En Anni - En Manaivi?
()
About this ebook
திருமதி லட்சுமி ராஜரத்னம் திருச்சி நகரில் 27.3.1942ல் பிறந்தார் பத்தாவது வயதில் திருப்பாவை, திருவெம்பாவை போட்டியில் தங்க நாணயம் பரிசு பெற்றார்.
இதுவரை 1500 சிறுகதைகள், நிறைய நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள், 15 சென்னை தொலைகாட்சி நாடகங்கள், 3 மெகா தொலைகாட்சித் தொடர்கள், 3500 க்கும் மேற்பட்ட ஆன்மீகக் கட்டுரைகள் இவரின் எழுத்துலகச் சாதனைகளாகும். 40 சரித்திரச் சிறுகதைகள் எழுதிய பெண் எழுத்தாளரும் இவரே.
காஞ்சி சங்கர மடத்தினால் 1991ல் எழுத்துக்காகவும், 1993ல் ஆன்மீகச் சொற்பொழிவிற்காகவும் கௌர விக்கப்பட்டுள்ளார். இதுவரை 2500 சொற்பொழிகள் செய்துள்ளார். திருவையாறு தியாகராஜ ஆராதனையில் சின்ன கச்சேரி செய்த அனுபவம் உண்டு. இதைத் தவிர கோயம்புத்தூர், தஞ்சையில் கச்சேரிகள் செய்த அனுபவமும் உண்டு. மகள் ராஜஸ்யாமளாவின் நாட்டியற்குப் பாடிய அனுபவமும் உண்டு.
இவருடைய இதயக்கோயில் நாவல் கலைமகள் நாராயணஸ்வாமி ஐயர் பரிசு பெற்ற நாவல். இன்று வரை பலரால் பாராட்டைப் பெற்ற நாவல்.
1999ல் 'செந்தமிழ்ச் செல்வி' என்று ஸ்ரீகுக ஸ்ரீ வாரியார் விருதைப் பெற்றார். ஜனவரி 2002ல் கொழும்புவில் உள்ள இந்து மகா சபை இவருக்கு சொற்சுவை நாயகி என்ற விருதைக் கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளது. சங்கப்பலகை என்னும் புகழ் பெற்ற கலைமகள் பத்திரிக்கை ஜனவரி 2019-ல் சிறந்த எழுத்தாளருக்கான விருதை கொடுத்து கௌரவித்தது. ஒரே மகள் ராஜஸ்யாமளாவும் எழுத்தாளர் பரத நாட்டியக் கலைஞர்.
2011-ல் கணவனை இழந்த இவர் அதன்பின் உடல் நலம் குன்றி நான்கு அறுவை சிகிச்சைகள், இன்னும் பல உடல் தொந்திரவுகள் என்று சிரமப்பட்டாலும் 76 வயதிலும் மனம் தளர்வுளராமல் எழுதி வருகிறார். உங்கள் பாராட்டு என்ற பெரிய விருதை விட பெரிய உண்டா? என்கிறார்.
Read more from Lakshmi Rajarathnam
Aval Varuvala? Rating: 0 out of 5 stars0 ratingsThalattum Poongatru Rating: 0 out of 5 stars0 ratingsNavagrahangal Rating: 1 out of 5 stars1/5Thiruppugal Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsEzhu Swarangalukkul… Rating: 0 out of 5 stars0 ratingsNinaivalaigal Thodarnthu Vanthal... Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Niraintha Ragam! Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalaiye Thol Serava Rating: 3 out of 5 stars3/5Nesam Marakavillai Nenjam! Rating: 0 out of 5 stars0 ratingsMarakkuma Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsThanthaiyumaagi Thayumaagi Rating: 5 out of 5 stars5/5Bhavishya Puranam Rating: 2 out of 5 stars2/5Ashtalakshmi Rating: 0 out of 5 stars0 ratingsArputha - Athisaya Aalayangal Rating: 5 out of 5 stars5/5Vaana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsKaaviyama Nenjin Ooviyama Rating: 0 out of 5 stars0 ratingsLakshmi Rajarathnam Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsBramma Mudichu Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyir Neethane Un Uyir Naanthane Rating: 1 out of 5 stars1/5Enakkul Nee! Rating: 5 out of 5 stars5/5Aanmeega Amudham Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsUravu Sonnavan Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Thantha Poove! Rating: 0 out of 5 stars0 ratingsYaarukku Mappillai Yaaro? Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Amudham Part - 2 Rating: 5 out of 5 stars5/5Abiyum Azhaganum Rating: 2 out of 5 stars2/5Naan Unnodu Than Rating: 0 out of 5 stars0 ratings
Related to En Anni - En Manaivi?
Related ebooks
Nee Matrum Naan Rating: 0 out of 5 stars0 ratingsMohana Punnagaiyil Oru Naal! Rating: 0 out of 5 stars0 ratingsPen Nila Siragadikka...!! Rating: 5 out of 5 stars5/5Nilavum Malarum Rating: 5 out of 5 stars5/5Deivam Thantha Poove! Rating: 0 out of 5 stars0 ratingsOrey Murai Un Darisanam...! Rating: 3 out of 5 stars3/5Thaaraa Thaaraa Thaaraa Rating: 3 out of 5 stars3/5Neeyedhaan En Manaivi Rating: 5 out of 5 stars5/5Manam Thirudiya Malargal Rating: 4 out of 5 stars4/5Unakkaga Kaathirukkirean Rating: 3 out of 5 stars3/5Vivek Srinivasan!!! Rating: 5 out of 5 stars5/5Pesi Pesi Kollathey!!! Rating: 0 out of 5 stars0 ratingsKonjam Kaadhal Konjam Kaamam Rating: 5 out of 5 stars5/5Manathiley Oru Paattu Rating: 5 out of 5 stars5/5Mithrahasini Rating: 0 out of 5 stars0 ratingsPuthagam Moodiya Mayiliragu Rating: 0 out of 5 stars0 ratingsInnila Venugaanam Rating: 0 out of 5 stars0 ratingsVittu Viduthalaiyagi… Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Pon Nilaavey! Rating: 5 out of 5 stars5/5Uyirin Uyire Rating: 4 out of 5 stars4/5Kaadhal Payanangal Mudivathillai Rating: 3 out of 5 stars3/5Thirumbi Vaa Thendrale Rating: 0 out of 5 stars0 ratingsMamanar Kathaigal Rating: 5 out of 5 stars5/5Magarantha Malargal Rating: 5 out of 5 stars5/5Raathirigal Vandhuvittal! Rating: 0 out of 5 stars0 ratingsUllamellam Thalladuthey! Rating: 0 out of 5 stars0 ratingsNee Enathu Innuyir Rating: 0 out of 5 stars0 ratingsAzhagey Vaa! Arugil Vaa!! Rating: 0 out of 5 stars0 ratingsKamali Anni Rating: 5 out of 5 stars5/5Iru Kannilum Un Gnabagam… Rating: 4 out of 5 stars4/5
Reviews for En Anni - En Manaivi?
0 ratings0 reviews
Book preview
En Anni - En Manaivi? - Lakshmi Rajarathnam
http://www.pustaka.co.in
என் அண்ணி – என் மனைவி?
En Anni – En Manaivi?
Author:
லட்சுமி ராஜரத்னம்
Lakshmi Rajaratnam
For more books
http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
*****
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
*****
அத்தியாயம் 1
அதிகாலை முகூர்த்தம். அதனால், வந்த கூட்டத்தில் பாதி காலை டிபனுடன் திரும்பியாகிவிட்டது. சாப்பாட்டுக்குக் காத்துக் கொண்டிருக்கும் பொறுமை இல்லை.
முகூர்த்தம் முடிந்தாலும் மணவறைச் சடங்குகள் மணமக்களுக்கு முடியவில்லை. ஒவ்வொரு மந்திரத்தையும் மகேஷ் நிதானமாகச் சொன்னான்.
என்னடா மகேஷ், ஒவ்வொருத்தன் மந்திரங்களைச் சொல்லவிடாமல் ஓடுவான்கள். நீ என்னடான்னா?
என்று அவன் நண்பர்கள் கிண்டல் செய்தார்கள்.
இப்படியும் அப்படியுமாகப் பொழுது ஓடி... நலங்கு என்ற பெயரில் கிண்டலும் கேலியுமாகக் கை கொட்டிச் சிரித்து, வரவேற்பு முடிந்து... இதோ முதலிரவு!
வெள்ளித் தட்டில் பாலன்னம்....
வெள்ளித்தட்டு கொஞ்சம் சின்னதாகி விட்டது என்று மகேஷின் அம்மா மீனாட்சி கொஞ்சம் முணுமுணுத்து முகத்தைக் காட்டினாள்.
என்னம்மா இப்படி காட்டறாங்களே?
என்று பயந்து மிரண்ட கண்களுடன் அம்மாவைக் கேட்டாள் பிரசன்னா.
இதெல்லாம் கல்யாணங்கள்ல சகஜம்மா. எந்தக் கல்யாணத்திலேயும் இப்படி ஏதாவது இருக்கும். இதை மனசுல வச்சுகிட்டு உன் மாமியாரை எடை போடாதே. பலாப்பழத்துல தோல் எப்படி இருக்குது? அதுபோல சில பேர்கள், மேலே இப்படிப் பேசிட்டு, உள்ளே இனிப்பாய் இருப்பாங்க.
என்று அம்மா சொன்ன சமாதானம் மனத்திற்குள் ஏறியது.
தோழிகள் முதலிரவைப் பற்றிக் கிண்டலும், கேலியுமாகப் பேசி அவளைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள்.
"ஏய், அவர் முதல்ல பேசுவாரா? இல்ல நீ முதல்ல பேசுவியா?
டாஸ் போட்டுப் பார்த்துச் சொல்லிடலாமா?
என்ன ஆனாலும் ஆம்பிள்ளை தான் முதல்ல பேசணும்.
பாலம்மா, நீ முதல்ல பேசினியா... அவர் முதல்ல பேசினாரா? பாவம் பிரஸன்னா, கொஞ்சம் சொல்லிக் கொடு,
என்று கல்யாணமான பாலம்மாவை வம்புக்கு இழுத்தார்கள்.
இப்படியும் அப்படியுமாக வம்பு பேசி அவளை முதலிரவு அறைக்குள் தள்ளிவிட்டார்கள். உள்ளங்கைகள் வியர்த்தன. நெஞ்சு படபடத்தது. இந்த அறைக்குள் தனியாக இவனைச் சந்திக்க வேண்டியது அவசியம்தானா? மெல்ல இமைகளை உயர்த்திப் பார்த்தாள்.
மகேஷ் பட்டு வேட்டி, வெள்ளை பாலியஸ்டர் ஷர்ட்டில் பளபளத்தான். இமைக்காமல் பார்க்க வேண்டும் போல இருந்தது. மனத்தை அடக்கினாள். கட்டிலைச் சுற்றிப் பூச்சரங்கள். பட்டு மெத்தையில் சிவப்பும் வெள்ளையுமாகப் பூச் சிதறல்கள்.
மாமியார்காரி வெல்வெட் மெத்தைதான் வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்று வாங்கியது. சுவர் பக்கத்தில் பெரிய குத்துவிளக்குச் சுடர்விட்டது. ட்ரேயில் பழங்கள்... செம்பில் பால். என்ன.... என்ன பேசுவது?
அவளைப் போலவே மகேஷும் குழம்பினானோ என்னவோ?
பிரஸன்னா, வாயேன் இங்கே.
என்று மெல்லிய குரலில், இந்த இரவில் இதற்கு மேல் குரலை உயர்த்தக் கூடாது என்ற கட்டுப்பாட்டுடன் அழைத்தான்.
மெல்ல நடந்து பால் செம்பை எடுத்தாள். தம்ளரில் ஊற்றிக் கொடுத்துவிட்டுப் பிறகு வணங்க வேண்டும் என்று அம்மா சொல்லிக் கொடுத்திருக்கிறாளே?
பால் தம்ளரைக் கொடுத்து விட்டு வணங்கினாள்.
ஏய், பிரஸு, என்ன இதெல்லாம்? எந்திரி. எந்திரி.
அவள் எழுந்து நின்றாள்.
இப்படி உட்கார்.
உட்கார்ந்தாள். என்ன பேசப் போகிறான்? ஓரக் கண்ணால் கவனிக்கிறாள். அவன் குறுகுறுவென்று அவளையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிகிறது. தலைமுடி சுறுசுறுன்னு படிஞ்சிருக்கறது அழகா இருக்குன்னு சொல்லப் போகிறானா? சிரிக்கும் பொழுது கன்னத்துல விழற குழி அழகா இருக்குன்னு சொல்லப் போகிறானா? இவ்வளவு நீளமா எப்படி முடி வளர்ந்திருக்கிறது? சவுரி வைத்திருக்கிறாயா? என்று கேலி பண்ணுவானா?
பெண் பார்த்த இருபதே நாட்களில் இவர்கள் கல்யாணம் வைத்தாகி விட்டது. பெண் பார்க்கும் பொழுதே 'ஏதாவது பேசணும்னா உங்க பிள்ளை என் பெண்கிட்ட பேசலாம்,' என்று அவள் அப்பா சொன்னார்.
மகேஷின் அம்மா ஒப்புக் கொள்ளவில்லை. என் பிள்ளைகளை அந்த மாதிரி நாகரிகப் போக்குல வளர்க்கல்லே. நான் கிழிச்ச கோட்டைத் தாண்டவே மாட்டானுகள். தாலி கட்ற வரைக்கும் பொண்ணும் பிள்ளையும் பேசிக்கிறதை என்னால சரின்னு ஒப்புக்க முடியாது,
என்றாள்.
மகேஷ் மணவறையிலும் அவளிடம் பேசிச் சிரித்துப் பழகவில்லை. அதனால்தான் அவளுக்குப் பயமாக இருந்தது.
"உனக்கு