Andha Maalai Mayakkam
()
About this ebook
Read more from Vidya Subramaniam
Oru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsMuthal Paarvai Rating: 5 out of 5 stars5/5Nadhavadivanavale Kannamma Rating: 4 out of 5 stars4/5Atchaya Paathiram Rating: 5 out of 5 stars5/5Ullam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsChinna Chinna Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsKasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Maaresa Maangal Rating: 5 out of 5 stars5/5Thandanai Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Enbathu... Rating: 5 out of 5 stars5/5Androru Naal Rating: 3 out of 5 stars3/5Unakkey Uyiraanen Rating: 2 out of 5 stars2/5Purusha Nila Rating: 0 out of 5 stars0 ratingsSuzhal Rating: 5 out of 5 stars5/5Ullam Kavarven Rating: 5 out of 5 stars5/5Mann Bommai Rating: 5 out of 5 stars5/5Veezhven Endru Ninaithayo? Rating: 4 out of 5 stars4/5Kundrena Nimirnthu... Rating: 0 out of 5 stars0 ratingsThennangkaatru Rating: 5 out of 5 stars5/5Aagasa Thoothu Rating: 5 out of 5 stars5/5Nilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsNadhiyai Thedi Vandha Kadal Rating: 5 out of 5 stars5/5Udal Inge Uyir Ange Rating: 5 out of 5 stars5/5Engirundhu Vanthayadi Rating: 5 out of 5 stars5/5Ottrai Roja Rating: 5 out of 5 stars5/5Madhavi Pon Mayil Rating: 5 out of 5 stars5/5Kanniley Anbirunthal Rating: 0 out of 5 stars0 ratingsShanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsAagasa Garudan Rating: 5 out of 5 stars5/5Aasai Thee Valarthen Rating: 5 out of 5 stars5/5
Related to Andha Maalai Mayakkam
Related ebooks
Nenjil Niraintha Ragam! Rating: 0 out of 5 stars0 ratingsEn Vazhkai Unnodu Than Rating: 0 out of 5 stars0 ratingsMattrumoru Maalai Neram Rating: 0 out of 5 stars0 ratingsChinnanchiru Kiliye! Rating: 5 out of 5 stars5/5Kaaviyama Nenjin Ooviyama Rating: 0 out of 5 stars0 ratingsUyirin Uyire Rating: 5 out of 5 stars5/5En Ninaivu Neethane Rating: 0 out of 5 stars0 ratingsSaayatha Bommaigal Rating: 5 out of 5 stars5/5Kasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Anbukku Panjamillai Rating: 5 out of 5 stars5/5Ullam Kavarven Rating: 5 out of 5 stars5/5Thendraley Aadiva Rating: 5 out of 5 stars5/5Moondru Mudichu Rating: 5 out of 5 stars5/5Ottrai Roja Rating: 5 out of 5 stars5/5Kaadhal Vaaniley Rating: 5 out of 5 stars5/5Indru Muthal Aanantham... Rating: 0 out of 5 stars0 ratingsUravu Pookkal Rating: 5 out of 5 stars5/5Innoru Kaadhal Kathai Rating: 0 out of 5 stars0 ratingsYaar Antha Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsUthaya Nila Rating: 0 out of 5 stars0 ratingsMarumagal Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyir Neethaney Rating: 5 out of 5 stars5/5Nadaimurai Kaaviyam Rating: 5 out of 5 stars5/5En Veedu Rating: 0 out of 5 stars0 ratingsVetti Vergal Rating: 5 out of 5 stars5/5Malathi Oru Athirchi Rating: 0 out of 5 stars0 ratingsOru Paravaiyin Saranalayam Rating: 0 out of 5 stars0 ratingsPenn Vannam Kandean Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Koodu Innoru Paravai Rating: 5 out of 5 stars5/5Roja Malarae Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Andha Maalai Mayakkam
0 ratings0 reviews
Book preview
Andha Maalai Mayakkam - Vidya Subramaniam
http://www.pustaka.co.in
அந்த மாலை மயக்கம்
Andha Maalai Mayakkam
Author:
வித்யா சுப்ரமணியம்
Vidhya Subramaniam
For more books
http://www.pustaka.co.in/home/author/yandamoori-veerendranath-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
முன்னுரை
இனிய வாசகர்களுக்கு,
முன் இரண்டு தொடர்களை விட அந்த மாலை மயக்கத்திற்கு பாராட்டுகள் அதிகம்தான். பாராட்டுக்களோடு பல வாசகர்களுக்கு பலவித சந்தேகங்களும் இருந்தன. கவிதைகள் சொந்த கற்பனைதானா என்பது சிலரது சந்தேகம். சத்தியமாக சொந்த சரக்குதான் மண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்கவில்லை.
ஒரு சிலர் கேட்டுள்ளார்கள் உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் எப்படி பழகுகிறீர்கள், வளர்க்கிறீர்கள் என்று. அதிகபட்ச அன்பும் சரி அலட்சியமும் சரி குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கும். அன்பும் கண்டிப்பும் சரியான விகிதத்தில் வெளிப்படும் போதுதான் குழந்தைகளும் சரியானபடி வளர்வார்கள். என் பெரிய பெண்ணுக்கு பதிமூன்று வயதாகிறது. பெண் என்று சொல்வதைவிட என்னைப் புரிந்து கொண்ட நல்ல சிநேகிதி அவள் என்றால் அது பொய்யல்ல. பதிமூன்று வயதுதானே என்று ஒதுக்கி வைக்காமல் அவளோடு நான் பேசும் விஷயங்கள் அதிகம். அரசியல், ஆன்மீகம், விளையாட்டு, சங்கீதம், ராமாயணம், மகாபாரதம், புதுக்கவிதை, சிட்னி ஷெல்டன் என்று நாங்கள் பேசாத விஷயமில்லை. படிப்பு கெடாமல் அவள் பல விஷயம் தெரிந்து கொள்ள நான் உதவினேன். சோறு ஊட்டுவது மட்டும் அன்னையின் பணியல்ல. ஏன் என்ற கேள்விகள் வளர வளர அறிவும்
வளரும். எனவே குழந்தைகள் கேள்வி கேட்டால் போய் விளையாடு என்று விரட்டாதீர்கள். பத்து வயதிற்கு மேல் அவர்களை சிநேகிதர்களாக நடத்துங்கள். அன்பு காட்டுங்கள், சுதந்திரம் கொடுங்கள். அதே நேரம் உங்கள் கஷ்டங்களும் அவர்களுக்குத் தெரியட்டும். என் கஷ்டம் என் குழந்தைக்கு எதற்கு என்று நினைத்தீர்களானால் கடைசி வரை அந்த குழந்தைக்கு பொறுப்பும் வராது கடமைகளும் புரியாமலேயே போய்விடும். இது அறிவுரையல்ல. பலபேரின் வாழ்க்கையிலிருந்து நான் கற்ற பாடம் இப்படியெல்லாம் இரு என்று சொல்வதை விட எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்று மட்டும்தான் என் பெண்ணுக்குச் சொல்லிக் கொடுத்தேன். இன்று அவள் அத்தனை பேரின் அன்பையும் வென்றவள். இதை எல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால் ' அந்த மாலை மயக்கத்தில் ' அவளுக்கும் பங்குண்டு. எழுத்துப்பிழை, திருத்துவதிலிருந்து இலக்கணப் பிழை வரை திருத்தி எனக்கு உதவியிருக்கிறாள். ஒரு வாசகியாய் இருந்து குற்றம் குறைகள் கண்டுபிடித்து மாற்றச் சொல்லியிருக்கிறாள். இதையெல்லாம் நான் உங்களுக்கு சொல்லா விட்டால் அது அவளுக்கு நான் செய்யும் துரோகமாகும். தேவி ஆசிரியர் கொடுத்த ஊக்கம், என் குடும்பம் கொடுத்த ஒத்துழைப்பு, வாசகர்களின் பேராதரவு இம்மூன்றும்தான் இத்தொடரின் வெற்றிக்கு காரணம்.
மீண்டும் சந்திக்கும் வரை,
அன்புடன்,
வித்யா சுப்ரமணியம்
*****
1
மூக்குத்தி
முகத்தின் மெளனச் சிரிப்பு!
முல்லையின் மீதமர்ந்த பனித்துளி - ஆணின்
சோகம் தூண்டும் கண் சிமிட்டல்!
மன்மதனின் அம்பு மோதித் தெறித்த சிதறல்!
முகம் மறந்து போகாதிருக்க
முதலிலே கொடுத்த விலாசம்!
கதவைத் திற ரஞ்சனி
மாட்டேன்
மரியாதையாகத் திறந்துடு
முடியாது பாட்டி , முடியாது
கோபத்தைத் தூண்டி விடாதே ரஞ்சினி, உன்னை என்ன கொலையா செய்யப் போறோம்?
மாட்டவே மாட்டேன். அந்த ஆசாரியை முதலில் அனுப்பு
வெளியில் நின்றிருந்த பாட்டிக்கு ஆத்திரத்தில் முகம் சிவந்தது.
வர வர இந்தப் பொண்ணு ரொம்ப படுத்தத் தொடங்கிட்டா! கேட்பாரில்லாம போச்சு. இப்பொ கதவைத் திறக்கப் போறயா, இல்ல உடைக்கச் சொல்லவா? மானம் போகுது எனக்கு!
பாட்டி பல்லைக் கடித்துக் கொண்டு கத்தினாள். அவள் கதவை இடித்த சத்தத்தில் வீட்டு வாசலில் கூட்டம் சேர்ந்தது.
லட்சுமியம்மா, என்ன விஷயம்?
பேத்தியோட என்ன வம்பு?
வயசு பதினாறாகுது. இவ வயசுப் பொண்ணுங்க, இந்த கிராமத்துல ரெண்டு புள்ளை பெத்தாச்சு. ஒரு மூக்கு குத்திக்கடின்னு ஆசாரியை வரச் சொன்னேன். வலிக்குமேன்னு அழுவறா. கதவைச் சார்த்திக்கிட்டு பாடாப் படுத்தறா
இன்னொரு நாள் பார்த்துக்கலாமா?
ஆசாரி தயங்கியபடி கேட்க, பாட்டி எரிச்சலோடு மூடியிருந்த கதவைப் பார்த்தாள்.
தோ பார் ரஞ்சினி! 'இப்போ நீ கதவைத் திறக்கலேன்னா வெளிப் பக்கம் நா கதவைத் தாளிட்டுடுவேன். நீ கெஞ்சினாலும், அழுதாலும் திறந்து விட மாட்டேன். சொல்லிட்டேன்.
லட்சுமி. என்னஇங்க தகராறு. வாசல்ல கும்பல் கூடி நிக்கற அளவுக்கு...?
தாத்தா செருப்பை கழட்டி விட்டு வந்தார்.
மூக்கு குத்த ஆசாரியை வரச் சொல்லிட்டேன். குத்திக்க மாட்டேன் -வலிக்கும்னு அடம் பிடிக்கறா கழுதை.
அவ்ளோ தானே... ஆசாரி நீங்க கிளம்புங்க. அவ தானா வந்து குத்திப்பா,
என்னங்க இது...?
சும்மார்ரி. சின்ன பொண்ணைப் போட்டு மிரட்டிக் கிட்டு! நல்ல விதமா சொல்லத் தெரியலன்னா போய் வேலையைப் பாரு! நா பார்த்துக்கறேன் இதை.
பாட்டி தோள் பட்டையில் முகத்தை இடித்துக் கொண்டு போக, தாத்தா கதவருகில் வந்தார். ரஞ்சினி... வெளிய வாம்மா! நா இருக்கேன், தைரியமா வா.
அவர் குரலைத் தாழ்த்தி அழைக்க, உள்ளே தாள் நீக்கும் ஓசை கேட்டது. கதவு மெல்ல திறக்கப்பட்டு ரஞ்சினி முகத்தை மட்டும் முதலில் நீட்டி ‘ஆசாரி போய் விட்டாரா?' என்று பார்த்தாள்,
தாத்தா கண்ணடித்து சிரித்தார். விரட்டிட்டேன் வெளில வா.
ரஞ்சினி கதவை விரியத் திறந்து வெளியில் வந்தாள்,
ஏன் தாத்தா, இப்பொ மூக்குத்திக்கு அப்படியென்ன அவசரம்?
அதானே! அப்படியென்ன அவசரம்?
போய் பாட்டிகிட்ட கேளு தாத்தா.
கேட்டுடறேன்.
கேட்டா மட்டும் பத்தாது! கூடவே கூடாதுன்னு -கண்டிஷனாச் சொல்லிடு அவளுக்காக வலிக்கப் போறது...?. எனக்குதானே? என்ன சொல்ற?
ஆமாமா. நா சொல்லிடறேன். என் பேத்திகிட்ட.’லொள்ளு' பண்ணாதன்னு சொல்லிடறேன், நீ வா, நாம கோயிலுக்குப் போய்ட்டு வருவோம். அம்பாளுக்கு இன்னிக்கு அலங்காரம் ரொம்ப அழகாயிருக்காம்.
என்னை விட அந்த அம்பாள் அழகுன்றயா தாத்தா ?
போய்ப் பார்த்துடுவோம் வாயேன், நீயும் அலங்காரம் பண்ணிக்கிட்டு வா. அம்பாளையும் பார்ப்போம். யார் யாரை விட அழகுன்னு அங்க வெச்சே சொல்லிடறேன்.
ம்ம்.. இதோ வரேன் பார்!
ரஞ்சினி உள்ளே ஓடினாள்.
கிணற்றிலிருந்து நீர் இறைத்து சோப்பைக் குழைத்து முகம், கழுத்து, கை கால் என்று நிதானமாக தேய்த்து, கழுவிக் கொண்டாள். கிணற்றுச் சுவரில் போட்டிருந்த டவலால் துடைத்துக் கொண்டு உள்ளே வந்து அறைக் கதவை சாத்திக் கொண்டு கண்ணாடிக்கு முன் நின்றாள். 'பளிச்' சென்றிருந்தது முகம். மாசு மருவில்லாத முகம். ஓவல் வடிவ முகம். லேசாக அலையோடிய கூந்தல் வகிட்டிற்கு இருபுறமும் கவிழ்த்து வைத்த 'ப' போல் இறங்கியிருந்த விதமே ஒரு தனி அழகாயிருந்தது . வளைந்த புருவத்திற்கு கீழே அழகான கண்கள். இமை மயிர்கள் நீண்டு - கருத்து மேற்புற வளைவோடு அந்த கண்களுக்கு இன்னும் அழகு சேர்த்திருந்தது, அளவான நாசி, சும்மாயிருந்தாலே சிரிப்பது போன்றிருந்த உதடுகள், உடைத்த கோதுமை நிறத்தில் அளவான உடல், சராசரிக்கும் சற்று உயரம்! வரேன் தையல் நாயகி! நான் அழகா, நீ அழகா பார்த்து விடுவோம்!
ரஞ்சினி முணு முணுத்தபடி பவுடரை எடுத்து பூசிக் கொள்ளத் தொடங்கினாள். தலை முடியை சீராக வாரி கொஞ்சம் தளர ஒற்றையாய் பின்னிக் கொண்டாள். பின்னிவிட்ட கூந்தல் பிருஷ்டத்தைத் தொட்டது. காதோரம் இரண்டு துண்டு முடிகள் சுருண்டிருந்தன. ஆள் காட்டி விரலில் மை தொட்டு கீழ் இரப்பையில் இட்டுக் கொண்டாள்.. நடு நெற்றியில் சின்னதாகசிகப்பு சாந்துப் பொட்டு, முக ஒப்பனை முடிய பீரோ திறந்தாள். பாட்டியின் பட்டுப்புடவைகளில் மாம்பழ மஞ்சளும் அரக்கு நிற கெட்டி. பார்டருமாய் இருந்த புடவையை உருவினாள். ரசக் கற்பூரவாசனை வீசியது. புடவையைப் பிரித்துக் கட்டிக் கொண்டாள். அரக்கு நிறத்தில் ஜரிகைக் கோடுகள் போட்ட ரவிக்கையைத் தேர்ந்து எடுத்து அணிந்து கொண்டாள். ஆளுயரக் கண்ணாடிக்கு முன் , எட்ட நின்று பார்த்து புடவையை சரி செய்து கொண்டாள்.
பாட்டியின் நகைப் பெட்டி திறந்து, நீளமான காசு மாலையை எடுத்து போட்டுக் கொண்டாள் , வயிறு வரை தொங்கியது அது! பாட்டியின் ஒட்டியாணம், வெள்ளைக் கல் அட்டிகை, காதுக்கு கல் வைத்த தோடு - ஜிமிக்கி சான்று ஒன்று விடாமல் எடுத்து போட்டுக் கொண்டு மறுபடியும் கண்ணாடி முன் நின்றவள் தன் அழகு கண்டு தானே ஒரு கணம் பிரம்மித்துப் போனாள். நீ அம்பேல் தையல் நாயகி!
சிரித்தபடி கதவு திறந்து வெளியே வந்தவளைப் பார்த்து, பாட்டியும் தாத்தாவும் சிலையாக வாய் பிளந்து நின்றனர்.
என்ன லட்சுமி... எப்படியிருக்கேன்?
என்றாள் பாட்டியைந் பார்த்து. கொழுப்புடி! பேர் சொல் நீ?
பாட்டி கை ஓங்கிக் கொண்டே அருகில் வந்தாலும், ஓங்கின கை நெற்றிப் பொட்டில் நின்று திருஷ்டி கழித்து தன் நெற்றியில் சுடக்குப் போட, சுடக்கு சத்தம் பலமாகக் கேட்டது .
யம்மாடி, கோயிலுக்கா போற?
ஆமா ...
இந்த அலங்காரத்துலயா? வேணாண்டி கண்ணு. திருஷ்டி பட்டுரும்மா!
இந்தா லட்சுமி. விடுஅவளை. திரும்பி வந்ததும் கற்பூரம் ஏத்தி சுத்திப் போட்டுக்க. நீ வா ரஞ்சினி
தாத்தா அழைக்க ரஞ்சினி புறப்பட்டாள். தெருவோடு நடந்து போனவளை வியப்போடு பார்த்தது ஊர்.
என்ன, சந்தானம் பேத்திக்கு கல்யாணமா என்ன?
யாரோ கேட்டார்கள்.
உங்க வாய் முகூர்த்தம் , கல்யாணம்தான் வரட்டுமே!
பதில் சொல்லியபடி நடந்தார்.
கோயிலுக்குள் நுழைந்து சாமி தரிசனத்திற்குப் பின் அம்மன் சந்நிதிக்கு வந்தார்கள். ரஞ்சினியின் கண்கள் வியப்பில் விரிந்தது. அம்மனுக்கும் மஞ்சள் நிறத்தில் தான் புடவை கட்டியிருந்தது. கழுத்தில் நீண்ட காசு மாலை, சிகப்புகல் அட்டிகை, ஒட்டியாணம், குங்குமப் பொட்டு... தாத்தா பேத்தியையும் அம்மனையும் மாறி மாறிப் பார்த்தார், ரஞ்சினி சிரித்தாள்.
என்ன ... நான் தானே அழகு...?
தாத்தா பதில் சொல்லாமல் மீண்டும் இருவரையும் மாறி மாறிப் பார்த்தார். அவரது உதடுகளில் இளநகை படர்ந்தது.
என்ன சிரிப்பு?
சொல்றேன்!
தாத்தா மீண்டும் ஒருமுறை அம்மனைப் பார்த்தார்.
எல்லாம் சரிதான். அழகான நெற்றி, கண், உதடு, பொட்டு, காசுமாலை, புடவைக் கட்டு, கழுத்து அட்டிகை.... எல்லாத்துலயும் சாட்சாத் அம்மன் மாதிரியே தான் இருக்க. ஆனாலும் தையல் நாயகிக்குதான் பாஸ் மார்க்! உன்கிட்ட ஒரே ஒரு குறையிருக்கு. அதனால அவ பாஸாயிட்டா!
ரஞ்சினியின் முகம் சின்னதாயிற்று. தாத்தாவை ஏறிட்டுப் பார்த்தாள் .
என்ன குறை?
மூக்குத்தி அம்மன் முகத்துல அந்த மூக்குத்தியைப் பாரேன் ரஞ்சினி! அந்த முகத்தோட அழகை, தேஜஸை அந்த வைர மூக்குத்தி இன்னும் எடுப்பா காட்டல? அது தான் உன்கிட்ட குறை. அதுமட்டும் இருந்தது ... நிச்சயம் தையல்நாயகிக்கு மார்க் குறைஞ்சுடும்.
தாத்தா சொல்ல, ரஞ்சினி அம்மன் முகத்தை உற்றுப் பார்த்தாள். நீண்ட நாசியில் ஜொலித்த வைர மூக்குத்தியும் இளநகை படிந்த உதடுகளும்... தாத்தா சொன்னது உண்மைதான் என்று தோன்றியது.
அர்ச்சகர் கற்பூரத் தட்டு கொண்டு வர, தாத்தா சில்லறை போட்டு கற்பூரம் ஒற்றிக் கொண்டார். ரஞ்சினி குங்குமம் வாங்கிக் கொண்டு மீண்டும் ஒருமுறை ஜொலித்த அந்த மூக்குத்தியைப் பார்த்தாள்.
போலாமாம்மா?
ம்
பிரகாரம் சுற்றினார்கள்.
வருத்தமா ரஞ்சினி? தாத்தா சொன்னது வருத்தம் தானே?
ப்ஸூ
பரவால்ல விடு. நீ கேட்ட! நானும் உண்மையைச் சொன்னேன்.
ரஞ்சினி பதில் சொல்லவில்லை. வீட்டுக்குள் நுழைந்ததும் பாட்டியைத் தேடினாள். பூஜை உள்ளில் உட்கார்ந்து, அபிராமி அந்தாதி சொல்லிக் கொண்டிருந்த பாட்டியிடம் வந்தாள்.
பாட்டி அவளைப் பார்த்து விட்டு அந்தாதியைத் தொடர்ந்தாள்.
தங்கச் சிலை கொண்டு தானவர் முப்புரஞ்சாய்த்து, மத வெங்கட்கரியுரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்கொங்கை குரும்பை குறியிட்ட. நாயகிகோக நதச் செங்கை கருப்பு மலருமெப் போதுமெண் சிந்தையதே!
பாட்டி ...
என்ன?
திரும்பேன்.
நீ சொல்லு. காதுல விழும்.
நாளைக்கு ஆசாரியை வரச் சொல்லு, மூக்குத்தியோட.
பாட்டி திகைத்தாள். ரஞ்சினி வெளியே ஓட, தாத்தாவின் முகத்தில் வெற்றிப் புன்னகை நெளிந்தது.
என்ன மாயம் பண்ணீங்க? வே ண் டா ம் வேண்டாம்னு ஆர்ப்பாட்டம் பண்ணினவ, இப்போ குத்தி விடுங்கறா!
பாட்டி மோவாயில் விரல் வைத்து வியந்தாள்.
நா ஸ்கூல் வாத்தியார்டி, பசங்களை எப்டி வழிக்கு கொண்டு வரணும்னு எனக்குத் தெரியும். உன்னை மாதிரி முரட்டுத்தனம் - பண்ணினா பயப்படாம என்ன செய்வாங்க?
அதானே, என்னை மட்டம் தட்லேன்னா தின்ன சோறு செரிக்காதே! சரி சரி, இப்பவே நேரம் நல்லார்க்கு! ஆசாரிக்கு ஒரு குரல் கொடுத்து வரச் சொல்லுங்க...
நீயும் மூணு முறை அவனை அலைய வெச்சுட்ட, அவனும் வந்தான். என்ன ஆச்சு? இனிமே கூப்ட்டா அவன் உதைக்க வருவான். நீ பேசாம மூக்குத்தியை எங்கிட்ட குடு. நானே இவளை அங்க அழச்சுக்கிட்டு போய் குத்திக்கிட்டு வரேன்.
அதுவும் சரிதான்
என்று தோன்றியது பாட்டிக்கு. உள்ளே போய் ஒற்றைக்கல் பதித்த வைரமூக்குத்தியைக் கொண்டு வந்து கொடுத்து பத்திரம்
என்றாள்.
ரஞ்சினி... வாம்மா! நாம் அங்கயே போய் குத்திக்கிட்டு வந்துருவோம்.
அங்கயா...
வாம்மா!
ரொம்ப வலிக்குமா தாத்தா?
சுருக்குனு சுள்ளெறும்பு கடிக்கறா மாதிரி ஒரு வலி, அவ்ளோதான். பொம்பளைப்புள்ள நீ, இதைப் பொறுத்துக்க மாட்டியா என்ன? இதுக்கு மேல இன்னும் எத்தனை வலி - வேதனை பொறுத்தாகணும்! இதுக்கே பயந்தா எப்டிடா?
தாத்தா சொன்னது உண்மைதான். 'சுருக்’ கென்று ஒரு வலி. அவ்வளவே! இதற்கான அத்தனை ஆர்ப்பாட்டம் செய்தோம்? என்று வெட்கப்பட்டாள் .
யப்பா! என்ன அழகு பார்த்தீங்களா என் பேத்தியை! மூக்குத்திக்கு இத்தனை அழகு கூடிடுமா...? ரஞ்சினி கண்ணாடியில் பார் உன் முகத்தை...
ரஞ்சினி கூச்சத்தோடு கண்ணாடியில் பார்த்தாள். ஒரு சின்ன வித்தியாசம் கூடியிருந்ததில் முகம் இன்னும் அழகாகத்தான் மாறியிருந்தது.
கண்ணாடியில் மற்றொரு உருவமும் தெரிய, சட்டென்று திரும்பி பார்த்தாள். அவள் திரும்ப, தாத்தாவும் திரும்பினார்.
சூட்கேசும் கையுமாக பேண்ட்- ஷர்ட் அணிந்த இளைஞன் ஒருவன் நின்றிருந்தான். சட்டென்று திரும்பிய ரஞ்சினியின் மூக்கிலிருந்து டாலடித்த வைரத்தின் பிரகாசத்தில் ஒரு கணம் பிரமித்தான்!
*****
2
பதினாறு வயதினிலே
பயம் உதறிய பெண்ணிது;
வினைக்கு விலை கொடுக்கும்
வளர்ந்த விதம் அப்படி.
அன்னையின் ஆணவமும்
தந்தையின் திமிரும் சேர்ந்த கலவை!
மணி இரண்டு முப்பது. ப்ளஸ் டூ பிரிவில் ஆங்கில பாடம் நடந்து கொண்டிருந்தது. ஆதுவே கடைசி பீரியட்.
கிருத்திகா நோட் புக்கிலிருந்து ஒரு தாளைக் கிழித்து எழுதினாள். ‘நாளைக்கு ஸ்கூலுக்கு 'கட்' அடிக்கிறோம், சினிமாவுக்குப் போகிறோம்.'
பேப்பரை மடித்து எல்லோருக்கும் அனுப்பினாள். 'சம்மதம்' என்ற பதிலோடு ஒரு பத்து பேர் கையெழுத்து போட்டிருந்தார்கள்.
என்ன சினிமாடி?
அருகிலிருந்த பிரேமா கிசுகிசுத்தாள்.
நாளைக்குத்தான் பார்க்கப் போகிறாயே, என்ன அவசரம்?
மணி அடித்தது. கிருத்திகா புத்தகத்தை மூடினாள் .- துள்ளிக் குதித்தபடி புறப்பட்டாள்.
மைதானத்தில் தோழிகள் கூடினார்கள். மறுநாள் எங்கு சந்திக்க வேண்டுமென்று அனைவருக்கும் சொல்லி விட்டு தனது டி. வி. எஸ். சாம்ப்பில் ஏறிக் கொண்டாள். நேராக மவுண்ட் ரோடு நோக்கி ஒட்டினாள். புதுப்படம் ரிலீஸாகியிருந்த தியேட்டரில் நுழைந்து நிறுத்தினாள். அட்வான்ஸ் புக்கிங் கெளண்ட்டரை நோக்கிச் சென்றாள். நாளைக்கு பதினோரு மணிக்கு பதினோரு டிக்கெட் ப்ளீஸ்.
சாரிமா! இன்னும் ஒரு வாரத்துக்கு ஃபுல் ஆய்டுச்சு!
ப்ளீஸ் எப்படியாவது?
அட, புக் ஆய்டுச்சுன்னு சொல்றேனில்ல போம்மா ...
ஓ.கே! நா ஒரு போன் பண்ணிக்கலாமா?
அந்த பக்கமா உள்ள வந்து பண்ணு.
கிருத்திகா அந்த போன் நம்பரையே சுழற்றி பேச ஆரம்பித்தாள்.
"யாரு... செக்ரட்டரிதானே...! நா கிருத்திகா பேசறேன். தாத்தாகிட்ட போனைக் குடுங்க. தாத்தா நா கீர்த்தி! என்ன அவமானம் தாத்தா?
ஃபைனான்ஸ் மினிஸ்டர் பேத்திக்கு - டிக்கெட் கிடைக்கல. இது உங்க மந்திரி பதவிக்கு அவமானம் . அதெல்லாம் தெரியாது. எனக்கும் என் ஃப்ரண்ட்ஸுக்கும் உடனே படம் பார்த்தாகணும். பேசாம ஒரு ஸ்பெஷல் ஷோக்கு ஏற்பாடு செய்யச் சொல்லுங்க."
அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒரு கரம் பவ்யமாக பதினோரு டிக்கெட்டை நீட்டியது. ஓரக் கண்ணால் அதைப் பார்த்தவள் போனை வைத்தாள்.
ஹி... ஹி... முன்னாலயே சொல்லியிருந்தா குடுத்திருப்பேன்...
கிருத்திகா பதில் சொல்லாமல் டிக்கெட்டை மட்டும் வெடுக்'கென்று பிடுங்கிக் கொண்டு பணத்தை நீட்டினாள்."
வே…வேண்டாம்மா...
பரவால்ல....எனக்கு ஒண்ணும் தனி சலுகை தேவையில்லை.
பணத்தை திணித்து விட்டு கிளம்பினாள். தியேட்டர் விட்டு வெளியேறினதும் 'பக்' கென்று சிரித்தாள்.
மறு நாள் சொன்னபடி தோழிகள் ஓரிடத்தில் சந்தித்தார்கள். எல்லாரும் கலர் டிரஸ்ஸில் இருந்தார்கள்.
ஏண்டி வீட்ல சந்தேகப்படலையே?
பார்ட்டின்னு ரீல் விட்டோம்.
குட்! இப்பொ ஒரு ரெண்டு மணி நேரத்தை எப்டி ஓட்டறது?
சீட்டாடுவோமா?
சுகந்தி கேட்டாள்.
எங்க உக்காந்து ஆடறது, அறிவு கெட்டவளே?
அதை அறிவிருக்கறவதான் சொல்லணும்!
பேசாம பீச்சு பக்கம் போய் தண்ணில நின்னா பொழுது ஒடிடும்.
நல்ல ஐடியாதான்!
பதினோரு பேரில் மூன்று பேர் மொபட் வைத்திருந்தனர். மற்றவர்கள் சைக்கிள்கள்.
சரி வாங்க!
என்று கீர்த்தி பச்சைக் கொடி காட்ட, தத்தம் வண்டிகளில் ஏறி அமர்ந்தார்கள்.
மெரினா பீச் அல்லோல கல்லோலப் பட்டது. சிரிப்பும் சத்தமுமாக அலையில் விளையாடினார்கள்.
பெண்கள் கூட்டம் கண்டு மூக்கில் வியர்த்தாற்போல் கல்லூரி மாணவர்கள் சிலர் அந்த பக்கம் படையெடுத்தார்கள்.
என்னம்மா கண்ணுங்களா எந்த ஸ்கூல்?
நீங்க எந்த ஸ்கூல் ...?
ஆங்....! எங்களைப் பார்த்தா பிகில் ஊதுற பசங்க மாதிரியா தெரியுது? நாங்க காலேஜ் பசங்க தெரியுமில்ல ...?
அய்ய...மூஞ்சியைப் பாரேன். தார் டின்ல முக்கியெடுத்தா மாதிரி!
ஏய் பிரேமா... என்னடி அங்க வம்பு?
கிருத்திகா ஓடி வந்தாள்.
ஓ..ஹோ... நீதான் இவங்களுக்கு லீடரா?
ஆமாண்டா பொறுக்கி ராஸ்கல்....!
என்னடி சொன்ன?
கிருத்திகா, ஓங்கின அவன் கரத்தை 'கப்'பென்று பிடித்தாள்.
"அங்க