Maavilath Thoranam
By Devibala
4.5/5
()
About this ebook
Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Read more from Devibala
Thurathi Varum Dhurogam Rating: 4 out of 5 stars4/5Mundhanai Pandhal Rating: 0 out of 5 stars0 ratingsBathil Mariyathai Rating: 5 out of 5 stars5/5Koottai Kalaikkatheenga Rating: 0 out of 5 stars0 ratingsKanney Varuvaya? Rating: 5 out of 5 stars5/5Enakku Mattumthaan! Rating: 0 out of 5 stars0 ratingsTheeyodu Vilaiyadum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsKaaladiyil Poomalai Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Changili Rating: 0 out of 5 stars0 ratingsNaan Uppa? Sarkkaraiya? Rating: 0 out of 5 stars0 ratingsAthuvarai Poruthiru! Rating: 0 out of 5 stars0 ratingsVizhikul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsNenje Unnidam Rating: 0 out of 5 stars0 ratingsKodi Kodi Aasai Rating: 0 out of 5 stars0 ratingsUdaney Vaazha Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsKaanikkai Rating: 5 out of 5 stars5/5Amma Gondu…! Rating: 5 out of 5 stars5/5Manithan Paathi! Mirugam Paathi! Rating: 0 out of 5 stars0 ratingsKana Kanum Kangal Rating: 3 out of 5 stars3/5Panam, Penn, Pathavi! Rating: 0 out of 5 stars0 ratingsIruttin Nizhalgal…! Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Vittal Yarumillai! Rating: 0 out of 5 stars0 ratingsChakkalathi Rating: 0 out of 5 stars0 ratingsUnakkum Vazhvu Varum Rating: 0 out of 5 stars0 ratingsUnakku, Neethan Neethipathi! Rating: 0 out of 5 stars0 ratingsInikkum Ilamai Rating: 5 out of 5 stars5/5Mounamthan Pesiyatho Rating: 0 out of 5 stars0 ratings
Related to Maavilath Thoranam
Related ebooks
நதிக்கரையோரம்! Rating: 0 out of 5 stars0 ratingsIndru Paathi Naalai Meethi Rating: 0 out of 5 stars0 ratingsKurai Ondrumillai Rating: 0 out of 5 stars0 ratingsParijadha Poove! Rating: 0 out of 5 stars0 ratingsAthikaalai Aanantham Rating: 0 out of 5 stars0 ratingsVeliyae Sonnal Vetkam Rating: 5 out of 5 stars5/5Nathikkaraiyoram Rating: 0 out of 5 stars0 ratingsInikkum Ilamai Rating: 5 out of 5 stars5/5Deepangal Aarathanai Rating: 0 out of 5 stars0 ratingsKavithai Arangerum Neram Rating: 0 out of 5 stars0 ratingsAdutha Idhazhil Mudiyum Rating: 0 out of 5 stars0 ratingsChakkalathi Rating: 0 out of 5 stars0 ratingsVaadagai Kanavu Rating: 4 out of 5 stars4/5Mayangum Vayathu Rating: 0 out of 5 stars0 ratingsIchai Kiligal Rating: 0 out of 5 stars0 ratingsKanavodu Sila Naal Rating: 0 out of 5 stars0 ratingsVasanthathai Nokki... Rating: 5 out of 5 stars5/5Kaal Muzhaitha Sirppam Rating: 0 out of 5 stars0 ratingsUnnodu Oru Naal Rating: 4 out of 5 stars4/5Poi Kaal Purushan Rating: 3 out of 5 stars3/5Nilavey Mugam Kattu Rating: 5 out of 5 stars5/5Ottrai Roja Rating: 5 out of 5 stars5/5Irandu Pengal Rating: 0 out of 5 stars0 ratingsOru Vazhi Paathai Rating: 0 out of 5 stars0 ratingsThevai Oru Devathai Rating: 5 out of 5 stars5/5Oomai Kuyil Rating: 0 out of 5 stars0 ratingsVaarisu Rating: 0 out of 5 stars0 ratingsKaal Raasi Rating: 0 out of 5 stars0 ratingsPurusha Nila Rating: 0 out of 5 stars0 ratingsNee Vanthu Aathari Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Maavilath Thoranam
2 ratings0 reviews
Book preview
Maavilath Thoranam - Devibala
http://www.pustaka.co.in
மாவிலைத் தோரணம்
Maavilaith Thoranam
Author:
தேவிபாலா
Devibala
For more books
http://www.pustaka.co.in/home/author/devibala
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
1
அ
லாரம் அடித்தது காலை நாலுமணிக்கு.
ராசி கண்களை விழித்தாள்.
திகுதிகுவென கண்கள் எரிந்தன. கஷ்டப்பட்டுத் திறந்தாள். எழுந்து உட்கார்ந்தாள்.
உடம்பு முழுக்க அடித்துப் போட்டதைப் போல வலித்தது. திரும்பிக் பார்த்தாள்.
தூளியில் குழந்தை ரேஷ்மா உறங்கிக் கொண்டிருந்தது. ஏறத்தாழ நள்ளிரவு ஒரு மணி வரை தூளி ஆட்டியிருக்கிறாள்.
அதுவரை குழந்தை தூங்கவில்லை!
அதன்பிறகு தூக்கம் பிடிக்க ரெண்டு மணி!
இதோ நாலு மணிக்கு அலாரம்!
எழுந்து போய் பல் தேய்த்து பிரிட்ஜ் திறந்து பால் கவர்களை வெளியே எடுத்தாள். கவரை முனை கத்தரித்து, பாத்திரத்தில் கொட்டி, அடுப்பில் வைத்தாள்.
அரிசி கழுவி குக்கரில் வைத்தாள்.
அவள் ஒருத்திக்கு மட்டும்தான் சாப்பாடு!
குழந்தை சாப்பிடும் அளவு ரொம்பக் கொஞ்சம்.
முதல் நாள் நறுக்கி வைத்திருந்த காய்கறி, பருப்பு வகையறாக்களை வைத்து குக்கரை மூடினாள்.
இதைவிடக் குறைவாக சமைக்க இனி முடியாது.
குளிக்கப் போனாள்.
தலையில் தண்ணீரைக் கொட்டிக் கொள்ளும் சமயம், குழந்தை அழும் சப்தம் கேட்டது.
‘அய்யய்யோ! எழுந்தாச்சா?’
ஆவசரமாகக் குளியலை முடித்துக் கொண்டு அரை குறையாக தலையைத் துவட்டி, பேருக்கு டவல் ஒன்றை மார்போடு சேர்த்து உடம்பில் சுற்றிக் கொண்டு தலைதெறிக்க வெளியே ஓடிவந்தாள்.
அதற்குள் ரேஷ்மாவின் அழுகை தூளிக்குள் உச்சப்பட்டிருந்தது.
கால்கள் வெளியே நீட்டியபடி, தூளியை விட்டு இறங்க எத்தனித்துக் கொண்டிருந்தது.
இருடா! தோ.. அம்மா வந்துட்டேன்!
ஓடிப்போய் எடுத்துக் கொண்டாள்.
"நீ தூங்கவே ராத்திரி ரெண்டு மணி அதுக்குள்ளே ஏம்மா எழுந்திருக்கிறே? தன் மேல் குழந்தையை அள்ளிப் போட்டுக் கொண்டாள்.
குழந்தையின் உடம்பில் சூடு தெரிந்தது.
நெற்றி, கழுத்து, கைகள் எனத் தொட்டுப் பார்த்தாள்.
ஜுரம் இருப்பது தெரிந்தது.
குக்கரை மட்டும் இறக்கி வைத்தாள்.
ஆறு மணியானதும், குழந்தைக்கு ட்ரஸ் போட்டு, தானும் அவசரமாக ஒரு சேலை மாற்றி, தலை வாரிக் கொள்ள கூட குழந்தை விடவில்லை! பேருக்கு ஏதோ செய்து கொண்டு வெளியே வந்தாள்.
கதவைப் பூட்டினாள்.
தெருக் கோடிக்கு வந்து ஆட்டோவை அழைத்தாள்.
ஜம்புலிங்கம் தெரு!
ரேஷ்மா அவள் தோளில் சாய்ந்தபடி லேசான உறக்கத்தில் இருந்தது.
டாக்டர் விஸ்வநாத் க்ளினிக் முன் ஆட்டோ நின்றது.
இந்த அதிகாலை நேரம் அவரது கன்சல்டேஷன் நேரமல்ல. குடும்ப நண்பர் என்பதால் மறுக்க மாட்டார்.
வேட்டி, ஜிப்பாவில் கொஞ்சம் தூக்கக் கலக்கத்தோடு இருந்த டாக்டர் குழந்தையைப் பரிசோதித்தார்.
தொண்டைல இன்ஃபெக்ஷன் இருக்கும்மா! அதான் ஜுரம். ஊசி போட்டு, மருந்து தர்றேன்!
அதை முடித்துக் கொண்டு அதே ஆட்டோவில் வீடு திரும்பினாள்.
மருந்தின் மயக்கத்தில் அமைதியாக உறங்கத் தொடங்கியது. ரெண்டு வயது ரேஷ்மா.
நேற்றைக்கு தாமதமாக அபீசுக்கு போனபோதே, பிரச்சனையாகிவிட்டது.
‘என்ன சொல்வது? நிச்சயம் மெமோ தந்து விடுவார்கள்.நுடவடிக்கை எடுப்பார்கள்.
ஒன்பது மணி அலுவலகம் எட்டாகிவிட்டது.
கூந்தலில் ஈரம் அப்படியே இருந்தது. துவட்டக்கூட நேரமில்லை.
ஆவசரமாகத் துவட்டி, வாரிப் பின்னலிட்டாள். பவுடர் போட்டு, பொட்டு வைத்துக் கொண்டாள்.
சேலை மாற்றிக் கொண்டாள்.
சாப்பாட்டை பாக்ஸில் போட்டு கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்.
ஒரு கூடையில் குழந்தைக்கு பால், பிஸ்கட், மருந்துகள், என சகலமும் சேகரித்துக் கொண்டாள்.
குழந்தையை தூளியில் இருந்து எடுத்து ஜட்டி போட்டு விட்டாள்.
கதவைப் பூட்டிக் கொண்டு படிகளில் இறங்கினாள்.
ஆட்டோ பிடித்து நேராக க்ரீச்சுக்கு வந்தாள்.
ஆயா எதிர்ப்பட்டாள்.
ஆயா! குழந்தைக்கு நல்ல ஜுரம். மருந்து கொடுத்திருக்கு! மத்யான மருந்து என்னல்லாம்னு சொல்றேன். கவனமாகக் கேட்டுக்குங்க!
யம்மா! கொஞ்சம் இரு! ஜுரம் வந்த குழந்தையை இங்கே விட்டுட்டா போறே?
வேறு வழியில்லை ஆயா!
வேலைக்குப் போற அம்மாக்கள் இருக்கற வரைக்கும் இது மாதிரி பச்சப்புள்ளங்களுக்கு நாதியில்லை! பொம்பளைகளுக்கும் மனசுல ஈரம் கொறஞ்சு போச்சு!
ஆயா! எனக்கும் மனசில்லைதான். ஏன் நிலைமை அப்படி! ஆபீஸ்லே ஆக்ஷன் எடுத்துடுவாங்க! புரிஞ்சுக்குங்க ஆயா!
சரி விட்டுட்டுப் போ! ரொம்ப அழுதா உனக்கு போன் போடறேன்!
ரேஷ்மா விழித்திருந்தது.
ஆயாவிடம் தந்தாள், அழுகையை ஆரம்பித்து விட்டது.
ராசி திரும்பிப் பாராமல் வாசல் வரை வந்துவிட, அழுகை அதிகமானது. ஆயா ஓடி வந்தாள்.
இரு தாயீ! குழந்தை மொகமெல்லாம் செவந்து போகுது! நில்லு யம்மா!
ராசி நின்றாள். குழந்தையை வாங்கி கொண்டாள்.
ஜுரம் இருக்கு கண்ணா! இந்த நேரத்துல விட்டுட்டுப் போகாதே! ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆச்குனா, வாழ்நாள் முழுக்க அழ வேண்டிவரும்!
குழந்தையோடு ஆபீசுக்கு வந்து விட்டாள்.
பத்து நிமிட லேட்!
இன்சார்ஜ் இருந்த அறைக்குள் நுழைந்தாள்.
நான் சொல்லியும் கேக்காம இன்னிக்கும் பத்து நிமிஷம் லே..
நிமிர்ந்தார்.
என்னம்மா? குழந்தையோட வந்து நிக்கறே?
ஜுரம் சார்! க்ரீச்ல விட்டுட்டு வரவழியில்லை! நான் போன்ல சொன்னா, பொய் சொல்றேன்னு உங்களுக்குத் தோணும்! அதான் கொண்டு வந்துட்டேன்! அழுகை அதிகமாகி, அட்மிட் பண்ணும்படி ஆயிட்டா, நான் ஆபீசுக்கு வர முடியாது சார்!
பேஷ்! நீ எனக்காகவா ஆபீசுக்கு வர்றே?
இல்லை சார்! எனக்காகத்தான் வர்றேன். இந்த ரெண்டு வயசுப் பச்சைக் குழந்தைக்காக வர்றேன். 24 வயசுல புருஷனையும் பறி கொடுத்துட்டு, இது மாதிரி ஒரு கைக் குழந்தையோட நிக்கற என் மாதிரிப் பெண்கள் சொந்தக் கால்ல நின்னுதானே சார் ஆகணும்!
ராசி..! உனக்கு யாருமே இல்லையா?
அவர் குரலில் இரக்கம் இருந்தது!
இல்லை சார்! பிறந்த வீடும் இல்லை! புகுந்த வீடும் எனக்கு இல்லை!
ஏன்மா?
காதல்! பாழாப்போன காதல்! எல்லாரையும் உதறிட்டு காதல்தான் உசத்தினு காலை வீசி வெளியே நடந்த இளமைத் திமிரு! அவருக்காக எல்லாரையும் தொலைச்சேன். குடைசியா அவரையே தொலைச்சிட்டு நிக்கறேனே!
ராசி! நீ வீட்டுக்குப் போம்மா!
தேங்க்யூ சார்!
குழந்தையைத் தோளில் சுமந்தபடி கண்ணீரோடு அவரது அறையைவிட்டு வெளியே வரும் அவளை பல ஜோடிக் கண்கள் கேள்வி சுமந்து பார்த்தன!
2
"இ
துவரைக்கும் நூறு பெண்களைப் பார்த்துட்டு யாரையும் பிடிக்கலைன்னு சொல்லிட்டே! பிடி குடுத்தே பேசமாட்டேங்குறே, என்னடா அர்த்தம் விக்ரம்?"
விக்ரம் ஷ_வுக்கு லேஸைக் கட்டிக் கொண்டிருந்தான்.
நிமிர்ந்தான்.
கல்யாணம் செஞ்சுக்கப் போறது நான்!
அதனாலே?
பெண்ணை நானே தேர்ந்தெடுத்துக்கறேன்!
இனிமேல்தான் தேர்ந்தெடுக்கப் போறியா? இல்லை, தேர்ந்தெடுத்தாச்சா!
நெனச்சேன்! இதப்பாருடி! நான் சொன்னப்ப, எம் பிள்ளை நான் கிழிச்ச கோட்டைத் தாண்டமாட்டான்னு சொன்னியே! நீ கோட்டை, புடவையை, ஜாக்கெட்டுனு இப்படி எல்லாத்தையும் கிழிச்சுகிட்டு ஒக்காரு இனிமே!
அம்மா அருகில் வந்தாள்.
என்னடா விக்ரம் இது? யாரந்தப் பொண்ணு!
ராசி
நம்ம ஜாதியா?
என் ஜாதி இல்லை? உன் ஜாதி!
விளையாடறியா?
என்னம்மா நீ? கல்யாணம்னா, ஓர் ஆணுக்கு, ஒரு பெண் வேணும்! வேறு என்ன வேணும்?
எனக்கு எல்லாம் வேணும்! உன்னைக் கஷ்டப்பட்டு படிக்க வச்சிருக்கோம்? நிறைய செலவு பண்ணியிருக்கோம்!
அதுக்குத்தான் சம்பாதிச்சுக் கொண்டு வர்றேனே!
இதப்பாரு! பொண்ணு நம்ம ஜாதியா இருக்கணும்! வேலைக்கு போகக்கூடாது? வரதட்சணை தரணும்! நகை நட்டுனு நிறையப் போட்டுட்டு வரணும்.
விக்ரம் படி இறங்கினான்.
என்னடா? நான் பேசறேன்! நீ போயிட்டே இருக்கே?
நேரமாச்சு! சாயங்காலம் மீதியைப் பேசிக்கலாம்!
பைக்கை