Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aagasa Garudan
Aagasa Garudan
Aagasa Garudan
Ebook87 pages52 minutes

Aagasa Garudan

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateMay 24, 2020
ISBN6580105705446
Aagasa Garudan

Read more from Vidya Subramaniam

Related to Aagasa Garudan

Related ebooks

Reviews for Aagasa Garudan

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aagasa Garudan - Vidya Subramaniam

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஆகாச கருடன்

    Aagasa Garudan

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 1

    அப்பாவின் பேச்சுக்கு மறுபேச்சு பேச முடியாது. பேசியும் யாருக்கும் பழக்கமில்லை. பேச வேண்டிய தேவையும் ஏற்படுவதில்லை. அவருடைய முடிவுகளும், வழிகாட்டலும் மறுப்பு சொல்ல முடியாததாகவே இருந்திருக்கிறது. ஆனாலும் ஒரு விஷயத்தில் அம்மா முதன்முறையாக அவரது முடிவை ஏற்கவில்லை. அவருக்கு அதில் சிறிது அதிர்ச்சிதான் என்றாலும் அவளைக் கட்டாயப்படுத்தவில்லை. உன் இஷ்டம் என்று அவளது முடிவுக்கு விட்டுவிட்டு ஒதுங்கி விட்டார். அதன் பிறகு அவர் எந்த விஷயத்திலுமே முடிவெடுப்பதை நிறுத்தி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். யார் எது கேட்டாலும் உன் இஷ்டம் என்று சொல்லத் தொடங்கிவிட்டார். நத்தை தன் கூட்டுக்குள் ஒடுங்குவதுபோல தன் புத்தகங்களுக்குள் ஒடுங்கிப் போனார். பேச்சு குறைந்தது. எதையும் உற்று நோக்கும் ஆர்வம் குறைந்தது. தன் செயல்களில் கவனம் குறைந்தது. அவருக்கு இருப்பது கோவமா இல்லை வருத்தமா என்று எதுவும் புரியவில்லை.

    மனதின் மாற்றங்கள் உடல் நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கக் வேண்டும். அப்பா திடீரென ஒரு நாள் மயங்கி விழுந்தார். அப்போது வீட்டில் அம்மா மட்டும்தான் இருந்தாள். பதறிப்போய் ரஞ்சினிக்கு போன் பண்ணினாள் பத்து நிமிட நடை தூரத்தில் இருந்த பள்ளியின் அலுவலகத்தில் பணியில் இருந்த ரஞ்சினி அடுத்த வினாடி சொல்லிக்கொண்டு கிளம்பினாள். தன் ஸ்கூட்டரில் ஏறியமர்ந்தவள் ஐந்தே நிமிடத்தில் வீட்டுக்கு வந்தாள். அதற்குள் அக்கம் பக்கத்து மனிதர்கள் சேர்ந்திருந்தனர். அவர்களின் துணையோடு மருத்துவமனையில் சேர்த்தாள். ரமணி அக்காவுக்கும், பெங்களூரில் இருந்த சந்துரு அண்ணாவுக்கும் தகவல் சொன்னாள். அக்கா வர ஒரு மணி நேரமாயிற்று.

    என்ன சொல்றார் டாக்டர்?

    இன்னும் ஒண்ணும் சொல்லலை. டெஸ்ட் எல்லாம் நடந்துட்டு இருக்கு

    கைல பணமிருக்கா?

    இப்போதைக்கு அம்பதாயிரம் கட்டியிருக்கேன். எங்கிட்ட அவ்ளோதான் இருந்தது. மேல்கொண்டு எவ்ளோ ஆகும்னு தெரியலை.

    என் நிலைதான் உனக்குத் தெரியுமே. என்னை எதுக்கும் நம்பாதே, வேணும்னா ஆஸ்பத்திரிக்கு வந்து அம்மாவுக்குத் துணையா உக்காந்துக்கறேன். அவ்ளோதான் என்னால முடியும். அக்காவின் குரலில் சுருதி குறைந்தது. ரஞ்சினி எதுவும் பேசவில்லை.

    அப்பாவின் சர்க்கரை நானூறைத் தாண்டியிருந்தது. அவர் மயக்கம் தெளியவே இல்லை. ஒருவேளை கோமாவோ என்று மனசு பதறியது. டாக்டர்கள் சரியாக எதுவும் சொல்லவில்லை. சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது. இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்றார்கள். மறுநாள் காலை வந்த சந்துரு அண்ணா இரண்டு நாள் அங்கிருந்தான். எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு ரஞ்சினி. ரெண்டு நாள் லீவு கொடுத்ததே பெரிய விஷயம். இதுல பத்தாயிரம் இருக்கு வெச்சுக்கோ. மேற்கொண்டு பணம் ஏதாவது வேணும்னா கேளு உன் அக்கவுண்ட்டுக்கு டிரான்ஸ்ஃபர் பண்றேன். என்றவன் அன்று மாலை கிளம்பிச் சென்றான். அப்பா எப்படி இருக்கிறார் என்று கேட்டு அவனிடமிருந்து போனும் வரவில்லை. பணம் தேவைப்படுமா அனுப்பவா என்று கேட்கவும் இல்லை. இவளுக்கும் கேட்கப் பிடிக்கவில்லை. எத்தனை நாள் இந்நிலை நீளும் என்று புரியவில்லை. நாலு நாள் லீவு ஓடியே போய் விட்டது. வீட்டிலிருந்த நகைகள் அவசரமாக வங்கியில் வைக்கப்பட்டன பணத்திற்காக.

    நாளைக்கு நா வேலைக்கு போகணும்மா. அக்காவை வேணா வரச் சொல்லவா?

    வேணாம். அவளுக்கே ஆயிரம் பிரச்சனை. நானே சமாளிச்சுக்கறேன்.

    அம்மாவைத் தனியே விட்டுச் செல்ல மனமில்லா விட்டாலும், வேறு வழியின்றி வேலைக்குப் போனாள். இரண்டு நாள் கழித்து மேலும் ஒரு லட்சம் பணம் கட்டச் சொன்னபோது விழி பிதுங்கியது. டாக்டரிடம் மனசு விட்டு பேசினாள்.எங்ககிட்ட லட்ச லட்சமா பணம் இல்லை டாக்டர். அவசரத்துக்கு இங்க வந்தோம். அப்பாவோட நிலை என்னன்னு எனக்கு இன்னும் சரியா தெரியலை. அவர் எப்போ கண் திறப்பார்ங்கறது புரியாத புதிரா இருக்கு. இருக்கற பணமெல்லாம் கட்டியாச்சு. இனி முடியாதுன்ற நிலையில் உங்ககிட்ட வந்திருக்கேன். நா அவரை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன். கஷ்டமோ நஷ்டமோ வீட்டுல வெச்சு எங்களால முடிஞ்ச வரைக்கும் பாத்துக்கறோம். தயவுசெய்து அவரை டிஸ்சார்ஜ் பண்ணிடுங்க.

    டாக்டர் அவளையே சற்று நேரம் பார்த்தார்."புரியுது. ஆனா உங்கப்பாவை வீட்ல வெச்சு பாத்துக்கறது ரிஸ்க்மா. அவருக்கு ரெண்டு பிளாக் இருக்கு. அதோட கோமா நிலை. ஆர்கன்ஸ் எல்லாம் வேலை செய்யுது. மெடிசின்ஸ் போயிட்ருக்கு. இதயத் துடிப்பு அதிகமா இருக்கு. அது நார்மலுக்கு வரணும். இருபத்திநாலு மணி நேரமும் மானிட்டர்ல இருக்கணும். ஒண்ணு செய்ங்க. நா டிஸ்சார்ஜ் பண்றேன். நேரா கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போங்க. அங்க நிறைய வசதிகள் இருக்கு. என்

    Enjoying the preview?
    Page 1 of 1