Naathanar!
By Devibala
3/5
()
About this ebook
நாத்தனார் என்ற உறவு உலகம் முழுக்க பிரசித்தம், இந்தப் பேருக்கு பொருள் என்ன? நாத்தமெடுத்த குணமும், நாறிப் போன மனமும் கொண்டு, வாழ வரும் சகோதரன் மனைவியை கண்ணீர் வடிக்கச் செய்யும் ராட்சஸி - இது உலக மொழி அல்ல. பாதிக்கப்பட்ட நம் சகோதரியின் நொந்து போன இதயத்திலிருந்து வெளி வந்த வார்த்தை இனி கதை!
- தேவிபாலா
Read more from Devibala
Koottai Kalaikkatheenga Rating: 0 out of 5 stars0 ratingsTheeyodu Vilaiyadum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsMundhanai Pandhal Rating: 0 out of 5 stars0 ratingsThurathi Varum Dhurogam Rating: 4 out of 5 stars4/5Kanney Varuvaya? Rating: 5 out of 5 stars5/5Enakku Mattumthaan! Rating: 0 out of 5 stars0 ratingsNenje Unnidam Rating: 0 out of 5 stars0 ratingsVizhikul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsBathil Mariyathai Rating: 5 out of 5 stars5/5Irumbu Changili Rating: 0 out of 5 stars0 ratingsKodi Kodi Aasai Rating: 0 out of 5 stars0 ratingsKaaladiyil Poomalai Rating: 0 out of 5 stars0 ratingsAmma Gondu…! Rating: 5 out of 5 stars5/5Naan Uppa? Sarkkaraiya? Rating: 0 out of 5 stars0 ratingsAthuvarai Poruthiru! Rating: 0 out of 5 stars0 ratingsInikkum Ilamai Rating: 5 out of 5 stars5/5Unakkum Vazhvu Varum Rating: 0 out of 5 stars0 ratingsKaanikkai Rating: 5 out of 5 stars5/5Panam, Penn, Pathavi! Rating: 0 out of 5 stars0 ratingsUnakku, Neethan Neethipathi! Rating: 0 out of 5 stars0 ratingsKana Kanum Kangal Rating: 3 out of 5 stars3/5Udaney Vaazha Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsManithan Paathi! Mirugam Paathi! Rating: 0 out of 5 stars0 ratingsMounamthan Pesiyatho Rating: 0 out of 5 stars0 ratingsChakkalathi Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Vittal Yarumillai! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Naathanar!
Related ebooks
Kadhal Vedham Rating: 5 out of 5 stars5/5Kalyana Valaiyosai Rating: 0 out of 5 stars0 ratingsKowsalya! Rating: 0 out of 5 stars0 ratingsKarpoora Kanavukal Rating: 4 out of 5 stars4/5Amma! Rating: 0 out of 5 stars0 ratingsKonjum Mainaakkale 2 Rating: 0 out of 5 stars0 ratingsPoorva Jenma Bandham Rating: 0 out of 5 stars0 ratingsMaavilath Thoranam Rating: 5 out of 5 stars5/5Paatha Poojai Rating: 0 out of 5 stars0 ratingsParijadha Poove! Rating: 0 out of 5 stars0 ratingsKai Serum Neram Rating: 0 out of 5 stars0 ratingsMelathaalam... Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathil Pootha Nila Rating: 0 out of 5 stars0 ratingsDurgastami Rating: 5 out of 5 stars5/5Kettathu Kidaikkum! Rating: 0 out of 5 stars0 ratingsMadiyil Saayum Neram Rating: 0 out of 5 stars0 ratingsVara Pirasaatham Rating: 5 out of 5 stars5/5Kanmaniye Kaadhalenbathu… Rating: 0 out of 5 stars0 ratingsOru Vazhi Paathai Rating: 0 out of 5 stars0 ratingsPazhagi Pakkanum! Rating: 0 out of 5 stars0 ratingsOru Vidhaiyin kathai! Rating: 0 out of 5 stars0 ratingsEnakku Mattumthaan! Rating: 0 out of 5 stars0 ratingsAvathum Pennaley...! Rating: 0 out of 5 stars0 ratingsPoonthenraley! Rating: 0 out of 5 stars0 ratingsYaar Intha Kalyani? Rating: 4 out of 5 stars4/5Kaaladi Mann Rating: 0 out of 5 stars0 ratingsVaira Kammal Rating: 5 out of 5 stars5/5Adukkalai Arasiyal Rating: 0 out of 5 stars0 ratingsPoruppai Sumakkanum! Rating: 0 out of 5 stars0 ratingsNenje Unnidam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Naathanar!
1 rating0 reviews
Book preview
Naathanar! - Devibala
http://www.pustaka.co.in
நாத்தனார்!
Naathanar!
Author:
தேவிபாலா
Devibala
For more books
http://www.pustaka.co.in/home/author/devibala-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
நாத்தனார்!
முன் குறிப்பு: நாத்தனார் என்ற உறவு உலகம் முழுக்க பிரசித்தம், இந்தப் பேருக்கு பொருள் என்ன? நாத்தமெடுத்த குணமும், நாறிப் போன மனமும் கொண்டு, வாழ வரும் சகோதரன் மனைவியை கண்ணீர் வடிக்கச் செய்யும் ராட்சஸி - இது உலக மொழி அல்ல. பாதிக்கப்பட்ட நம் சகோதரியின் நொந்து போன இதயத்திலிருந்து வெளி வந்த வார்த்தை இனி கதை!
1
அந்த பிரம்மாண்ட அம்மன் கோவிலில் தை வெள்ளிக்கிழமை மிகவும் பிரசித்தம்! பல விதமான வழிபாடுகளால் ஆலயம் நிரம்பியிருக்கும். எங்கு பார்த்தாலும் தாய்க்குலம்.
ஒரு பக்கம் அங்க பிரதட்சணம், மண் சோறு, தீ மிதி, தீச்சட்டி, மா விளக்கு, வேப்பிலைச் சேலை கட்டி வேண்டுதல், அலகு குத்துதல், பால் குடம் என பட்டியல் போட்டால் இந்தப் பக்கம் போதாது.
இந்த அன்னையை வேண்டிக் கொண்டால் உடனே நிறைவேறும் வேண்டிக் கொள்ள வரும் கூட்டம். வேண்டுதலை நிறைவேற்றும் பெண்கள் - நினைத்தது நடந்ததால் நன்றி சொல்ல வரும் தாய்க்குலம் என கூட்டம் அலைமோதும்.
ராகு காலத்தில் எலுமிச்சை மூடியில் நெய் விளக்கு துர்கைக்கு ஒரு பக்கம் பிரசாத விநியோகம்!
இந்திரா தன் அம்மா ருக்மணியுடன் உள்ளே நுழைந்தாள்.
நீ என்ன செய்யப் போறே?
இரு வர்றேன்!
இந்திரா அங்கிருந்து ஒரு வயதான பெண்மணியிடம் வந்தாள்.
அங்கப் பிரதட்சணம் செய்யணும்!
கூட்டமா இருக்கேம்மா!
செய்யக் கூடாதா?
தாராளமா எல்லாரும் நடமாடிட்டே இருப்பாங்க! ரொம்ப தாமதமாகும். வெயில் வந்தாச்சு! பிரகாரம் சுடும்!
பரவாயில்லை! செய்யறேன்! என்ன நடைமுறை?
சன்னதிக்கு போய் ஒரு அர்ச்சனை செய்! உன் வேண்டுதலை சொல்லு! அப்புறமா எலுமிச்சைல குங்குமம் தடவி, சூலத்துல குத்து! நேராப் போய் கொஞ்சம் மஞ்சளைப் பூசிட்டு, குளிச்சிட்டு ஈரத்தோட கொடி மரத்துக்கு வந்து வணங்கிட்டு ஆரம்பி. கூட யாராவது வந்திருக்காங்களா?
ம்! எங்கம்மா!
ரொம்ப விசேஷம்! என்ன பிரார்த்தனை?
இந்திரா பதில் சொல்லவில்லை.
வேண்டாம்னா சொல்லாதோ குழந்தை தொடர்பான வேண்டுதலா இருந்தா ஒரு மண்டல காலத்துல பலிக்கும்!
நன்றிமா!
அந்தம்மா சொன்னபடி செய்து, ஈரத்தோடு வந்து வேண்டினாள்.
மஞ்சள் சேலை கட்டியிருந்தாள்.
அம்மா! கூடவே வா!
மண்டியிட்டு உட்கார்ந்து பிறகு நமஸ்கரித்து கைகளை மேலே தூக்கி உருளத் தொடங்கினாள்.
வெள்ளி ராகு காலம் பத்தரை - பன்னிரெண்டு!
உருண்டு முடித்து ஆரம்பித்த இடத்துக்கு வர நாற்பது நிமிடங்கள் பிடித்தது! வெயில், ஈர உடம்பை சுட்டது! தலை சுழன்றது! முடிப்பதற்குள் மயக்கமே வந்து விட்டது!
உட்கார்ந்தாள்.
கொஞ்சம் தெளிந்த பிறகு எழுந்தாள். அம்மா ருக்மணி கலங்கிப் போனாள்.
அங்குள்ள பெண்களில் பலர்...
பாவம் அந்தப் பொண்ணு! எத்தனை கடுமையா உடம்பை வருத்திட்டு அங்கப் பிரதட்சணம் செஞ்சிருக்கா! அவ வேண்டுதல் நிச்சயமா பலிக்கும்!
இந்திரா முகம் குபீரென மலர்ந்தது.
பல பெண்களின் ஆசிகள். அந்தத் தெம்பில் எழுந்தாள்.
அம்மா கை கொடுத்தாள்.
அடுத்த வாரம் தீச்சட்டி எடுக்கப் போறேன்!
எதுக்குடி இத்தனை கடுமையான பிரார்த்தனை?
சொல்றேன்!
இரண்டு பேரும் வெளியே வர, ஆட்டோ இருந்தது. அதில் ஏறிக் கொள்ள புறப்பட்டது!
என்ன வேண்டுதல் இந்திரா!
வீட்டுக்குப் போய் குளிச்சு, டிரஸ் மாத்தின பிறகு சொல்றேன்மா!
எனக்குத் தெரியும்?
அனிருத் பிறந்து ஆறு வருஷங்களாச்சு! ரெண்டாவது குழந்தை பிறக்கணும்னு வேண்டுதலா?
பேசவில்லை!
குழந்தை தெடார்பான வேண்டுதல் தானே?
ஆமாம்!
அப்படீன்னா, ரெண்டாவது குழந்தைக்கான வேண்டுதல் தானே?
வீட்டுக்குப் போய் சொல்றேன்!
வீடு வந்து விட்டது! கொஞ்சம் உட்கார்ந்து விட்டு பிரகார மண், போக குளித்தாள்.
நைட்டியை அணிந்தாள்.
தலைவாரி பொட்டு வைத்துக் கொண்டாள்
அப்பா சாமிநாதன் உள்ளே வந்தார்.
காலைல ரெண்டு பேரும் எங்கே போயிட்டீங்க?
இந்திரா கோயிலுக்கு போகணும்னு கூட்டிட்டுப் போனா!
ஆனால் சீக்கிரமே வழக்கம் போல போயிட்டாள். நானும் மாப்ளை ரங்காவும் தான்! நீ சமைக்காம போயிட்டே!
ஏன் மருமகள் சோனியாகிட்ட சொல்லிட்டுத் தானே போனேன். அவ சமைக்கலியா?
சமைச்சா! வாய்ல வைக்க முடியலை! மாப்ளை முழுங்கி தொலைச்சிட்டு போனார். நான் சாப்பிடலை என் ருசி உனக்குத்தான் தெரியும்! நான் சொல்ற மெனுவைத் தான் நீ சமைப்பே! அவ என்னை கேக்காம தன் இஷ்டத்துக்கு சமைச்சிட்டா. நான் தொடுவேனா? பட்டினியா இருக்கேன்!
சோனியா ஆபீசுக்கு போயிட்டாளா!
போகாம இருப்பாளா! வீட்டை விட அவளுக்கு அது தானே முக்கியம்! குடும்பத்து மேல அக்கறை என்னிக்கு அவளுக்கு இருந்திருக்கு!
ருக்மணி உள்ளே போய் பார்க்க,
வீட்டில் உள்ள எல்லாருக்கும் சமையல் தயாராக இருந்தது.
சாம்பார், பொறியல், கூட்டு, ரசம் என சகலமும் இருந்தது!
அம்மா! சோனியா சமையல் அப்பாவுக்கு புடிக்காது! நான் சமைக்கறேன்!
இந்திரா வர,
நீ வேண்டாம்டா செல்லம். உங்கம்மா சமைக்கட்டும்!
பரவாயில்லைப்பா!
ஆமா! எதுக்கு கோயில்? ஏன் வந்ததும் இந்திரா குளிச்சா?
அங்கப்பிரதட்சணம் செஞ்ச மண் போக குளிச்சா! பத்தரை வெயில், ராகு காலத்துல செஞ்சா, கேட்டது கிடைக்குமாம் - பிரகாரம் கொதிக்குது!
என்னம்மா இது? நீ ஏன் அனுமதிச்ச?
சொல்லலையே! அங்கே போனதும் படக்குனு தொடங்கிட்டா வேண்டுதல தடுக்க முடியலை!
எதுக்கும்மா இத்தனை கடுமையான வேண்டுதல்?
அப்பா குரல் உருக, இந்திரா மவுனம் சாதிக்க,
நான் கேட்டதுக்கும் இதுவரைக்கும் சொல்லலை அடுத்த வாரம் தீச்சட்டி எடுக்கப் போறாளாம். நிச்சயமா 2-வது குழந்தைக்குத்தான்! அனிருத் பிறந்து ஆறு வருஷமாச்சே!
இந்திரா! 2வதுக்கு இத்தனை கடுமையான வேண்டுதலை யாரும் செஞ்சதா கேள்விப்பட்டதில்லை ஏன்மா?
இந்திரா திரும்பினாள்!
நான் சொல்றதை நீயும், அம்மாவும் புரிஞ்சுப்பீங்கனு நான் நம்பறேன்
இதை அவள் சொல்லும் நேரம், ஆபீசுக்கு போன மருமகள் - அதாவது இந்திராவின் தம்பி மனைவி சோனியா ஒரு முக்கிய பைலை எடுப்பதற்காக வீட்டுக்குள் நுழைந்தாள்.
சொல்லும்மா!
எனக்கு 2வது குழந்தை பிறக்குதோ இல்லையா... அது முக்கியமில்லை! சோனியாவுக்கு முதல் குழந்தையே பிறக்கக் கூடாது? அவ தாயாகக்கூடாது!
இந்திரா குரலில் வெறி இருந்தது! இதை அவள் சொல்வது ஒரு மாதிரி கூச்சலாக வெளிப்பட்டது!
குழந்தை தொடர்பா என்ன வேண்டிக்கிட்டாலும் அந்த அம்மன் தருவாளாமே. என் தம்பிக்கு வாரிசு வரக் கூடாது! அதுக்குத்தான் இந்த வேண்டுதல்!
அம்மா ருக்மணி மகளை நெருங்கினாள்.
ஓங்கி அறைந்தாள்.
பாவி! என்ன பேசுற நீ! நான் ரெண்டு பெத்தவ! நீயும் ஒரு பையனை பெத்திருக்கே! தாய்மை எத்தனை உன்னதமான பதவி! அது உன் தம்பி மனைவிக்கு வாய்க்கக்கூடாதுனு வேண்டிக்கற நீ ஒரு பெண்ணாடீ தாய்னு சொல்லிக்க உனக்கு அசிங்கமா இல்லை?
வாசலில்