En Veedu
By Lakshmi
()
About this ebook
ஒரு தாய், தன் கணவருக்கும், தன் வீட்டாருக்கும் தெரியாமல் தன் மகளை கெட்ட வழியில் இருந்து மீட்டு நல்ல வழியில் கொண்டு சென்று அவளை அவளது கணவருடன் எப்படி வாழ வைத்தால் என்று பார்ப்போம்...
Read more from Lakshmi
Irandavathu Thenilavu Rating: 0 out of 5 stars0 ratingsRadhavin Thirumanam Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyumaa? Rating: 0 out of 5 stars0 ratingsIrandaavathu Amma Rating: 0 out of 5 stars0 ratingsMalathi Oru Athirchi Rating: 0 out of 5 stars0 ratingsVelichathai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsMogathirai Rating: 0 out of 5 stars0 ratingsNarmatha Yen Pogiral? Rating: 0 out of 5 stars0 ratingsMegala Rating: 0 out of 5 stars0 ratingsJayanthi Vandhal Rating: 0 out of 5 stars0 ratingsAthisaya Raagam Rating: 5 out of 5 stars5/5Kanavan Amaivathellam Rating: 0 out of 5 stars0 ratingsPeyar Solla Mattean Rating: 0 out of 5 stars0 ratingsMarumagal Rating: 0 out of 5 stars0 ratingsThai Pirakkattum Rating: 0 out of 5 stars0 ratingsIrandu Pengal Rating: 0 out of 5 stars0 ratingsAval Thaayagiraal Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Vidava, Ramya Rating: 0 out of 5 stars0 ratingsUravin Kural Rating: 0 out of 5 stars0 ratingsMaayamaan Rating: 0 out of 5 stars0 ratingsNadhimoolam Rating: 0 out of 5 stars0 ratingsIniya Unarvey Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsUravu Solli Kondu... Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi Varai Rating: 0 out of 5 stars0 ratingsMithila Vilas Rating: 0 out of 5 stars0 ratingsSiragu Mulaitha Pinnar Rating: 0 out of 5 stars0 ratingsAvalukkendru Oru Idam Rating: 0 out of 5 stars0 ratingsIvala En Magal? Rating: 0 out of 5 stars0 ratingsAthai Rating: 0 out of 5 stars0 ratings
Related to En Veedu
Related ebooks
Irandu Pengal Rating: 0 out of 5 stars0 ratingsNilavin Marupakkam Rating: 0 out of 5 stars0 ratingsOttrai Roja Rating: 5 out of 5 stars5/5Velichathai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsAtchaya Paathiram Rating: 5 out of 5 stars5/5En Uyir Neethane Un Uyir Naanthane Rating: 1 out of 5 stars1/5Karpoora Kaatru Rating: 0 out of 5 stars0 ratingsKaatril Kalanthavale...! Rating: 0 out of 5 stars0 ratingsAmma Kaadhalikkirean Please... Rating: 0 out of 5 stars0 ratingsNizhalukku Yengum Marangal Rating: 5 out of 5 stars5/5Thunbam Nergaiyil… Rating: 5 out of 5 stars5/5Venpuraa Nesam Rating: 5 out of 5 stars5/5Neerindri Oru Nadhi Rating: 0 out of 5 stars0 ratingsNee Sooriyan, Naan Thamarai Rating: 5 out of 5 stars5/5Asaiye Alai Poley Rating: 0 out of 5 stars0 ratingsOru Santhippil... Rating: 0 out of 5 stars0 ratingsPennaal Mudiyum Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Manushigal Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsSollamaley... Sangeetha Rating: 0 out of 5 stars0 ratingsKadaisiyil Rating: 0 out of 5 stars0 ratingsEn Ninaivu Neethane Rating: 0 out of 5 stars0 ratingsMarumagal Rating: 0 out of 5 stars0 ratingsAval Thaayagiraal Rating: 0 out of 5 stars0 ratingsMegala Rating: 0 out of 5 stars0 ratingsThai Pirakkattum Rating: 0 out of 5 stars0 ratingsAndha Maalai Mayakkam Rating: 0 out of 5 stars0 ratingsMaayamaan Rating: 0 out of 5 stars0 ratingsUllam Kavarven Rating: 5 out of 5 stars5/5Innoru Kaadhal Kathai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for En Veedu
0 ratings0 reviews
Book preview
En Veedu - Lakshmi
http://www.pustaka.co.in
என் வீடு
En Veedu
Author:
லக்ஷ்மி
Lakshmi
For more books
https://www.pustaka.co.in/home/author/lakshmi
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
1
அதோ பார்! சட்டுனு பார் பச்சை வண்ணப் பட்டுச்சேலையில் மினுக்கிட்டு நிக்கிறாளே அந்தப் பொண்ணை நல்லாப் பார்த்துக்கோ.
அந்தச் சிறப்பு அங்காடியின் மற்றொரு பகுதியில் நின்று கொண்டிருந்த வசுந்தரா திகைப்புடன் திரும்பினாள்.
சற்றுப் பருமனாக இருந்தவள்தான் தனது அருகில் நின்று கொண்டிருந்த உயரமான ஒடிசலான பெண்ணிடம் அப்படிக் கூறினாள்.
அவள் சுட்டிக் காட்டிய பெண் வேறு யாருமல்ல. அவள் அருமை மகள் அஞ்சனாவேதான். அப்படியென்ன அவளைப் பற்றிய ரகசியம்?
உற்றுக் கேட்டாள். ஆனால், நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது.
வானவில் வண்ணங்கள்
என்கிற சுவர்ச் சாயக் கம்பெனியைக் கேள்விப்பட்டிருக்கியோ?"
கண்களில் அறைகிறாப்போல தினமும் பல பத்திரிகைகளில் முழுப் பக்கத்தையும் அடைச்சுக்கிட்டு விளம்பரம் போடுறாங்களே, அந்த நிறுவனத்தைத்தானே சொல்றே?
அதேதான். என் மகன் இரண்டு மாசத்துக்கு முன்னாடிதான் அதிலே வேலைக்குச் சேர்ந்திருக்கான். விற்பனைப் பகுதியிலே வேலை பார்க்கிற முரளி என்கிறவனோட கொஞ்சம் சிநேகம். அவனோட மனைவிதான் அந்தப் பெண். கல்யாணமாகிப் புக்ககம் வந்ததும் முதல் வேலையா மாமியாரை வீட்டைவிட்டு அடிச்சுத் துரத்தி விட்டாள். அந்தக் கிழவி பம்பாயில் இருக்கும் தன் மகள் வீட்டிலே போய்த் தங்கிவிட்டதாகக் கேள்வி. நல்லவேளை இவள் வலது காலை எடுத்து வீட்டுக்குள்ளே வைக்கிறதுக்கு முன்னாலே மாமனார் மானத்தோட மறைஞ்சு போனார்.
ரொம்பப் பொல்லாத பொண்ணுன்னு சொல்றே?
பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரியலைன்னாக் கூட மன்னிச்சுடலாம். ஆனால், அவள் நடத்தையிலே ரொம்ப மோசமாம். ஆண்பிள்ளைகள் மேலே விழுந்து பழகிற விதம் ரொம்ப அசிங்கமா இருக்கும்.
கட்டினவன் என்ன களிமண்ணா? சும்மா பார்த்துக்கிட்டே இருப்பானா?
முரளி சுபாவத்திலே கொஞ்சம் மக்கு. அழகான மனைவி தனக்குக் கிடைச்சுட்டான்னு ஒரே மயக்கம்.
அப்படி அவள் ஒண்ணும் பேரழகியாகத் தெரியலையே! எல்லாம் ஒப்பனை செய்கிற வேலை.
அது இந்தக் காலத்துப் பசங்களுக்கு எங்கே புரிகிறது. தன் மனைவி எப்பவும் அழகியா இளமையோடு இருப்பாள்னு நினைப்பு. காலம்னு ஒண்ணு இருக்கு. அது கொஞ்சம் கொஞ்சமா இந்த வெளி அழகைக் குடிச்சுடும்னு தெரிஞ்சாத்தானே?
கணவனும் மனைவியும் மகிழ்ச்சியா வாழ்ந்தால் போதும்னு மாமியார் ஒதுங்கிட்டாங்கபோல இருக்கு.
பாவம் அந்த அம்மா பல தடவை சொல்லிப் பார்த்தாங்க. கேட்டால்தானே இந்தப் பெண்? ஒரே அடங்காப்பிடாரி. இவளைப் பெத்த மகராசி...
வசுந்தராவின் முகத்தில் அனல் பற்றி எரிந்தது. அவமானத்தில் சுருங்கிப் போனாள்.
தன் மகள் அஞ்சனா புக்ககம் போனபின் இப்படியா பெயர் எடுக்க வேண்டும்?
என்று எண்ணி வேதனைப்பட்டாள்.
பெத்தவங்களுக்கு ஒரே மகளாம். செல்லங்கொடுத்துக் குட்டிச்சுவராக்கி வச்சிருக்காங்க.
நாக்கைக் கடித்துக் கொண்டாள் வசுந்தரா. ‘பொய்! பொய்! நான் என் மகளைக் கண்டிப்பும் கறாருமாக வளர்த்தேன். அவள் அப்பா என்னோட ஒத்துழைச்சிருந்தால் இப்படிப் பேர் வாங்கியிருக்க மாட்டாள்’ என்று கத்த வேண்டும் போன்ற ஆத்திரம்.
மூச்சைப் பிடித்துக்கொண்டு அவர்கள் மேலே பேசுவதைக் கேட்டுக்கொண்டு நின்றாள்.
எப்போ பார்த்தாலும் முரளி வீட்டிலே பார்ட்டியும் கூத்துமாக ஒரே கலாட்டாவாகத்தான் இருக்குமாம். என் மகன் கூடச் சில தடவை அவங்க வீட்டுக்குப் போயிருக்கானாம். அவனுக்கு அந்தச் சூழ்நிலை பிடிக்காமல் போயிருச்சாம். இப்போ போறதில்லை.
இந்தப் பெண் சுத்த மோசமாம். அந்தப் பார்ட்டியிலே வருகிற ஒரு பையனோட ரொம்ப நெருக்கமா பழகிட்டிருக்காளாம்.
யார் அந்தப் பையன்?
நம்ப மாதர் சங்கத்து உறுப்பினர் கோதைநாயகியின் அக்கா மகன் ஆனந்தன்தான் அவன். சபரிநாதன் அன் கோவிலே வேலை. எம்.பி.ஏ. பட்டத்துக்குப் படிச்சுட்டுச் சில மாசத்துக்கு முந்திதத்தான் இங்கே திரும்பி வந்திருக்கான். அவனை இந்தப் பெண் வளைச்சுகிட்டிருக்காள்.
பலே ஆசாமியா இருக்காளே. பார்த்தா சின்னவளாத் தெரியரா...
பெரிய இடத்துக்கு கண்ணி வச்சிருக்கா.
கணவன் கண்டுக்கலையா? கோவிச்சுக்கிட்டு அவளை அடக்க மாட்டானா, மக்கு பயல்!
திரும்பிப் பதிலுக்கு கத்துவாளேன்னு அந்தக் கோழைக்கு பயம். நேத்து என்கிட்டே கோதை ஒரு மூச்சு அழுதாள். அவள் அக்கா மகனுக்குப் பல இடங்களில் இருந்து வரன் வருதாம். யாரையும் கட்டிக்க மாட்டேன்னு மறுக்கிறானாம்.
இதென்ன கூத்து? கல்யாணமான பெண் மேலே ஆசைப்பட்டால் என்ன நடக்கும்? ரொம்பத் தப்பாச்சே!
கல்யாணமானவள் மத்தவன் மனதிலே மயக்கத்தை உண்டாக்குறது அதைவிடத் தப்பு.
இதெல்லாம் கேட்டால் என் தலை சுத்துது. எனக்குக் கல்யாண வயசிலே ஒரு மகன் இருக்கான். படிச்ச பெண்ணுன்னு நம்பி எந்தக் குப்பையிலாவது விழுந்து விடுவானோன்னு பயமா இருக்கு.
பெண்ணைக் குத்தம் சொல்லாதே. வளர்க்கிற முறையில்தான் எல்லாம் இருக்கு. இவளை ஆளாக்கிய தாயைத்தான் நான் சாடுவேன். சில அம்மாக்கள் தங்களது இளமையில் அனுபவிக்காத சில நாகரிகங்களை மகளாவது அனுபவிக்கட்டுமே என்று நினைக்கிறாங்க, பெண்ணை நம் நாட்டுப் பாணியில் அழகான காஞ்சீபுரம் பட்டுச்சேலையில் பார்க்கிறதை விட்டு மாக்சி, பாண்ட், சட்டை, சூரிதார், கம்மீஸ் என்ற கோலத்தில் பார்த்து மகிழ்கிறாங்க. பெண் என்ன நினைக்கிறாள். உடுத்தத் தனக்குக் கிடைத்த சுதந்திரத்தை, நடத்தையிலும் எதிர்பார்க்கிறாள்.
அதற்குமேல் அங்கே நின்று அவர்கள் பேசுவதைக் கேட்டால் தலைசுற்றிக் கீழே விழுந்து விடுவாள் போன்ற ஒரு திகிலில் வசுந்தரா அங்கிருந்து அகன்றாள்.
அன்று கூட, அஞ்சனா, தன் பிறந்த வீட்டுக்கு ஒரு பாண்ட் சட்டையில்தான் வந்திருந்தாள். தன் சிநேகிதி ஒருத்தியின் கல்யாணத்திற்குப் பரிசுப் பொருள் வாங்க அம்மாவின் உதவியைத் தேடிப் பிறந்த வீட்டிற்கு வந்திருந்தாள்.
அந்தக் கோலத்தில் தன்னுடன் வெளியே