Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Enakkul Nee!
Enakkul Nee!
Enakkul Nee!
Ebook183 pages1 hour

Enakkul Nee!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

she has written several novels in Tamil.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580115702779
Enakkul Nee!

Read more from Lakshmi Rajarathnam

Related to Enakkul Nee!

Related ebooks

Reviews for Enakkul Nee!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Enakkul Nee! - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    எனக்குள் நீ!

    Enakkul Nee!

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    ஆசிரியர் உரை

    அன்பு நிறை வாசக நெஞ்சங்களுக்கு!

    அன்பு வணக்கங்கள்! கடந்த வெளியீடான என் நாவல் உங்களுக்கு மிகவும் பிடித்து விட்டது என்பதை உணர்ந்து மகிழ்ந்தேன்.

    வழக்கம் போல தொலைபேசியிலும், ஈ-மெயிலிலும், முக நூலிலும் நீங்கள் வைத்த கருத்துக்கள் எனக்கு மிகவும் ஊக்கம் தருபவையாக அமைந்தன. இந்த முறை எனக்குள் நீ! என்ற நாவலுடன் உங்களைச் சந்திக்கிறேன். படித்துத் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

    தொடர்ந்து எனது நாவல்களை மாத நாவல் வடிவில் வெளியிட்டு வரும் அக்ஷயா சிறப்பு நாவல் வெளியீட்டுக் குழுவினருக்கு எனது அன்பு கலந்த நன்றிகள்

    அடுத்த நாவலில் உங்களைச் சந்திக்கிறேன்…

    அன்புடன்

    லட்சுமி ராஜரத்னம்

    ***

    1

    மார்கழி மாதத்தின் விடியற்காலை. மணி நான்கு, கிருஷ்ணன் கோவிலிலிருந்து எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உள்ளோமே யாவோம் - உனக்கே நாம் ஆட்செய்வோம் என்று ஆண்டாளின் பாசுரம் உருகி மனத்தைத் தொட்டது.

    ஆண்டாள் மகாலட்சுமிதான். அவளே திருமாலான கண்ணனிடம் உருகி உருகி ஏழேழ் பிறவிக்கும் உன்னோடு ஐக்கியமாக வேண்டும் என்று யாருக்காக வேண்டுகிறாள்? நமக்குச் சொல்லித் தரும் பாடம் இது.

    கிருஷ்ணன் கோவிலிலிருந்து கொஞ்சம் தள்ளி இருக்கும் சிவாலயத்திலிருந்து மாணிக்கவாசகரின் திருவெம்பாவை கசிந்து உருக்கியது. நாயகனான சிவபெருமானை நாயகி பாவத்தில் வேண்டுகிறார் மாணிக்கவாசகர்.

    ஏது அவன் ஊர்? ஏது அவர் பேர்? யார் உற்றார்? யார் அயலார்? என்று கேட்கிறார்.

    அவரே திருவாசகத்தில், தாயுமில்லை, தந்தையுமில்லை என்று சொல்லி இருக்கிறார். திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பார்கள்.

    நந்தினிக்கு உறக்கம் கலைந்து போய் விட்டது. இன்னும் சற்று நேரத்தில் சின்னஞ் சிறுமியர்கள் திருப்பாவையையும், திருவெம்பாவையையும் பாடிக் கொண்டு பஜனை கோஷ்டியாகக் கிளம்பி விடுவார்கள். அறுபது பாடல்களையும் ஒப்புவிக்க வைக்கும் பெரியவர்கள் பொறுப்பேற்று நடத்தி போட்டி வைப்பார்கள்.

    சைவமும், வைணவமும் ஒன்றுதான் என்று இணைய வைக்கும் பாலம் இவர்கள். இவர்களே சைவத்தினரும், வைணவத்தினருமாக கலந்து செயலாற்றுபவர்கள்தான்!

    நந்தினியே வயதுக்கு வருவதற்கு முன் அந்தக் குழுவில் இணைந்து பாடிக் கொண்டிருந்தவள்தான். ஆன்மீகப் பெரியவர்கள் கூட, சுந்தரேச பாகவதரும் கலந்து கொண்டு உடன் வருவார். நந்தினிக்கு அவரே இசையில் குரு. நந்தினியின் குரல் வளத்தைக் கேட்டு தானாக முன் வந்து சிட்சை சொல்லிக் கொடுத்தார்.

    ஒரு கச்சேரி செய்யும் அளவுக்கு பாடாந்திரம் உள்ளவள்தான் நந்தினி. பாட்டுப் போட்டிகளில் பரிசு வாங்கியவள்தான். கல்லூரிப் படிப்பு அவள் பாட்டுக்கு தடை விதித்ததுடன், சுந்தரேச பாகவதரும் ஊரை விட்டே போய் விட்டார் மகனுடன், அம்மா விசாலியும் வயசுக்கு வந்த பெண்ணென்று பஜனை கோஷ்டிக்கு தடை விதித்து விட்டார்.

    நந்து, நந்தும்மா, எந்திரிக்கலையா?

    பழைய நினைவுகளை உதறிய நந்து, தோ வந்துட்டேம்மா என்று படுக்கையைச் சுற்றி வைத்தாள்.

    அறைக்கு வெளியே காலை வைத்ததுமே டிகாஷன் மணத்துடன், சாம்பாரின் கொதி மணமும் மூக்கைத்துளைத்தது. அவளைக் கண்ட அம்மா விசாலி முன் நெற்றி முடியை ஒதுக்கி விட்டாள். இதுதான் தாயின் ஸ்பரிச சுகம்.

    போ... பல் விளக்கிட்டு வா. சூடா காப்பி தரேன்.

    ஏம்மா, உனக்கு நேரமாகலே? இந்த சாம்பாரை நான் பண்ணிக்க மாட்டேனா?

    அம்மா இதழ்களில் சதா குடி கொண்டிருக்கும் புன்னகை விரிந்தது. மனசு கேட்கலைடா... நீ நல்லா படிக்கணும் வேலை தேடிக்கணும் என்றாள்.

    அம்மா நான் எம்.ஏ. லிட்ரேச்சர் படிக்கணும். படிக்க நிறைய இருக்கும்மா. எப்படி இங்கிலிஷ் லிட்ரேச்சர் பிரபலமோ இருக்கோ, அதே மாதிரி தமிழும் உலகம் பூரா முழங்கணும்மா.

    அம்மா இப்பொழுது வாய் விட்டுச் சிரித்தாள்.

    ஏம்மா சிரிக்கிறே?

    இன்னொரு பாரதியா ஆயிட்டி யோன்னு சிரிச்சேன். பாரதி மாதிரியே கனவு காண்றியே?

    பரவாயில்ல... பாரதியைப் பற்றி எல்லாம் தெரிஞ்சு வச்சுண்டு இருக்கியே? என்ற நந்தினி குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

    அம்மா விசாலி, வக்கீல் சிவஸ்வாமி வீட்டில் சமையல் வேலை செய்து வந்தாள். கணவர் நாராயணன் இறக்கும்பொழுது நந்தினி கையில் ஏழு வயசுக் குழந்தை, நாராயணன் ஒன்றும் பெரிய வேலையில் இல்லை. தர்ப்பைக் கட்டைப் பிடித்து மந்திரம் சொல்லும் ஏழை மனுஷரால் பிரமாதமாக என்னத்தைச் சேர்த்து வைத்துக் கொள்ள முடியும்?

    வரும் வருமானத்தைக் கொண்டு வந்து மனைவி கையில் கொடுத்து விடுவார். தான்ய வரும்படியும், துணிகள் வேஷ்டி துண்டுகளாகவும், பாத்திர வரும்படியும், குறைச்சலின்றி வந்தது. விசாலி இரண்டு காசை தனக்குப் பிறந்தது பெண்குழந்தையாயிற்றே என்ற பயத்தில் சேர்த்து வைத்துக் கொண்டாள்.

    "அப்படி சேர்த்த பணம் கணவன் இறந்த ஓராண்டு கால பிழைப்புக்கு வழி காட்டியது. இனி என்ன செய்வது என்று தவித்தபொழுது அப்பள, வடகத் தொழில் கை கொடுத்தது. பெண்ணைப் படிக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் சிக்கனமாக இருந்தாள்.

    அடுத்த தெருவில் ஒரு வயதான தம்பதியர்இருந்தனர். அவ்வீட்டுப் பெண்மணி காலை உடைத்துக் கொண்டு படுக்கையில் இருந்தாள். விசாலியின் வீட்டுக்காரம்மாள் விசாலியை அழைத்தாள்.

    கைக்கும், வாய்க்கும் பத்தாம எத்தனை காலம்தான் இப்படி உழைப்பே விசாலி?

    கண் கலங்கினாள் விசாலி. என்னம்மா பண்றது? என் தலையெழுத்து. கைல ஒரு பெண் பிள்ளை இருக்கேம்மா.

    ஒரு வழி இருக்கு. கைல மாச சம்பளம், உனக்கு தாராளமாய் போதும்.

    விவரத்தைச் சொன்னாள் வீட்டுக்காரம்மா. அந்தம்மாவுக்கு முகம் சுளிக்காம பணிவிடை பண்ணனும். சமையல் பண்ணனும். நீ அங்கேயே தங்கிக்கலாம். உனக்கும், நந்தினிக்கும் சாப்பாடு, தங்கும் இடம்னு எல்லா வசதியும் உண்டு.

    சற்று யோசித்த விசாலி தான் பணிவிடை செய்யப் போகும் பெண்மணியை சந்தித்துப் பேசினாள். அந்தப் பெண்மணி பிரஷர், ஷுகர் என்று மோசமான நிலையில் இருந்தாள். போதாக்குறைக்கு காலை வேறு உடைத்துக் கொண்டிருந்தாள். அப்பெண்மணிக்கு திடமான ஒருவரின் உதவி தேவை என்பதைப் புரிந்து கொண்ட விசாலி, தன் பெண் நந்தினியுடன் வந்து விட்டாள்.

    "அந்தப் பெண்மணி விசாலியின் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து மாசம் மூவாயிரம் சம்பளமும் கொடுத்தாள். கணவன் - மனைவி என்று இருவர் மட்டுமே உள்ள குடும்பம். கணவரும் குடும்ப பற்றற்றவர். திடீர் என்று ரிஷிகேஷ், ஹரித்வார், கைலாயம் என் மாதக் கணக்கில் புறப்பட்டுப் போய் விடுவார்.

    இவர்கள் வாழ்க்கை ஓட்டத்தையும், பற்று இல்லாத தாம்பத்தைப் பற்றியும் விசாலி வந்த சில நாட்களிலேயே புரிந்து கொண்டாள். இதனால்தான் சந்ததி இல்லையோ என்று ஐயமும் ஏற்பட்டது. வீட்டுக்காரப் பெண்மணி ஜெயம்மா சகஜமாகப் பழகி கணவரைப் பற்றிப் புலம்பினாலும், தனக்கு பேசும் உரிமை இல்லை என்று விசாலி மெளனித்து விடுவாள்."

    "விசாலியின் பணிவிடையை ஏற்றுக் கொண்ட ஜெயம்மா மூன்று ஆண்டு காலமே உயிரோடு இருந்தாள்... அவளின் காலம் முடியும் என்பதைப் புரிந்துக் கொண்ட கணவர் வீட்டை ஒரு அனாதை இல்லத்தின் உபயோகத்திற்கு எழுதி வைத்து விட்டார். வீட்டின் பின்னால் இருந்த கையகல ஒட்டு வீட்டை விசாலியின் அனுபோக பாத்யமா எழுதி வைத்தார்.

    வீட்டை விட்டு விசாலி போக நேர்ந்தால் அந்த ஒட்டு வீட்டை அனாதை இல்லத்திற்கே ஒப்படைத்து விட வேண்டும் என்ற ஒப்பந்தப் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார். ஜெயம்மா உயிரோடு இருந்த காலத்தில் அவளுக்கு நந்தினியிடம் பாசம் ஏற்பட்டிருந்தது. நந்தினியை தன்னுடைய பேத்தியாகவே எண்ணி சிறு தங்கத்தோடு, புதுப் பாவாடை, சட்டை என்று அன்பளிப்பாக கொடுத்து மகிழ்ந்தாள். விசாலிக்கும் புடவைகள் என்று கொடுத்ததால் விசாலிக்கு பெரிதாக எந்தச் செலவும் இல்லை. பணத்தை அப்படியே வங்கியில் சேமித்தாள்.

    ஜெயம்மா இறப்பதற்கு முன்பு நந்தினிக்கு என்று ஒரு சங்கிலியும், இரண்டு வளையல்களையும், பத்தாயிரம் ரூபாய் பணமும் தனது அன்பளிப்பாகக் கொடுத்திருந்தாள். ஓய்வு நேரத்தில் ஜெயம்மா நந்தினியைப் பாடச் சொல்லிக் கேட்பாள்.

    "விசாலி, நந்தினியோட கல்யாணத்தின்பொழுது நான் இருக்க மாட்டேன். நல்ல பையனாகப் பார்த்துக் கல்யாணம் பண்ணு. சந்யாச மார்க்கம் போறவா ஒரு பெண்ணோட வாழ்க்கையை வீண் பண்ணக் கூடாது. இந்த சொத்தெல்லாம் என் மாமனாரோடது. எனக்குப் பின்னாடி ஏன் இதை அனாதை ஆஸ்ரமத்துக்கு தரணும்? இப்பவே இது சந்யாசி மடம்தான். ஆண்கள் மட்டும் துறவி இல்லை. பெண் துறவியா நான் இருக்கேன்.

    "ஜெயம்மாவின் மறைவுக்குப் பின் அவள் கணவர் தனக்குத் தேவையான பணத்தைச் சேகரித்துக் கொண்டு யாத்திரைக்குப் புறப்பட்டு விட்டார். புறப்படும் முன் நந்தினியை அழைத்தார்.

    நந்தினி இங்கே வாம்மா...

    ஜெயம்மாவின் மறைவு அவளது பிஞ்சு மனசை அசைத்திருந்த சமயம் கண்ணீரை கரை கட்டித் தேக்கியவாறு வந்து நின்றாள்.

    நான் எங்கே இருந்தாலும் உனக்கு லெட்டர் போடறேன். அந்தப் பக்கம் வந்தா என்னைப் பார்த்துட்டுப் போ. இந்தா, இந்தப் பெட்டியில் ஜெயம்மாவின் தாலிச்சரடு இருக்கு. பத்து பவுன் , இருக்கும். கல்யாண பரிசா வச்சுக்கோ. கல்யாணப் பத்திரிக்கை அனுப்பு. எனக்கு தினமும் பூஜைக்கு உதவியா இருந்திருக்கே. என்னோட ஆசீர்வாதம் எப்பவும் உண்டு என்று தலையில் கை வைத்து ஆசீர்வாதம் பண்ணி விட்டுப் புறப்பட்டு விட்டார்.

    ***

    2

    அந்தத் தாலிச்சரட்டை விசாலி தன்னை ஆதரித்த ஜெயம்மாவின் ஆத்மாவாகவே எண்ணி பூஜையில் வைத்து பூப்போட்டு வணங்குவதை

    Enjoying the preview?
    Page 1 of 1