தனியார் நிறுவனமொன்றில் கிட்டத்தட்ட முப்பத்தி எட்டு வருஷ சர்வீஸ்! அன்றைக்கு அவரது படிப்பு வெறும் எஸ்.எல்.சி.தான்! டைப்பிங் ஷார்ட் ஹேண்ட்! அப்போது கம்ப்யூட்டர் எல்லாம் இல்லை!

    தனது 22 வயது பருவத்தில் வேலைக்குச் சேர்ந்தார் வாகீசன்! 1979 ஆம் வருடம் அந்தப் பெரிய கம்பெனியில் பெரும் சிபாரிசுடன் வேலைக்குச் சேர்ந்தார். அவரது ஆரம்பச் சம்பளம் வெறும் எண்ணூத்தி நாப்பது ரூபாய்! வீட்டில் அப்பா பள்ளிக்கூட வாத்தியார். அம்மா குடும்பத்தலைவி! இரண்டு அக்கா- ஒரு தங்கை - ஒரு தம்பி!

    முதல் அக்காவின் கல்யாணம் - பிரசவம் எல்லாம் அப்பாவே பார்த்துவிட்டார். 2வது அக்காவின் கல்யாணத்துக்கு நிறைய கடன்வாங்கி அவளது முதல் பிரசவ நேரம்தான் வாகீசனுக்கு இந்த வேலை!

    அப்பா ஓய்வு பெற்றுவிட்டார்! அவருக்கு பென்ஷன் இல்லை. அதனால் பாதிக்கடன் பாக்கியிருந்தது!

    அம்மாவின் நகைகள் அத்தனையும் விற்றாகிவிட்டது! வாடகை வீடு!

    அக்காவை பிரசவம் முடிந்து ஒரு வழியாக அனுப்பியாகிவிட்டது! அப்பா, அம்மா 12-வது படிக்கும் தங்கை - எட்டாவது படிக்கும் தம்பி! ஐந்து ஜீவன்கள். வாகீசன் கொண்டு வரும் சம்பளம்! எப்படி போதும்!

    குடும்பம் திணறியது!

    அன்று ஆரம்பித்த கஷ்டம்தான்! வேலைதவிர பார்ட் டைம் வேலை!

    அம்மா விட்டளவில் நடத்திய மெஸ்! 12-வது படித்த தங்கை, ஒரு கார்மெண்ட் பேக்டரியில் சேர்ந்து கொஞ்சம் சம்பாதித்தாள்.

    அடுத்த ஆறு வருடங்களில் அவளது கல்யாணம் - அப்பா- அம்மாவின் மரணம் - தம்பியின் கல்லூரி படிப்பு!

    வாகீசனைப் போல கஷ்டப்பட்டவர்கள் யாருமே இல்லை! ஒரு சந்தோஷமும் இல்லை. போட்டுக் கொள்ள நல்ல ட்ரஸ் இல்லை! ருசியான சாப்பாடு இல்லை!

    எப்போதும் மோசமான ரேஷன் அரிசி!

    எதற்கும் வாகீசன் சலித்துக் கொள்ளவில்லை.

    தம்பி எம்.காம் முடித்து வேலை கிடைத்ததும் கொஞ்சம் மூச்சு விட முடிந்தது. அவன் சம்பாதிக்கத் தொடங்கும் போது வாகீசனுக்கும் சம்பளம் உயர்ந்தது மூவாயிரம் ரூபாய் வரை வந்துவிட்டார்.

    டிபார்ட்மெண்ட் பரீட்சை எழுதியதால் வந்த பதவி உயர்வு!

    வாகீசனுக்கு வயது 34 ஆகும்போது வீட்டில் அவரும் தம்பியும்தான்!

    தம்பி வேலைக்குப் போகும் இடத்தில் ஒரு பெண்ணை காதலிக்கத் தொடங்கி, அது அண்ணன் வரை வர, மற்ற உடன் பிறப்புக்களையும் அழைத்துப் பேசி, கல்யாணமும் நடந்துவிட்டது!

    தம்பி, மாற்றலாகி அவள் இருக்கும் அகமதாபாத்துக்கு போய் விட்டான்! இங்கு வாகீசன் மட்டும் தனி!

    கடன், கஷ்டங்களோடு வாழ்ந்தாலும், உறவுகளோடு வாழ்ந்த போது கஷ்டம் தெரியவில்லை! சகலமும் போய் இன்று தனி மரமாக நிற்கும் போது தானும் வாழ வேண்டும் எண்ணம் வாகீசனுக்கு வந்துவிட்டது!

    இரண்டு சகோதரிகளும் சேர்ந்து வரன் பார்த்தார்கள்.

    இப்போது நல்ல சம்பளம் - கடன் இல்லாத வாழ்க்கை!

    வரன்கள் அமையவில்லை.

    இந்த நேரம்தான் அமிர்தா அறிமுகமானாள். வாகீசனின் வீட்டுக்கு அடுத்த தெருவில் ஒரு சின்ன மெஸ் உண்டு! பெரும்பாலான நாட்கள் வாகீசன் அங்குதான் சாப்பிடுவார்.

    காலை டிபன் முதல் இரவு உணவு வரை எல்லாம் உண்டு. ருசியான உணவு! நல்ல கூட்டம் கூடும். ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள்.

    நியாயமான விலை, நல்ல ருசி - சுகாதாரமான உணவு!

    நடத்துவது அலமேலு என்ற அம்மாவும் அவரது மகள் அமிர்தாவும். கடந்த ஒரு வருசமாக வாகீசனுக்கு பழக்கம்!

    இவரைப்பற்றி அவர்களுக்கும் நன்றாகத் தெரியும்!

    கணவனை இழந்த அலமேலு, தன் மகள் அமிர்தாவை வளர்க்க பாடுபட்டவள்.

    அமிர்தா பட்டதாரி! படிப்பு முடிந்து வேலைக்குப் போனாள்.

    காதலித்து செந்திலை மணந்தாள்.

    ஒரு குழந்தையை - பெண் குழந்தையை- தந்து விட்டு அதன் ஒரு வருடம் முடிந்ததும்- விபத்தில் காலமானான் செந்தில்!

    அமிர்தா நல்ல பெண்! விபத்து அவள் வாழ்க்கையை புரட்டிப் போட்டது!

    தெளிந்து விட்டாள். அரசாங்க உத்யோகம் இருந்ததால் வேலைக்கு போகத் தொடங்கிவிட்டாள்.

    தாமதமாகத்தான் காதல் கல்யாணம்.

    2 வருடங்கள் கழித்துத்தான் பெண் குழந்தை!

    ஆனால் முப்பது வயதில் விதவை ஆவது கொடுமை! நடந்து விட்டது! அலமேலு, மெஸ், பேத்தி இரண்டையும் பராமரித்தபடி எந்திரமாக ஓட, அமிர்தாவும் ஆபீசிலும், மெஸ்ஸிலும் கடுமையாக உழைத்தாள்.

    ஒரு வருடமாக அவர்களை கூர்ந்து கவனித்து வந்தான் வாகீசன்!

    அமிர்தா களையாக, நல்ல நிறத்துடன் வசீகரமாக இருப்பாள். மெஸ்ஸிற்கு வரும் ஆண்கள் பலர் அவளை முயற்சி செய்ததுண்டு! அவள் நெருப்பாக இருந்ததால், நெருங்க முடியவில்லை! இப்போது விதவையாகி விட்டதால், இன்னும் தொந்தரவுகள் கூடத் தொடங்கின!

    உள்ளூர் அரசியல்வாதி - செல்வாக்கு உள்ளவன் - அவனுக்கு அமிர்தாவின் மேல் கண்! அவளை தன் வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளும் விருப்பத்தை கூசாமல் கேட்டு, அமிர்தா அவனை அறைந்து, அது பெரிய பிரச்சினையாகி, அவனது அராஜகம் தலை விரிக்க, அமிர்தா போலீஸ் வரை போக, உள்ளூர் போலீஸ் அவனது கைப்பாவையாகி பிரச்சனை பெரிதாக, மகளிர் இயக்கத்துக்குள் அமிர்தா நுழைந்து, மீடியாவரை போக, கணவனை இழந்த பெண்ணை மானமாக வாழவிடாமல் தொல்லை தரும், செல்வாக்குள்ள காம கொடூரன்களை அடக்க யாராலும் முடியாதா என விவாதம் வைத்து, அவனை அடித்து நொறுக்காத குறையாக பெண்கள் இயக்கம் கூடி, அவன் நொந்து ஊரை விட்டே போகும்படி ஆகிவிட்டது!

    அலமேலு நடுங்கி விட்டாள்.

    ரெண்டு பொம்பளைங்க, ஒரு பச்சக் குழந்தையோட மானமா பிழைக்க முடியாதா? எல்லாம் வெளியில் தெரிஞ்சு போச்சே! நம்மை வாழ விடுவாங்களா? மெஸ்ஸை நடத்த முடியுமா?

    நீ பயப்படாதேம்மா! நடத்த முடியும்! அவனை ஊரை விட்டே விரட்டியாச்சு!

    பகை கொண்டு திரும்பி வந்தா!

    "அடிச்சே கொல்லுவாங்க! அம்மா! இந்த மாதிரி நாய்களுக்கு பயமே படக்கூடாது! நல்ல நிறமும் வசீகரமும்

    Enjoying the preview?
    Page 1 of 1