Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Magarantha Malargal
Magarantha Malargal
Magarantha Malargal
Ebook91 pages1 hour

Magarantha Malargal

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Parimala Rajendran, an exceptional Tamil novelist, written over 300+ novels. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateFeb 1, 2018
ISBN9781043466374
Magarantha Malargal

Read more from Parimala Rajendran

Related to Magarantha Malargal

Related ebooks

Related categories

Reviews for Magarantha Malargal

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Magarantha Malargal - Parimala Rajendran

    21

    1

    அழகிப் போட்டி. அரங்கமே கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    போட்டியில் கலந்து கொள்ளும் அழகிகள் விதம் விதமாக தங்களை அலங்கரித்து காத்திருக்க...

    நட்சத்திர கூட்டத்துக்கு இடையே பளிச்சிடும் நிலவு போல ஜொலித்தாள் லயா.

    எல்லா போட்டிகளும் நடந்து முடிய... முடிவுகள் அறிவிக்க மேடையேறினர் நீதிபதிகள்.

    இந்த பிரபஞ்சத்தின் அழகியாக ‘மிஸ்’ லயா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    ஆயிரம் கோடி பூக்களால் அர்ச்சித்தது போல உடல் சிலிர்த்துப் போகிறாள் அவள்.

    ‘என் அழகு... விலை மதிக்க முடியாதது.

    நான் இந்தப் பிரபஞ்சத்தின் தேவதையாக வாழப் பிறந்தவள்.’

    பெருமை பொங்கி வழிகிறது.

    ‘லயா... உன் அழகுக்கு பொருத்தமானவனை எப்படி தேட போறே?’

    வருவான் அந்த ராஜகுமாரன்... ஆயிரம் பணிப் பெண்கள் என் காலடியில் காத்திருக்க ரத்தினமும், வைரமும், வைடூரியமும் சூடி என் கை பிடிக்க வருவான்.

    இதழ்களில் புன்னகை மந்தகாசமாக விரிகிறது.

    லயா, பொழுது விடிஞ்சு எவ்வளவு நேரமாகுது? படிப்பு முடிஞ்சா என்ன... காலையில் எழுந்து கூடமாட வேலை செய்யக்கூடாதா... நாளைக்கு கல்யாணமாகி இன்னொருத்தன் வீட்டுக்கு போறவ... இப்படியா தூங்கறது?

    மகள் போர்த்தியிருந்த போர்வையை லட்சுமி இழுக்க,

    என்னம்மா... எவ்வளவு நல்ல கனவு. இப்படி எழுப்பி விட்டுட்டியே...!

    மணி எட்டாச்சு. போய் பல் தேய்ச்சுட்டு வா.

    சோம்பல் முறித்தவளாக எழுந்து படுக்கையில் உட்கார்கிறாள்.

    எதிரில் தெரியும் கண்ணாடியில் பார்க்கிறாள்.

    ‘உண்மையில் நான் பேரழகிதான்.

    கனவில் சொன்னதுபோல, எனக்கு கணவனாக ராஜகுமாரனே வந்தால் எப்படி இருக்கும்?

    ‘சாரட்’ பூட்டிய வண்டியில் வருவானா...?’

    வெட்கம் பொங்கி வர, வாய்விட்டு சிரிக்கிறாள்.

    லயாவின் அறையில் எட்டிப் பார்த்த தினகர்,

    அக்கா... உனக்கென்ன பைத்தியம் பிடிச்சுடுச்சா...? காலையிலேயே தலையை விரிச்சு போட்டுக்கிட்டு சிரிச்சுட்டு உட்கார்ந்திருக்கே?

    போடா... நீதான் பைத்தியம். பிளஸ் 2 பரீட்சை வரப்போகுது. படிக்கிற வழியைப் பாரு.

    எல்லாம் எங்களுக்குத் தெரியும்.

    மார்க்’ வரும்போது, உன் லட்சணம் தெரியத்தான் போகுது.

    நீ ‘டிகிரி’ முடிச்சிட்டேன்னு ரொம்பதான் அலட்டாதே! உனக்கு மாப்பிள்ளைப் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. போற இடத்துல குனிய வச்சு, முதுகில் அம்மிக் குழவியைத் தூக்கி வைக்கப் போறாங்க. நல்லா ‘பெண்டு’ நிமிர்ற மாதிரி பெரிய இடத்தில் மாப்பிள்ளை பார்ப்போம்.

    அட போடா... மடையா. நான் மகாராணி மாதிரி வாழப் பிறந்தவ. இதைவிட இன்னும் செல்வாக்கா வாழ்வேன்.

    அடடா... இப்பவே கச்சேரி ஆரம்பமாயிடுச்சா? ஏன் இப்படி வாயாடுறீங்க. அவர் பிஸினஸ், பிஸினஸ்னு மாசத்துல இருபது நாள் வெளியூர் போயிடறாரு. உங்களை வச்சு கட்டி மேய்க்க முடியலையே...

    அடுப்படியில் இருந்து குரல் கொடுத்த அம்மா,

    லயா... எழுந்து வா. தினகர் நீ போய்க் குளிடா... ஸ்கூலுக்கு நேரமாயிடப் போகுது... என்றாள்.

    நட்சத்திர ஓட்டலில் ‘குளு குளு’ அறையில் சாப்பாட்டு மேசை முன் அமர்ந்திருந்தார்கள்.

    உன் ‘பிஸினஸ்’ எப்படி போயிட்டிருக்கு குரு?

    ‘ராயல் புரமோட்டர்ஸ்’ என்ற பெயரில் ரியல் எஸ்டேட் பண்ணிக்கொண்டிருந்த குரு, கேள்வி கேட்கும் ராஜனைப் பார்த்தான்.

    உனக்கென்னப்பா... ஏற்றுமதி தொழில்ல கொடிகட்டிப் பறக்கிறே! மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங்னு பறந்துட்டு இருக்கே. நான்... போட்டதைப் பிடிக்க நாயாக அலையறேன்.

    உண்மையைச் சொல்லமாட்டியே! லாபம் வராமலா அலையறே? அது சரி, வரன் விஷயமாக சொல்லி இருந்தேனே... விசாரிச்சியா?

    உன் மகள் லயாவுக்குத்தானே! என் மாமனார்கிட்டே சொல்லி வச்சிருக்கேன். ரெண்டு, மூணு இடம் நல்லதா இருக்கு. இன்னும் ஒரு வாரத்தில் முழு விபரத்தோடு வந்து பார்க்கிறேன்னு சொன்னாரு.

    செல்லமா வளர்ந்த பொண்ணு. பொருத்தமான இடம் நல்லதா இருக்கணும்னுதான் இப்படி தெரிஞ்சவங்க மூலமா வரன் தேடறேன்.

    கவலைப்படாதே! நல்லதா அமையும். உன் மகளுக்கு என்ன குறைச்சல்? ரதி மாதிரி அழகா இருக்கா. நீயும் குறைவில்லாமல் சீர் செனத்தி செய்வே. நிச்சயம் நல்ல மாப்பிள்ளை அமையும்.

    உன் வாய் முகூர்த்தம் அப்படியே பலிக்கட்டும்.

    சரி, ‘ஆர்டர்’ பண்ணின மசால் தோசை ஆறுது. சாப்பிடு.

    சாப்பிடத் தொடங்குகிறார்கள்.

    2

    விடிந்தும் விடியாத காலைப் பொழுது. கீழ்வானில் சூரியன் மெல்ல உதயமாக...

    "பலமே, அம்பலமே

    பொன்னம்பழ சிவமே... சிவமே..."

    சிவன் கோவிலில் போடும் பாட்டு, கிராமத்தின் எல்லா வீதிகளிலும் கேட்கிறது.

    தூக்கம் கலைந்த வேதா, மெல்ல எழுந்து வந்து வாசலில் நின்று- கோபுரத்தைப் பார்த்து கையெடுத்துக் கும்பிடுகிறாள்.

    "சிவபெருமானே...

    Enjoying the preview?
    Page 1 of 1