Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Irandu Pengal
Irandu Pengal
Irandu Pengal
Ebook90 pages1 hour

Irandu Pengal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கெளசிக் - ஷைலா காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு அவர்களின் குடும்பத்தில் நேர்ந்த பிரச்சனைகள் என்ன? நல்ல உள்ளம் கொண்ட விசுவாசத்துடன் வாழும் ஜானா சொன்னதை சாந்தா ஏற்றுக்கொண்டாளா? விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும் என்பதை இக்கதையின் மூலம் வாசித்து அறியலாம்.

Languageதமிழ்
Release dateJan 21, 2023
ISBN6580155608800
Irandu Pengal

Read more from Lakshmi

Related to Irandu Pengal

Related ebooks

Reviews for Irandu Pengal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Irandu Pengal - Lakshmi

    http://www.pustaka.co.in

    இரண்டு பெண்கள்

    Irandu Pengal

    Author:

    லக்ஷ்மி

    Lakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    1

    பத்து நாள் காய்ச்சலில் சாந்தா சருகாகப் போய் விட்டிருந்தாள்.

    தலைக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டு வீட்டில் மெல்ல நடமாடத் தொடங்கியவுடன் அவளது பொறுப்புகள் மலைபோல முன்னால் வந்து நின்று பயமுறுத்தின.

    மகன் கெளசிக்மீது அவள் தன் உயிரையே வைத்துக்கொண்டிருந்தாள்.

    கணவனது திடீர் மறைவுக்குப்பின், பத்து வயதுப் பிள்ளையைப் படிக்க வைத்து ஆளாக்க அவள் பட்டபாடுகள் - செய்த தியாகங்கள் எத்தனை?

    பாசமும் பரிவுமாக வளர்த்த தன் ஒரே பிள்ளையிடம் அவள் கொண்டிருந்த எதிர்பார்ப்புகள் எப்படித் தவிடுபொடியாகின?

    வயது காலத்தில் அவன் துணையைப் பெரிதும் நம்பிக்கொண்டிருந்த தாயை விட்டுவிட்டு மனைவியுடன் தனிக்குடித்தனம் செய்யப் புறப்பட்டு கௌசிக் வெளியேறி வருஷம் ஒன்றுக்குமேல் ஆகிவிட்டது.

    ஆனாலும் அந்த வேதனை பச்சை புண்ணாக இன்னமும் நெஞ்சை வலித்துக் கொண்டுதானிருந்தது.

    அண்ணா நகரில் வாடகை கொடுத்து அவன் ஒரு தனி ஃபிளாட்டில் குடியேறி விட்டிருந்தான்.

    அடையாறில் கடல் போன்றதொரு பெரிய வீட்டில் அவள் தன்னந்தனியே வசித்துக் கொண்டிருந்தாள்.

    மருமகள் ஷைலா அப்படி ஒன்றும் பெரிய இடத்துப்பெண் அல்ல.

    பற்றாக்குறை பட்ஜெட்டில் தவித்த நாராயணன் என்பவரின் நாலாவது மகள்.

    பெண்களைப் பெற்றாலும் மகராஜன் நாராயணன் ரொம்பக் கொடுத்து வைத்தவர்.

    எல்லோரையும் படிக்க வைத்து வேலைக்கு அனுப்பி விட்டிருந்தார்.

    வேலை செய்த இடத்தில் ஆளுக்கு ஒரு மாப்பிள்ளையைப் பெண்களே தேர்ந்தெடுத்துக்கொண்டு விட்டிருந்தனர்.

    ஆந்திரா, குஜராத்தி, கன்னடம் என்று ஆளுக்கு ஒரு மாநிலத்து மாப்பிள்ளையைப் பிடித்துக்கொண்டு விட்டிருந்தனர்.

    வரதட்சணை - சீர் என்ற எந்தச் செலவும் தந்தைக்கு வைக்கவில்லை.

    பெண்கள் சாமர்த்தியமாகப் பதிவுத் திருமணம் செய்துகொண்டு ஹைதராபாத், பாம்பே, டெல்லி என்று கணவர்களுடன் புறப்பட்டுப்போய் விட்டிருந்தனர்.

    கல்யாணத்திற்குப் பின்னரும் அவர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர்.

    தங்களது சம்பாத்தியத்திலிருந்து பெற்றவர்களுக்கு மூன்று பெண்களும் தொடர்ந்து பண உதவிசெய்து வந்தனர். நாராயணன் நிம்மதியாக வாழ்ந்தார்.

    மழை கொட்டிக்கொண்டிருந்த ஒருநாள். கெளசிக் முதல்முதலாக ஷைலாவை அவர்கள் வீட்டுக்குக் காரில் அழைத்துக்கொண்டு வந்தான்.

    போர்ட்டிகோவில் வண்டியை நிறுத்திவிட்டு மகன் யாரோ ஒரு இளம் பெண்ணுடன் இறங்குவதைக் கண்டதுமே சாந்தாவின் அடிவயிற்றில் பகீர் என்றதொரு உணர்வு ஏற்பட்டது.

    அம்மாவின் பேச்சிற்கு அடங்கிய பிள்ளை கெளசிக் யாரோ ஒரு பெண்ணோடு மேலே இடித்தபடி - பற்கள் எல்லாம் தெரியப் பலத்துச் சிரித்துக்கொண்டு... ஐயோ இதென்ன கூத்து... தாய் பார்த்ததுமே தவித்துப் போனாள்.

    மகன் அந்தப் பெண்ணைத் தாய்க்கு அறிமுகம் செய்து வைத்தான்.

    அம்மா! ஷைலா எங்க அலுவலகத்துக்குப் பக்கத்திலிருக்கிற வங்கியில் வேலை பார்க்கிறாள்... மென்று விழுங்கினான்.

    உட்கார் அம்மா! அரை மனதோடு உபசரித்து, சாந்தா வந்தவளைக் காலோடு தலைவரை கூர்ந்து கவனித்தாள்.

    கெளசிக்கின் தோள் அளவு உயரம் - ஒடிசலான உடல்வாகு - பளபளத்த கண்கள், பார்க்க பெண் லட்சணமாகத்தான் இருந்தாள். ஏறக்குறைய மகன் வயது இருக்கும் என்பது அவள் அனுமானம். ஒப்பனையில் மிகவும் இளையவள்போலக் காணப்பட்டாள். இறுக்கமாக அவள் அணிந்திருந்த ரவிக்கையின் கீழே தெரிந்த வயிறும் முதுகுப் பக்கமும் மெல்லிய ஊதா வண்ண ஷிபான் புடவை வழியே தங்கப் பாளமாக மின்னின.

    ஜானா, இரண்டு பேருக்கு டிபன் காப்பி எடுத்துண்டு வா...

    தன் சமையற்காரியிடம் சொல்லிவிட்டுத் திரும்புமுன் அம்மாவை முந்திக்கொண்டு நடையில் சந்தித்தான் பிள்ளை.

    ஷைலாவை உங்களுக்குப் பிடிச்சிருக்கா அம்மா! நம்ம ஜாதிப் பெண்தான். நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவள். புத்திசாலி - நல்லாப் பாடுவா-எனக்குப் பிடிச்சிருக்கு... சுருக்கமாகச் சொல்லிவிட்டான் மகன். உடலே சுருங்கிப்போனது போன்றதொரு உணர்வு சாந்தாவுக்கு.

    தங்கள் தகுதிக்கு ஏற்ற இடத்தில் ஜாதகப் பொருத்தத்துடன் சீரும் சிறப்புமாகப் பெண்ணைத் தேடி எடுக்க சல்லடை போட்டுக்கொண்டிருந்த சமயம் இப்படி ஒரு இடியா?

    பார்க்கலாம், அவசரப்படாதே... முணுமுணுத்தாள் சாந்தா.

    ஷைலாவை அவன் காதலிக்கிறான் என்று உணர்ந்துகொண்ட நிமிஷமே அவளால் அந்தப் பெண்ணை சிநேகபாவத்துடன் பார்க்கவே பிடிக்கவில்லை.

    ‘மந்திரம் மாயம் செய்து அவளது பிள்ளையைத் தன் கைக்குள் போட்டுக்கொண்டு விட்டாள் பாவி...’ என்று ஒரு ஆங்காரம் நெஞ்சில் நெருப்பாக எரிந்தது.

    ஜானா கொண்டு வந்து சாப்பாடு மேஜையில் பரிமாறிய ரவா

    Enjoying the preview?
    Page 1 of 1