Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nenjukkul Poo Malarum
Nenjukkul Poo Malarum
Nenjukkul Poo Malarum
Ebook124 pages1 hour

Nenjukkul Poo Malarum

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Parimala Rajendran, an exceptional Tamil novelist, written over 300+ novels. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466336
Nenjukkul Poo Malarum

Read more from Parimala Rajendran

Related to Nenjukkul Poo Malarum

Related ebooks

Reviews for Nenjukkul Poo Malarum

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nenjukkul Poo Malarum - Parimala Rajendran

    22

    1

    கம்யூட்டரை சட்டவுன் செய்தவன், சேரில் முதுகு படிய சாய்ந்து, கைகளை மேலே உயர்த்தி, கால்களை சுருட்டி... ரிலாசிங் செய்தான். ஒரு வாராமாக டென்சன் பண்ணிய ப்ரோகிராம் முடிந்துவிட்டது. மணி பார்த்தான் நான்கு. கிளம்பினால் சரியாக இருக்கும்.

    ஹாய் மதன்

    கேபின் முன் திவாகர்

    கிளம்பியாச்சா

    ஆமாம், கிப்ட் ஷாப் போய்ட்டு, பீச் ரெஸ்ட்ராரண்ட் போகணும். அஞ்சு மணிக்கு அங்கே இருக்கணும்.

    ஓ... காதலர்கள் வழக்கமான சந்திப்பு. உனக்கென்னடா ராஜா ஜமாய்

    அட நீ வேறே... தீபிகா முன் கோபக்காரி. அஞ்சு நிமிஷம் லேட்டா போனாலும் டென்சன் ஆயிடுவா. இன்னைக்கு அவ பிறந்தநாள். இனிமேல்தான் கிப்ட் வாங்கிட்டு போகணும்

    கோடிஸ்வரியை காதலிக்கிறே. இதை போல சின்ன சின்ன விஷயங்களை அட்ஜெச் பண்ணிதான் போகணும்

    நண்பனை பார்த்து சிரிக்கிறான் திவாகர்.

    இருவருக்கும் முன்னால் ஐஸ்கீரீம் கரைந்துக் கொண்டிருக்கிறது. ப்ரீயாக விட்ட கூந்தல் காற்றில் பறக்க, முன் நெற்றியில் விடுத்த கேசத்தை கைகளால் ஒதுக்கி, நீளவிழிகள் பளபளக்க எதிரில் அமர்ந்திருப்பவனை பார்க்கிறாள் தீபிகா.

    இன்னைக்கு உன் பர்த்டே. உன் அலங்காரம் மட்டுமில்லை. உன் அழகும் கூடி. ஒரு தேவதை மாதிரி ஜொலிக்கிறே தீபிகா

    கண்களில் காதல் தெரிகிறது.

    கிப்ட் என்னன்னு கேட்கலையே. பேசாமல் வாங்கி வச்சிக்கிட்டே.

    என் மனசுக்கு நெருக்கமானவன் நீ. உன்னுடைய பரிசு எதுவாக இருந்தாலும் என்னை சந்தோஷப்படுத்தும் மதன் அப்பா என் பர்த்டே என்னகிப்ட் கொடுத்தாரு தெரியுமா.

    எப்படி தெரியும். நீ அவரோட ஒரே செல்லமகள். க்ரானைட் தொழிலதிபரின் ஒரே வாரிசு. நிச்சயம் அவருடையகிப்ட்" மிக பெரியதாகதான் இருக்கும்.

    கரெக்ட்... புதிய ப்ராச்யூன் கார்...

    வியப்பில் விழிகள் விரிய பார்க்கிறான்.

    உனக்கே. உனக்கா ஏற்கனவேஸிவ்ப்ட் வச்சுருக்கே

    ஆமாம் அது சின்ன வண்டியாம். செல்ப் டிரைவிங்கில் நான் எடுத்து போகலாம். ஆனா புதிய காரை டிரைவரோடுதான் கொடுத்திருக்காரு அதான் கொண்டு வரலை.

    எப்படியோ. அந்த காரில் நாம் ரெண்டுபேரும் ஜாலியா டிரைவ் போகமுடியாது அப்படிதானே

    கொஞ்ச நாள் போகட்டும். அப்பாவை சமாதானம் பண்ணி, நானே டிரைவ் பண்ணிட்டு வரேன்.

    கல்லூரியில் படிக்கும்போது, அவர்களிடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறி, நாலு வருடத்தில் இருவர் மனதிலும் நங்கூரம் இட்டு அமர்ந்திருந்தது.

    சரி மதன். இன்னும் எத்தனை நாளைக்கு நாம் காதலிச்சுட்டு இருக்கிறது. நம் காதல். கல்யாணத்தில் முடிய வேண்டாமா. இன்னைக்கு அப்பா கோவிலுக்கு போய்ட்டு வந்ததும், என் கல்யாணத்தை பத்திதான் பேசினாரு.

    அடுத்த வருஷம் பர்த் டே... நீ உன் கணவனோடு வந்து ஆசிர்வாதம் வாங்கணும் தீபிகான்னு சொன்னாரு.

    "எங்க வீட்டு சூழல்... என் காதலை பத்தி பேச தயக்கமாக இருக்கு தீபிகா. அப்பா நல்லா நடமாடிட்டு இருந்தவர்.

    போன வருஷம்ஸ்டோர்க் வந்து ஒரு கை கால் செயலிழந்து படுக்கையில் இருக்காரு.

    அம்மாவுக்கு அதுவே பாதி கவலை. அப்பாவோட தங்கை சின்ன வயசிலேயே கணவனை இழந்தவங்க. எங்களோடுதான் இருக்காங்க.

    அதனாலதான். என் கல்யாண பேச்சை கொஞ்ச நாள் தள்ளிப் போட்டிருக்கேன்."

    குடும்பத்தையே நினைச்சுட்டிருந்தா. நீ எப்ப சந்தோஷமாக வாழ முடியும் சொல்லு. உனக்கு கல்யாண வயசு வந்தடுச்சுதானே. வேலைக்கு போறே. சம்பாதிக்கிறே. உனக்கு கல்யாணம் பண்ணனும்னு. உங்க வீட்டில் யாருக்குமே தோணலையா.

    சற்று கோபமாகவே கேட்கிறாள் தீபிகா.

    உன் கோபம் புரியுது தீபிகா. ப்ளீஸ் எனக்காக கொஞ்ச நாள் வெயிட் பண்ணு. அத்தை மூலமா பேசி, என் காதலுக்கும் நம் கல்யாணத்துக்கும் சம்மதம் வாங்கறேன்.

    "மதன். என்னை பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இல்லை அப்பா, என் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கிறவர். நிச்சயம் என் காதலுக்கு சம்மதம் சொல்லிடுவாரு.

    உங்க வீட்டில் உன்னால் சம்மதம் வாங்க முடியாம போனா. எனக்காக நீ. உன் குடும்பத்தை பிரிஞ்சுதான் வரணும்.

    வருவியா... மதன்."

    நேருக்கு நேர் தீபிகா கேட்க... ஒரு கணம் தடுமாறியவன்...

    அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. நான் அவங்களுக்கு ஒரே மகன். நிச்சயம் நம் கல்யாணத்தை நல்லபடியா நடத்தி வைப்பாங்க. சரி. இந்த பேச்சை இதோடு விட்டுட்டு... உன் பர்த் டேயை செலிபிரேட் பண்ணலாம்.

    அவளை பார்த்து சிரிக்கிறான் மதன்.

    அறை கதவை மெல்ல திறந்து உள்ளே எட்டி பார்க்கிறாள் பத்மினி.

    அண்ணனின் தூக்கம் இன்னும் கலையவில்லை. மணி ஏழாக போகிறது. ஜன்னலில் மூடியிருந்தஸ்கீரினை ஒதுக்குகிறாள் சூரிய வெளிச்சம் எட்டி பார்க்கிறது.

    அண்ணணின் முகத்தை பார்க்கிறாள். கண்களில் கண்ணீர் தளும்புகிறது. அண்ணன் மட்டும் ஆதரவு கரம் நீட்டியிருக்காவிட்டால். இத்தனை நேரம் இந்த பத்மினி உலகத்தை விட்டு போய் பல வருஷங்கள் ஓடியிருக்கும்.

    எல்லோருக்கும் நிறைவான வாழ்க்கை அமைவதில்லையே. ஆனால் என்னை போல துரதிஷ்ட்சாலி யாரும் இருக்கமாட்டார்கள் சிறுவயதில் பெற்றவர்களை இழந்த வேதனை.

    கல்யாணமாகி கையில் ஆறு மாச குழந்தையுடன், கணவனை பறி கொடுத்த துக்கம்.

    தனக்கு இனி இருக்கும் ஒரே ஆதரவு மகன்தான் என்று இருக்க, கோவில் திருவிழாவில் இரண்டு வயது மகனை தொலைத்த துயரம்.

    மனதில் ஆறாத காயங்களாய்...

    பத்மினி

    திரும்புகிறாள்.

    எழுந்திருச்சிட்டிங்களா. அண்ணியை கூப்பிடவா. பல் விலைக்கி உங்களை ரெடி பண்ணுவாங்க. நான் போய் காபி எடுத்துட்டு வரேன்.

    இருக்கட்டும்மா. நீ இங்கே வா

    அருகில் வருகிறாள்.

    இளம் வயதில் எவ்வளவு அழகான இருப்பாள் என் தங்கை. இப்போது பொலிவிழந்து. உடல் தளர்ந்து. சோகங்களே வாழ்க்கையாக. பாவம் மென்மையாக அவள் கரத்தை. தன் ஒருகையால் பிடிக்கிறார்.

    நேத்து மாலதி உன்னை ரொம்பவும் சத்தம் போட்டு, வேதனை படுத்திட்டா இல்லையா மனசு சங்கடமாக இருந்துச்சும்மா. என்னால எதுவுமே செய்ய முடியலை. நானே அவளை நம்பிதான் நாட்களை ஓட்டிட்டு இருக்கேன்.

    "என்ன அண்ணா இது. நான் செய்தது தப்பு அண்ணி அதைதானே கண்டிச்சாங்க. நான் வேலையில் கவனமில்லாமல் பாலை பொங்க விட்டு. பாலும் வீணாகி, அடுப்பும் அழுக்காகி. இதெல்லாம் என்னால்தானே.

    எனக்கு இதில் எந்த வருத்தமும்

    Enjoying the preview?
    Page 1 of 1