Nenjil Niraintha Ragam!
()
About this ebook
திருமதி லட்சுமி ராஜரத்னம் திருச்சி நகரில் 27.3.1942ல் பிறந்தார் பத்தாவது வயதில் திருப்பாவை, திருவெம்பாவை போட்டியில் தங்க நாணயம் பரிசு பெற்றார்.
இதுவரை 1500 சிறுகதைகள், நிறைய நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள், 15 சென்னை தொலைகாட்சி நாடகங்கள், 3 மெகா தொலைகாட்சித் தொடர்கள், 3500 க்கும் மேற்பட்ட ஆன்மீகக் கட்டுரைகள் இவரின் எழுத்துலகச் சாதனைகளாகும். 40 சரித்திரச் சிறுகதைகள் எழுதிய பெண் எழுத்தாளரும் இவரே.
காஞ்சி சங்கர மடத்தினால் 1991ல் எழுத்துக்காகவும், 1993ல் ஆன்மீகச் சொற்பொழிவிற்காகவும் கௌர விக்கப்பட்டுள்ளார். இதுவரை 2500 சொற்பொழிகள் செய்துள்ளார். திருவையாறு தியாகராஜ ஆராதனையில் சின்ன கச்சேரி செய்த அனுபவம் உண்டு. இதைத் தவிர கோயம்புத்தூர், தஞ்சையில் கச்சேரிகள் செய்த அனுபவமும் உண்டு. மகள் ராஜஸ்யாமளாவின் நாட்டியற்குப் பாடிய அனுபவமும் உண்டு.
இவருடைய இதயக்கோயில் நாவல் கலைமகள் நாராயணஸ்வாமி ஐயர் பரிசு பெற்ற நாவல். இன்று வரை பலரால் பாராட்டைப் பெற்ற நாவல்.
1999ல் 'செந்தமிழ்ச் செல்வி' என்று ஸ்ரீகுக ஸ்ரீ வாரியார் விருதைப் பெற்றார். ஜனவரி 2002ல் கொழும்புவில் உள்ள இந்து மகா சபை இவருக்கு சொற்சுவை நாயகி என்ற விருதைக் கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளது. சங்கப்பலகை என்னும் புகழ் பெற்ற கலைமகள் பத்திரிக்கை ஜனவரி 2019-ல் சிறந்த எழுத்தாளருக்கான விருதை கொடுத்து கௌரவித்தது. ஒரே மகள் ராஜஸ்யாமளாவும் எழுத்தாளர் பரத நாட்டியக் கலைஞர்.
2011-ல் கணவனை இழந்த இவர் அதன்பின் உடல் நலம் குன்றி நான்கு அறுவை சிகிச்சைகள், இன்னும் பல உடல் தொந்திரவுகள் என்று சிரமப்பட்டாலும் 76 வயதிலும் மனம் தளர்வுளராமல் எழுதி வருகிறார். உங்கள் பாராட்டு என்ற பெரிய விருதை விட பெரிய உண்டா? என்கிறார்.
Read more from Lakshmi Rajarathnam
Ezhu Swarangalukkul… Rating: 0 out of 5 stars0 ratingsNavagrahangal Rating: 1 out of 5 stars1/5Thiruppugal Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsEn Anni - En Manaivi? Rating: 0 out of 5 stars0 ratingsNesam Marakavillai Nenjam! Rating: 0 out of 5 stars0 ratingsAval Varuvala? Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalaiye Thol Serava Rating: 3 out of 5 stars3/5Marakkuma Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsThalattum Poongatru Rating: 0 out of 5 stars0 ratingsBhavishya Puranam Rating: 2 out of 5 stars2/5Thanthaiyumaagi Thayumaagi Rating: 5 out of 5 stars5/5Ninaivalaigal Thodarnthu Vanthal... Rating: 0 out of 5 stars0 ratingsAshtalakshmi Rating: 0 out of 5 stars0 ratingsArputha - Athisaya Aalayangal Rating: 5 out of 5 stars5/5Vaana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsKaaviyama Nenjin Ooviyama Rating: 0 out of 5 stars0 ratingsLakshmi Rajarathnam Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsBramma Mudichu Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyir Neethane Un Uyir Naanthane Rating: 1 out of 5 stars1/5Enakkul Nee! Rating: 5 out of 5 stars5/5Aanmeega Amudham Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsUravu Sonnavan Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Thantha Poove! Rating: 0 out of 5 stars0 ratingsYaarukku Mappillai Yaaro? Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Amudham Part - 2 Rating: 5 out of 5 stars5/5Abiyum Azhaganum Rating: 2 out of 5 stars2/5Naan Unnodu Than Rating: 0 out of 5 stars0 ratings
Related to Nenjil Niraintha Ragam!
Related ebooks
En Ninaivu Neethane Rating: 0 out of 5 stars0 ratingsKannamochi Yenada? Rating: 0 out of 5 stars0 ratingsPon Maalai Pozhuthu Rating: 2 out of 5 stars2/5Devathai Vanthu Vittal Rating: 0 out of 5 stars0 ratingsAnal Meley Panithuli Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Manushigal Rating: 0 out of 5 stars0 ratingsNeruppai Oru Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsEn Su(vaasa) Malare... Rating: 5 out of 5 stars5/5Indriravu Rating: 5 out of 5 stars5/5Anbin Vaasaliley... Rating: 0 out of 5 stars0 ratingsMalarndha Malarchudare! Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyir Neethane Un Uyir Naanthane Rating: 1 out of 5 stars1/5Neeye Enthan Nila Saaraladi! Rating: 0 out of 5 stars0 ratingsNin Vasamaathal Vendum Rating: 0 out of 5 stars0 ratingsUdhaya Geetham Rating: 0 out of 5 stars0 ratingsUn Ullam Naanariven Rating: 0 out of 5 stars0 ratingsSanthana Marathu Kuyil Rating: 5 out of 5 stars5/5Sooriyakanthi Pookkal Rating: 5 out of 5 stars5/5Ullam Rendum Ondru Rating: 5 out of 5 stars5/5Manase Manase Rating: 5 out of 5 stars5/5Uthaya Nila Rating: 0 out of 5 stars0 ratingsKann Malargalil Azhaipithazh Rating: 0 out of 5 stars0 ratingsThendral Vanthu Ennai Sudum! Rating: 0 out of 5 stars0 ratingsAbiyum Azhaganum Rating: 2 out of 5 stars2/5Mel Nokki Paayum Aruvi Rating: 0 out of 5 stars0 ratingsVannathu Poochiyai... Rating: 0 out of 5 stars0 ratingsIthu Enna Mayamo? Rating: 5 out of 5 stars5/5Merke Oru Uthayam Rating: 0 out of 5 stars0 ratingsInimai Ninaiuvgal Thodarattume Rating: 4 out of 5 stars4/5Vilagatha Sirakugal Rating: 5 out of 5 stars5/5
Reviews for Nenjil Niraintha Ragam!
0 ratings0 reviews
Book preview
Nenjil Niraintha Ragam! - Lakshmi Rajarathnam
http://www.pustaka.co.in
நெஞ்சில் நிறைந்த ராகம்!
Nenjil Niraintha Ragam!
Author:
லட்சுமி ராஜரத்னம்
Lakshmi Rajarathnam
For more books
http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
1
கோலத்தை தானே மாற்றவர்கள் ரசித்துப் பார்ப்பார்கள். இன்று அதிக வேலை இருப்பதால் தலை நிமிராமல் வேக வேகமாய் புள்ளிகளை வைத்தாள். இழுக்க ஆரம்பித்தாள். இரண்டு சிவந்த பாதங்கள் கோலத்தை மிதித்தது போல பார்வையில் பட்டது. தூக்கி வாரிப்போட நிமிர்ந்தாள். பாதங்கள் வெள்ளை வெளேரென்று கருப்பு வாரிட்ட செருப்புக்கள். நிறத்தையும் பாதத்தின் அழகையும் எடுத்துக்காட்ட நிமிர்ந்தவள். அவள் முன்பு அரும்பு மீசையின் அடியில் சிவந்த உதடுகள் புன்னகை கூட்டியது.
காந்த விழிகள்... உள்ளத்தை ஊடுருவும் தன்மை கொண்டது.
நீங்க யாரு?
பயம் தடுமாற வைத்தது. இந்தக் காலத்தில் எத்தனை எத்தனையோ குற்றங்கள் நடைபெறுகின்றனவே. கொலைகள், பாலியல் பலாத்காரங்கள் மலிந்து விட்டனவே. யாரையும் நம்ப முடியாத சூழ்நிலைதானே நிலவுகின்றது?
அவளுடைய தடுமாற்றத்தை அவன் ரசித்திருக்க வேண்டும். இதழ் பிரியாமல் சிரித்தவன் உள்ளே போக முயன்றான். தோள் பை ஒன்று. கையில் சற்றே பெரிதான பெட்டி ஒன்று.
அவள் தடுப்பது போல் நின்றாள்.
ஹலோ... நீங்க யாரு என்னனு சொல்லாமல் உள்ளே போனால் என்ன அர்த்தம்? நான் ஒருத்தி இங்கே எதற்கு நிற்கிறேன்?
பேசப் பேச குரலில் கடுமை ஏறியது.
ஓ... ஹா... ஹா...
என்று சிரித்தவன்.
நீ கோலம் போட நிற்கிறேனு நினைச்சேன். இப்பத்தான் என்னை வரவேற்க நிக்கறேனு புரிஞ்சது
என்றான்.
ஆண்களில் இப்படி கூட ஒரு கம்பீரமும், பளிங்கு போன்ற அழகும் இருக்க முடியுமா?
ஹலோ... நான் ஒண்ணும் உங்களை வரவேற்க இங்கே நிற்கலே. கோலம் போட்டுட்டு இருக்கேன். நீங்க யாருனு தெரிஞ்சுக்காம நான் உள்ளே அனுமதிக்க முடியாது. நான் இந்த வீட்டைச் சேர்ந்தவள்
பெட்டியின் பிடியை விட்டு கை எடுத்தவன்.
கைகளைத் தட்டினான்.
அப்ப நான் யாராம்?
அவள் முறைத்தாள்.
தெரியாது
தெரியாதா? இது யாருடைய வீடுன் அனாவது தெரியுமா? தெரியாட்டி கேட்டுக்க... என் மாமா சங்கர நாராயணன் வீடு. நான் அவருடைய அக்கா மகன். என் பெயர் சிவக்குமார். உன் பெயர் என்ன?
என் பெயர் சாதனா
பயம் குறைந்தது.
இவ்வளவு விவரங்கள் சொல்கிறானே?
என்ன படிச்சிருக்கே?
ஏன் கேட்கிறீங்க?
எல்.கே.ஜி.னு நினைக்கிறேன் அதுக தான்
வாட்ஸ் யுவர் நேம்?
னு கேட்டா
மை நேமிஸ்னு சொல்லும் வெறுமனே சாதனானு சொல்லி இருக்கலாம்ல
பெரிய வம்புக்காரனா இருப்பான் போல இருக்கே. ஊஹும்... விடக்கூடாது. இவன் சொல்றதை நம்பாதது போல பேசணும்.
நீங்க சொல்றதை எப்படி நம்பறது?
'ஓ... அப்படி ஒரு சந்தேகமா? குட்... குட் அப்ப உள்ளே போய் பார்க்கலாம் வா'
கோலம் கொஞ்சம் பாக்கி இருக்குது. அதை முடிச்சுட்டு வரேன். இப்படியே நில்லுங்க
அவன் இதழ்களில் வாடாத புன்னகை.
என்னை நீ நம்பவே இல்ல?
அதை என் வாயால வேற சொல்லணுமா?
கோலத்தைப் போட்டு முடித்தாள்.
அவளுடைய நீண்ட பிஞ்சு விரல்கள் கோலமாவை வைத்து நர்த்தனம் செய்யும் அழகை ரசித்தான். கூம்பிய தாமரை போல முகம் அழகு தான். முகத்தில் முகம் பார்க்கலாம். விரல் நகத்தில் பவளத்தின் நிறம் பார்க்கலாம்னு கவிஞர்கள் தெரியாமலா பாடி வைத்தார்கள்.
அழகை ரசிக்கத் தனியாக மனம் வேண்டும்.
நீ சரியான காவல்காரிதான்
பாராட்டுதலுக்கு மிக்க நன்றி
கூறிய படியே உள்ளே போனவளைத் தொடர்ந்து உள்ளே போனான் சிவா.
வீடு உறக்கம் கலையத் தொடங்கி இருந்தது.
உள்ளே வந்த சாதனா மளமளவென்று பாலைக் காய்ச்சினாள். பால் காய்வதற்குள் வடைக்கு ஊறப் போட்டாள். பொங்கிய பாலை இறக்கியவள் இரண்டு தம்ளரில் ஊற்றி கெட்டி டிகாஷனையும் அளவாக ஊற்றி சர்க்கரையைப் போட்டாள்.
பிரெஷ் பண்ணிட்டேன். காப்பி கிடைக்குமா? சுடச் சுட குடித்தால் குளிருக்கு இதமா இருக்கும்
என்று கேட்டபடியே சமையலறை வாசற்படியில் நின்றவனைப் பார்த்து முறைத்தாள்.
காபி ஹாலுக்கே வரும்
எப்படி வரும்? நடந்தா வரும்?
என்று கேட்டான் சிவா.
இல்ல டான்ஸ் ஆடிட்டு வரும்
என்று சாதனா சொல்ல கலகலவென்று சிரித்து விட்டான் சிவா.
அப்ப உனக்கு டான்ஸ் கூட தெரியுமா?
சிலம்பாட்டம், கராத்தே கூட தெரியும்
உங்கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்னு சொல்லு
புரிஞ்சுகிட்டா சரி
நின்றபடியே காபியை வாங்கி உறிஞ்சியவனை கவனித்தாள் சாதனா.
ஆறடி உயரம், அதற்கு ஏற்ற சதைப்பற்றான முகம், உதடுகள், அளந்து செதுக்கி வைத்தாற்போல இருக்க, அழகான கருத்த மீசை, ஆள் அழகன் தான் என்று தனக்குள் நினைத்து கொண்டாள்.
அவள் மட்டும் என்ன சும்மாவா? அவனுடைய வாலிபக் கண்கள் வீட்டின் வெளிச்சத்தில் அளவெடுத்தன. பாந்தமான உயரத்தில் கொடி போன்ற உடல்வாகு. பின்னலிட்ட நீளமான முடி. காதோரம் வழிந்ததே ஓர் அழகு. சற்று நீண்ட முகம் மலராத தாமரையை நினைவு படுத்தியது. நுங்கு முகவாய். செதுக்கினாற்போல சங்கு கழுத்து, மொத்தத்தில் சிற்பி செதுக்காத பொற்சிலை.
வாடா... சிவா...! எப்ப வந்தே?
கேட்ட படியே வந்தார் சங்கரநாராயணன். அவருக்கு பின்னாலேயே அவர் மனைவி செண்பகா குளித்துத் தலையில் துணியைச் சுற்றி முறுக்கியபடியே வந்தாள்.
அவளும் அட, வா சிவா... எப்ப வந்தே?
என்று அழைத்தாள்.
இப்பதான் வந்தேன். வந்ததும் இந்தப் பெண் காபி கொடுத்தா
என்றான் ஓரக்கண்ணால் சாதனாவைப் பார்த்தபடியே.
என் பெயர் சாதனா
என்றாள் வெடுக்கென்று.
உன் பெயர் சாதனாதான். அதுக்கு என்ன இப்ப? அவன் பொண்ணுனு சொன்னா என்ன அது தப்பா போச்சா? சரி... சரி... எனக்கும் மாமாவுக்கும் காபியை கொடு. சீக்கிரம் குளிச்சுட்டு வா. நான் பொங்கல் வைக்கிறேன். வடைக்கு ஊறப் போட்டுட்டியா?
போட்டுட்டேன் அத்தை
காபியைக் கலந்து இருவரிடமும் கொடுத்துவிட்டு சாதனா குளிக்கப் போனாள்.
செண்பகா சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள். பொங்கலுக்கு அரிசியை எடுத்துக் களைந்தாள்.
இன்னிக்கு என்ன விசேஷம் மாமி? வடைக்கு ஊறப் போட்டியானு கேட்டிங்க. அப்ப பாயாசமோ சர்க்கரைப் பொங்கலோ உண்டு
என்று கேட்டபடி காலி தம்ளரை மேடை மேலே வைத்தான் சிவா.
எப்பவும் ஞாயிற்றுக்கிழமை அன்னிக்கு சூரிய நமஸ்காரம் பண்றது வழக்கம். இதோ இன்னும் கொஞ்ச நேரத்துல சாஸ்திரிகள் வந்துடுவார். அதுக்குள் நைவேத்யங்கள் தயாராகணும்
என்றவள்.
சாதனா, குளிச் சுட்டியா, சீக்கரமா வா. எத்தனை நாழி குளிக்கப் போனா... சீக்கிரமா வர மாட்டியா?
என்று சிடு சிடுத்தவளின் முன்னால் பூத்த மலர் போல வந்து நின்றாள் சாதனா.
அத்தை அப்பத்துக்கு மாவை கரைச்சு வச்சுட்டேன். வடைக்கு அரைச்சுட்டுமா?
அரிசியைப் பொங்கலுக்கு கொதிக்கும் நீரில் போட்ட செண்பகா, சீக்கிரமா அரைச்சுட்டு, பழங்களை நறுக்கி பஞ்சாமிர்தம் பண்ணு. பூஜைக்கு வேணுங்கறதைப் பார். தாழ்வாரத்துலயும் முற்றத்துலயும் கோலம் போட்டியா?
என்ற சண்பகாவைக் கண்ணி மைக்காமல் பார்த்தான் சிவா.
அம்மா காபி
என்ற குரல் கேட்டு திரும்பிய சிவா, சின்னக்குன்று போல் நடந்து வந்த லோச்சனாவைப் பார்த்துத் திகைத்தான்.
2
மார்கழி மாத குளிர் தாங்க முடியாமல் உடம்பைக் குறுக்கி எஸ் வடிவில் படுக்க வைத்திருந்தது. கண் விழித்தாலும் எழ முடியாத நலக்குறைவு. எழுபத்தைந்து வயசு ஒண்ணும் இந்தக் காலத்தில் பிரமாதமான வயசு இல்லை அவள் வயசை ஒத்தவர்கள்